03 மே 2013

சரப்ஜித் சிங்குக்கு அரசு மரியாதை தேவையா?


கணேஷ், ரஹீம் ஆங்கில தினத்தாள் ஒன்றில் ஆழ்ந்துபோயிருக்கும் ஜோசப்பை பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கிறார்கள். ஜோசப் தான் படித்துக்கொண்டிருந்ததை முடித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அதை மடித்து வைத்துவிட்டு அவர்கள் இருவரையும் பார்க்கிறார்.

ரஹீம்: என்ன ஜோசப் எத படிச்சிட்டு இப்படி பெருமூச்சு விடுறீங்க?

ஜோசப்: எல்லாம் அந்த சரப்ஜித் சிங் விஷயம்தான்.

ரஹீம்: யார், அந்த பாக்கிஸ்தான் ஜெயில்ல அடிச்சே கொன்னாங்களே அவரா?

ஜோசப்: ஆமாம் பாய். ஏறக்குறைய இருபது வருசமா தூக்குத்தண்டனைக்கு காத்திருக்கிட்டிருந்தப்போ நம்ம கவர்ன்மென்டால இந்தியாவுக்கு கொண்டு வர முடியல. அவர வெறும் பாடியா (Body)த்தான் கொண்டுவரணுங்கறது விதி போல.

கணேஷ்: ஆனா ஒன்னுங்க. அவர் விடுதலையாகி வந்திருந்தாக் கூட இவ்வளவு மரியாதை கிடைச்சிருக்காது போல. அரசு மரியாதையோட இல்ல அவர அடக்கம் பண்ணப் போறாங்களாம்? அவ்வளவு ஈசியா கிடைக்கற மரியாதையா இது? ஒரு தூக்குத்தண்டனை குற்றவாளியா இருந்தவருக்கு இது கொஞ்சம் ஓவர்னு எனக்கு படுது. நீங்க என்ன சொல்றீங்க ஜோசப்.

ஜோசப்: இதெல்லாம் கொஞ்சம் சென்சிட்டிவான விஷயம் கணேஷ். அவர் ஒரு குத்தமும் செய்யலைன்னு அவங்களோட ஃபேமிலி சொல்றாங்களே? 26 வயசுல குடிபோதையில தெரியாம பாக்கிஸ்தான் பார்டர கடந்து போன ஒருத்தர அரெஸ்ட் பண்ணி அவர டெரரிஸ்ட்டுன்னு இருபது வருசத்துக்கு மேல ஜெயில்ல வச்சிருந்து இந்தியா எத்தனையோ தடவ கேட்டும் ரிலீஸ் பண்ணாம கடைசியில ஈவு இரக்கம் இல்லாம கூட இருந்த கைதிக ரெண்டு பேர் அவர அடிச்சி கொன்னுட்டங்கன்னு சொன்னா அது ரொம்பவே டிராஜடியான விஷயந்தானே? அந்த சிம்பத்தியும் ஒரு காரணமா இருக்கலாமே?

கணேஷ்: இருக்கட்டுங்க. ஆனா அதே சமயம் எந்த ஒரு முகாந்தரமும் இல்லாம இலங்கையில லேடீசையும் குழந்தைங்களையும் சகட்டு மேனிக்கு சுட்டுத்தள்ளுனத எவிடன்சோட காமிச்சும் இதுல நூத்துல ஒரு பங்கு சிம்பத்திய கூட சென்ட்ரல் கவர்ன்மென்ட் காட்டலையே, அதுக்கு என்ன சொல்றீங்க?

ஜோசப்: நீங்க சொல்றதும் உண்மைதான்.

கணேஷ்: பாக்கிஸ்தான்காரங்க இந்த மாதிரி அட்டூழியம் பண்றதுக்கு என்ன காரணம்னு நீங்க நினைக்கறீங்க பாய்?

