டாக்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும்...
மாதவன் தன் படுக்கையறையில் அமர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் செல்பேசியை தொலைத்து விட்டு வந்த டிஆர் மாலின் முன்பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ரவியும் தன் கையிலிருந்த மாதவனின் செல்பேசியையே பார்த்தவாறு தன் இருசக்கர வாகனத்தில்அமர்ந்திருந்தான்.
அவன் வேறு யாருமில்லை.
'இது என்ன மாடல் சார். சூப்பரா இருக்கே?' என்று மாதவனைக் கேட்டு எரிச்சலடைய வைத்தவனே தான்.
மாதவனைப் போலவே பொருட்களுடன் பில் கவுண்டரை அடைந்து கையிலிருந்த ப்ளாஸ்டிக் கூடையை வைத்துவிட்டு பில் போடும்போதே அதில் வரும் தொகையை பார்த்துக்கொண்டு நின்றவனை, 'சார் ஃபோன்' என்ற குரல் ஈர்த்தது. பில் போடுபவனுக்கு அருகில் பொருட்களை பைகளில் அடுக்கிக்கொண்டிருந்த பணியாள் அவனை நோக்கி செல்பேசி ஒன்றை நீட்டுவதை பார்த்தான்.
'இத போயி சாமான்களோட வச்சிருக்கீங்க? யாராச்சும் எடுத்திருந்தா என்னாவறது? இந்தாங்க பிடிங்க.'
இது அந்தாளோட ஃபோன் ஆச்சே? இது எப்படி நம்ம கூடையில வந்துது?
சுற்று,ம் முற்றும் பார்த்தான். மாதவன் வாசலுக்கு வெளியே தன் இரு சக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் செல்வது தெரிந்தது. அவனை கூப்பிட குரல் எழுப்ப நினைத்தவனை பில் கவுண்டரிலிருந்து வந்த குரல் இடைமறித்தது. சார்... 475/- ஆவுது கார்டா கேஷா?'
'கேஷ்தான்' சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.
மீதியை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தவன் அவசர அவசரமாக சாலையில் இறங்கி மாதவன் சென்ற திசையைப் பார்த்தான். மாதவன் சென்ற சுவடே தெரியவில்லை.
'சுத்த லூசா இருப்பான் போலருக்கே.... ஃபோன் காணலைங்கறது கூடவா தெரியாம இருக்கும்?' என்று நினைத்தவாறு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நெருங்கி பையை தொங்க விட்டுவிட்டு சீட்டில் அமர்ந்து யோசித்தான்.
'இப்ப என்ன பண்றது?’கடையிலயே திருப்பி குடுத்துறலாமா? ஆனா அவனுங்களே வச்சிக்கிட்டானுங்கன்னா? வேணாம். ஆனா இந்த மாதிரி செல்ஃபோனுக்கு ஆசைப்பட்டுத்தானே நம்ம வேலையே போச்சி?
ஒன்னு பண்லாம்.இத தொறந்து பார்த்து அந்தாளோட விவரம் தெரியுதான்னு பாப்பம். அப்புறம் காண்டாக்ட் பண்ணி உங்க ஃபோன் எங்கிட்டதான் இருக்கு. வந்து வாங்கிக்கிருங்கன்னு சொல்லி குடுத்துருவோம். அதுக்கு முதல்ல இத ரீசார்ஜ் பண்ணணும்..' என்று நினைத்தவாறு ரீசார்ஜ் செய்ய உதவும் துளையை பார்த்தான். அது சற்று அகண்டு இருந்தது.
இதை ரீ சார்ஜ் செய்வதற்கு அவனுடைய அறையில் இருந்த சார்ஜரால் முடியாது என்று தோன்றியது. என்ன செய்யலாம்? புதுசா ஒரு சார்ஜர வாங்கணும்னா செலவு ஆகும். பர்சை திறந்து பார்த்தான். அதில் ஒரேயொரு ஐநூறு ரூபாய் தாள் அம்போ என்று நின்றிருந்தது. அவனுடைய வேலை பறிபோனதிலிருந்து அவனுடைய ஒரே வருமானம் செல்பேசிகளை வாங்கி விற்பதிலிருந்து தான் வந்துக்கொண்டிருந்தது. டி.எம்.இ வரை படித்திருந்தும் அவனுக்கு ஏற்ற வேலையாக ஒன்றும் கிடைத்தபாடில்லை. இருந்த ஒரு வேலையையும் அவனுடைய அவசரபுத்தியால் இழந்திருந்தான். அடுத்த வேலை எப்போது கிடைக்குமோ? பேசாமல் இந்த ஃபோனை கைமாத்திட்டா என்ன? ஆனால் இதுவரை அவன் ஸ்மார்ட் ஃபோன் எதையும் வாங்கி விற்றதில்லை.
