“Once a lawyer represents a client, the lawyer has a duty to make his or her expertise fully available in the realization of the end sought by the client, irrespective, for the most part, of the moral worth to which the end will be put or the character of the client who seeks to utilize it. Provided that the end sought is not illegal, the lawyer is in essence an amoral technician whose peculiar skills and knowledge in respect to the law are available to those with who the relationship of client is established.”
ராஜசேகர் தினமும் காலையில் கோகிலா எழுவதற்கு முன்பு எழுந்து வாசலில் கிடந்த பால் பாக்கெட்டுகளை எடுத்து தனக்கென்று சூடாக காப்பி போட்டு குடித்துக்கொண்டே செய்தித்தாளை மேய்வான். பிறகு வாக்கிங் செல்வான்.
அன்றும் காப்பி கப்பை ஒரு கையில் பிடித்தவாறே செய்திதாளை மேய்ந்தான். மூன்றாவது பக்கத்தில் முந்தைய தினம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டவை செய்தியாக வந்திருந்தது. அவசரமாக படித்து முடித்தான். படத்திலிருந்த குற்றஞ்சாட்டப்பட்டவரின் முகத்தை பார்க்க பரிதாபமாக இருந்தது. எல்லாம் தலையெழுத்து என்று நினைத்தான். பிறகு எழுந்து வாக்கிங் ஷூவை அணிந்துக்கொண்டு வாசற்கதவைப் பூட்டிக்கொண்டு படியிறங்கினான்.
பார்க்கிங் பகுதியில் அந்த குடியிருப்பில் வசித்த மூன்று நான்கு பேர் கூடி பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அதில் ஒருவர் அவனுடன் தினமும் வாக்கிங் செல்பவர். அவனைக் கண்டதும் அவனை நெருங்கி, 'சார்... நீங்க ஒரு க்ரிமினல் லாயர்தான?' என்றார்.
'ஆமா சார்.. ஏன் கேக்கறீங்க?'
'ஒன்னுமில்ல சார்... நேத்தைக்கி நியூஸ்ல கேட்டீங்கல்ல? நம்ம சீனிவாசன் சாரோட சன்ன அரெஸ்ட் பண்ணிட்டாங்க.'
ராஜசேகரின் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. அதிர்ச்சியை வெளியே காட்டிக்கொள்ளாமல், 'சீனிவாசனா... தனியா எங்க ப்ளாட்டுக்கு கீழ இருக்காரே? அவரோட சன்னா?' என்றான் தெரியாததுபோல்.
'ஆமா சார். பாவம் ஆடிபோயிருக்கார். ஒங்கள பாத்ததும் சட்டுன்னு நினைச்சேன். ஒங்களால ஏதாச்சும் பண்ண முடியுமா சார்.'
பழம் நழுவி பால்ல விழுந்தாமாதிரி இருக்கே என்று நினைத்து உள்ளூர மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்... 'செஞ்சிரலாம் சார். எப்படியும் பதினோரு மணிக்கி மேலதான் அவர கோர்ட்டுக்கு கொண்டு வருவாங்க. வாக் போய்ட்டு வந்துடறேன். வந்து பேசலாம். அவர்கிட்ட கவலைப்படவேணாம்னு சொல்லுங்க.'
அவர் 'சரி சார்' என்று நகர ராஜசேகர் கேட்டைத் திறந்துக்கொண்டு தெருவில் இறங்கினான்.
நேத்து ராத்திரிதான் டிசைட் பண்ணோம், இன்னைக்கி நாம முயற்சி பண்ணாமயே அதுவா நம்மள தேடி வந்துருச்சி... இந்த சந்தர்ப்பத்த நழுவ விடக்கூடாது.
'எப்படியாவது அவர நாமளே டிஃபெண்ட் பண்றா மாதிரி ஏற்பாடு செஞ்சிக்கணும்...'
இதுதான் அவன் நேற்று இரவு எடுத்த முடிவு. ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என இரவெல்லாம் தூக்கம் வராமல் திட்டமிட்டும் ஒரு விடையும் கிடைக்காமல் குழம்பிப் போயிருந்தான். அதற்கு இத்தனை எளிதில் தீர்வு கிடைத்துவிடும் என அவன் நினைக்கவில்லை.
