அடுத்த நாளும் அப்படியே அமையவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கொண்டு வீடு திரும்பி நிம்மதியாக உறங்கினேன்..
ஆனால் நாம் ஒன்று நினைக்க இறைவன் வேறொன்றல்லவோ நினைக்கிறார்.
அன்று காலையில் எழுந்ததுமே என் இரண்டரை வயது மகளுக்கு நல்ல ஜுரம்.. இரவு முழுவதும் உறங்காமல் அழுதுக்கொண்டே இருந்திருக்கிறாள்..
அடுத்த நாள் திறப்புவிழாவாயிற்றே நள்ளிரவு கடந்து வந்து உறங்கச் சென்றவரை எப்படி எழுப்பி தொந்தரவு செய்வதென்று நினைத்த என் மனைவி ஹாலில் அமர்ந்து இரவு முழுவதும் மகளை தன் மடியிலேயே போட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்.
காலையில் ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து ஹாலுக்குள் நுழைந்த நான் என் மகளின் சிவந்த முகத்தைப் பார்த்ததும் பதறிப்போய், ‘எதுக்கு என்ன எழுப்பாம இருந்தே?’ என்று என் மனைவியைக் கோபித்துக்கொண்டேன்.
பிறகு உடனே என்னுடைய அலுவலக உரிமையாளருடைய சகோதரரை தொலைப்பேசியில் அழைத்து விவரத்தைக் கூறினேன். அவர் அந்த நேரத்தில் நான் அழைத்தும் கோபம் கொள்ளாமல், ‘சார் நீங்க கவலைப்படாதீங்க. பாப்பாவ டாக்டர் கிட்ட காட்டிட்டே போங்க.. அதுவரைக்கும் இங்க நான் பார்த்துக்கறேன். ஓப்பனிங் பதினோரு மணிக்குத்தானே..’ என்றார்.
நான் உடனே என் வீட்டு மாடியில் இருந்த என் வீட்டுக்காரரை கதவைத் தட்டி எழுப்பி, ‘சார் பாப்பாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லை.. பக்கத்துல உங்களுக்கு தெரிஞ்ச யாராச்சும் டாக்டர்..’ என்றேன்.. நான் சாதாரணமாக என் மகளைக் காட்டும் மருத்துவர் டவுணில்தான் க்ளினிக் வைத்திருந்தார். அவர் க்ளினிக்கின் மாடியிலேயே குடியிருந்ததால் இப்போது சென்றாலும் அவரைப் பார்க்க முடியும். ஆனால் பத்து கிலோ மீட்டர் போக வேண்டுமே என்று யோசித்தேன்.
‘சார் இங்க பக்கத்துலதான் இருக்காரு. நீங்க போனா உங்கள தெரியலைன்னு காலையில வாங்கன்னு சொன்னாலும் சொல்லிருவார். இருங்க நானும் வரேன்.’ என்று ஒரு துண்டை மட்டும் தோள் மேல் போட்டுக்கொண்டு என்னுடன் ஓடி வந்தார்.
அவர் கூறியது சரியாகத்தான் இருந்தது. மருத்துவர் என் முகத்தைப் பார்த்ததும் எரிச்சலுடன், ‘யார் சார் நீங்க?’ என்றார்.
‘டாக்டர், சார் நம்ம வீட்லதான் குடியிருக்கார்.’ என்று என்னுடன் வந்தவரின் முகத்தைப் பார்த்ததும் அவர் முகம் மாறியது. உடனே கதவைத் திறந்து வெளியே வந்தார். ‘வாங்க சார். என்னாச்சி குழந்தைக்கு உடம்பு சரியில்லை போலருக்கு.’ என்று வீட்டு முன் தாழ்வாரத்திலிருந்த ஒரு சிறு அறைக்கதவைத் திறந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
அறை சிறியதானாலும் மருத்துவம் பார்ப்பதற்கு தேவையான எல்லா வசதிகளும் இருந்தன. மருத்துவர் என் மகளை பரிசோதித்துவிட்டு, ‘சார்.. ஃபீவர்தான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு.. கோல்ட்தான் காரணம்னு நினைக்கிறேன். இப்ப ஒரு ஊசி போட்டு மூனு வேளை மருந்து கொடுக்கறேன். சரியாகலைனா நாளைக்கு பார்க்கலாம்.’ என்றார்.
‘சரி, டாக்டர்.’ என்று கூறிவிட்டு அவர் ஊசி போட்டு முடித்ததும் அவர் கொடுத்த மருந்துகளைப் பெற்றுக்கொண்டு மகளுடன் வீடு திரும்பிய நான் மணியைப் பார்த்தேன். ஆறு மணியாகி இருந்தது.
