‘இல்லை சார்.. இது தெரியாமயா அவங்க தகராறு பண்றாங்கன்னு நினைக்கறீங்க.. இந்த கையெழுத்தே என்னோடதில்லேன்னா என்ன பண்ணுவீங்க?’
என்ன சொல்வதென தெரியாமல் திகைத்துப்போய் அமர்ந்திருந்தேன்.
அன்று காவல்நிலையத்தில் வைத்து அவர்களுடைய வழக்கறிஞர் முன்னிலையில் இருதரப்பினரும் அவரவர் வசமுள்ள தாரத்தையும் காண்பித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று தீர்மானித்திருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. அதை அவரிடம் கூறினேன்.
‘நல்ல ஐடியா சார். அவங்க வக்கீல் ஒங்க பேங்க் லீகல் அட்வைசரா இருக்கறதனால பெருசா பாதகம் ஒன்னும் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனாக் இப்ப நான் சொன்ன சந்தேகத்த அவர்கிட்ட சொல்லவேணாம். அவர் என்ன சொல்றார்னு பார்த்துட்டு தீர்மானிக்கலாம். எப்ப போகலாம்னு இருக்கீங்க?’ என்றவரை யோசனையுடன் பார்த்தேன்.
நம்ம பேங்க் வக்கீல்கிட்ட போறதவிட இவர்கிட்ட வரச்சொன்னா என்ன என்று தோன்றியது.. ஒருவேளை அவனுங்க ஒத்துகலைங்கறதுமில்லாம அவங்க வக்கீல்கிட்ட நான் சொன்ன யோசனைய சொல்லிட்டா தேவையில்லாம அவரையும் பகைச்சிக்கிட்டா மாதிரி ஆயிரும் என்றும் சிந்தனை சென்றது....
அடுத்த பத்து நிமிடத்தில் என்னுடைய மைத்துனரும் அவருடைய மாமனாரும் வந்து சேர்ந்தனர். என்னுடைய மைத்துனருடைய மாமனார் என்னை பார்த்தும் பாராததுபோல் இருந்தார். நான் அதைப் பொருட்படுத்தாமல் சற்றுமுன் வழக்கறிஞரிடம் கூறியதை அவர்களிருவரிடமும் கூறினேன்.
மைத்துனர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவருடைய மாமனார் முந்திக்கொண்டு, ‘நீங்க ஒங்க நிலத்த எப்படி வாங்குவீங்களோ அப்படி பார்த்து வாங்கலைங்க.. அப்படி பார்த்து வாங்க முடியலைன்னா இதுல நீங்க தலையிடாமயே இருந்துருக்கலாம்.’ என்றார் எகத்தாளமாக. அவருடைய குணம் ஏற்கனவே எனக்கு நன்கு தெரிந்திருந்ததால் நானும் கோபப்படுவதில் அர்த்தமில்லையென்று வாளாவிருந்தேன்.
வழக்கறிஞருக்கும் அவர் கூறியது அவ்வளவாக பிடிக்கவில்லை என்பது அவர் அடுத்து கூறியதிலிருந்தே தெரிந்தது. ‘சார் விஷயம் புரியாம பேசாதீங்க.. நானுந்தான் இந்த பத்திரத்த பார்த்தேன். இதுல எந்த வில்லங்கமும் இல்லை.’
சரியான நேரத்தில் வந்து சேர்ந்த என்னுடைய மாமனாரும் என்ன நினைத்தாரோ அவரைப் பார்த்து, ‘இங்க பாருங்க சம்மந்தி --------------(என் மனைவியின் பெயர்) மாப்பிள்ளயபத்தி அவங்க பேங்க் வக்கீல் சொல்றத கேட்டீங்கன்னா நீங்க இப்படி அவசரப்பட்டு பேசியிருக்க மாட்டீங்க. நானும் மொதல்ல அப்படித்தான் நினைச்சேன்.. ஆனா நேத்து தற்செயலா அவர வழியில பார்த்தேன். அவராவே என்னெ அடையாளம் கண்டுக்கிட்டு எங்கிட்ட இதப்பத்தி பேசினார். அந்த தியேட்டர்காரங்களும் அவர்கிட்ட பேசினாங்களாம்.. இன்னைக்கி பதினோருமணி போல எங்க ஆஃபீசுக்கு பத்திரத்தோட வந்துருங்கய்யா. நானே ரெண்டு பேர்கிட்டருக்கறதையும் பாத்துட்டு சொல்றேன்னார்..’ என்றார்.
அவரும் இதைக்கேட்டதும் வாயை மூடிக்கொண்டார். அவருக்கு அவர் மாப்பிள்ளை முக்கியம்னா எங்க மாமனாருக்கு நான் முக்கியமில்லையா என்று நினைத்துக்கொண்டேன்!
இந்த உரையாடலைக் கவனித்துக்கொண்டிருந்த வழக்கறிஞர் என்னைப் பார்த்து விஷமத்துடன் கண்ணடிக்க நான் புரியுது சார் என்று புன்னகைத்தேன்.
என்னுடைய மைத்துனர் இவற்றுக்கிடையில் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார். அவருக்கு எப்படியாவது அன்று மாலை புறப்பட்டு செல்லவேண்டும்.
நான் வழக்கறிஞரிடம் ஏற்கனவே கூறியிருந்த பவர் ஆஃப் அட்டார்னி விஷயத்தை நினைவுபடுத்தினேன்.
அவர் என் மைத்துனரிடம், ‘ஒங்க மச்சான் சொல்றாப்பல செஞ்சிருங்க சார். அது யாரான்னாலும் பரவால்லை.. அப்புறம் இந்த பிரச்சினை ஒருவேளை கோர்ட்டுக்கு போகவேண்டியிருந்ததுன்னாலும் நீங்க யாருக்கு பவர் குடுக்கறீங்களோ அவங்களே பாத்துக்கலாமே.’ என்றார்.
அவர் தன்னுடைய தந்தையையும் மாமனாரையும் பார்த்தார். அவருடைய மாமனார் முந்திக்கொண்டு, ‘எம் பேர்ல போட்டுருங்க சார்..’ என்றார்.
ஆனால் வழக்கறிஞரோ என் மாமனாரை நீங்க என்ன சொல்றீங்க என்பதுபோல் பார்த்தார்.
எனக்கும் என் மைத்துனருடைய மாமனாருக்கு பவர் கொடுப்பதில் அவ்வளவாக விருப்பமில்லை. இருப்பினும் நமக்கேன் வம்பு என்று வாளாவிருந்தேன்.
என் மாமனார் பட்டும்படாமலும், ‘அதுக்கு தேவையிருக்குமான்னே தெரியலைய்யா. இன்னைக்கி நடக்கறத பார்த்துட்டு செஞ்சா போறாதா?’ என்றார்.
என் மைத்துனர் எரிச்சலுடன், ‘என்னப்பா நீங்க? நா இன்னைக்கி வண்டியில பொறப்பட்டு போணுமே?’ என்றார்.
என் மாமனாரோ அதைப் பொருட்படுத்தாமல், ‘அதனாலென்னடா.. அங்க போய்ட்டு வந்து பாத்துக்கலாம். நீ என்ன பஸ்லதான போப்போற.. அதான் மெட்றாஸ்க்கு ராத்திரி பத்துவரைக்கும் இருக்குதே.. நீ போய் கடைசி பஸ்ல புக் பண்ணிட்டு வக்கீல் ஆஃபீசுக்கு வந்து சேர்..’ என்றவர் அவருடைய வழக்கறிஞர் நண்பரைப் பார்த்து, ‘நீங்க பவர் பத்திரத்த தயார் செஞ்சி வைங்கய்யா.. யார் பேர்லன்னு நா அப்புறமா ஃபோன் செஞ்சி சொல்றேன்.. அவசரம் ஒன்னுமில்லை..’ என்று கூறிவிட்டு எழுந்தார்.
என் மைத்துனருடைய மாமனாரின் முகம் கறுத்து சிறுத்துப் போனதை பார்க்கமுடிந்தது. அதை வழக்கறிஞரும் பார்த்திருப்பார் போலிருந்தது. என்னைப் பார்த்து மீண்டும் மர்மமான புன்னகையை வீசினார் ‘வேணும் இந்த ஆளுக்கு’ என்பதுபோல்.
நான் ஒன்றும் பேசாமல் எழுந்து என் மாமனாரைப் பின்தொடர்ந்து வெளியே சென்றேன். வாசல்வரை மவுனமாக வந்தவர் என்னை திரும்பிப்பார்த்து, ‘நீங்களே பவர் ஏத்துக்குங்களேன் மாப்ள்ளே.. அவனெ வளைச்சிப்போடறதுக்கு அவ அப்பன் பண்ற கூத்த பாத்தீங்கல்லே.. எனக்கு அடிக்கடி பயணம் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டுத்தான் அவன் அந்த யோசனைய சொல்றான்.’ என்றார் எரிச்சலுடன்..
நான், ‘அதுசரி வராது மாமா.. நான் இன்னும் எத்தனை நாளைக்கு இங்க இருப்பனோ தெரியல. அதுவுமில்லாம இது வக்கீல் சொல்றாப்பல கோர்ட்டு, கேசுன்னு போயிருச்சின்னா பிரச்சினையாயிரும்.. அதனால...’ என்று இழுத்தேன்.
அவரும் யோசனையுடன், ‘நீங்க சொல்றதும் சரிதான்.. சரி.. யோசிச்சி செய்யலாம். நீங்க வீட்டுக்கு போய் --------------- கிட்ட சொல்லிட்டு நேரா வக்கீல் வீட்டுக்கு வந்துருங்க.. நான் கார்ல வரலை.. ரிக்ஷ¡விலதான் வந்திருக்கேன்.. அவங்க ரெண்டு பேரும் அவங்க கார்ல வந்துருக்காங்க போலருக்கு.. நா போறேன்.. நீங்க சொல்லிருங்க..’ என்று என்னுடைய பதிலுக்கு காத்திராமல் கிளம்பி சென்றுவிட நான் வழக்கறிஞர் வீட்டு வாசலில் சிறிது நேரம் என்ன செய்வதென தெரியாமல் நின்றேன்.
சற்று நேரத்தில் என்னுடைய மைத்துனரும், அவருடைய மாமனாரும் வெளியே வந்தனர். என்னுடைய மைத்துனர், ‘நீங்க ஸ்கூட்டர்லயா வந்திருக்கீங்க மச்சான்?’ என்றார். நான் ஆமாம் என்று தலையை அசைத்தேன். ‘அப்ப நானும் ஒங்க கூடவே வந்துடறேன்..’ என்று கிசுகிசுத்தார்.
அவருக்கு அவருடைய மாமனாருடன் செல்ல விருப்பமில்லை என்று தெரிந்தது. இருப்பினும் நான் தயக்கத்துடன் அவர்கள் இருவரையும் பார்த்தவாறு நின்றிருந்தேன்.
அவருடைய மாமனார் என்ன நினைத்தாரோ, ‘நீங்க ஒங்க மச்சான் கூட போயிருவீங்க இல்லே.. நான் வக்கீல் வீட்டுக்கு வரணுமான்னு யோசிக்கிறேன்..’ என்று இழுத்தார். அவருக்கு பவர் கொடுப்பதில் என்னுடைய மாமனாருக்கு விருப்பமில்லை என்ற கோபம் குரலில் தெரிந்தது.
என்னுடைய மைத்துனர் உடனே, ‘ஆமா மாமா.. அங்க நீங்க எதுக்கு? நான் போய்ட்டு வந்து சொல்றேன்..’ என்றவாறு அவருடைய பதிலுக்கு காத்திராமல் என்னைப் பார்த்து, ‘வாங்க மச்சான்.. நான் ஒங்கள ஒங்க ஆஃபீஸ்ல ட்ராப் பண்ணிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு போய்ட்டு வந்து மறுபடியும் ஒங்கள பிக்கப் பண்ணிக்கறேன். ரெண்டு பேருமா சேர்ந்து ஒங்க வக்கீல் வீட்டுக்கு போலாம்.’ என்றவாறு என் முன்னே நடந்தார்.
***
அவர் கூறியிருந்தபடியே அவர் சென்று பேருந்து பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு அடுத்த அரைமணியில் திரும்பி வந்தார். நாங்கள் இருவரும் வழக்கறிஞர் அலுவலகத்தை சென்றடைந்தபோது நேரம் பதினோரு மணியைக் கடந்திருந்தது.
நீதிமன்ற நேரமாயிருந்தபடியால் அவருடைய அலுவலகத்தில் அவரையும் ஒரு தட்டச்சு செய்யும் பெண்ணையும் தவிர வேறுயாரும் இல்லை..
நாங்களிருவரும் நேரே வழக்கறிஞருடைய அறைக்குள் நுழைய அங்கு ஏற்கனவே எதிரணியினர் மூவர் அமர்ந்திருந்தனர். அன்று காவல்நிலையத்திற்கு வந்திருந்த பெரியவரும் அவருடன் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அவரை விட ஒரு நான்கைந்து வயது இளைய பெண்ணும் மேசைக்கு வலப்புறத்தில் அமர்ந்திருந்தனர்.
இடதுபுறம் என்னுடைய மாமனாரும் அமர்ந்திருக்க நாங்களிருவரும் வழக்கறிஞருக்கு நேரெதிரில் இருந்த இரு இருக்கைகளில் அமர்ந்தோம்.
வழக்கறிஞர் எங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுள் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் எழுந்து புன்னகையுடன் என்னுடைய கரம் பற்றி குலுக்கினார். அவர் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவருக்கருகில் இருந்த பெண் அவருடைய தங்கை..
‘என்னய்யா.. ஒங்க மாப்பிள்ளையும் மகனும் செஞ்சிருக்கற முட்டாள்தனம் ஒங்களுக்கு தெரியுமில்ல.. நீங்க பெரிய மனுசன்.. நீங்களாவது சொல்லக்கூடாதா?’ என்று எகத்தாளமான சிரிப்புடன் பேசிய பெரியவரை எரித்துவிடுவதுபோல பார்த்தார் என் மாமனார்.
‘வேய்.. நீர் யாரு.. ஒம்ம மொதலாளி யாருன்னு எனக்கு தெரியும்வே.. இது வக்கீல் ஆஃபீஸ்.. அதுவும் நம்ம மருமகன் பேங்க் வக்கீல் ஆஃபீஸ்னு பாக்கேன்.. நீரு வாய மூடிக்கிட்டு பேசாம இருந்தீர்ன்னா பொளச்சீரு... இது போலீஸ் ஸ்டேசன் இல்ல வேய்.. பொத்திக்கிட்டு இரும்..’ என்ற எரிந்து விழுந்த என்னுடைய மாமனாரை வியப்புடன் பார்த்த என்னுடைய வழக்கறிஞர் பேச்சை திசை மாற்றும் நோக்கத்துடன் ‘என்ன ஜோசஃப் டாக்குமெண்ட்ஸ் கொண்டு வந்திருக்கீங்களா?’ என்றார்.
நான் ஆமாம் என்று தலையை அசைத்து என் கைவசமிருந்த பத்திரக்கட்டை அவரிடம் நீட்டினேன்..
மேசைக்கு வலப்புறம் அமர்ந்திருந்த பெரியவர் அவசர அவசரமாக அதை அவரிடம் இருந்து பெறுவதற்கு கைகளை நீட்ட என்னுடைய வழக்கறிஞர் அவரை அமைதியாகப் பார்த்தார். ‘ஒங்களுக்கு இப்ப என்ன வேணும்? பேசாம ஒக்காந்திருங்க.. நானா சொல்றவரைக்கும் இங்க அனாவசியமா பிரச்சினை பண்ணக்கூடாது.’ என்றார் கண்டிப்புடன். அவர் அப்படி பேசுவார் என்று நானும் எதிர்பார்க்கவில்லை..
பெரியவருக்கு புரிந்திருக்க வேண்டும். இருப்பினும் ஒரு அலட்சிய புன்னகையுடன் தன்னுடன் வந்திருந்த இருவரையும் பார்த்தார். அவர்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துவிட்டு அமைதியாயிருந்தனர்.
வழக்கறிஞருக்கு ஏற்கனவே சம்பந்தப்பட்ட பத்திரத்தைக் குறித்து தெரிந்திருந்தது. அவர் சரியான பத்திரத்தை எடுத்து பெரியவரை பொருட்படுத்தாமல் அவருக்கு வலப்புறம் அமர்ந்திருந்த இருவரிடமும் நீட்டி, ‘இது உங்கம்மா கையெழுத்துதானே?’ என்றார் சட்டென்று..
அவர்கள் இருவரும் பதிலளிப்பதற்கு முன் அந்த பெரியவர் குறுக்கிட்டு.. ‘சார்.. இருங்க.. இப்படி சட்டுன்னு கேட்டா எப்படி’ என வழக்கறிஞர் கோபத்துடன், ‘ஒங்கள கேட்டனா?’ என்றவாறு மற்ற இருவரையும் பார்த்தார். ‘சார் நீங்க ஒரு பேங்க் ஆஃபீசர்.. தினம், தினம் எத்தனெ பேர் கையெழுத்த பார்த்து சர்ட்டிஃபை பண்றீங்க.. சொல்லுங்க..இது ஒங்க அம்மா கையெழுத்தா இல்லையா?’ என்றார்.
அவர்கள் இருவருமே ‘ஆமாம்.. அதுமாதிரிதான் இருக்கு..’ என்றனர் தயக்கத்துடன்..
தொடரும்..
don't they take thumb impression along with the signature? can you please clarify this.
பதிலளிநீக்கு--
Jagan
ஆஹா... இன்னிக்கு டபுள் போனஸ்.
பதிலளிநீக்குஇல்லாட்டா இங்கத்து சேல். பை ஒன் அண்ட் கெட் ஒன் ஃப்ரீ:-))))
ஆமாமாம். அவுங்கவுங்க மாப்பிள்ளை அவுங்கவுங்களுக்கு ஒசத்திதான். அதே போல மகனை ரொம்பச் சொந்தங்கொண்டாடுற சம்பந்திகளை அவ்வளவாப் பிடிக்கதுன்றது எவ்வளோ உண்மை பாருங்க.
Welcome Jagan,
பதிலளிநீக்குAs far as I know there is no practice of obtaining the thumb impression of either the seller or the purchaser of a property in a sale document or in any other contract document unless the person concerned is an illiterate.
If that be the case Jayalalitha could not have disowned her own signature and escaped punishment.
There is one more hurdle in obtaining the thumb impression. The signature of a person can be easily identified by any lay man even in the absence of the person concerned. But in the case of thumb impression it would be very difficult to identify the person even by a professional unless a comparative impression is availabale
எந்த பிரச்சினையும் சுமுகமாக முடிந்து விட்டால் அந்தப் 'பெரியவர்' போன்ற ஆசாமிகளுக்குத் தாங்காது;
பதிலளிநீக்கு'நாட்டு வக்கீல்கள்' பிழைப்பு நடக்கனுமே
வாங்க துளசி,
பதிலளிநீக்குஇல்லாட்டா இங்கத்து சேல். பை ஒன் அண்ட் கெட் ஒன் ஃப்ரீ//
ஆஹா.. அங்கயும் இதே கதைதானா?
இந்தியாவுக்கும் நீயூசிக்கும் பெரிசா வித்தியாசம் ஒன்னும் இல்ல போலருக்கே..
அங்கயும் வீல் ஹப் திருட்டு போவுது.. இங்கயும் திருட்டு போவுது..
இங்கயும் ஒன்னு வாங்குனா ஒன்னு ஃப்ரீ.. அங்கயும் அப்படித்தான்..
அப்போ ஒங்களுக்கு இந்தியா நினைப்பு வர்றதுக்கு சான்ஸே இல்லன்னு நினைக்கிறேன்:)
வாங்க ஜி!
பதிலளிநீக்குஎந்த பிரச்சினையும் சுமுகமாக முடிந்து விட்டால் அந்தப் 'பெரியவர்' போன்ற ஆசாமிகளுக்குத் தாங்காது;//
அந்த பெரியவர பார்க்கும்போது எனக்கு நம்ம தில்லானா மோகனாம்பாள் நாகேஷ் ஞாபகம் வரும்..
///
பதிலளிநீக்குThe signature of a person can be easily identified by any lay man even in the absence of the person concerned. ///
I understand this, but my point is, why dont we take both and not only the signature. It will be helpful incase if situations like this arises. I have no idea about this procedure but from layman's point of view this is the best solution.
why dont we take both and not only the signature. It will be helpful incase if situations like this arises. //
பதிலளிநீக்குIt's a good suggestion Jagan.. But how do we convey this to the authorities:)
ம்ம்ம்ம்...பிரச்சனை முடிவுக்கு வரப் போகுதுன்னு நினைக்கிறேன். நல்லபடியா முடிஞ்சா சரி.
பதிலளிநீக்குவாங்க ராகவன்,
பதிலளிநீக்குபிரச்சனை முடிவுக்கு வரப் போகுதுன்னு நினைக்கிறேன்//
அன்றைக்கு வக்கீல் அலுவலகத்தில் வைத்து நாங்கள் எல்லோருமே அப்படித்தான் நினைத்து நிம்மதியடைந்தோம்.. ஆனா.. விதி யார விட்டது?
<==== அன்றைக்கு வக்கீல் அலுவலகத்தில் வைத்து நாங்கள் எல்லோருமே அப்படித்தான் நினைத்து நிம்மதியடைந்தோம்.. ஆனா.. விதி யார விட்டது? ===>
பதிலளிநீக்குஅதானெ பார்த்தேன்.வாழ்க்கையிலே எல்லம் எளிதா முடின்ச்சிட்டாஎப்படி?
இப்போ எல்லாம் விரல் ரேகையும் எடுக்கறாங்க.இப்போ ஒரு ரெஜிஸ்ட்ரேசன் முடிச்சப்போ ரேகைய்ம் எடுத்தாங்க.
பதிலளிநீக்கு"இடது கைப்பெருவிரல் குறி "இடும் வழக்கம் ஒரு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பார்த்திருக்கிறென்
பதிலளிநீக்கு