தன்னுடைய திட்டத்திற்கு ஒரு தீர்வு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
******
நாற்பது நிமிட வாக்கிங் முடிந்து அவன் வாசலுக்குள் நுழைந்ததும் எதிர்கொண்ட மனைவியைப் பார்த்தான். 'கோகி... நீ நேத்து சொன்னியே அவரோட மகன்தானாம் அரெஸ்ட் ஆயிருக்கறது. நம்ம ஆடிட்டர் காலையில பார்த்து, நீங்கதான் உங்களால ஏதாச்சும் செய்ய முடியுமான்னு கேட்டார். சரின்னு சொல்லிருக்கேன்.'
'ஆமாங்க... நானே ஒங்கள செல்லுல கூப்பிடலாம்னு பார்த்தேன். இன்னைக்கி பார்த்து நீங்க அத இங்கயே வச்சிட்டு போயிருக்கீங்க.'
'ஏன்? நாந்தான் வாக் போய்ட்டு வந்து பேசறேன்னு சொல்லியிருந்தேனே?'
'யார்கிட்ட... அந்த பெரியவர் கிட்டயா? அவர்தான் ஒங்கள தேடிக்கிட்டு இங்க வந்திருந்தார்.'
'நா நம்ம பக்கத்து ஃப்ளாட் ஆடிட்டர் இருக்காரே அவர் கிட்ட சொல்லிட்டு போனேன். சரி... நீ டிஃபன ரெடி பண்ணு... நா குளிச்சிட்டு வந்துடறேன்.'
குளித்து உடை மாற்றும்போதே இதை எப்படி கையாள்வது என மனதுக்குள் பட்டியலிட்டான். அந்தாள பத்திய எல்லாத்தையும் டீட்டெய்லா கேட்டுக்கணும். இன்னைக்கி எப்படியும் மஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு கொண்டு போயிருவாங்க. இப்ப பெய்ல எடுக்கறது சிரமம்னு சொல்லிறணும். ஒரு ரெண்டு நாள் போலீஸ் கஸ்டெடில வச்சி விசாரிச்சிக்கட்டும். முடிஞ்சா போலீஸ் கஸ்டடியில இருக்கறப்பவே அவர மீட் பண்றதுக்கு கோர்ட்ல பர்மிஷன் கேட்டு பாக்கணும். அப்படியே அந்த எஸ்.ஐ. தன்ராஜையும் மீட் பண்ணா மாதிரி இருக்கும். இதுவரைக்கும் அவங்க என்னத்தையெல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்கன்னும் லேசா தெரிஞ்சிக்கலாம். அப்புறம் கொலையாளியோட டிஃபென்ஸ் லாயர்ங்கற முறையில கொலை நடந்த இடத்த ஒருதரம் பாக்கணும்னு போலீஸ் பர்மிஷன் கேக்கணும். அவங்க முடியாதுன்னா எஸ்.பி சந்தானம் வழியா பிரஷர் குடுக்கணும். எப்படியும் மாதவியோட ஃப்ளாட்டுக்குள்ள ஒருதரமாவது போயி பார்த்துரணும். நாம அவளுக்கு குடுத்த எதாச்சும் போலீஸ் கைல கிடைச்சி அத வச்சி ட்ரேஸ் பண்ணா நம்ம பெயரும் வெளீயில வந்துரும்...
அவன் கீழே இறங்கி வருவதற்குள் கோகிலா காலை பலகாரத்தை மேசையில் தயாராக வைத்திருந்தாள்.
'இன்னைக்கிம் லஞ்ச் வேணாம் கோகி... கோர்ட்டுக்கு கூட போக முடியுமான்னு தெரியல..'
'சரிங்க... இப்பவே போயி அவர பாருங்க.. பாவம் என்ன டென்ஷன்ல இருக்காரோ...'
'சரி.. சரி... நீ வேற டென்ஷனாகாத.. நா பாத்துக்கறேன்.'
கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்கவும் வாசல் மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. சீனிவாசன் ஆடிட்டர் வாசுதேவனுடன் நின்றிருந்தார். கைப்பெட்டியுடன் அவன் புறப்பட தயாராக இருந்ததைப் பார்த்த வாசுதேவன் 'என்ன சார் கிளம்பிட்டீங்களா? சாரோட ஃப்ளாட்டுல ஒக்காந்து பேசலாமா?' என்றார் பக்கத்தில் நின்றிருந்த சீனிவாசனைக் காட்டியவாறு.
'அதான் சார் சரி... வாங்க'
மூவரும் படியிறங்கி சீனிவசனின் குடியிருப்புக்குள் நுழைந்து வரவேற்பறையில் அமர்ந்தனர். வரவேற்பறையே அமர்க்களமாக இருந்ததை கவனித்தான் ராஜசேகர். நல்ல பசையுள்ள ஆள்தான் போலருக்கு என்று நினைத்தான்.