ஐந்தாயிரம் வரை விலையுள்ள செல்பேசியை தொலைப்பவர்களோ அல்லது திருடு கொடுப்பவர்களோ அநேகமாக காவல் நிலையங்களுக்கு சென்று புகார் கொடுக்க மாட்டார்கள் என்பது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ரவி போன்றவர்களுக்கு தெரியும். ஆனால் எட்டாயிரத்துக்கும் அதற்கு மேலும் விலையுள்ள செல்பேசியை வைத்துள்ளவர்களுள் அநேகம் பேர் தங்களுடைய செல்பேசி திருடுபோய்விட்டால் அடுத்துள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார்கள். ஆனால் அவர்களுள் தங்களுடைய செல்பேசியின் IMIE ஏண்ணை தங்கள் புகாருடன் சமர்ப்பித்தால் மட்டுமே அதை காவல்நிலையத்தில் புகாரையே ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் ரவிக்கு தெரியும். ஏனெனில் செல்பேசியை திருடுபவர்கள் உடனே அதில் இருக்கும் சிம் கார்டை மாற்றிவிடுவார்கள். அந்த சூழலில் சம்மந்தப்பட்ட செல்பேசியின் IMIE ஏண் தெரிந்தால் மட்டுமே அதை ட்ரேஸ் செய்ய முடியும். ஆகவே அது இல்லையென்றால் காவல்நிலையத்தில் புகாரை வாங்கவே யோசிப்பார்கள். அப்படியே வாங்கினாலும் அதை கிடப்பில் போட்டுவிடுவார்கள்.
ரவி தன் கையில் இருந்த மாதவனின் செல்பேசியை மீண்டும் ஒரு முறை பார்த்தான். இது நிச்சயம் பத்தாயிரத்துக்கு மேல இருக்கும் பார்த்தா புதுசாவும் இருக்கு. அஞ்சாறு மாசத்துக்குள்ளதான் வாங்கியிருப்பான். பாத்தா படிச்சவன் மாதிரியும் இருக்கான். அதனால் இதனோட IMIE நம்பர நிச்சயம் வச்சிருப்பான். ஆனா மணி இப்பவே பத்தாயிருச்சி. இந்த ராத்திரி நேரத்துல எந்த போலீஸ் ஸ்டேஷன்லயும் கம்ப்ளெய்ண்ட் வாங்க மாட்டாங்க.. அதே சமயம் அவனுக்கு நம்ம ஃபோன எவனோ எடுத்துக்கிட்டான்னு தோனாது. கடையிலதான் விழுந்துருக்கும்னுதான் நினைப்பான்.
ரவி இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவனுக்கு பின்னால் மாலின் முகப்பு விளக்குகள் அணைக்கப்படுவது தெரிந்தது. அவனைத் தவிர பத்து இருபது வாகனங்களே அந்த பார்க்கிங் பகுதியில் நிற்பதை கவனித்தான். அதுவும் கூட அந்த மாலிலுள்ள கடைகளில் பணியாற்றுபவர்களாக இருக்கக் கூடும்.
மீண்டும் அவனுடைய சிந்தனை இந்த செல்பேசியை என்ன செய்யலாம் என்பதை பற்றி எழுந்தது. திருப்பி குடுத்துரலாமா இல்ல வித்து காசாக்கிரலாமா? அவனால் நேரடியாக விற்க முடியாத செல்பேசிகளை அவனுக்கு தெரிந்த தரகரிடம் ஒப்படைத்துவிட்டு கிடைக்கும் பணத்தை வாங்கிக்கொள்வது வழக்கம். பேசாம அப்படி செஞ்சிரலாமா/ இதுக்கு எப்படியும் மூவாயிரம் நாலாயிரம் கிடைக்கும்.... ரெண்டு மூனு வாரம் ஓட்டிரலாம்.
அவனுடைய வேலை எதற்காக பறிபோனது என்பது தெரிய வந்ததுமே அவனுடைய மனைவி ராஜி குழந்தையுடன் அவனை விட்டு பிரிந்து தாய்வீடு சென்றுவிட்டிருந்ததால் அவன் தனியாகத்தான் வீட்டை காலி செய்துவிட்டு நண்பன் ஒருவனுடன் மான்ஷன் ஒன்றில் வசித்துக்கொண்டிருந்தான். அவன் குடியிருந்த வீட்டு உரிமையாளர் அவனுடைய வேலை பறிபோய்விட்டது என்பது தெரிந்ததுமே வீட்டை காலி செய்ய வைத்துவிட்டார். உடனே வீட்டிலிருந்த அனைஹ்து சாமான்களையும் மனைவி வீட்டு விலாசத்துக்கு லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டான்.
‘சார்... நேரமாச்சுது கிளம்புறீங்களா?’ என்ற குரல் கேட்டு தன்னுடைய நினைவுகளிலிருந்து மீண்ட ரவி தன் அருகில் நின்ற காவலாளியை பார்த்தான்.
