அவருடைய குரலில் இருந்த கோபத்தைக் கண்டு சற்றும் மிரளாத குமார் மீண்டும் நீதிபதியைப் பார்த்தான். 'ஐயா என்னெ உண்மையிலயே இங்க வந்து என்ன சொல்லணும்னு மிரட்டுனது இதோ நிக்கிறாரே இந்த வக்கீல் ஐயாவும் அதோ ஒக்காந்துருக்காரே அந்த இன்ஸ்பெக்டர் ஐயாவும் தாங்க..... என்னெ சொல்லவிட்டா நடந்தது எல்லாத்தையும் சொல்லிடறேனுங்க.'
நீதிமன்றம் மீண்டும் சலசலக்க நிலைமை கட்டுக்கு மீறி செல்வதை உணர்ந்த நீதிபதி கோபத்துடன் 'சைலன்ஸ்.... otherwise I will be forced to clear the room of all the visitors.' என்றார். உடனே பார்வையாளர்கள் அனைவரும் அமைதியாக நீதிபதி நின்றுக்கொண்டிருந்த வேணுவைப் பார்த்தார்.
அவர் உடனே, 'Your honour I would like to request you to declare this witness also as a hostile witness and ignore whatever he is going to say from now on.' என்றார் உரக்க.
அவர் கூறியதை குறித்துக்கொண்ட நீதிபதி, 'Your observation is noted... but I am going to allow him to continue...' என்றவாறு குமாரை பார்த்தார். 'சொல்லு என்ன நடந்தது அன்னைக்கி?'
'கோபால் சார் அங்கருந்து போய் அரை மணி நேரம் கழிச்சி ராமராஜன் - அவரும் கோபால் சார் கம்பெனியிலதான் வேல பாக்கறாருங்கறது மட்டும்தான் ஐயா எனக்கு தெரியும் - ஒரு மாருதி வேன்ல வந்தார்யா. வந்து வேன நிறுத்திட்டு அந்த அக்கா வீட்டுக்குள்ள போனாருங்க.... ஆனா உடனே வந்து ஒன்னும் சொல்லாம கார எடுத்துக்கிட்டு போய்ட்டாருங்க.'
ராமராஜனும் இதுல கூட்டா என்று நினைத்தார் கோபால். ஆனால் ராமராஜனைப் பற்றி மாதவி ஏற்கனவே தன்னிடம் புகார் கூறியிருந்ததும் அவருடைய நினைவுக்கு வந்தது. கூடவே ரெண்டு கொலைகாரப் பசங்கள வச்சிக்கிட்டிருந்தேன் போலருக்கு....
நீதிபதி குறுக்கிட்டு, 'அவர் ரெகுலரா அங்க வருவாரா? என்றார்.
'ஆமாங்கய்யா.... இன்னொன்னும் சொல்லிக்கறேன்யா.... அந்த அக்கா வீட்டுக்கு கோபால் சார மாதிரி பெரிய பெரிய ஆளுங்கல்லாம் வருவாங்க.... அவங்க வரும்போதெல்லாம் பார்க் பண்ண வசதியா ரெண்டு கார் நிக்கிறா மாதிரி இடத்த கயிறு கட்டி வச்சிருப்பேனுங்க..... இதுக்கு அக்காவும் மாசா மாசம் தனியா தந்துருவாங்க. வர்றவங்களும் கார எடுத்துக்கிட்டு போறப்போ குடுப்பாங்க. அதனால சாயந்தரம் நாலு மணியானா அந்த இடத்துல வேற யாரையும் நிறுத்த விட மாட்டேங்க....'
குமாரின் வாக்குமூலம் கோபாலிடம் எத்தகைய ரியாக்ஷனை ஏற்படுத்துகிறது என்பதை அறிய அவருடைய முகத்தைப் பார்த்தான் ராஜசேகர். அவருடைய முகம் இறுகிப் போயிருந்ததைக் கவனித்தான். தன்னைத் தவிர வேறு பலரிடமும் மாதவிக்கு தொடர்பு இருந்தது அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் அவளை இவர் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்பதை அவளிடம் தெரிவித்தப் பின்பு அவர்களுடைய தொடர்பை அவள் விட்டுவிட்டிருப்பாள் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது என்று நினைத்தான்.