'மிஸ்டர் ராஜசேகர். எம் பையன எப்படியாச்சும் பெய்ல இன்னைக்கே எடுத்துறணும்... கவுரமான குடும்பம் சார் எங்களுடது..'
கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரை மறைக்க முயன்றவரை பரிதாபத்துடன் பார்த்தான் ராஜசேகர். இந்த வயசான காலத்துல பாவம் இந்த மனுஷன்...இதைத்தான் தலைவிதி என்கிறார்கள் போலும்.
'செஞ்சிரலாம் சார். முதல்ல என்ன செக்ஷன்ஸ்ல அரெஸ்ட் செஞ்சிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும். மர்டர் கேஸ்ங்கறதால நான்-பெய்லபிள் செக்ஷன் எதையாச்சும் போட்டுருந்தாங்கன்னா இன்னைக்கே எடுக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்...'
சீனிவாசன் பதற்றத்துடன் அவனை பார்த்தார். 'சார் அப்படி சொல்லாதீங்க... நானும் உங்க கூட வரேன்... ஏதாச்சும் செலவு பண்ணணும்னாலும் பரவால்லை சார்.'
ராஜசேகர் சங்கடத்துடன் தன்னுடைய வாசுதேவனை பார்த்தான். 'சார் நீங்களாச்சும் சொல்லுங்க... இந்த வயசான காலத்துல இவர் கோர்ட்டுக்கெல்லாம் வரவேணாம்... நா பாத்துக்கறேன்... இந்த டைம்ல பெருசா ஒன்னும் செலவாகாது... இன்னைக்கித்தான் கோர்ட்ல அவர் ப்ரொட்யூஸ் பண்ணுவாங்க... ஒரு வாரம் போலீஸ் கஸ்டடி கேப்பாங்க போலருக்கு... இது மர்டர் கேசுங்கறதால அத நாம தடுத்து நிறுத்த முடியாது.'
'என்ன சார் சொல்றீங்க? போலீஸ் கஸ்டடியா? என் சன்ன அடிச்சி கிடிச்சி விசாரிக்கப் போறாங்க சார்.'
'இல்ல சார்... பதறாம கேளுங்க. போலீஸ்ல நமக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க சார்... ஒங்க சன்னுக்கு எந்த ட்ரபுளும் வராம நா பாத்துக்கறேன்... சினிமால வரா மாதிரியெல்லாம் நடக்காது சார். அதுவுமில்லாம அவர மஜிஸ்திரேட் முன்னால ப்ரொட்யூஸ் பண்றப்பவே நா அங்க போயிருவேன். என் முன்னால வச்சித்தான் அவர க்வஸ்ட்சின் பண்றாமாதிரி நா பெட்டிஷன் பண்ணி பெர்மிஷன் வாங்கிருவேன்... நீங்க கவலைப்படாதீங்க...நா இப்பவே போனாத்தான் அவர எந்த ஸ்டேஷன்ல வச்சிருக்காங்கன்னு விசாரிச்சி போகமுடியும்.. நா போய்ட்டு ஒரு மணி நேரத்துக்குள்ள ஃபோன் பண்றேன்...'
'நா வேணும்னா ஒங்கக் கூட வரட்டுமா ராஜசேகர்.' என்று அவனுடன் எழுந்து நின்ற ஆடிட்டரைப் பார்த்தான்.
'சேச்சே... அதுக்கு அவசியமிருக்காது சார். அதுவுமில்லாம நா இங்க, அங்கன்னு அலைய வேண்டியிருக்கும்... நா பாத்துக்கறேன்...' என்ற ராஜசேகர் பதற்றத்துடன் தன்னையே பார்த்தவாறு நின்றிருந்த சீனிவாசனை பார்த்தான். 'சார் நீங்க டென்ஷனாகாதீங்க... ஒங்க சன்னுக்கு ஒன்னும் ஆயிராது. நா இருக்கேன்... ஒங்க சன் பேர மட்டும் சொல்லுங்க.'
'ராஜகோபால் சார்...கோபால்னு கூப்டுவோம்... பில்டரா இருக்கான். இப்ப கொஞ்ச நாளா நேரம் சரியில்லை...என் மருமக ஆஸ்பிட்டிலைஸ் ஆனதுலருந்தே ஒருமாதிரி ஆய்ட்டான்... இதுல இந்த பிரச்சினை... எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியல சார்...' மேலே தொடர முடியாமல் அப்படியே சோபாவில் அமர்ந்தவரைப் பார்த்தான். அவருடைய உடம்பு குலுங்கியதிலிருந்து அவர் அடக்கமாட்டாமல் அழுவதை உணர முடிந்தது.
