26 நவம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 22

‘மனைவிக்கு தெரியாமல் நகைகளை எடுத்து இந்த காரியத்துக்கு உபயோகிப்பது சரியா?’ என்று வீட்டிலிருந்து திரும்பி அலுவலகத்துக்கு செல்லும் வழியெல்லாம் யோசித்துக்கொண்டே வந்தேன்.

‘சரியில்லைதான். ஆனா இதற்கு வேறு வழியில்லை.’ என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். இதில் என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது? நாளைக்கி அந்த ஆளை பிடிச்சிரமுடியாதா? அதுக்கப்புறம் ஒன்னு வேற நகைகளை கொண்டுவா இல்லன்னா பணத்தை செலுத்தி கணக்கை முடித்துவிடு என்று சொல்லவேண்டியதுதானே? இதிலென்ன சிக்கல் வந்துவிடப்போகிறது? என்று ஓடியது என் எண்ணம்.

அலுவலகத்தை அடைந்ததும் நான் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறேன் என்பதை என்னுடைய உதவி மேலாளரிடம் சொன்னேன். அவரர் நான் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாயிருந்து விட்டு நான் முடித்ததும். ‘சார். நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஒன்னு சொல்லட்டுமா?’ என்றார் தயங்கியவாறு.

‘தயங்காம சொல்லுங்க. இதுல உங்களுக்கு பாதிப்பு வராம நான் பாத்துக்கறேன்.’ என்றேன்.

‘உங்க மனைவியோட நகையை வச்சி இந்த கணக்கை Close பண்ணலாம்னு சொல்றீங்களே. அதுக்கப்புறம் அந்தாள் மேல ஆக்ஷன் எப்படி எடுக்கமுடியும்? அந்த ஆள் ஏதாவது வில்லங்கம் பண்ணி போலீஸ் ஆக்ஷன் எடுக்க வேண்டி வந்தா உங்க பேங்க்ல இருந்த கணக்கைத்தான் க்ளோஸ் பண்ணியிருக்கேன்னு போலீஸ் கை கழுவிட்டா?’ அவர் கூறியதில் இருந்த நியாயம் என்னை ஒரு விநாடி சிந்திக்கவைத்தது.

‘சரி. இப்ப என்ன பண்ணலாம், சொல்லுங்க?’ என்றேன். ‘இந்த விஷயம் H.O.க்கு தெரியாம செய்யணும். அதுக்கு என்ன வழி?’

அவர் சிறிது நேரம் யோசனையுடன் என்னை பார்த்தார்.

‘சும்மா சொல்லுங்க. நான் என்ன நினைப்பேன்னு யோசிக்காதீங்க.’ என்றேன்.

‘சார் இத H.O.வுக்கு ரிப்போர்ட் பண்ணாம சால்வ் பண்ண முடியாதுன்னு நான் நினைக்கறேன், சார். அப்படி செஞ்சா பின்னால நாம தப்பு செய்ததுமில்லாம செஞ்ச தப்ப ரிப்போர்ட் பண்ணாம மறைச்சிட்டோம்னு ஒரு என்க்வயரி வர்றதுக்கு சான்ஸ் இருக்கு.. அதனாலதான் சொல்றேன். எல்லாத்தையும் யோசிச்சி முடிவு எடுக்கலாம்.’என்றார்.

அவருடைய வாதத்தில் உண்மையிருந்தாலும் H.O.வுக்கு ரிப்போர்ட் செய்தாலும் நிச்சயம் இதைவிட பெரிய பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்தேன். என்க்வயரி என்று வந்தால் அடகு வைத்த நகைகளை யார் Appraise செய்தது என்று கேள்வி வரும். உதவி மேலாளர் என்று தெரிந்தால் அவருடைய கையிலிருந்து முழுப்பணத்தையும் வசூலிப்பதுடன் அவருக்கு தண்டனை வழங்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. இதை அவரிடம் எப்படி சொல்வதென்று சில விநாடிகள் யோசித்தேன். வேறு வழியில்லை, அவருக்கு தெளிவாக எதற்காக மேலிடத்துக்கு தெரிவிக்க தயங்குகிறேன் என்று எடுத்து சொன்னேன்.

