சாதாரணமாக ஒரு நிறுவனத்தின் கண்ணோட்டம் அதன் தலைவரைப் பொருத்தே அமையும்.
கடந்த பத்தாண்டுகளில் துவக்கப்பட்ட புதிய வங்கிகளை புதிய தலைமுறை வங்கிகள் என்கிறோம். ஆனால் அத்தகைய வங்கிகள் பணியாற்றும் உயர் அதிகாரியிலிருந்து கடைநிலை ஊழியர் வரை அனைவருமே நாட்டில் அப்போது இயங்கி வந்த வங்கிகளிலிருந்து சென்றவர்கள்தான்.
அரசு வங்கிகள் மற்றும் பழைய தலைமுறை வங்கிகளில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களை வைத்துத்தான் புதிய வங்கிகளுள் பலவும் துவங்கப்பட்டன. ஆயினும் காலங்காலமாக இயங்கிவந்த வங்கிகளின் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கண்ணோட்டத்துடன் இந்த வங்கிகள் செயல்பட ஆரம்பித்ததைப் பார்த்திருக்கிறேன்.
இதைப் பார்க்கும்போதெல்லாம் நம்முடைய அரசு தொலைக்காட்சி மற்றும் சுமார் பத்தாண்டுகளுக்கும் முன்பு துவங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சிகளையும் நினைத்துக்கொள்வேன்..
இத்தகைய தொலைக்காட்சிகள் துவக்கப்பட்டபோது அரசு தொலைக்காட்சியில் பணியாற்றிய பல பணியாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள்தான் இவற்றிற்கு மாறினார்கள். ஆயினும் தனியார் தொலைக்காட்சிகள் முகக் குறுகிய காலத்தில் சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்களின் தரத்தை எட்டிப் பிடிக்க முடிந்ததே ஏன்?
அதுபோலத்தான் புதிய தலைமுறை வங்கிகளும். அந்த வங்கிகள் பணியாற்றிய அதிகாரிகளும் ஊழியர்களும் அரசு வங்கிகள் மற்றும் பழைய தலைமுறை வங்கிகளில் பணியாற்றியவர்கள்தான் எனினும் புதிய வங்கிகளில் பணிக்கு சேர்ந்ததுமே அவர்களுடைய கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாபெரும் மாற்றத்திற்குக் காரணம் அவ்வங்கிகளின் தலைவர்கள்தான்.
குறிப்பாக இன்று மத்திய ஸ்டேட் வங்கிக்கு சவால் விடும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் ஐசிஐசிஐ வங்கியின் செயல்பாட்டுக்கு மூல காரணம் அதன் தலைவர்தான் என்றால் மிகையாகாது. அவ்வங்கி இன்று ஈடுபடாத வணிகமே இல்லை என்னும் அளவுக்கு பரந்து விரிந்து நிற்கிறது. அதன் செயல்பாடுகளை அப்படியே பின்பற்ற நினைத்த பல அரசு வங்கிகளும் இறுதியில் தோல்வியையே தழுவின என்பது வங்கித்துறையில் உள்ளவர்களுக்கே தெரியும்.
என்னுடைய வங்கியின் கடந்த சுமார் ஐம்பதாண்டு கால செயல்பாடுகள் மற்றும் கண்ணோட்டத்தில் மாற்றம் கொண்டுவர என்னுடைய அப்போதைய வங்கி முதல் விரும்பியதில் தவறேதும் இல்லை. ஆனால் அதை அவர் செயல்படுத்த நினைத்த கால அளவில்தான் குறையிருந்தது. You can't simply bring about changes overnight என்பார்கள். அது முற்றிலும் உண்மை..
நாம் நம்முடைய கருத்துக்கு ஏற்றபடி ஒருவரை மாற்றலாம் அல்லது இருவரை... அல்லது ஒரு சிறிய குழுவினரை மாற்றிவிடலாம். ஆனால் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் மூவாயிரம் பணியாளர்களை, அவர்களுடைய கண்ணோட்டத்தை, மாற்றுவதென்பது அத்தனை எளிதல்ல!
ஆனால் வங்கித்துறையில் ஏறத்தாழ முப்பதாண்டுகாலம் பணியாற்றிய ஒருவரால் அதை உணர்ந்துக்கொள்ள முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.