'சரி மேல சொல்லு.' என்ற நீதிபதியின் குரல் கேட்டு மீண்டும் குமாரை பார்த்தான் ராஜசேகர்.
'ராமராஜன் போயி அரை மணி நேரத்துக்கெல்லாம் முருகேசன்னு ஒருத்தரோட...'
'ஒரு நிமிஷம். முருகேசன் யார்னு ஒனக்கு தெரியுமா?'
'தெரியும்யா.... அவர்.... அவர்.....' என்று தயங்கிய குமார் ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு தொடர்ந்தான். 'ஒரு புரோக்கர்ங்கய்யா.... அந்த அக்கா வீட்டுக்கு ஆளுங்கள கூட்டிக்கிட்டு வந்து விட்டுட்டு கமிஷன் வாங்கிக்குவார்... அவர் டெய்லி சாயந்தரத்துல வந்து எங்க பார்க்கிங் ஏரியாவுலதான் ஒக்காந்துருப்பார்....'
நீதிபதி அவன் கூறியதை குறித்துக்கொண்டு அவனை பார்த்தார். 'சரி, மேல சொல்லு.'
'முருகேசன் மட்டும் அந்தக்கா வீட்டுக்குள்ள போயி ஒரு இருபது இருபத்தஞ்சி நிமிஷம் இருக்கும். ராமராஜன் சாருக்கு ஒரு ஃபோன் வந்துது. அவர் உடனே வண்டிய எடுத்துக்கிட்டு போயி அந்தக்கா வீட்டு வாசல்ல நிறுத்துனத பாத்தேனுங்க... அவ்வளவுதான்...... அன்னைக்கி ராத்திரி நா வேலையிலருந்து கிளம்பறப்போ மறுபடியும் ரெண்டு பேரும் என்னான்ட வந்து இன்னைக்கி சாயந்தரம் எங்கள இங்க பாத்தேன்னு சொன்னே ஒன்னெ தொலைச்சிருவேன்னு மிரட்டுனாங்க.. அதான் அடுத்த நாள் சப்-இன்ஸ்பெக்டர் ஐயா கோபால் சார் இங்க வந்து பார்க் பண்ணாரான்னு கேட்டப்போ ஆமாங்கய்யான்னு சொல்லிட்டேன்.'
'சரி' என்று குறித்துக்கொண்ட நீதிபதி, 'கொஞ்ச நாள் நீ தலைமறைவாய்ட்டேன்னு போலீஸ் சொன்னாங்களே எதுக்கு?' என்று வினவினார்.
அவருடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதுபோல் ஒரு சில நொடிகள் தயங்க, 'எதுக்கும் பயப்படாம உண்மைய சொல்லு.' என்றார் நீதிபதி சற்று கண்டிப்புடன்.
'அதான் சொன்னேனேய்யா...... வக்கீல் சாரும் இன்ஸ்பெக்டர் பெருமாள் ஐயாவும் அன்னைக்கி சாயந்தரம் ஏழு மணிக்கும் கோபால் சார் எங்க ஏரியாவுல வந்து கார பார்க் பண்ணிட்டு அந்த அக்கா வீட்டுக்கு போய் வந்தத பாத்தேன்னு சொல்லச் சொன்னாங்க......அதே மாதிரிதான்டா நீ சொல்லணும் இல்லன்னா ஒன்னே தீர்த்துக் கட்டிருவேன்னு முருகேசனும் ராமராஜனும் மிரட்டினதால நா பயந்துபோயி ஊர் பக்கம் போய்ட்டேங்க.'
உன்னை ராமராஜன் கடத்தி வைத்திருந்ததை நீதிமன்றத்தில் சொல்ல வேண்டாம் என்று ஏற்கனவே ராஜசேகர் அவனை எச்சரித்திருந்தான். அப்படியானால் உன்னை அங்கிருந்து மீட்டது யார் என்று நீதிபதி கேட்க வாய்ப்புண்டு. அவனை மீட்டது எதிர்தரப்பு வழக்கறிஞர் என்பது கோர்ட்டுக்கு தெரிய வந்தால் அதன் பிறகு குமார் சொல்லும் எந்த சாட்சியத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்பதை அவன் அறிந்திருந்தான்.
குமாரின் இந்த வாக்குமூலத்தைக் கேட்டதும் கோபால், 'என்ன சார் இது அக்கிரமமா இருக்கு..... இப்படியெல்லாமா நடக்கும்?' என்று கிசுகிசுக்க, 'சரி சார்.... நீங்க அமைதியா இருங்க.' என்றான் ராஜசேகர். 'ஜட்ஜ் கோச்சிக்கப்போறார்.'
குமார் பேசி முடிப்பதற்கு முன்பே தன் இருக்கையில் இருந்து எழுந்த பிபி, 'இது எதிரியை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க அவர் போடும் சதி யுவர் ஆனர். ஆகவே நான் காலையில் விண்ணப்பித்தபடி எதிரியுடன் சிறையிலிருந்த கைதியை விசாரிக்க அனுமதிக்க வேண்டுகிறேன்.' என்றவாறு அதற்கென தன் உதவியாளர் ஒருவரால் தயாரிக்கப்பட்டிருந்த மனுவை சமர்ப்பித்தார்.
நீதிபதி அதை வாசித்துவிட்டு ராஜசேகரைப் பார்த்தார். அவருடைய பார்வையின் பொருளை உணர்ந்துக்கொண்ட ராஜசேகர் தன் அருகில் இருந்த வசந்தைப் பார்த்தான். 'பண்ணட்டும் பாஸ்.... என்னதான் சொல்றான்னு பாத்துட்டு தேவைப்பட்டா அட்ஜெர்ன்மென்ட் கேக்கலாம்.' என்றான் வசந்த்.
ராஜசேகர் எழுந்து, 'I have no objection your honour' என்றான்.
'OK.' என்ற நீதிபதி, 'Before that, you want to cross examine this witness?' என்றவாறு ராஜசேகரைப் பார்த்தார்.
அவன் ஒரு சில விநாடிகள் யோசித்தான். அவன் எதிர்பார்த்திருந்ததைவிடவும் தெளிவாகவும் கோர்வையாகவும் குமார் சாட்சியம் அளித்திருந்தததால் அதற்கு மேலும் அவனிடம் கேள்விகள் கேட்டு அவனை குழப்ப வேண்டாம் என்று தீர்மானித்தான். 'No, your honour'
நீதிபதி வேணுவைப் பார்த்து 'In that case, you can call the witness.' என்று கூறிவிட்டு சாட்சி கூண்டில் நின்றிருந்த குமாரை, 'நீங்க போகலாம்... என்றார், அவன் இறங்கி தலையைக் குணிந்தவாறு நீதிமன்ற அறையிலிருந்து வெளியேறினான்.
'தாங்ஸ் யுவர் ஆனர்.' என்று பதிலளித்த பிபி தன் உதவியாளரிடம் கிசுகிசுக்க அவர் உடனே எழுந்து வெளியில் சென்றார்.
அடுத்த சில நிமிடங்களில் இரு காவலர்கள் சாட்சியை அழைத்து வந்து சாட்சி கூண்டில் ஏற்றிவிட்டு அருகிலேயே நின்றனர்.
நீதிபதி சாட்சி கூண்டில் நின்றவரை பார்த்தார். பிறகு வேணுவை பார்த்து, 'You can begin... but make it short and to the point.... we have only about half an hour for lunch break.' என்றார் கண்டிப்புடன்.
'நன்றி யுவர் ஆனர்.....' என்று ஒரு நாடகத்தனமான புன்னகையுடன் சாட்சி கூண்டில் நின்றுக்கொண்டிருந்தவரை நெருங்கி, 'உங்க பேர்?'
'தனபால் ஐயா.... ஒரு மர்டர் கேஸ்ல ஆயுள் கைதியா இருக்கேன்..... எட்டு வருசம் ஆவுதுங்க.' என்றவரை எரிச்சலுடன் பார்த்தார் கோபால். அவருடைய பார்வையின் பொருளை உணர்ந்த ராஜசேகர் அவரை நெருங்கி 'அவர நீங்க பாக்காம இருக்கறது நல்லது.... ஜட்ஜ் உங்களையும் நோட் பண்ணுவார்.' என்று கிசுகிசுத்தான் ராஜசேகர். கோபால் தலையை குணிந்துக்கொண்டார்.
'கோர்ட்ல இருக்கற மிஸ்டர் கோபால இதுக்கு முன்னால பாத்திருக்கீங்களா?'
'ஆமாங்கய்யா....அவர் கூட கொஞ்ச நாள் ஒரே செல்லுல (cell) தங்கியிருந்தேன்.'
கோபால் அவன் சொன்ன பொய்யை தாங்க முடியாதவர் போல் ராஜசேகரை பார்த்து, 'ரெண்டு நாள் கூட முழுசா இருக்கல சார்.... கொஞ்ச நாள்னு டூப்படிக்கிறான்!' என்றார். நீதிபதி அவரை எரிச்சலுடன் பார்ப்பதை கவனித்த ராஜசேகர், 'சார் ப்ளீஸ்.... அவன் சொல்றத கேக்காத மாதிரி இருங்க.....' என்றான் மீண்டும்.
'இவர் கூட பேசியிருக்கீங்களா?' என்று தொடர்ந்தார் பிபி.
'ஆமா சார்.'
'என்ன பேசினீங்க?'
'சாதாரணமான விஷயமாத்தாங்க..... எல்லா கைதிங்கக் கிட்டயும் கேக்கறா மாதிரிதான்... எந்த செக்ஷன்னு கேட்டேன்.'
'சரி.'
'மர்டர்னு சொன்னார்.'
'மேல சொல்லுங்க.'
'பாத்தா படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க.... யார சார் மர்டர் பண்ணீங்கன்னு கேட்டேன்..'
'அவர் சிரிச்சிக்கிட்டே ஒரு கெட்ட வார்த்தை சொல்லி... என்னெ ஏமாத்திறலாம்னு பாத்தா, போட்டு தள்ளிட்டேன்னு ரொம்ப சாதாரணமா சொன்னார் சார்.....'
கோபால் அடக்க முடியாத கோபத்துடன் 'இவன் சொல்றது அத்தனையும் பொய்...' என்றார் உரக்க.
நீதிபதி ஆர்டர், ஆர்டர் என்று கூறிவிட்டு ராஜசேகரை கோபத்துடன் பார்த்தார். 'If you don't control your client I will be forced to evict him from the Court.'
ராஜசேகர் உடனே எழுந்து பணிவுடன், 'இனிமே இந்த மாதிரி நடக்காது யுவர் ஆனர். I guarantee that.' என்று கூறிவிட்டு கோபாலைப் பார்த்து, 'ஏங்க, நீங்களே உங்க கேஸ ஸ்பாய்ல் பண்ணிருவீங்க போலருக்கே?' என்று கிசுகிசுத்தான். 'சாரி சார்.' என்றவாறு கோபால் தலைகுணிந்துக்கொள்ள பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த மகாதேவன் இவன் கோபத்த இங்கயும் காமிச்சிட்டான் போலருக்கே...... இனியாவது சைலன்ட்டா இருந்தா தப்பிச்சான்... என்றார் தனக்குள். நல்லவேளை சீனிய வரவேண்டாம்னு தடுத்துட்டோம்.
'That's all your honour' என்றவாறு வேணு ராஜசேகரை ஆணவத்துடன் பார்த்தார். எங்கிட்டயேவா? இப்ப என்ன பண்றேன்னு பாக்கறேன்.
நீதிபதி தன் முன்னால் இருந்த அன்றைய வழக்கு பட்டியல்களைப் பார்த்தார். அதிசயமாக அன்று இந்த வழக்குடன் சேர்த்து ஐந்து வழக்குகளே இருந்தன. அதில் மீதமிருந்த அனைத்துமே விசாரணை நிலையை அடையாத வழக்குகள்.