இப்போதே கிளம்பிச் சென்றால்தான் விழாவுக்கு தேவையான மீதமிருந்த கடைசி நேர ஏற்பாடுகளைச் செய்ய முடியும். இரவு முழுவதும் மகளை மடியில் போட்டுக்கொண்டு கண் விழித்திருந்த என் மனைவியும் தூக்கக் கலக்கதில் இருந்தார். என் மகளோ மருத்துவர் இட்ட ஊசியின் மயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். குளிர்ச்சியால் சிவந்திருந்த முகம் பழைய நிலமைக்கு மெள்ள, மெள்ள திரும்பிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
‘நீ போய் படு.. பாப்பா இருக்கற நிலமையில நீ ஃபங்க்ஷனுக்கு வரமுடியாது.. நான் பிஷப் புறப்பட்டு போனதும் ஃபோன் பண்றேன். ஜுரம் இறங்கலைன்னா சொல்லிட்டு வரேன். நாம ரெகுலரா பாக்கற டாக்டர போய் பார்க்கலாம்..’ என்று என் மனைவியிடம் கூறிவிட்டு குளியலறையை நோக்கி நடந்தேன்..
Man proposes God disposes என்பது எத்தனை சரியாக இருக்கிறது!
அடுத்த அரை மணி நேரத்தில் என் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன் பிப்ரவரி மாத குளிர்ந்த காற்று என் முகத்தில் அறைய மனத்திலிருந்த என் மகளைப் பற்றிய கவலை லேசானது..
என்னுடைய அலுவலகத்தையடைந்த போது என்னுடைய வட்டார மேலாளர் வந்துவிட்டிருந்தார். அவர் எப்போதும் அப்படித்தான். சரியான டென்ஷன் பார்ட்டி என்போமே அதுபோல.
நல்ல வேளை, நான் செல்வதற்கு முன்பே என் மகளைப் பற்றி பாய் சொல்லிவிட்டார். என்னைப் பார்த்ததும், ‘என்ன டிபிஆர். டாட்டர் எப்படி இருக்கா?’ என்றவரிடம், ‘ஷி ஈஸ் பெட்டர் சார். ஜுரம் மறுபடியும் வந்தாத்தான் வேற டாக்டர பாக்க வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்.’ என்றேன்.
‘சரி ஓகே. Now, brief me about the plans. ப்ரோக்ராம் என்ன? பிஷப், அவரே வந்துருவாரா, இல்ல நம்ம ஜி.எம் போய் அழைக்கணுமா?’
‘இல்ல சார். பிஷப் அதெல்லாம் நானே என் வண்டியில கரெக்டா பத்தே முக்காலுக்கு வந்திடறேன். விழா முடிஞ்சதும் நான் கிளம்பிருவேன்.. எனக்காக வேற ஒன்னும் அரேஞ் பண்ண வேணாம்னு ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்கார். அதனால felicitation கூட ரெண்டே பேர்தான். நீங்க வெல்கம் பண்ணனும். அப்புறம் நம் ஜி.எம் பேசறார்.. அதுக்கப்புறம் குத்து விளக்கு ஏத்திவிட்டு பிஷப்போட சின்ன அட்றெஸ்.. அவர் அஞ்சு நிமிஷம்தான் பேசுவேன்னு சொல்லிட்டார். அப்புறம் felicitation and vote of thanks. மொத்த ஃபங்ஷனும் மேக்ஸிமம் ஒரு மணி நேரத்துல முடிஞ்சிரும்.’
வட்டார மேலாளர் திருப்தியுடன் என்னைப் பார்த்து தலையை அசைத்தார். ‘நீங்க பிஷப்ப தவிர வேற எந்த வி.ஐ.பியையும் கூப்டாதது நல்லதா போச்சி. போன வாரம் -------- கிளை திறப்புல உங்க ஃப்ரெண்ட் ------------ ஊர்லருக்கற கலெக்டர்லருந்து சாம்பர் ஆஃப் காமர்ஸ் பிரசிடெண்ட் வரை கூப்டுட்டு ஒவ்வொருத்தரும் வந்து சேர்றதுக்குள்ள நம்ம சேர்மன் படு டென்ஷனா போயி எல்லார் முன்னாலயும் மேனேஜரையும் என்னையும் ஃபயர் பண்ணி.. ஏன் கேக்கறீங்க..’
நானும் சென்னையில் அவதிப்பட்டதால்தானே முன் ஜாக்கிரதையாய் செயல்பட முடிந்தது?
சரியாக பத்து மணிக்கு என் பொது மேலாளர் வந்து சேர்ந்தார். சாதாரணமாக அணியும் ஃபுல் சூட் அணியாமல் ஊருக்கேற்றார் போல் கதர் வேட்டி, கதர் சட்டையில் வந்தது மிகவும் பொருத்தமாக இருந்தது. எல்லாம் கோவை வாடிக்கையாளரின் ஏற்பாடு என்று பின்னர்தான் தெரிந்தது..