ரஹீம்: (எரிச்சலுடன்) நா என்ன சொல்றது? இந்த மாதிரி ஒன்னு ரெண்டு சம்பவங்கதான் நம்ம ரெண்டு நாடுங்களும் ஃப்ரென்ட்லியா இருக்க முடியாம பண்ணுது. இதெல்லாம் அங்க இருக்கற ஆளுங்க சிலர் வேணும்னே செய்றாங்களோன்னு கூட தோணுது.

கணேஷ்: நீங்க என்ன சொல்ல வறீங்க?

ரஹீம்: இந்தியாவும் பாக்கிஸ்தானும் அடிச்சிக்கிட்டே இருக்கணும்னே நினைக்கற நாடுங்களும் இருக்கு கணேஷ்.

கணேஷ்: என்ன பாய் சொல்றீங்க? இதுல சம்பந்தப்பட்டு இருக்கறது பாக்கிஸ்தான் ஜெயில்லருக்கற கைதிங்க. இதுல மத்த நாடுங்க எங்கருந்து வந்துது?

ரஹீம்: அதில்ல கணேஷ். இதெல்லாம் யாரோ ப்ளான் பண்ணி பண்றாங்கன்னுதான் சொல்ல வரேன். இல்லன்னா இருபது வருசத்துக்கும் மேல ஜெயில்ல இருந்தவர இப்ப ஏன் அடிச்சி சாகடிக்கணும்?

கணேஷ்: அதான் அஃப்சல் குருவ தூக்குல போட்டதுக்கு பழிக்கு பழின்னு சொன்னாங்களாமே?

ரஹீம்: (எரிச்சலுடன்) அதெல்லாம் மீடியா பண்ற டிராமா கணேஷ். அத்தோட அவர அட்டாக் பண்ண ரெண்டு கைதிங்களையும் பாக்கிஸ்தான்ல கைது பண்ணிட்டாங்களாம். என்ன நடந்துதுன்னு தீர விசாரிக்கறதுக்கும் கமிஷன் ஒன்னு வச்சிட்டாங்களாமே?

ஜோசப்: இத இத்தோட விட்டுருவோம் பாய். நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் இந்த விஷயத்துல பாக்கிஸ்தான் செஞ்சது சரியே இல்ல. இதனால கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டிருந்த ரெண்டு நாட்டோட பகையும் மறுபடியும் ஜாஸ்தியாயிருச்சி. இப்ப போறாததுக்கு சீனாவோட அழும்பு வேற? அதுக்கு என்ன சொல்றீங்க கணேஷ்?

கணேஷ்: (எரிச்சலுடன்) இந்த மாதிரி நம்மள சுத்தி இருக்கற நாடுங்கல்லாம் நம்மள சீண்டி பாக்கறதுக்கு காரணமே ஒரு வீக்கான பி.எம் நம்ம நாட்டுக்கு இருக்கறதுதாங்க. இன்னும் பங்களாதேஷ் ஒன்னுதான் பாக்கி.

ரஹீம்: அப்போ மோடி மாதிரி ஆளுங்க வந்தா இதெல்லாம் சரியாயிருங்கறீங்க. அப்படித்தானே?

கணேஷ்: நிச்சயமா. பிஜேபி சென்ட்ரல இருக்கறப்போ பாக்கிஸ்தான் கூடத்தான் வாலாட்டாம இருந்திச்சி. ஏன்னா அவனுங்களுக்கு தெரியும் நாம ஒரு அடி அடிச்சா இந்தியா ரெண்டு அடி அடிக்கும்னு. அடுத்த தடவையும் காங்கிரசே ஜெயிச்சி இதே பி.எம் பதவிக்கு வந்தார்னா இந்தியாவோட கதி அதோகதிதான்.