ஆகவே அதிகம் போனால் ஒரு மணி நேரத்தில் முடித்துவிடலாம் என்று நினைத்து, The court is adjourned for lunch.' என்றவாறு ராஜசேகரைப் பார்த்தார். 'You can cross examine the witness after the break.'
நீதிபதி தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்றதும் சாட்சி கூண்டில் நின்றிருந்த தனபாலை அவருடன் வந்திருந்த இரு காவலர்களும் அழைத்துச் சென்று வளாகத்தில் நின்றிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.
ராஜசேகரும் வசந்தும் எழுந்து கோபாலை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்து வராந்தாவில் நின்றனர். கோபாலை அழைத்து வந்த காவலர்கள் தன் அருகில் வருவதைக் கவனித்த ராஜசேகர் வசந்தைப் பார்த்தான்.
அவன் உடனே அவர்களை நெருங்கி, 'வாங்க கேன்டீனுக்கு போலாம்..... அவர் எங்கயும் போயிர மாட்டார்.' என்றான்.
'சார்..... அவர விட்டுப்போட்டு வர முடியாதுங்களே.' என்றார் காவலர் ஒருவர்.
'கரெக்ட்.... அவரும் நம்ம கூடத்தான் வருவார்.... நாம முன்னால போவோம்... வாங்க.... அவருக்கு நானும் நம்ம பாஸும் காரன்டி என்றவாறு அவர்களை அழைத்துச் சென்றான்.
அவர்கள் செல்வதை பார்த்தவாறு நின்றிருந்த ராஜசேகர், 'என்ன சார் நீங்க கடைசி நேரத்துல காரியத்த கெடுத்துற பாத்திங்களே? ஜட்ஜ் கடுப்பாய்ட்டா நம்ம பெய்ல் பெட்டிஷன கூட கன்சிடர் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா?' என்றான்.
'பின்ன என்ன சார்? என்னமா டூப் விடறான்? நா அவன் கூட பேசவே இல்லீங்க..... அவனும் அவன் மூஞ்சியும்..... என் கூட சரிசமமா பேசற தகுதியிருக்கா சார் அவனுக்கு?' என்றார் கோபால் கோபத்துடன். 'சார் இன்னொரு விஷயம். லைஃப் சென்டன்ஸ்லருக்கறவங்களுக்குன்னு புழல்ல தனியா ஒரு பெரிய காம்ப்ளக்ஸே இருக்கு சார்... எங்கள மாதிரி விசாரணைக் கைதிங்களுக்குன்னும் ஒரு தனி பில்டிங் இருக்கு... அப்படி இருக்கறப்போ திடீர்னு ரெண்டு நாளைக்கி முன்னாடி இவனெ கொண்டு வந்து என்னோட ஸ்டே பண்ண வச்சிருக்காங்கன்னா இத யாரோ ப்ளான் பண்ணி செஞ்சிருக்காங்க சார்....'
ராஜசேகர் பதிலளிக்காமல் ஒரு சில நிமிடங்கள் மவுனமாக அவரை நீதிமன்ற வளாகத்திலிருந்த கேன்டீனை நோக்கி நடத்திச் சென்றான். 'நீங்க சொல்றது கரெக்ட்தான் சார்.... எல்லாத்துக்கும் யார் காரணம்னு தெரியும்..... நீங்க டென்ஷனாகாம இருங்க.... நா பாத்துக்கறேன். நீங்க அந்த கான்ஸ்டபிள்ஸ் கூட போயி சாப்டுங்க. நானும் வசந்தும் இந்த தனபால பத்தி கொஞ்சம் இன்வெஸ்ட்டிகேட் பண்றோம்.'
'சரி சார்.' என்றவாறு கோபால் தங்கள் முன்னால் நடந்துக்கொண்டிருந்த காவலர்களை நெருங்கி வசந்தின் தோள் மீது கைவைத்தார். 'சார், ஒங்கள ஒங்க பாஸ் கூப்டறார்....'