நாட்டின் முதல் வங்கி என அங்கீகரிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவர் அவர். நாட்டின் பல முக்கிய நகரங்களில் மேலாளராகவும் மும்பை தலைமையகத்தில் உயர் அதிகாரிகளில் ஒருவராகவும் ஏன் மேலை நாடுகளிலும் பணியாற்றியவர் என்று பெருமைக்குரியவர் அவர். சுமார் ஐந்தாண்டுகாலம் வங்கியின் நியூயார்க் கிளையில் மேலாளராக பணியாற்றிய அனுபவமும் இருந்தது.
ஆனால் அதுவே அவருக்கு ஒரு சங்கடத்தை அல்லது பலஹீனத்தை ஏற்படுத்தியிருந்ததோ என்று நினைக்கிறேன்.
அதாவது பென்ஸ் காரை ஓட்டியே பழக்கப்பட்டவரிடம் திடீரென்று பஜாஜ் இரு சக்கர வாகனத்தை கொடுத்து ஓட்டுங்கள் என்று கூறினால் எப்படியிருக்கும்? அதுபோலத்தான் இருந்தது அவருடைய அணுகுமுறையும்.
இப்போதும் சாலைகளில் பார்க்கலாம். நாற்சக்கர வாகனத்தை செலுத்தி பழகிய ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்ல நேர்ந்தால் அப்போதும் சாலையின் நடுவில்தான் செல்வார். அதுபோலவே இருசக்கர வாகனத்தை செலுத்தி பழகிப்போன ஒருவர் நாற்சக்கர வாகனத்தை வாங்கிய புதிதில் சாலையின் நடுவில் செல்ல தயங்குவார். அவருடைய கண்ணோட்டம் அல்லது மனப்பான்மை மாறுவதற்கு சிறிது காலம் தேவைப்படும்.
அதுபோலத்தான் ஒரு நிறுவனத்தை நடத்திச் செல்வதும். நாட்டின் மிகப் பெரிய வங்கியில் சுமார் முப்பதாண்டு காலம் பணியாற்றியவருக்கு எங்களுடைய வங்கியின் நிதர்சனத்தை உணரவே சில ஆண்டுகள் தேவைப்படது. He continues to think that he is the Chairman of SBI என்றார்கள் அவருடைய போக்குடன் ஒத்துபோக விருப்பமில்லாத எங்களுடைய வங்கியின் பல உயர் அதிகாரிகள், ஆதங்கத்துடன்.
அத்துடன் உலக அளவில் பணியாற்றிய அவருக்கிருந்த பரந்த விஷயஞானத்தை எங்களுடைய வங்கியில் ஒரு மாவட்டத்தையே கடக்காதவர்களிடம் எதிர்பார்த்ததும் அவருடைய தவறு. 'குண்டுச் சட்டிக்குள்ளவே குதிரைய ஓட்டிக்கிட்டிருந்தவன் கூட்டத்த பாத்ததும் மிரண்ட கதையால்ல இருக்கு?' என்பார் நெல்லையைச் சார்ந்த என்னுடைய மேலாள நண்பர் ஒருவர் அவருடைய பாணியில். அவரும் என்னுடைய வங்கி முதல்வரும் ஒரே மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் என்பதுடன் ஒரே சமூகத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால் அவர் மிகவும் சர்வசாதாரணமாக எங்களுடைய வங்கி முதல்வரின் செயல்பாட்டைக் குறித்து அவரிடமே விமர்சிப்பார்.
எங்களுடைய வங்கி முதல்வருக்கு சென்னையில் ஒரு சொந்த குடியிருப்பு இருந்தது. அவருடைய ஒரே மகன் அப்போது சென்னையில்தான் மருத்துவம் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தார். ஆகவே சென்னை வரும்போதெல்லாம் தன்னுடைய மகனுடைய வீட்டில் ஒருசில நாட்கள் தங்கியிருப்பது வழக்கம். அலுவலக வேலையாக வரும்போது மட்டுமே அவர் ஒரு வங்கி முதல்வராக நட்சத்திர விடுதிகளில் தங்குவார். அலுவலக வேலைகள் முடிந்ததும் சொந்த வேலை காரணமாக மேலும் ஓரிரு நாட்கள் தங்கியிருக்க நேர்ந்தால் உடனே தன்னுடைய சொந்த குடியிருப்புக்கு மாறிவிடுவார். ஆனால் அந்த நாட்களிலும் அலுவலக நிமித்தம் வாடிக்கையாளர்களை சந்திக்க முன்வருவார். அப்படியொரு நேர்மையான மனிதர் எள்அவர்!