ஜோசப்: (சிரிக்கிறார்) ஏன் முலாயம் சிங் கூடத்தான் கூடாரம் அடிச்சி ஒக்காந்து இருக்கற சீனாக்காரன அடிச்சி விரட்டாம அவன் கூட என்னய்யா பேச்சுன்னு கேக்கறார். அப்ப அவர பி.எம்மா ஆக்கிடலாமா?

ரஹீம்: நீங்க ஒன்னு ஜோசப். அந்த மாதிரி எல்லாம் பேசறதுக்கு அவர மாதிரி விவரமில்லாத ஆளுங்களாலத்தான் முடியும். இந்த மாதிரி விஷயத்துலல்லாம் எடுத்தோம், கவுத்தோம்கறா மாதிரி முடிவெடுக்க முடியாது. ஆனாலும் இந்த கவர்ன்மென்ட் இந்த விஷயத்த டீல் பண்ற விதமும் சரியில்லன்னுதான் எனக்கு படுது. என்ன சொல்றீங்க ஜோசப்?

ஜோசப்: எனக்கும் அப்படித்தான் படுது. நம்ம கவர்ன்மென்ட் இங்க நிறைய பிரச்சினையில மாட்டிக்கிட்டு முழிக்கிறத சீனாவும் பாத்துக்கிட்டுத்தான இருக்கு? அதான் அட்வான்டேஜ் எடுத்துக்க பாக்கறாங்க. ஆனா சீனா விடாப்பிடியா இப்ப டென்ட் அடிச்சி இருக்கற எடத்துலேயே பெர்மனென்ட்டா இருக்கறத அமெரிக்கா பாத்துக்கிட்டிருக்காதுன்னு நினைக்கறேன். ஐநாவும் ஏதாவது செய்யும்னு நம்பலாம்.

கணேஷ்: ஒன்னு ரெண்டு பிரச்சினையிலயா இந்த கவர்ன்மென்ட் மாட்டிக்கிட்டு முழிக்கிது? டெய்லி பேப்பர தொறந்தா ஏதாவது ஒரு பிரச்சினை. நாளுக்கு ஒரு பிரச்சினைன்னு வந்துக்கிட்டேதான இருக்கு? இந்த சிபிஐயோட ரிப்போர்ட்ட லா மினிஸ்டர் எங்கள கேக்காம கரெக்ட் பண்ணிட்டார்னு ஒரு பிரச்சினை முளைச்சிருக்கே. அதுக்கு என்ன சொல்றீங்க ஜோசப்?

ஜோசப்: அதான் சுப்ரீம் கோர்ட்டே அது தப்புன்னு சொல்லிட்டு இனிமே எந்த ரிப்போர்ட்டையும் எந்த இலாக்கா மினிஸ்டர்கிட்டயும் காமிக்க தேவையில்லேன்னு சொல்லிருச்சே.

ரஹீம்: சரி ஜோசப். ஆனா நாங்களும் கவர்ன்மென்ட்ல ஒரு அங்கம்தான் CAG மாதிரியோ இல்ல CEC மாதிரியோ சுதந்திரமா செயல்படக்கூடிய ஸ்தாபனம் இல்லேன்னு சிபிஐ சீஃபே பச்சையா சொல்லிட்டாரே?

ஜோசப்: இப்படி ஓப்பனா அட்மிட் பண்றது இதான் முதல் தடவைன்னு நினைக்கறேன். ஆனா அவர் சொல்றதுல எந்த தப்பும் இல்ல. ஏன்னா இங்க மட்டுமில்லாம அமெரிக்கா, ரஷ்யா மாதிரி நாடுங்கள்ல கூட அங்கருக்கற FBI,CIA,KGB மாதிரியான ஸ்தாபனங்கள் கூட ஆட்சியாளர்கள டிப்பென்ட் பண்ணித்தான் இருக்காங்க. அவங்கள மீறி இன்டிப்பென்டன்டா அவங்களால ஃபங்ஷன் பண்ண முடியறதில்ல. ஏன் இங்க கூட பிஜேபி ஆட்சிக்கு வந்தாலும் இதேதான் நடக்கும். இது சுப்ரீம் கோர்ட்டுக்கும் தெரிஞ்சி இருக்கத்தான் செய்யும். ஆனாலும் இப்ப திடீர்னு இந்த விஷயம் பெரிசா ஆவறதுக்கு காரணம் இப்பருக்கற லா மினிஸ்டர் பொறுப்பில்லாம செஞ்ச காரியம்தான்.