‘இதோ கிளம்பிட்டேன்... சாரி’ என்றவாறு வாகனத்தை கிளப்பி சாலையில் இறங்கி சிறிது தூரம் சென்றதும் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தான். பிறகு தன்னுடைய செல்பேசியை எடுத்து அவனுக்கு தெரிந்த தரகரை அழைத்து தனக்கு செல்பேசி ஒன்று கிடைத்துள்ள விவரத்தை தெரிவித்துவிட்டு ‘இத பார்த்தா புது ஃபோன் மாதிரிதான் தெரியுது. சாம்சங் ஏ50 மாடல். ஆனா ஆஃபாயிருக்கறதால தொறந்து பாக்க முடியலங்க... ஒங்கள இப்ப வந்து பாக்கலாமா?’ என்றான்.
‘இப்பவா?’
‘ஆமா... எங்கிட்ட ஃபோன் வ்ந்து அரை மணி நேரம் ஆயிருச்சி... அவன் போலீஸ்க்கு போறதுக்குள்ள சிம் கார்ட மாத்திறணும்.... ஆனா சிம்ம எப்படி எடுக்கறதுன்னு தெரியல. அப்புறம் இத சார்ஜ் பண்ணி பாத்தா நல்லதுன்னு நினைக்கேன்.. உங்கக் கிட்டதான் எல்லா ஃபோனுக்கு ஏத்த சார்ஜர் இருக்குமே. அதான் கூப்ட்டேன். இன்னும் அரை மணிக்குள்ள இத தொறந்தாவனும்.. என்ன சொல்றீங்க? ஒங்களால முடியாதுன்னா சொல்லிறுங்க.. நா வேற ஏற்பாடு பண்ணிக்கறேன்.’
உண்மையில் அவனுக்கு வேறு எந்த தரகரையும் பரிச்சயமில்லை.. ஆனாலும் அவன் சொன்ன அந்த பொய் வேலை செய்தது. ‘சரி.. சரி... பத்து நிமிஷத்துல வர முடியுமா?’
அவர் குடியிருந்த வீடு பக்கத்தில்தான் இருந்தது. ‘சரி வரேன். கொஞ்சம் முன்ன பின்ன ஆவலாம்...பரவால்லையா?’
’சரி... அதிக பட்சம் கா மணி நேரம். அப்புறம் நா போயிருவேன்.’
‘அதுக்குள்ள வந்துருவேன்.’ என்று பதிலளித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டு அடுத்த பதினைந்து நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தான்.
தரகர் அவருடைய அலுவலக அறையின் வாசலில் நிற்பது தெரிந்தது.
‘எங்க ஃபோன குடுங்க பார்க்கலாம்?’
அவன் வாகனத்தை விட்டு இறங்குவதற்குள் அவனிடமிருந்த செல்பேசையை வாங்கிக்கொண்டு கடைக்குள் சென்று இருக்கையில் அமர ரவி அவரைப் பின்தொடர்ந்து சென்று எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அவரிடமிருந்த சார்ஜர்களில் ஒன்று மாதவனின் செல்பேசிக்கு பொருத்தமான ஒன்றை எடுத்து அதை செல்பேசியில் சொருக ரவி உடனே அவரை தடுத்து நிறுத்தினான். ‘இருங்க... முதல்ல சிம்ம கழட்டிறலாம்.’
தரகார் புன்னகையுடன் அவனை பார்த்தார். ‘பாய்ண்ட கரெக்டா புடிச்சிட்டய்யா.’
தன் மேசை டிராயரை திறந்து அதில் கிடந்த ஊசி போன்ற ஒன்றை எடுத்து செல்பேசியின் பக்கவாட்டிலிருந்து துளையில் இட்டு அழுத்த இரண்டு சிம் கார்டுகளுடன் ஒரு பலகை (Tray) வெளியில் வந்தது.
‘அது சரி... இதான் மேட்டரா? நா என்னடா சிம் கார்ட் ஓட்டையையே காணமேன்னு முழிச்சிக்கிட்டிருந்தேன்.” என்றான் ரவி. ‘எதுக்கும் இந்த ஊசி எங்கிட்டவே இருக்கட்டும்... நாளைக்கி திருப்பி தந்துர்றேன்.
.
அடுத்த ஒரு சில நொடிகளில் இரண்டு சிம் கார்டையும் நீக்கிவிட்டு சார்ஜரை செருகியதும் செல்பேசி உயிர்பெற்று ரவி சற்று முன் கூறியிருந்தது போலவே சாம்சங் ஏ50 என்றது அந்த செல்பேசி.
‘தொறந்து பாக்காமயே எப்படி மாடல கரெக்டா சொன்னீங்க?’ என்றார் தரகர்.
‘அந்த ஆள்தான் சொன்னான்.’ என்றான் ரவி புன்னகையுடன்.
‘என்னது ஓனரே சொன்னானா? உங்கக் கிட்டயா? எப்ப?’
தரகரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலாக தன்னிடன் அந்த செல்பேசி வந்து சேர்ந்த விவரத்தை சுருக்கமாக கூறினான் ரவி.
அவன் சொல்லி முடிப்பதற்குள் தரகரின் முகம் முற்றிலுமாக மாறிப்போனது.
‘இது வேலைக்கு ஆவாது ரவி...’