வசந்த் உடனே திரும்பி ராஜசேகரைப் பார்த்தான். 'என்ன பாஸ்?'
தொடரும்
வணக்கம்
பதிலளிநீக்குபோகப்போக தொடர் கதைமிக அருமையாக சூடபிடிக்கிறது.. தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்
நேரம் மின்சாரம் இருந்தால் நம்ம பக்கமும் வாருங்கள்.....
உயிர் பிரிந்த ஓவியமாய் என்ற தலைப்பில் கவிதை...புதிய பதிவு
https://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அற்புதமான கதையோட்டம் நண்பரே. எப்படி இப்படியெல்லாம் கற்பனைகள் என்று என்னுள் வியந்து தங்களைப் பார்க்கிறேன். அத்தனையும் அருமை. தொடருங்கள் நானும் தங்கள் தொடருக்கு தொடர் வாசகர் ஆகி விட்டேன். பகிர்வுக்கு நன்றிகள்..
பதிலளிநீக்குஅதிகாரம் தங்கள் கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்பதை அந்த ‘பிபி’யின் நடவடிக்கை மூலம் தெளிவுபடுத்திவிட்டீர்கள்.
பதிலளிநீக்குஇதைப் படிக்கும்போது எத்தனை அப்பாவிகள் சிறைக்கம்பிக்கு பின்னால் இருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. தொடர்கிறேன் உணவு இடைவேளைக்குப் பின் நடந்ததை அறிய.
பதிலளிநீக்கு2008rupan said...
வணக்கம்
போகப்போக தொடர் கதைமிக அருமையாக சூடபிடிக்கிறது.. தொடருங்கள் எனது வாழ்த்துக்கள//
மிக்க நன்றிங்க.
நேரம் மின்சாரம் இருந்தால் நம்ம பக்கமும் வாருங்கள்.....//
கண்டிப்பாக.
பதிலளிநீக்குஅ. பாண்டியன் said...
அற்புதமான கதையோட்டம் நண்பரே. எப்படி இப்படியெல்லாம் கற்பனைகள் என்று என்னுள் வியந்து தங்களைப் பார்க்கிறேன். அத்தனையும் அருமை. தொடருங்கள் நானும் தங்கள் தொடருக்கு தொடர் வாசகர் ஆகி விட்டேன். பகிர்வுக்கு நன்றிகள்..//
மிக்க நன்றி நண்பரே!
PM
பதிலளிநீக்குவே.நடனசபாபதி said...
அதிகாரம் தங்கள் கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்பதை அந்த ‘பிபி’யின் நடவடிக்கை மூலம் தெளிவுபடுத்திவிட்டீர்கள்.
இதைப் படிக்கும்போது எத்தனை அப்பாவிகள் சிறைக்கம்பிக்கு பின்னால் இருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. //
உண்மைதான். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்ற நியதியை மறந்து சிலர் செயல்படுவதால்தான் இவ்வாறு நிகழ்கிறது. மேலும் புகார்களை விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும் என்கிற உயர் அதிகாரிகளின் நிர்பந்தமும் கிடைத்தவனை குற்றவாளியாக்கி கோப்பை மூடிவிடும் அவலமும் நடக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
இப்படி பொய் சாட்சிகளை உண்மையில் வக்கில்கள் ஏற்பாடு செய்வாங்களா ? படிக்க படிக்க ஆர்வம் குறையாமல் செல்கிறது.
பதிலளிநீக்குSasi Kala said...
பதிலளிநீக்குஇப்படி பொய் சாட்சிகளை உண்மையில் வக்கில்கள் ஏற்பாடு செய்வாங்களா ? படிக்க படிக்க ஆர்வம் குறையாமல் செல்கிறது.//
எல்லாரும்னு சொல்ல முடியாது. வேணு மாதிரி சிலர் இருக்கத்தான் செய்றாங்க. கேஸ்ல ஜெயிக்கறதுக்கு என்ன வேணும்னாலும் செய்வாங்க.