'சார் நீங்க இவர கன்சோல் பண்ணுங்க.... நா போய் பார்த்துட்டு ஃபோன் பண்றேன்..'
கைப்பெட்டியுடன் வெளியேறி தன் வாகனத்தை அடைந்த ராஜசேகரின் மனசாட்சி அவனைப் போட்டு வதைத்தது. ஆனாலும் எதிர்பாராமல் நடந்த இந்த விபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இதைவிட்டால் வேறு வழி இல்லை என்று அதை அடக்கினான்.
அத்துடன் இனி தான் எடுக்கவிருக்கும் ஒவ்வொரும் முயற்சியும் தன்னை இந்த சிக்கலிலிருந்து எப்படி விடுவித்துக்கொள்வது என்பதை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்ற உறுதியுடன் தன்னுடைய அலுவலகத்தை நோக்கி வாகனத்தை செலுத்தினான்.
தொடரும்..
ஒரு வழக்கறிஞர் ஒரு வழக்கில் மாட்டிக்கொண்டால் அல்லது மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருந்தால், என்னவெல்லாம் செய்து தப்பிக்க பார்ப்பார்கள் என்பதை அழகாக கதை மூலம் சொல்லி சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தியிருக்கிறீர்கள். சுவாரஸ்யமாக இருக்கிறது தொடர். தொடர்கிறேன்.
பதிலளிநீக்குThe snippet at the beginning of every episode is good. Looks like you have done quite a bit of ground work. In general, when someone is in trouble, there comes the farewell for his ethical sense. Only a very few can overcome this. Moreover, the main character already crossed the line. Waiting to see what is next. Thanks.
பதிலளிநீக்குPackirisamy N said...
பதிலளிநீக்குIn general, when someone is in trouble, there comes the farewell for his ethical sense. Only a very few can overcome this. Moreover, the main character already crossed the line//
You are absolutely right. Thanks for sharing your thoughts.
பதிலளிநீக்குபலரும் சொல்லும் இந்த மனசாட்சியில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதை இஷ்டப்படி வளைக்கலாம். பிறகு அதையே துணைக்கு அழைக்கலாம்.
/ கைப்பெட்டியுடன் வெளியேறி தன் வாகனத்தை அடைந்த ராஜசேகரின் மனசாட்சி அவனைப் போட்டு வதைத்தது. ஆனாலும் எதிர்பாராமல் நடந்த இந்த விபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இதைவிட்டால் வேறு வழி இல்லை என்று அதை அடக்கினான்./--உதாரணம்...?
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குபலரும் சொல்லும் இந்த மனசாட்சியில் எனக்கு நம்பிக்கை இல்லை//
மனசாட்சியை யாரும் கண்ணால் பார்த்ததில்லையே. கண்ணால் காண்பவற்றையே நம்மில் பலர் நம்புவதில்லை, பிறகெப்படி கண்ணால் காணாததை நம்புவது? ஆனால் நாம் எதை செய்யும்போதும் இதை செய்யாதே அல்லது செய் என்று நம்முள் இருந்து ஒரு குரல் வருகிறதே அதைத்தான் நான் மனசாட்சி என்று கூறுகிறேன். அது நம்பாதவர்களுக்கும் கேட்கும் என்று நினைக்கிறேன். உண்மைதானே?
சட்டத்தின் அறிமுகம் இல்லாதவங்களே பணத்தின் மூலமா எப்படி தப்பிக்கலாம் என்று பார்ப்பாங்க.. இவர் வக்கில் வேற என்ன என்ன நடக்குமோ ?
பதிலளிநீக்குSasi Kala said...
பதிலளிநீக்குசட்டத்தின் அறிமுகம் இல்லாதவங்களே பணத்தின் மூலமா எப்படி தப்பிக்கலாம் என்று பார்ப்பாங்க.. இவர் வக்கில் வேற என்ன என்ன நடக்குமோ ?//
அதுக்குத்தான் வக்கீல்ங்க கிட்ட எந்த டீலிங்கும் வச்சிக்கக் கூடாதுன்னு சொல்றாங்க. நா பேங்க் மேனேஜரா இருந்த காலத்துல வக்கீலங்களுக்கு எந்த லோனும் குடுத்ததில்லை. குடுத்தா திருப்பி வாங்கறது ரொம்ப கஷ்டம்னு நல்லாவே தெரியும், அதான் :)
உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றிங்க.