ரவி அவருடைய முகத்திலிருந்த கலவரத்தின் காரணம் தெரியாமல் குழம்பினான். ‘ஏன் எதுக்கு அப்படி சொல்றீங்க?’
‘இங்க பாருங்க ரவி... இந்த தொழில்ல போலீஸ்ல மாட்டாத வரைக்கும்தான் நாம் சேஃப். ஒருதரம் மாட்டிட்டோம்னு வைங்க... அதுக்கப்புறம் நம்ம ஏரியாவுல எங்க செல்ஃபோன் காணாம போனாலும் நம்ம வீட்டுக் கதவத்தான் போலீஸ் முதல்ல தட்டும்... இதுவரைக்கும் நா போலீஸ்ல மாட்டாம தப்பிச்சிக்கிட்டிருக்கேன்... அத கெடுத்துக்க நா விரும்பலைங்க...’
‘புரியலீங்க....’
‘இது ஒங்க கைக்கு வந்தது ஒரு பெரிய மால்ல... அங்க முக்குக்கு முக்கு கேமார இருக்கும். இந்த ஃபோனோட ஓனர், இத ஒங்க கூடையிலருந்து உங்ககிட்ட இத எடுத்து குடுத்த அந்த கடை பையன் ரெண்டு பேரும் உங்கள பாத்துருக்காங்க...அதனால கம்ப்ளெய்ண்ட் கிடைச்சவுடனே போலீஸ் அந்த மாலுக்கு போயி விசாரிச்சா நீங்க ஈசியா மாட்டிப்பீங்க.. அதனாலதான் சொல்றேன் இது வேலைக்கு ஆவாது... வேணும்னா கொஞ்ச நேரம் ஒக்காந்து சார்ஜ் பண்ணிக்கிட்டு போயிருங்க.... இத விக்கிற வேலை மட்டும் ஆவாது.... இல்லன்னா நீங்களே எவனாச்சும் இளிச்சவாயன் கிடைச்சா வந்த விலைக்கி தள்ளி விட்ருங்க...’
அவர் கூறிய வார்த்தைகளிலிருந்த உண்மை புரிந்ததும் ரவியும் ஒரு நிமிடம் கலவரமடைந்தான்.
எதற்கும் இங்கேயே ஒக்காந்து சார்ஜ் பண்ணிக்கிட்டு போயிருவோம்.. அப்புறமா தொறந்து பாத்துட்டு என்ன செய்லாம்னு டிசைட் பண்ணிக்கலாம் என்று நினைத்தவாறு எதிரில் அமர்ந்திருந்த தரகரை பார்த்தான். ‘நீங்க சொல்றதும் சரிதான். நா ஒன்னு பண்றேன். இதுக்குள்ள அந்தாளோட வீட்டு செல்ஃபோன் நம்பர் ஏதாச்சும் இருந்தா கூப்ட்டு சொல்றேன். இல்லன்னா மால் மேனேஜர் கிட்ட ஹேண்டோவர் பண்ணிடறேன்.. எதுக்கு வீணா வம்பு?’
‘சரி.... அப்படியே செஞ்சிருங்க. இல்லன்னா நீங்க மாட்டுறதும் இல்லாம இங்க வந்துதான் ஃபோன சார்ஜ் பண்ணீங்கன்னு போலீசுக்கு தெரிய வந்தா நானும் மாட்டிக்குவேன்.’ என்றவாறு எதிர் சுவரிலிருந்த கடிகாரத்தை பார்த்தார். ‘மணி இப்பவே பதினொன்னு ஆயிருச்சி... வீட்ல தேடுவாங்க... இந்த சார்ஜர வேணும்னா கொண்டு போய்ட்டு நாளைக்கி கொண்டு வாங்களேன்.’
அது சரிவராது என்று நினைத்தான் ரவி. இதை எடுத்துக்கொண்டு போவதால் பயன் ஏதும் இல்லை. ஏனெனில் அவன் தங்கியிருந்த மேன்ஷன் அறைகளில் ப்ளக் பாய்ண்ட் எதுவும் இருந்ததாக நினைவில் இல்லை. அதுவுமல்லாமல் அவனுடன் அறையில் குடியிருப்பவர்களும் இதை பற்றி கேட்டால் தேவையில்லாத தொல்லை ஏற்படும்... ‘இல்ல சார்... இன்னும் பத்து பதினஞ்சி நிமிஷம்.... பாட்டரி அம்பது பர்சண்ட் வந்தா போறும். காலையில அவங்கக்கிட்ட ஒப்படைக்கற வரைக்கும் சார்ஜ் நிக்கணுமே... அதான்....’
அவன் குரலில் இருந்த கெஞ்சல் தரக்ரை மீண்டும் இருக்கையில் அமர்த்தியது.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் செல்பேசியின் பாட்டரி ஐம்பது விழுக்காடை அடைய ரவி செல்பேசியை எடுத்துக்கொண்டு தரகரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவனைத் தொடர்ந்து சாலையில் இறங்கிய தரகர், ‘இங்க பாருங்க ரவி... நீங்க இங்க வரலை... என்னெ பாக்கலை... சரிங்களா?’ என்றார்.