அப்படி அவருடைய மகனுடன் தங்கியிருந்தபோது நானும் நான் மேலே குறிப்பிட்ட நெல்லையைச் சேர்ந்த நண்பரும் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்ததால் ஒரு நாள் மாலை அவருடைய வீட்டுக்குச் செல்ல நினைத்தோம். எனக்கு தயக்கமாக இருந்தது. 'அதுக்கென்ன நாம என்ன அவர் சொத்தையா கேக்கப்போறோம்.. நீ வா பேசாம... ஏதாச்சும் கேட்ட நா பேசிக்கிறேன்...' என்றவாறு என்னுடைய நண்பர் என்னையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.
நான் அதுவரை சந்தித்திருந்த முதல்வர் அல்ல நான் அன்று சந்தித்தது. அத்தனை எளிமையாக இருந்தார். ஆறடி இரண்டங்குலம் உயரம். பல சமயங்களிலும் கோட் சூட்டில்தான் வருவார். பார்ப்பதற்கே கம்பீரமாக இருக்கும் அவருடைய தோற்றம். அப்படி பார்த்து பழகியவரை வீட்டில் நெல்லைவாசிகளுக்கே உரித்தான சங்கு மார்க் கைலி மற்றும் கையில்லா பணியனுடன் பார்த்தபோது வியப்பாக இருந்தது. ஆனால் மிகவும் பிடித்திருந்தது.
எவ்வித பந்தாவும் இல்லாமல் எங்கள் இருவரையும் வரவேற்று அமர்த்தி சுமார் ஒருமணி நேரம் உரையாடிக்கொண்டிருந்த அந்த காட்சி நெடுநாட்களுக்கு பிறகும் என்னுடைய மனதைவிட்டு நீங்காமலிருந்தது.
என்னுடைய நெல்லை நண்பர் மனதில் பட்டத்தை எந்த தடங்கலுமில்லாமல் வெளிப்படுத்தக் கூடியவர். அதுவே அவரை இறுதியில் சங்கடத்தில் வீழ்த்தியது.. அதை பிறகு சொல்கிறேன்..
அன்றைய சந்திப்பின்போது எங்களுடைய வங்கி முதல்வர் 'என்னுடைய functionsஅ பத்தி பேங்குல என்ன பேசிக்கிறாங்க?' என்று கேட்டார். நான் தயங்கினேன். ஆனால் என்னுடன் வந்திருந்த நண்பர் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாமல் தன் மனதில் இருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்தார்.
அதை அப்படியே இங்கு எழுதுவது உசிதமாயிருக்காது என்று நினைக்கிறேன். மேலும் என்னுடைய நண்பர் பேசும் பாணியே அலாதியானது. என்னுடைய வங்கி முதல்வரே அசந்துபோனார் அல்லது அதிர்ச்சியடைந்தார் என்பது அவருடைய முகத்தில் அவ்வப்போது தோன்றி மறைந்த பாவங்கள் எனக்கு உணர்த்தின. இறுதியில் அவர் அமைதியாக, 'நா கேக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க.. ஆனா ஒங்க பேங்க் சீனியர் அதிகாரிங்கள பத்தி எப்படி நீங்க இவ்வளவு மோசமா பேசலாம்? அதுவும் சேர்மன்கிட்ட?' என்றார். 'என்ன டிபிஆர்... நீங்க ஏன் பேசாம இருக்கீங்க? Does it mean whatever he has said so far is true?'
என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய என்னுடைய நண்பர் மீது எனக்கு கோபம் வந்தது. இருப்பினும் அவருடனான நீண்டகால நட்பை முன்னிட்டு, 'சார் இவர் சொல்றத பெருசா எடுத்துக்காதீங்க. அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட கூடியவர். அதுவுமில்லாம அவருக்கு நம்ம தமிழ் ஆளுங்கன்னா ரொம்பவும் பிடிக்கும். அதனாலதான்....' என்று இழுத்தேன்...