நான் சொன்னதின் உள்ளர்த்தத்தை புரிந்துகொண்ட அவர் என்னை கண்களில் நிறைந்த நன்றியுடன் என்னைப் பார்த்தார். ‘சார் உங்களுக்கு எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னு தெரியலை.. என்னை காப்பாத்துறதுக்காக நீங்க உங்க மனைவியோட நகைகளை வச்சி.. வேண்டாம் சார். என்னுடைய கவனக்குறைவினாலதான் இந்த பிரச்சினை வந்தது.. என்னை காப்பாத்த போய் வேற ஏதாவது பிரச்சினையில நீங்க மாட்டிக்காதீங்க.. நாம இந்த கணக்கை க்ளோஸ் பண்ணிட்டு H.O.விலருந்து மறைச்சி அது வேற வழியா அவங்களுக்கு தெரியவந்திச்சினா பின்னால உங்களுக்கும் பிரச்சினையாயிடும். நாம பேசாம இன்னைக்கி Cash Close பண்ணிருவோம். நாளைக்கி ரிக்கவர் பண்ண முடிஞ்சா ரெகுலரைசைசேஷன் ரிப்போர்ட்டுன்னு ஒரு டீடெய்ல்ட் ரிப்போர்ட் அனுப்பிரலாம். இல்லன்னா வர்றது வரட்டும் சார். லெட் அஸ் நாட் காம்ப்ளிகேட் திங்க்ஸ்.’ என்றார் உறுதியுடன்.

நானும் அவர் சொல்வது சரி என்ற முடிவுக்கு வந்தேன். அன்றைய அலுவல்கள் முடிந்ததும் அலுவலகத்தை பூட்டிவிட்டு உதவி மேலாளரும் நானும் மீண்டும் அந்த பான் புரோக்கர் வீட்டுக்கு சென்றோம்.

அப்போதும் அவர் வீடு திரும்பியிருக்கவில்லை. அவருடைய மூத்த சகோதரர் (அவர் தனியாக வடபழனியில் கடை வைத்திருந்தார்) இருந்தார். அவர் நான் கூறியதை முழுவதும் கேட்டுவிட்டு, ‘சார் அம்மா நீங்க வந்து போனத சொன்னாங்க. என் தம்பியோட ஃப்ரெண்ட் யாருன்னு தெரியலை. இருந்தாலும் வொர்ரி பண்ணாதீங்க. ராத்திரி என்நேரமானாலும் தம்பி வந்ததும் உங்க வீட்டுக்கு போன் பண்றேன். அந்த ஆள்கிட்டருந்து பணத்தை திருப்பி வாங்கிரலாம். அதுக்கு நான் காரண்டி.’ என்றார்.

நான் உதவி மேலாளரை பார்த்தேன். அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை வரவில்லையென்பதை உணர்ந்தேன்.

‘குழப்பல்யா.. சரியாக்காம். தான் வீட்ட போய்ட்டு சுகாயிட்டு ஒறங்கு. நாள நோக்காம்.’ (கவலைப்படாதே. சமாதானமா வீட்டுக்கு போங்க. நாளைக்கி பாத்துக்கலாம்.) என்று மலையாளத்தில் அவரை சமாதானப்படுத்திவிட்டு நானும் மனதில் கலக்கத்துடன் வீடு திரும்பினேன். அலமாரியிலிருந்து எடுத்த லாக்கர் சாவியை எடுத்த இடத்திலேயே திருப்பிவைத்துவிட்டு திரும்ப நான் செய்வதையே பார்த்துகொண்டு நின்ற என் மனைவியைப் பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன்.

தொடரும்.

14 கருத்துகள்:

  1. very interesting and touching sir

    பதிலளிநீக்கு
  2. என்ன ராஜ் அடுத்த பதிவை பார்க்க ரொம்ப ஆர்வமா?

    சனிக்கிழமை அரைநாள்ங்கறதுனால வேலை நிறைய இருக்கும். அதனால அடுத்த பதிவு திங்கள்கிழமைதான்.

    கொஞ்சம் பொறுத்துக்குங்க.

    உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா1:45 PM

    முத்து சொன்னாமாதிரி ரொம்ப உணர்ச்சிவசப்படுறா மாதிரி இருக்கு சார். உங்களுக்கு நகைச்சுவையாவும் எழுத வருதுங்கறதுதான் ஆச்சரியாம இருக்கு. தொடர்ந்து எழுதுங்க சார்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1:46 PM

    இந்த Editionம் ரொம்பவும் அருமையாயிருக்குங்க. கண்டினியூ பண்ணுங்க. தினமும் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1:48 PM

    என் மனைவியைப் பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன்.//

    என்னாச்சி நல்லா கையும் களவுமா மாட்டிக்கிட்டீங்களா? நீங்க செய்யறது சரியில்லன்னு நேத்தைக்கே நினைச்சேன். அடுத்த பதிவுல என்ன சொல்ல போறீங்கன்னு ஆவலோட காத்துக்கிட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா1:51 PM

    ‘சார் உங்களுக்கு எப்படி தாங்க்ஸ் சொல்றதுன்னு தெரியலை.. என்னை காப்பாத்துறதுக்காக நீங்க உங்க மனைவியோட நகைகளை வச்சி.. வேண்டாம் சார்.""

    உங்க அசிஸ்டென்ட் சொல்றது ரொம்ப சரிங்க. நண்பருக்கு உதவி செய்யணும்னு நினைக்கறது நல்லதுதான். ஆனா அதுக்காக கையை சுட்டுக்கிட்டு.. வேணாம் சார்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி சம்பத்.

    நகைச்சுவை என்பது என் கூட பிறந்தது. அப்பப்ப வெளிவரும்.

    பதிலளிநீக்கு
  8. இந்த Editionம் ரொம்பவும் அருமையாயிருக்குங்க. /

    நன்றி

    பதிலளிநீக்கு
  9. என்னாச்சி நல்லா கையும் களவுமா மாட்டிக்கிட்டீங்களா? /

    அடுத்த பதிவை படியுங்கள். தெரியும்.

    பதிலளிநீக்கு
  10. நண்பருக்கு உதவி செய்யணும்னு நினைக்கறது நல்லதுதான். ஆனா அதுக்காக கையை சுட்டுக்கிட்டு.. வேணாம் சார். "

    நீங்க சொல்றதும் சரிதான். அதனாலதான் அவர் சொன்னதை அப்படியேஏத்துக்கிட்டேன். ஆனா அதுவும் சிக்கலாத்தான் முடிஞ்சது.

    அடுத்த பதிவை பாருங்க தெரியும்.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா3:47 PM

    H.O.விலருந்து மறைச்சி அது வேற வழியா அவங்களுக்கு தெரியவந்திச்சினா பின்னால உங்களுக்கும் பிரச்சினையாயிடும். //
    என்னுடைய அனுபவத்திலிருந்தும் இதைத்தான் நான் படித்துக்கொண்டேன். ஆரம்பத்திலேயே உயர் அதிகாரிகளிடத்தில் நம் தவற்றை அறிவித்துவிடுவதுதான் நமக்கு நல்லது. இல்லையென்றால் பிறகு அதுவே வினையாய் முடியும்.

    பதிலளிநீக்கு
  12. உங்க தொடரை இன்னிக்குத்தான் முழுசா, மொத்தமா படிச்சேன்.

    எதிர்பாராத திருப்பங்களோட வரும் மர்ம நாவல் ரேஞ்சுக்கு
    எழுதியிருக்கீங்க.

    'அப்புறமா நிதானமா, அனுபவிச்சுப் படிக்கலாம்'னு நினைச்சுக்கிட்டே ஒரு பத்துப் பதிவுபோல படிக்காம விட்டிருந்தேன்.( எல்லாம் சரியான நேரம் கிடைக்காமப் போறதுதான்)

    அட்டகாசமா எழுதறீங்க.

    பதிலளிநீக்கு
  13. மிக்க நன்றி துளசி.

    உங்க நியூசிலாந்து தொடரும் ரொம்ப சூப்பர்.

    பதிலளிநீக்கு