‘சரிங்க... கலவலைப்படாதீங்க.’
நாளை தொடரும்...
அவன் வேறு யாருமில்லை.
மாதவனைப் போலவே பொருட்களுடன் பில் கவுண்டரை அடைந்து கையிலிருந்த ப்ளாஸ்டிக் கூடையை வைத்துவிட்டு பில் போடும்போதே அதில் வரும் தொகையை பார்த்துக்கொண்டு நின்றவனை, 'சார் ஃபோன்' என்ற குரல் ஈர்த்தது. பில் போடுபவனுக்கு அருகில் பொருட்களை பைகளில் அடுக்கிக்கொண்டிருந்த பணியாள் அவனை நோக்கி செல்பேசி ஒன்றை நீட்டுவதை பார்த்தான்.
'இத போயி சாமான்களோட வச்சிருக்கீங்க? யாராச்சும் எடுத்திருந்தா என்னாவறது? இந்தாங்க பிடிங்க.'
இது அந்தாளோட ஃபோன் ஆச்சே? இது எப்படி நம்ம கூடையில வந்துது?
சுற்று,ம் முற்றும் பார்த்தான். மாதவன் வாசலுக்கு வெளியே தன் இரு சக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் செல்வது தெரிந்தது. அவனை கூப்பிட குரல் எழுப்ப நினைத்தவனை பில் கவுண்டரிலிருந்து வந்த குரல் இடைமறித்தது. சார்... 475/- ஆவுது கார்டா கேஷா?'
'கேஷ்தான்' சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.
மீதியை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தவன் அவசர அவசரமாக சாலையில் இறங்கி மாதவன் சென்ற திசையைப் பார்த்தான். மாதவன் சென்ற சுவடே தெரியவில்லை.
'சுத்த லூசா இருப்பான் போலருக்கே.... ஃபோன் காணலைங்கறது கூடவா தெரியாம இருக்கும்?' என்று நினைத்தவாறு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நெருங்கி பையை தொங்க விட்டுவிட்டு சீட்டில் அமர்ந்து யோசித்தான்.
'இப்ப என்ன பண்றது?’கடையிலயே திருப்பி குடுத்துறலாமா? ஆனா அவனுங்களே வச்சிக்கிட்டானுங்கன்னா? வேணாம். ஆனா இந்த மாதிரி செல்ஃபோனுக்கு ஆசைப்பட்டுத்தானே நம்ம வேலையே போச்சி?
ஒன்னு பண்லாம்.இத தொறந்து பார்த்து அந்தாளோட விவரம் தெரியுதான்னு பாப்பம். அப்புறம் காண்டாக்ட் பண்ணி உங்க ஃபோன் எங்கிட்டதான் இருக்கு. வந்து வாங்கிக்கிருங்கன்னு சொல்லி குடுத்துருவோம். அதுக்கு முதல்ல இத ரீசார்ஜ் பண்ணணும்..' என்று நினைத்தவாறு ரீசார்ஜ் செய்ய உதவும் துளையை பார்த்தான். அது சற்று அகண்டு இருந்தது.
இதை ரீ சார்ஜ் செய்வதற்கு அவனுடைய அறையில் இருந்த சார்ஜரால் முடியாது என்று தோன்றியது. என்ன செய்யலாம்? புதுசா ஒரு சார்ஜர வாங்கணும்னா செலவு ஆகும். பர்சை திறந்து பார்த்தான். அதில் ஒரேயொரு ஐநூறு ரூபாய் தாள் அம்போ என்று நின்றிருந்தது. அவனுடைய வேலை பறிபோனதிலிருந்து அவனுடைய ஒரே வருமானம் செல்பேசிகளை வாங்கி விற்பதிலிருந்து தான் வந்துக்கொண்டிருந்தது. டி.எம்.இ வரை படித்திருந்தும் அவனுக்கு ஏற்ற வேலையாக ஒன்றும் கிடைத்தபாடில்லை. இருந்த ஒரு வேலையையும் அவனுடைய அவசரபுத்தியால் இழந்திருந்தான். அடுத்த வேலை எப்போது கிடைக்குமோ? பேசாமல் இந்த ஃபோனை கைமாத்திட்டா என்ன? ஆனால் இதுவரை அவன் ஸ்மார்ட் ஃபோன் எதையும் வாங்கி விற்றதில்லை.
ஐந்தாயிரம் வரை விலையுள்ள செல்பேசியை தொலைப்பவர்களோ அல்லது திருடு கொடுப்பவர்களோ அநேகமாக காவல் நிலையங்களுக்கு சென்று புகார் கொடுக்க மாட்டார்கள் என்பது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ரவி போன்றவர்களுக்கு தெரியும். ஆனால் எட்டாயிரத்துக்கும் அதற்கு மேலும் விலையுள்ள செல்பேசியை வைத்துள்ளவர்களுள் அநேகம் பேர் தங்களுடைய செல்பேசி திருடுபோய்விட்டால் அடுத்துள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார்கள். ஆனால் அவர்களுள் தங்களுடைய செல்பேசியின் IMIE ஏண்ணை தங்கள் புகாருடன் சமர்ப்பித்தால் மட்டுமே அதை காவல்நிலையத்தில் புகாரையே ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் ரவிக்கு தெரியும். ஏனெனில் செல்பேசியை திருடுபவர்கள் உடனே அதில் இருக்கும் சிம் கார்டை மாற்றிவிடுவார்கள். அந்த சூழலில் சம்மந்தப்பட்ட செல்பேசியின் IMIE ஏண் தெரிந்தால் மட்டுமே அதை ட்ரேஸ் செய்ய முடியும். ஆகவே அது இல்லையென்றால் காவல்நிலையத்தில் புகாரை வாங்கவே யோசிப்பார்கள். அப்படியே வாங்கினாலும் அதை கிடப்பில் போட்டுவிடுவார்கள்.
ரவி தன் கையில் இருந்த மாதவனின் செல்பேசியை மீண்டும் ஒரு முறை பார்த்தான். இது நிச்சயம் பத்தாயிரத்துக்கு மேல இருக்கும் பார்த்தா புதுசாவும் இருக்கு. அஞ்சாறு மாசத்துக்குள்ளதான் வாங்கியிருப்பான். பாத்தா படிச்சவன் மாதிரியும் இருக்கான். அதனால் இதனோட IMIE நம்பர நிச்சயம் வச்சிருப்பான். ஆனா மணி இப்பவே பத்தாயிருச்சி. இந்த ராத்திரி நேரத்துல எந்த போலீஸ் ஸ்டேஷன்லயும் கம்ப்ளெய்ண்ட் வாங்க மாட்டாங்க.. அதே சமயம் அவனுக்கு நம்ம ஃபோன எவனோ எடுத்துக்கிட்டான்னு தோனாது. கடையிலதான் விழுந்துருக்கும்னுதான் நினைப்பான்.
ரவி இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவனுக்கு பின்னால் மாலின் முகப்பு விளக்குகள் அணைக்கப்படுவது தெரிந்தது. அவனைத் தவிர பத்து இருபது வாகனங்களே அந்த பார்க்கிங் பகுதியில் நிற்பதை கவனித்தான். அதுவும் கூட அந்த மாலிலுள்ள கடைகளில் பணியாற்றுபவர்களாக இருக்கக் கூடும்.
மீண்டும் அவனுடைய சிந்தனை இந்த செல்பேசியை என்ன செய்யலாம் என்பதை பற்றி எழுந்தது. திருப்பி குடுத்துரலாமா இல்ல வித்து காசாக்கிரலாமா? அவனால் நேரடியாக விற்க முடியாத செல்பேசிகளை அவனுக்கு தெரிந்த தரகரிடம் ஒப்படைத்துவிட்டு கிடைக்கும் பணத்தை வாங்கிக்கொள்வது வழக்கம். பேசாம அப்படி செஞ்சிரலாமா/ இதுக்கு எப்படியும் மூவாயிரம் நாலாயிரம் கிடைக்கும்.... ரெண்டு மூனு வாரம் ஓட்டிரலாம்.
அவனுடைய வேலை எதற்காக பறிபோனது என்பது தெரிய வந்ததுமே அவனுடைய மனைவி ராஜி குழந்தையுடன் அவனை விட்டு பிரிந்து தாய்வீடு சென்றுவிட்டிருந்ததால் அவன் தனியாகத்தான் வீட்டை காலி செய்துவிட்டு நண்பன் ஒருவனுடன் மான்ஷன் ஒன்றில் வசித்துக்கொண்டிருந்தான். அவன் குடியிருந்த வீட்டு உரிமையாளர் அவனுடைய வேலை பறிபோய்விட்டது என்பது தெரிந்ததுமே வீட்டை காலி செய்ய வைத்துவிட்டார். உடனே வீட்டிலிருந்த அனைஹ்து சாமான்களையும் மனைவி வீட்டு விலாசத்துக்கு லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டான்.
‘சார்... நேரமாச்சுது கிளம்புறீங்களா?’ என்ற குரல் கேட்டு தன்னுடைய நினைவுகளிலிருந்து மீண்ட ரவி தன் அருகில் நின்ற காவலாளியை பார்த்தான்.
‘இதோ கிளம்பிட்டேன்... சாரி’ என்றவாறு வாகனத்தை கிளப்பி சாலையில் இறங்கி சிறிது தூரம் சென்றதும் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தான். பிறகு தன்னுடைய செல்பேசியை எடுத்து அவனுக்கு தெரிந்த தரகரை அழைத்து தனக்கு செல்பேசி ஒன்று கிடைத்துள்ள விவரத்தை தெரிவித்துவிட்டு ‘இத பார்த்தா புது ஃபோன் மாதிரிதான் தெரியுது. சாம்சங் ஏ50 மாடல். ஆனா ஆஃபாயிருக்கறதால தொறந்து பாக்க முடியலங்க... ஒங்கள இப்ப வந்து பாக்கலாமா?’ என்றான்.
‘இப்பவா?’
‘ஆமா... எங்கிட்ட ஃபோன் வ்ந்து அரை மணி நேரம் ஆயிருச்சி... அவன் போலீஸ்க்கு போறதுக்குள்ள சிம் கார்ட மாத்திறணும்.... ஆனா சிம்ம எப்படி எடுக்கறதுன்னு தெரியல. அப்புறம் இத சார்ஜ் பண்ணி பாத்தா நல்லதுன்னு நினைக்கேன்.. உங்கக் கிட்டதான் எல்லா ஃபோனுக்கு ஏத்த சார்ஜர் இருக்குமே. அதான் கூப்ட்டேன். இன்னும் அரை மணிக்குள்ள இத தொறந்தாவனும்.. என்ன சொல்றீங்க? ஒங்களால முடியாதுன்னா சொல்லிறுங்க.. நா வேற ஏற்பாடு பண்ணிக்கறேன்.’
உண்மையில் அவனுக்கு வேறு எந்த தரகரையும் பரிச்சயமில்லை.. ஆனாலும் அவன் சொன்ன அந்த பொய் வேலை செய்தது. ‘சரி.. சரி... பத்து நிமிஷத்துல வர முடியுமா?’
அவர் குடியிருந்த வீடு பக்கத்தில்தான் இருந்தது. ‘சரி வரேன். கொஞ்சம் முன்ன பின்ன ஆவலாம்...பரவால்லையா?’
’சரி... அதிக பட்சம் கா மணி நேரம். அப்புறம் நா போயிருவேன்.’
‘அதுக்குள்ள வந்துருவேன்.’ என்று பதிலளித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டு அடுத்த பதினைந்து நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தான்.
தரகர் அவருடைய அலுவலக அறையின் வாசலில் நிற்பது தெரிந்தது.
‘எங்க ஃபோன குடுங்க பார்க்கலாம்?’
அவன் வாகனத்தை விட்டு இறங்குவதற்குள் அவனிடமிருந்த செல்பேசையை வாங்கிக்கொண்டு கடைக்குள் சென்று இருக்கையில் அமர ரவி அவரைப் பின்தொடர்ந்து சென்று எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அவரிடமிருந்த சார்ஜர்களில் ஒன்று மாதவனின் செல்பேசிக்கு பொருத்தமான ஒன்றை எடுத்து அதை செல்பேசியில் சொருக ரவி உடனே அவரை தடுத்து நிறுத்தினான். ‘இருங்க... முதல்ல சிம்ம கழட்டிறலாம்.’
தரகார் புன்னகையுடன் அவனை பார்த்தார். ‘பாய்ண்ட கரெக்டா புடிச்சிட்டய்யா.’
தன் மேசை டிராயரை திறந்து அதில் கிடந்த ஊசி போன்ற ஒன்றை எடுத்து செல்பேசியின் பக்கவாட்டிலிருந்து துளையில் இட்டு அழுத்த இரண்டு சிம் கார்டுகளுடன் ஒரு பலகை (Tray) வெளியில் வந்தது.
‘அது சரி... இதான் மேட்டரா? நா என்னடா சிம் கார்ட் ஓட்டையையே காணமேன்னு முழிச்சிக்கிட்டிருந்தேன்.” என்றான் ரவி. ‘எதுக்கும் இந்த ஊசி எங்கிட்டவே இருக்கட்டும்... நாளைக்கி திருப்பி தந்துர்றேன்.
.
அடுத்த ஒரு சில நொடிகளில் இரண்டு சிம் கார்டையும் நீக்கிவிட்டு சார்ஜரை செருகியதும் செல்பேசி உயிர்பெற்று ரவி சற்று முன் கூறியிருந்தது போலவே சாம்சங் ஏ50 என்றது அந்த செல்பேசி.
‘தொறந்து பாக்காமயே எப்படி மாடல கரெக்டா சொன்னீங்க?’ என்றார் தரகர்.
‘அந்த ஆள்தான் சொன்னான்.’ என்றான் ரவி புன்னகையுடன்.
‘என்னது ஓனரே சொன்னானா? உங்கக் கிட்டயா? எப்ப?’
தரகரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலாக தன்னிடன் அந்த செல்பேசி வந்து சேர்ந்த விவரத்தை சுருக்கமாக கூறினான் ரவி.
அவன் சொல்லி முடிப்பதற்குள் தரகரின் முகம் முற்றிலுமாக மாறிப்போனது.
‘இது வேலைக்கு ஆவாது ரவி...’
ரவி அவருடைய முகத்திலிருந்த கலவரத்தின் காரணம் தெரியாமல் குழம்பினான். ‘ஏன் எதுக்கு அப்படி சொல்றீங்க?’
‘இங்க பாருங்க ரவி... இந்த தொழில்ல போலீஸ்ல மாட்டாத வரைக்கும்தான் நாம் சேஃப். ஒருதரம் மாட்டிட்டோம்னு வைங்க... அதுக்கப்புறம் நம்ம ஏரியாவுல எங்க செல்ஃபோன் காணாம போனாலும் நம்ம வீட்டுக் கதவத்தான் போலீஸ் முதல்ல தட்டும்... இதுவரைக்கும் நா போலீஸ்ல மாட்டாம தப்பிச்சிக்கிட்டிருக்கேன்... அத கெடுத்துக்க நா விரும்பலைங்க...’
‘புரியலீங்க....’
‘இது ஒங்க கைக்கு வந்தது ஒரு பெரிய மால்ல... அங்க முக்குக்கு முக்கு கேமார இருக்கும். இந்த ஃபோனோட ஓனர், இத ஒங்க கூடையிலருந்து உங்ககிட்ட இத எடுத்து குடுத்த அந்த கடை பையன் ரெண்டு பேரும் உங்கள பாத்துருக்காங்க...அதனால கம்ப்ளெய்ண்ட் கிடைச்சவுடனே போலீஸ் அந்த மாலுக்கு போயி விசாரிச்சா நீங்க ஈசியா மாட்டிப்பீங்க.. அதனாலதான் சொல்றேன் இது வேலைக்கு ஆவாது... வேணும்னா கொஞ்ச நேரம் ஒக்காந்து சார்ஜ் பண்ணிக்கிட்டு போயிருங்க.... இத விக்கிற வேலை மட்டும் ஆவாது.... இல்லன்னா நீங்களே எவனாச்சும் இளிச்சவாயன் கிடைச்சா வந்த விலைக்கி தள்ளி விட்ருங்க...’
அவர் கூறிய வார்த்தைகளிலிருந்த உண்மை புரிந்ததும் ரவியும் ஒரு நிமிடம் கலவரமடைந்தான்.
எதற்கும் இங்கேயே ஒக்காந்து சார்ஜ் பண்ணிக்கிட்டு போயிருவோம்.. அப்புறமா தொறந்து பாத்துட்டு என்ன செய்லாம்னு டிசைட் பண்ணிக்கலாம் என்று நினைத்தவாறு எதிரில் அமர்ந்திருந்த தரகரை பார்த்தான். ‘நீங்க சொல்றதும் சரிதான். நா ஒன்னு பண்றேன். இதுக்குள்ள அந்தாளோட வீட்டு செல்ஃபோன் நம்பர் ஏதாச்சும் இருந்தா கூப்ட்டு சொல்றேன். இல்லன்னா மால் மேனேஜர் கிட்ட ஹேண்டோவர் பண்ணிடறேன்.. எதுக்கு வீணா வம்பு?’
‘சரி.... அப்படியே செஞ்சிருங்க. இல்லன்னா நீங்க மாட்டுறதும் இல்லாம இங்க வந்துதான் ஃபோன சார்ஜ் பண்ணீங்கன்னு போலீசுக்கு தெரிய வந்தா நானும் மாட்டிக்குவேன்.’ என்றவாறு எதிர் சுவரிலிருந்த கடிகாரத்தை பார்த்தார். ‘மணி இப்பவே பதினொன்னு ஆயிருச்சி... வீட்ல தேடுவாங்க... இந்த சார்ஜர வேணும்னா கொண்டு போய்ட்டு நாளைக்கி கொண்டு வாங்களேன்.’
அது சரிவராது என்று நினைத்தான் ரவி. இதை எடுத்துக்கொண்டு போவதால் பயன் ஏதும் இல்லை. ஏனெனில் அவன் தங்கியிருந்த மேன்ஷன் அறைகளில் ப்ளக் பாய்ண்ட் எதுவும் இருந்ததாக நினைவில் இல்லை. அதுவுமல்லாமல் அவனுடன் அறையில் குடியிருப்பவர்களும் இதை பற்றி கேட்டால் தேவையில்லாத தொல்லை ஏற்படும்... ‘இல்ல சார்... இன்னும் பத்து பதினஞ்சி நிமிஷம்.... பாட்டரி அம்பது பர்சண்ட் வந்தா போறும். காலையில அவங்கக்கிட்ட ஒப்படைக்கற வரைக்கும் சார்ஜ் நிக்கணுமே... அதான்....’
அவன் குரலில் இருந்த கெஞ்சல் தரக்ரை மீண்டும் இருக்கையில் அமர்த்தியது.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் செல்பேசியின் பாட்டரி ஐம்பது விழுக்காடை அடைய ரவி செல்பேசியை எடுத்துக்கொண்டு தரகரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவனைத் தொடர்ந்து சாலையில் இறங்கிய தரகர், ‘இங்க பாருங்க ரவி... நீங்க இங்க வரலை... என்னெ பாக்கலை... சரிங்களா?’ என்றார்.
‘சரிங்க... கலவலைப்படாதீங்க.’
நாளை தொடரும்...