05 ஜூலை 2011

சமச்சீர் கல்வி கமிட்டி அறிக்கை தாக்கல்!

"சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்த கமிட்டி தன் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், தற்போது இருக்கும் பாடத்திட்டங்கள், நடப்பு வருடத்துக்கு பயன்படத்தக்க வகையில் இல்லை என்றும், பாடத்திட்டங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.






இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வி குறித்த வழக்கை 7ம் தேதிமுதல் தினமும் விசாரிக்கும் என்று தெரிகிறது."





செய்தி: தினமணி இணைய தளம்.



இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதானே!



அரசு தலைமைச் செயலர் தலமையில் தனியார் பள்ளிகளுடைய முதலாளிகளுடன் கூட்டு சேர்ந்து அமைக்கப்பட்டுள்ள ஒரு கமிட்டி வேறென்ன சொல்லும்?



ஆனாலும் தமிழகமெங்கும் கல்வியாளர்களும், அரசியல் கட்சிகளும் ஏன், பள்ளி மாணவர்களும் கூட சமச்சீர் கல்வியை உடனே அமுல்படுத்த போராட்டங்களை நடத்தியதை பார்த்த பிறகும் இப்படியொரு அறிக்கையை தயார் செய்து உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஜெயலலிதாவுக்கு நிறைய நெஞ்சுறுதி வேண்டும்.



யார் என்ன சொன்னாலும் எனக்கென்ன, என் வழி தனி வழி, அதில்தான் நான் பயணம் செய்வேன் என்கிற அம்மையாரின் பிறவிக் குணம் மாறவே மாறாது என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சியம் வேண்டும்?



நடக்கட்டும், இன்னும் ஐந்தாண்டுகள் தானே!

3 கருத்துகள்:

  1. மீண்டும் முருங்கை மரம் தானா???

    பதிலளிநீக்கு
  2. வேதாளம்னு தெரிஞ்சும் ஓட்டு போட்டாச்சு.. முருங்கை மரம்தானான்னு கேட்டா? உயர் நீதிமன்றம் குழுவின் பரிந்துரையை ஏற்கக் கூடாது என்று மட்டும் விரும்பலாம்.

    பதிலளிநீக்கு
  3. தற்போதுள்ள கல்வித் திட்டம் பல மிகப் பெரிய ஓட்டைகளைக் கொண்டுள்ளது, அவற்றை சரி செய்து அடுத்த ஆண்டு கண்டிப்பாக சமச்சீர் கல்வித் திட்டம் அமல் படுத்துகிறோம், தற்போதைக்கு பழைய கல்வித்திட்டமே தொடரும் என்று தானே அம்மா சொல்கிறார், அதில் தப்பென்ன?

    பதிலளிநீக்கு