அவருக்கும் நான் ஏற்பாடு செய்திருந்த programme விவரத்தை விளக்கினேன். ‘யெஸ்.. நானும் அஞ்சு நிமிஷத்துக்குள்ள என் பேச்சை முடிச்சிக்கறேன்.. நீங்க சொல்றா மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா முடிச்சிரலாம். குட்.’ என்றார் திருப்தியுடன்.
அடுத்த அரைமணி நேரத்தில் விழாவுக்கு அழைத்திருந்த அனைவரும் ஒருவர் ஒருவராக வர ஆரம்பித்தனர். என் நண்பர் பண்ணையார் அவருடைய வளர்ப்பு மகளுடன் முதலாக வந்தார். வந்ததும் அவர் கேட்டது என் மகளைப் பற்றித்தான்.
நான் அவளுக்கு உடல் நலம் சரியில்லை என்றதும் திரும்பி தன் மகளைப் பார்த்து, ‘சாரோட வீட்டு விலாசத்தை குறிச்சிக்கம்மா.. விழா முடிஞ்சதும் அப்படியே போய் பார்த்துட்டு போயிரலாம்.’ என்றார்... நான் அவர் ஆசையைக் கெடுப்பானேன் என்று என்னுடைய வீட்டு விலாசம் அடங்கிய என்னுடைய அடையாள அட்டையை அவரிடம் கொடுத்தேன்.
சரியாக பத்தே முக்கால் மணிக்கு தஞ்சை ஆயரின் வெள்ளை நிற அம்பாசிடர் கார் அலுவலக வாசலில் வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய ஆயருடன் இறங்கியவரைப் பார்த்ததும் என்னுடன் நின்றுக்கொண்டிருந்த பொது மேலாளர் என்னைத் திரும்பிப் பார்த்தார். ‘அது யார் டிபஆர். நெத்தியில நாமத்தோட..’ என்றார். அது என்னை ஆயரிடம் அறிமுகப்படுத்திய பாதிரியார் குறை கூறிய ---------- வங்கி ஐயர்...
நான் அவருக்கு பதிலளிப்பதற்கு முன் ஆயர் தன் டைகளை சரிசெய்துக்கொண்டு எங்களை நோக்கி வர.. நாங்கள் மூவரும் கை கூப்பியவண்ணம் அவரை வரவேற்றோம்.
நான் குறித்து வைத்திருந்த அட்டவணைப் படி எல்லாம் கன கச்சிதமாக எந்தவித குழப்பமும் இல்லாமல் விழா நடந்தது..
ஆயர் அவர் கூறியிருந்தபடி ஐந்தே நிமிடத்தில் மிக அருமையாக பேசி முடித்தார். குழுமியிருந்தவர்களுள் தஞ்சையிலிருந்த வங்கி மேலாளர்கள் பலரும் இருந்ததை அறிந்த அவர், ‘உங்க தயவுலதான் நாங்க பல சமூக சேவை மையங்களையும் துவக்கி பல நல திட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே மிஸ்டர். ஜோசப் மட்டுமில்லாம நீங்க எல்லோரும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.’ என்று புன்னகையுடன் கூறி தன் பேச்சை முடித்தார்.
பிறகு என்னுடைய கட்டட உரிமையாளரின் மூத்த சகோதரரும், சேட்டும் வாழ்த்துரைக்க என்னுடைய நன்றியுரையுடன் ஒரு மணி நேரத்திற்கும் முன்பாகவே சிறப்பாக நடந்து முடிந்தது..
ஆயர் அதற்குப் பிறகு தான் கொண்டு வந்திருந்த காசோலைகளை சம்பிரதாயமாக என் பொது மேலாளரிடம் அளிக்க அருகில் இருந்த ஐயரின் கண்கள் வியப்பால் விரிந்தன. இதைக் கவனித்த ஆயருடன் வந்திருந்த பாதிரியார் என்னைப் பார்த்து விஷமத்துடன் புன்னகை செய்தார்.
காசோலைகளைப் பெற்றுக்கொண்ட என்னுடைய பொது மேலாளர் ஆயருக்கு நன்றி கூறிவிட்டு, ‘We will definitely reciprocate your generous help with timely assistance to all your welfare projects, Sir.’ என்றார்.
‘Yes.. that is what I seek from all the Bankers in this Town.’ என்றார் ஆயர் புன்னகையுடன்..
குழுமியிருந்த அனைத்து வங்கி மேலாளர்களும் சரி என்பதுபோல் தலையை அசைக்க ஆயர் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச் சென்றார்.
‘We will come up to your House Sir.’ என்று அவருடைய வண்டியுடன் கிளம்ப முயன்ற என்னுடைய பொது மற்றும் வட்டார மேலாளர்களை ஒரு சிறு புன்னகையுடன் தடுத்து நிறுத்தி, ‘that is not required. You carry on. God bless all of you and your branch.’ என்று வாழ்த்தியதுடன் என்னைப் பார்த்து, ‘ஜோசப், உங்களுக்கு ஒரு சின்ன பொண்ணு இருக்குதாமே.. அவளையும் உங்க மனைவியையும் கூப்டுக்கிட்டு ஒரு நா வந்து என்னை பாருங்க.’ என்றவாறு கிளம்பிச் சென்றார்.
என்னுடைய அதிகாரிகள் என் கையைப் பிடித்து குலுக்கி.. ‘இவ்வளவு சீக்கிரம் அவர்கிட்ட ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கிட்டதுக்கு பாராட்டுகள் டிபிஆர். I will definitely brief our Chairman about your efforts, keep it up.’ என்று வாழ்த்த எங்களுக்கருகில் நின்றிருந்த சேட் உடனே, ‘Sir he has been running around the entire Town on his own for the past three months. You should be really proud of him.’ என்று ஐஸ் வைத்தார்.
அவர் எதற்கு அடிபோடுகிறார் எனக்கு மட்டும்தானே தெரியும்?
தொடரும்..
அப்பாடா, நல்லபடி முடிந்தது. உங்கள் அனுபவங்களை எங்களுடையதாக ஆக்கிய பெருமை உங்கள் எழுத்துக்கும் நிகழ்கள அமைப்புக்கும் உரியது.
பதிலளிநீக்குகடந்த சில வாரங்களாக இங்கே மும்பையில் வங்கி கொள்ளைகளாக இருக்கிறது.:(
வாங்க மணியன்,
பதிலளிநீக்குஎன்ன வங்கிக் கொள்ளகளா?
அதாவது வங்கிக்கு வெளியில இருக்கறவங்களால எப்பவாவது ஒரு முறை நடக்கும்.
ஆனால் வங்கிக்குள் உள்ளவர்களுடைய உதவியுடன் கோடி, கோடியாய் கொள்ளைப் போகிறதே அதற்கென்ன சொல்ல?
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குஇல்லைன்னா இது புயலுக்கு முன் இருக்கும் அமைதியா???? //
உங்க பின்னூட்டமும் ஒரு குட்டி சஸ்பென்ஸ் தொடர் கதை மாதிரி இருக்கு ராஜ்..
புயலா.. சுனாமியான்னு பொறுத்திருந்துதான் பாக்கணும்..
அப்பாடா!!
பதிலளிநீக்குவாங்க ஜோ,
பதிலளிநீக்குஅன்னைக்கி விழா நல்லபடியா முடிஞ்சதும் நீங்க சொன்னா மாதிரிதான் இருந்தது..
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்ங்கறது எவ்வளவு சரின்னும் நினைச்சிக்கிட்டேன்..
எல்லாம் இறைவன் அருள்..
நீ செய்ய வேண்டியதைச் செய்.. மற்றவற்றை இறைவனிடம் விட்டுவிடுங்கறதும் உண்மைதான்.
nallapadi mudinthathil mahistchi
பதிலளிநீக்குore varutham...kutti chellathukku udambu sariyillama ponadhudhan
thanjavur character appadiye vivarikkreenga..nalla irukku
all the best
வாங்க எஸ்.ஞானம்ஜி,
பதிலளிநீக்குஆமாம் நல்லபடியா முடுஞ்சதுல மகிழ்ச்சிதான். இருந்தாலும் நீங்க சொன்னாமாதிரி என் மனைவி மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த விழாவில் கலந்துக்கொள்ள முடியாமற் போனதில் எங்கள் இருவருக்குமே சற்று வருத்தம்தான்.
இப்பத்தான் எல்லாம் படிச்சு முடிச்சேன். அப்பாடி...எத்தன விஷயங்கள் நடந்திருக்கு...ம்ம்ம்ம்..நல்லபடியா முடிஞ்சதே. அதுவே பெரிய விஷயம். எல்லாம் இறைவன் அருள்.
பதிலளிநீக்குவாங்க ராகவன்,
பதிலளிநீக்குசென்னை மற்றும் தஞ்சை கிளைகளை திறந்து வைத்ததன் மூலம் எனக்கு கிடைத்த படிப்பினை என்ன தெரியுமா?
நாம் கடந்து செல்லும் பாதையில் எத்தனை கல்லும், முள்ளும் இருந்தாலும் நாம் உறுதியோடு நான் அடைய வேண்டிய இலக்கை நோக்கி உறுதியுடன் நடந்தால் நம்மால் நிச்சயம் இலக்கை அடையமுடியும். அத்துடன் அத்தகைய சிரமங்களை கடந்து நமக்கு வெற்றி கிடைக்கும்போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே அது மிகவும் அலாதியானது.