கணேஷ்: இதுக்கெல்லாம் முக்கிய காரணம் பின்னால ரிமோட் கன்ட்ரோல் வச்சிருக்கற லேடிதான்னு சொல்றாங்க?

ஜோசப்: (சிரிக்கிறார்) இருக்கலாம். ஆனா இது எத்தனை நாளைக்கி செல்லுபடியாகும்னு தெரியல. தான் இதுவரைக்கும் சேத்து வச்சிருக்கற நல்ல பேரையெல்லாம் ஒரேயடியா கெடுத்துக்கிட்டு இந்திய ஹிஸ்டரியிலேயே ரொம்பவும் ineffectiveஎ PMங்கற பேரோட போயிடறதுங்கற முடிவுக்கு சிங் வந்துட்டாரோ என்னவோ? எல்லாத்துக்கும் தலையை அசைச்சிக்கிட்டு எப்படித்தான் அவராலோ இருக்க முடியுதோ?

ரஹீம்: அது அவரோட பிறவி குணம் மாதிரில்ல தெரியுது? எந்த விஷயமானாலும் ஒரு டிசிஷனுக்கு வர்றதுக்கே தயங்கறாரே?

கணேஷ்: இந்த லட்சணத்துல மறுபடியும் காங்கிரஸ் ஜெயிச்சா இவர்தான் பி.எம்னு வேற சொல்லிக்கிறாங்க. கஷ்டம்.

ஜோசப்: சரி விடுங்க. மொதல்ல காங்கிரஸ் பெரும்பான்மையோட ஜெயிக்கட்டும் பாக்கலாம். இப்ப இருக்கற சூழ்நிலையில உடனே தேர்தல் வந்தா எமர்ஜென்சிக்கப்புறம் காங்கிரஸ் தோத்துதே அத விட படுமோசமா தோக்கும்கறது நிச்சயம்.

ரஹீம்: போன பவுர்ணமி அன்னைக்கி மாமல்லபுரத்துல நடந்த பாமக மீட்டிங்ல காடுவெட்டி பேசினத கேட்டீங்களா ஜோசப்?

ஜோச: டிவியில பாக்கல. ஆனா யூட்யூப்ல இருந்த க்ளிப்ப பாத்தேன். அதென்னங்க அப்படி ஆவேசமா பேசறாரு? ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு போயி இப்படி ஆவேசப் படறதுக்கு என்ன இருக்குன்னு தெரியல.

கணேஷ்: இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? மருத்துவர் பேசிக்கிட்டிருந்தப்போ பக்கத்துல ஒக்காந்திருந்த மணி ஏதோ ஒரு சீட்ட அவர்கிட்ட காமிச்சாரு. அதுக்கு ஐயா அதானல என்ன இப்போ, இதுக்கு ஒரு கேசு போடுவாங்க, போட்டுக்கட்டுமே, அப்படீன்னாரு.

ஜோசப்: டைம் ஆயிருச்சின்னு எழுதி காமிச்சிருப்பாருன்னு நானும் நினைச்சேன். ராத்திரி பத்து மணி வரைக்கும்தான் கூட்டத்த நடத்தணும்னு கண்டிஷனாமே. அதத்தான் எழுதி காமிச்சிருப்பாரு போல.