முதல்வர் நான் சொல்ல வந்ததை புரிந்துக்கொண்டார். 'Yes I have also observed that some of the negative comments noted in the appraisal reports of officers belonging to our State... I have not done such things in my career... never... அவங்களோட இந்த மாதிரியான செய்கை உங்களுடைய மனதை புண்படுத்தியிருக்கலாம்... ஆனாலும் அத மனசுல வச்சிக்கிட்டு அவங்களுடைய செயல்பாட்டை குறை சொல்றது நமக்கு அழகில்லையே.' என்று துவங்கி அடுத்த பத்து நிமிடங்கள் ஒரு வெற்றிகரமான அதிகாரியாக திகழ நமக்கு என்னவெல்லாம் தேவை என்பதை வெகு அழகாக எங்களிருவருக்கும் எடுத்துரைத்தார்.
உண்மைதான்... அப்போது உயர் பதவியிலிருந்த பல அதிகாரிகள் தமிழகத்திலிருந்து வந்த அதிகாரிகளை புறக்கணித்தவர்கள்தான்... ஆனால் நாளடைவில் அது மறைந்துபோனது... குறிப்பாக நான் குறிப்பிட்ட முதல்வருடைய காலத்திலிருந்து...
தொடரும்..
TBR Sir,
பதிலளிநீக்குCongrats for your excellent blog.
(i discovered yours only recently).
It gives a refreshing view of business and life from a banker's
perspective, which is very rare.
I have a long standing doubt about
dishonoured cheques ; i have querried many lawyers, activists,
bankers in vain :
I have seen many of our Karur exporters de-frauded by dishonest
exporters based in Mumbai, Delhi, etc. that is their cheques for huge
amounts remain unpaid and the victim tries in vain thru courts to
get his money, while the cheater
continues to operate his current account and issue cheques and deposit funds, etc.
My query is : why is n't the law changed so that there is a que system for cheques ; only if the
outstanding cheque is cleared will the next cheque be passed. The bank manager or his boss may be given a discretion of granting a few days for payment. Otherwise only depsotis shall be made into the a/c but cheques will be waiting in a que. the cheater then will not be able to issue more cheques or operate the account without clearing the pending cheque. or his account and lien may stand frozen until he clears the pending cheques. Banking act
can be amended for this. Legal process is tortuous, costly and slow..
the negotiable instrument act seems
fuzzy in this matter. And my lawyer sister told me that the lawyers do not want such changes in law as they will loose 'business'..
What is the solution then ?
Anbudan
K.R.Athiyaman
Chennai - 96
athiyaman.blogspot.com
வாங்க அதியமான்,
பதிலளிநீக்குவழக்கம் போலவே ஒரு சுவாரஸ்யமான பின்னூட்டத்துடன் வருகிறீர்கள்.. என்னால் இயன்றவரை பதிலளிக்கிறேன்..
As per the Negotiable Instrument Acct 1881 cheque is a bill of exchange containing an unconditional order to a person (normally a Bank) to pay on demand a certain sum of money to a certain person or to a bearer .
அதாவது காசோலையை வழங்கும் நபர் இன்னாருக்கு இன்ன தொகையை அவர் கேட்கும்போது உடனே வழங்கவேண்டும் என அளிக்கப்படும் உத்தரவுதான் காசோலை..
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் வங்கிகளைப் பொருத்தவரை அவர்களுடைய கடமை காசோலையை வழங்கும் நபருடைய உத்தரவை நிறைவேற்றுவது மட்டுமே. அதுவும் எப்போது? 'டிமாண்ட் செய்யும்போது.' அதாவது காசோலையை வங்கி கவுண்டரிலோ அல்லது வேறொரு வங்கி வழியாக present செய்யும்போது. அப்படி செய்யும் நேரத்தில் காசோலை வழங்கியவருடைய கணக்கில் பணம் இல்லாதபட்சத்தில் உடனே present செய்தவருக்கு திருப்பியனுப்பி விடவேண்டும். அதை பணம் வரும்போது தருகிறேன் என்று வைத்துக்கொள்ள முடியாது. அப்படி செய்தால் 'டிமாண்ட் செய்யும்போது (on demand)' கொடுக்க வேண்டும் என்ற ஷரத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். அத்துடன் காசோலை திரும்பி வந்த முப்பது நாட்களுக்குள் அதை வழங்கியவர் மீது க்ரிமினல் வழக்கு தொடரவேண்டும் என்ற கட்டாயமும் இருப்பதால் வங்கிகள் அவற்றை காலவரையின்றி தங்கள் வசம் வைத்துக்கொள்ள இயலாது.