கணேஷ்: இருக்கும். இப்ப அதையே ஒரு புது கேசா அவர் மேல போட்டுருக்காங்க. ஏற்கனவே ஜெயில்ல இருக்கற அவருக்கு பெய்ல் கிடைச்சாலும் இந்த கேஸ்ல மறுபடியும் அரெஸ்ட் பண்ணிருவாங்களோ என்னவோ?

ஜோசப்: செஞ்சாலும் செய்வாங்க. ஆனா அது ஏற்கனவே கொதிச்சி போயிருக்கற அவரோட தொண்டர்கள மறுபடியும் சீண்டி பாக்கறா மாதிரி இருக்கும்கறது என்னோட ஒப்பீனியன். பேருக்கு ஒரு தடவ அரெஸ்ட் பண்ணியாச்சி. இத்தோட இந்த விஷயத்த முடிச்சிக்கிட்டாங்கன்னா நல்லாருக்கும்.

ரஹீம்: இன்னைக்கி அன்புமணிய வேற அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே... கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் டிவியில சொன்னான். அதுவும் பெய்ல வெளிவர முடியாத கேச போட்ருக்காங்களாம்.

கணேஷ்: அப்படியா?

ஜோசப்: ஆமா கணேஷ். நானும் பாத்தேன். 2002ல நடந்த கூட்டத்துல அவர் ஏதோ தரக்குறைவா பேசினாராம். ஆனா போன 2002 கூட்டத்துல ராத்திரி பத்து மணிக்கு மேல பேசினதுக்காகத்தான் என் மேல வேணும்னே கேஸ் போட்டுருக்கறதா அவரே சொன்னத கேட்டேன். எது சரியோ, நாளைக்கி கோர்ட்ல அவர ப்ரெசென்ட் பண்றப்போ தெளிவா தெரியும்.

ரஹீம்: ஜோசப் இன்னொரு தமாஷான விஷயம்.

ஜோசப்: சொல்லுங்க. கடைசியா கொஞ்சம் சிரிச்சிட்டு முடிப்போம்.

ரஹீம்: பக்கத்துலருக்கற பாண்டிச்சேரியில எலக்ட்ரிக் டேரிஃப (tariff) கூட்டிட்டாங்களாம். அதனால அங்க எதிர்கட்சியாருக்கற அதிமுக போராட்டமாம். அங்க அதிகபட்சமா கட்டணம் ரூ.3.50வா ஃபிக்ஸ் செஞ்சதுக்கே இது அடுக்காதுன்னு இங்கருக்கற அம்மாவும் அறிக்கை குடுக்கறாங்க. ஆனா இங்க அதிகபட்ச கட்டணம் ரூ.5.50! இதுல என்ன தமாஷ்னா விலைவாசி விஷம்போல ஏறி இருக்கற இந்த சமயத்துல இந்த கட்டண உயர்வு தேவையான்னு கேக்குது அதிமுக? அப்ப இங்க கூட்டுனப்ப விலைவாசி என்ன இறங்கியா இருந்துச்சி? என்ன கொடுமை பாருங்க?

ஜோசப்பும் கணேஷும் சிரிக்கின்றனர்:

கணேஷ்: இதெல்லாம் அரசியல்ல சகஜம் பாய். இன்னொன்னு தெரியுமா? நேத்தைக்கி கலைஞர் நியூஸ்ல தமிழகத்துல மறுபடியும் மின் கட்டண உயர வாய்ப்புள்ளது, அரசு ஆலோசனை. அப்படீன்னு சொன்னாங்க. இதுக்கென்ன சொல்றீங்க?

ரஹீம்: நா என்னத்த சொல்றது? நா எதையாவது சொல்லப்போயி என்மேலயே கேஸ் ஏதாச்சும் பாஞ்சிருச்சின்னா? நம்மாலல்லாம் ஜெயில்ல போயி ஒக்கார முடியாதுப்பா, ஆள விடுங்க.

அவர் அவசரமாக எழுந்து செல்ல இந்த வார கூட்டம் கலைகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக