சாதாரணமாக வணிகர்களும் சரி தொழில் செய்பவர்களும் சரி தங்களுடைய முதலீட்டை விட வங்கியிலிருந்து மேலும், மேலும் கடன் பெறுவதையே விரும்புவதைப் பார்த்திருக்கிறேன்.
மற்றவர்களுடைய பணத்தில் கிடைக்கும் வசதிகளை அனுபவிக்கும் சுகமே அலாதியானதுதானே.
ஒரு வணிகரின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது அதில் தவறேதும் இல்லைதான். பொருளாதார வல்லுனர்கள் கூட borrowed capital is always cheaper than the own capital என்று கூறி வைத்துள்ளதைப் பார்க்கிறோம்.
இதற்கு அவர்கள் கூறும் காரணத்தைக் கேட்டால் நமக்கும் அதில் தவறேதும் இல்லையே என்று தோன்றும். உங்களிடம் நூறு ரூபாய் உள்ளது என வைத்துக்கொள்வோம். அதை உங்களுடைய வணிகத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று இல்லை. அதை வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும் வாங்கலாம். ஒன்றும் வாங்க விருப்பமில்லையா? பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கலாம். அல்லது ஒரு வங்கியிலோ டெப்பாசிட் செய்துவிட்டு வட்டியை வாங்கலாம். எப்போது தேவையோ அப்போது மீண்டும் பணமாக்கிக் கொள்ளலாம். உங்களுடைய சேமிப்பு கூடுகிறதோ இல்லையோ இழக்க வாய்ப்பில்லை.
ஆனால் அதையே உங்களுடைய வணிகத்திலோ அல்லது தொழிலிலோ முடக்கிவிட்டால் அதை அவ்வளவு எளிதாக மீண்டும் எடுக்க முடியாது. உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகலாம். அதுபோலவே அதை முழுவதுமாக இழந்தும் விடலாம்.
வணிகம் அல்லது தொழில் துவங்கவோ அல்லது உள்ளதை விரிவாக்கம் செய்யவோ வங்கியிலிருந்து மட்டுமல்ல வெளியிலிருந்தும் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் சலுகை வட்டியில். அப்படியிருக்க உங்களுடைய சேமிப்பை எதற்கு அதில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற வாதம் கேட்பதற்கு நியாயமானதாகத்தான் தோன்றும்.
ஆனால் வங்கிகள் இதை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றன?
ஒவ்வொரு வகை வணிகத்திற்கும், தொழிலுக்கும் தேவையான முதலீடு எவ்வளவு என்பதை அந்தந்த துறை வல்லுனர்களைக் கொண்டே ஆய்வு செய்து கணித்திருக்கின்றன வங்கிகள். இதைத்தான் ஆங்கிலத்தில் adequate capital என்கிறார்கள்.
சாதாரணமாக ஒரு வணிகத்திற்கு ரூ.100 முதலீடு தேவையென்றால் அதில் குறைந்தபட்சம் ரூ.25 ஆவது உரிமையாளரின் பங்காக இருக்க வேண்டும். அதற்கும் குறைவாக முதலீடு செய்பவர்களுக்கு உதவ வங்கிகள் முன்வருவதில்லை. மேலும் தன்னுடைய இந்த ரூ.25 உடன் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரிடமிருந்து மேலும் ரூ.25ஐ கொண்டு வர வேண்டும். மீதமுள்ள ரூ.50ஐ வங்கிகள் பலதரப்பட்ட கடன் திட்டங்களில் குறுகிய மற்றும் நீண்ட கால கடன்களாக வழங்க முன்வருகின்றன.
வணிகம் அல்லது தொழிலுக்கு தேவையான அசையா சொத்துக்களை அதாவது தொழிற்சாலை, இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்க நீண்ட கால கடன்களையும் தொழிலை அன்றாடம் நடத்திச் செல்ல தேவையான அசையும் சொத்துக்களான சரக்குகள் (stock), மூலப்பொருட்கள் (raw materials) ஆகியவற்றை வாங்கவும், தொழிலாளர்கள் ஊதியம், மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து போன்ற செலவினங்களுக்காக குறுகியக் காலக் கடன்களையும் வங்கிகள் வழங்குவது வழக்கம். இது வங்கிகளுக்கு வங்கி சிறு மாறுதல்கள் இருந்தாலும் இதுதான் பொதுவான அணுகுமுறை.
ஒவ்வொரு வகை கடன்களை வழங்கும்போதும் அதற்கு தேவையான தொகையில் பத்திலிருந்து இருபத்தைந்து சதவிகித தொகை உரிமையாளர் தன்னுடைய பங்காக கொண்டு வரவேண்டும் என்று வங்கிகள் எதிர்பார்க்கின்றன. அதாவது தொழிற்சாலை எழுப்ப ரூ.1000 தேவை என்றால் ரு.250 லிருந்து ரூ500 வரை உரிமையாளர் தன் பங்காக கொண்டு வரவேண்டும். அதுபோலவே இயந்திரங்களில் பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம்
வரையிலும் சரக்கு கொள்முதல் செய்வதில் இருபத்தைந்து சதவிகிதம் வரையிலும் மற்ற செலவினங்களில் பத்திலிருந்து இருபத்தைந்து சதவிகிதம் வரையிலும் உரிமையாளருடைய பங்கு இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்க்கின்றன.
அத்துடன் நின்றுவிடாமல் வர்த்தக அளவு கூடக் கூட நிறுவனத்தின் தேவையும் கூடுமல்லவா? அப்போதெல்லாம் வங்கிகள் மட்டுமே தங்களுடைய கடன் தொகையை கூட்டித் தரவேண்டும் என்று பல வணிகர்களும் தொழிலதிபர்களும் கருதுகின்றனர். ஆனால் வங்கிகளோ தேவையான கூடுதல் தொகையில் உரிமையாளர்களும் தங்களுடைய முதலீட்டை தொடர்ந்து கூட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. தங்களுடைய மற்ற சேமிப்பிலிருந்து கொண்டு வருகிறார்களோ இல்லையோ குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட வணிகத்திலிருந்து கிடைக்கும் லாபத்தையாவது அதிலேயே முதலீடு செய்யவேண்டும். ரூ.100 லாபம் கிடைக்கும் என்றால் அதில் ரூ.75 ஐ வணிகத்திலிருந்து எடுக்கலாகாது. அதை விடுத்து கிடைக்கும் லாபம் முழுவதையும் எடுத்து வேறேதும் சொத்தில் முதலீடு செய்வதோ அல்லது ஆடம்பர செலவுகளில் வீணடிப்பதோ வங்கிகளுக்கு தெரியவரும் பட்சத்தில் தங்களுடைய கடன் தொகையை கூட்ட முன்வருவதில்லை. எந்த வணிகர் தன்னுடைய சொந்த முதலீட்டை தன்னுடைய வணிகத்தில் முடக்க விரும்பவில்லையோ அதில் வங்கிகளும் பணத்தை முடக்க விரும்பவதில்லை என்பதை பல வணிகர்களும் உணர்வதில்லை.
'சார் இப்பதான் பிசினஸ் கூடற நேரம். இப்ப போய் நீங்க கடன கூட்டித் தரமாட்டேன்னு சொன்னா எப்படி சார்?' என்று வாதிடுவார்கள். 'சரிங்க. உங்க பிசினசுக்கு கூடுதல் கேப்பிடல் வேணும்னு ஒங்களுக்கு தெரியுது. ஆனா உங்க பணத்தை அதில இன்வெஸ்ட் பண்ணணும்னு ஒங்களுக்கு தோனலையே.' என்றால் 'யார் சொன்னது?' என்று எதிர்வாதம் செய்வார்கள். 'ஒங்க பாலன்ஸ் ஷீட்தான் சார் சொல்லுது.' என்று அவருடைய நிறுவனத்தின் நிதியறிகையிலிருக்கும் விவரங்களை அவர் முன் வைத்தால் அப்போதும், 'சார் அது நம்ம ஆடிட்டர் பண்ண வேலைசார். அவர ஒங்கக் கிட்ட பேச சொல்றேன்.' என்று நழுவுவார்கள்.
வங்கிகள் எத்தனை சலுகைக் கடன்கள் வழங்கியும் நம் நாட்டின் பொருளாதராம் இன்னும் ஒரு வளரும் நாட்டின் நிலையிலேயே நிற்பதற்கு முக்கிய காரணம் நம் வணிகர்களின் மற்றும் தொழிலதிபர்களின் நேர்மையற்றதனமும், நிலையற்ற கண்ணோட்டமும் ஒரு காரணம் என்றாலும் மிகையாகாது என்பது என்னுடைய முப்பதாண்டுகால அனுபவத்தில் நான் படித்தவை.
தொடரும்...
ஜோசப் சார்,
பதிலளிநீக்குமிக அருமையாக எழுதி வருகிறீர்கள். மிக்க நன்றி.
கடன் வாங்கி கம்பெனி நடத்து என்று சொல்வது ரொம்ப சரி. இதுதான் ஒரு தேர்ந்த தொழிலதிபரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இதை நீங்கள் சுட்டிக்காட்டியது சரிதான்.
அதற்கு ஒரு சிறந்த காரணம் உள்ளது. அதை தெளிவுபடுத்தவே இந்த பின்னூட்டம். வங்கிகளில் வாங்கிய கடன் வருமான வரிக்குட்பட்ட செலவாக கருதப்படும். இதனால், வருமான வரி கட்டுவது குறைகிறது. சொந்த முதலுக்கு இந்த வசதி இல்லை.
இதனால், வாங்கிய கடன்கள் இன்னும் மலிவாக நம் தொழிலுக்கு அடக்கமாக ஆகின்றன. ஒரு வங்கியில் 10% வட்டி என்றால், அதில் வருமான வரி கழிப்பு கிடைப்பதால் கிட்டத்தட்ட 6.5% மட்டுமே கைக்கு அடக்கமாகிறது. இதை ஒப்பிட்டு பார்த்தால் கைக்காசை தொழிலுக்கு போடுவதால் நஷ்டமே. ஏனென்றால், அந்த 6.5% விட அதிகமாக நம் சொந்த காசை வைத்து சம்பாதிக்க முடியும் இல்லையா? அதனால், கைக்காசை விட வங்கிக்கடனே லாபகரம்.
நன்றி
வாங்க ஜயராமன்,
பதிலளிநீக்குகடன் வாங்கி கம்பெனி நடத்து என்று சொல்வது ரொம்ப சரி. இதுதான் ஒரு தேர்ந்த தொழிலதிபரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.//
இந்த குறிக்கோளில் தவறில்லைதான். ஆனால் சொந்த முதலே இல்லாமல் கடன் வாங்க முடியாதல்லவா?
ஒரு வணிகம் சிறப்பாக நடைபெற உரிமையாளரின் முதலீடு மிகவும் அவசியம் என்று நினைக்கின்றன வங்கிகள்.
மற்றபடி உங்களுடைய கருத்தில் மாற்று கருத்து இல்லை...
நீங்க ஆடிட்டராச்சே அந்த கண்ணோட்டத்துல பாக்கறீங்க... நான் ஒரு பேங்கர் கண்ணோட்டத்துல பார்க்கிறேன்...:-)
/// இந்த குறிக்கோளில் தவறில்லைதான். ஆனால் சொந்த முதலே இல்லாமல் கடன் வாங்க முடியாதல்லவா? ////
பதிலளிநீக்குதாராளமாக முடியும். பல வழிகள் இருக்கின்றன. தங்களிடம் ஏற்கனவே ஒரு வளமான கம்பனி இருந்தால் அதிலிருந்து பணம் போடலாம். அது உங்கள் பணமாக இல்லாமல் அங்கு கடன் வாங்கப்பட்ட ஒரு பணமாக கூட இருக்கலாம். ரிலையன்ஸ், டாடா முதலான பெரிய கம்பனிகள் இப்படித்தான் ஒன்றுக்குள் ஒன்றாக பல கம்பெனிகளை நிறுவுகின்றன.
அல்லது, பல வென்சர்கம்பெனிகள் உங்கள் சார்பாக பணம் போட தயாராக இருக்கின்றன. அவை உங்கள் சார்பாக பல முதலீடுகளை செய்யும். (சரியாக பேரம் பேசாவிட்டால், அவை கேட்கும் விலை மிகவும் அதிகமாக இருக்கும் என்பது தனிக்கதை...). அல்லது, தங்களின் முதலீடு பணமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு தொழில்நுட்பம், ராயல்டி என்று செய்யவேண்டிய தொழிலுக்கு தேவையான ஏதாவது ஒன்றை நீங்கள் கம்பனிக்கு கொடுக்கலாம். இதனாலும் உங்கள் சொந்த பணம் முடங்கிப்போகாது. இன்னும் சில வழிகள் உண்டு.
தங்கள் அழகான தொடருக்கு மிக்க நன்றி.
தொழில் நடத்தக் கொடுக்கும் கடன் போலத்தானா வீடு வாங்கக் கொடுக்கும் கடனும்?
பதிலளிநீக்குஇங்கே வெறும் 5% போட்டாப்போதும். 95% வங்கி கொடுக்குது. ஆனா மார்த்கேஜ் முடியும்வரை
பத்திரம் வங்கியிலேதான் இருக்கும். இந்தியாவில் வீட்டுக்கடன் வசதி எப்படி?
இந்த குறிக்கோளில் தவறில்லைதான். ஆனால் சொந்த முதலே இல்லாமல் கடன் வாங்க முடியாதல்லவா? //
பதிலளிநீக்குசார் நான் சொல்ல வந்தது இந்திய வங்கிகளிடமிருந்து கடன் பெற வேண்டுமென்றால் உரிமையாளரின் தரப்பிலிருந்து முதலீடு வேண்டும் என்பதைத்தான்..
ஒரு க்ரூப் நிறுவனங்களிலிருந்து முதலீட்டை அதே க்ரூப்பிலுள்ள நிறுவனங்களுக்கு மாற்றுவது என்பதெல்லாம் ஒரு மாதிரியான ஜக்ளிங் வேலை..
தங்கள் அழகான தொடருக்கு மிக்க நன்றி. //
அதை தொடர்ந்து படித்து ஆதரவு அளிக்கும் உங்களைப் போன்றவர்களுக்குத்தான் நான் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும்...
இன்னும் கூட தொழில்ரீதியாக எழுதலாம்தான்... ஆனால் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை...
வாங்க துளசி,
பதிலளிநீக்குஇங்கே வெறும் 5% போட்டாப்போதும். 95% வங்கி கொடுக்குது. ஆனா மார்த்கேஜ் முடியும்வரை
பத்திரம் வங்கியிலேதான் இருக்கும். இந்தியாவில் வீட்டுக்கடன் வசதி எப்படி? //
இங்கேயும் அப்படித்தான்.. ஆனால் சமீபத்தில் வட்டி விகிதம் கணிசமாக உயர்ந்துவிடவே கடன் வாங்க விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது...
<--- நம் வணிகர்களின் மற்றும் தொழிலதிபர்களின் நேர்மையற்றதனமும், நிலையற்ற கண்ணோட்டமும் ஒரு காரணம் என்றாலும் மிகையாகாது --->
பதிலளிநீக்குஓ அதுதான் காரணமா? இப்ப நல்லாப் புரியுது
<--இன்னும் கூட தொழில்ரீதியாக எழுதலாம்தான்... ஆனால் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை...-->
பதிலளிநீக்குபுரியர மாதிரியும் சுவாரஸ்யமும் இருந்தால் போதும்
<---- சமீபத்தில் வட்டி விகிதம் கணிசமாக உயர்ந்துவிடவே கடன் வாங்க விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது... --->
பதிலளிநீக்குபழைய மாதிரி 15%,17% வட்டி எப்போ வரும்னு ஆவலா நிறைய பேர் எதிர்பார்த்துட்டு இருக்காங்க
வாங்க ஜி!
பதிலளிநீக்குஓ அதுதான் காரணமா? இப்ப நல்லாப் புரியுது //
'அதுதான்' இல்லை... 'அதுவும்':-)
புரியர மாதிரியும் சுவாரஸ்யமும் இருந்தால் போதும் //
பதிலளிநீக்குபுரியறா மாதிரி எழுதலாம்... ஆனால் சுவாரஸ்யமா இருக்கும்கறதுக்கு காரண்டியில்லை ஜி!:-)
பழைய மாதிரி 15%,17% வட்டி எப்போ வரும்னு ஆவலா நிறைய பேர் எதிர்பார்த்துட்டு இருக்காங்க //
பதிலளிநீக்குஅதானே.. எப்படியும் கட்டப் போறதில்லை... அப்புறம் வட்டி ஏறுனா என்ன இறங்குனா என்ன?
கடன் வாங்கிக் கல்யாணம் பண்ணுன்னு நம்மூர்ல ஒரு பழமொழி உண்டு. கடன் வாங்கித் தொழில் நடத்துன்னு வணிகம் சொல்லுதோ!
பதிலளிநீக்குஉண்மைதான் சார். நம்மூர்ல எப்படி கன்செஷன் அனுபவிக்கலாம். எப்படி ஃபிரி வாங்கலாம். எப்படி திருப்பிக் கட்டாத கடன் வாங்கலாம். எப்படி வரி கட்டாம இருக்கலாம்...இதுலதானங்க யோசிக்கிறாங்க. அப்புறம் எங்க....அதுவுமில்லாம இந்த மாதிரி பணப்புழக்கந்தான் பணக்காரங்கள மட்டுமே பணக்காரங்களா வெச்சிருக்குது. வெகுசிலர் அந்த வழியைத் தெரிஞ்சிக்கிட்டுப் பணக்காரக்கூட்டத்துல ஐக்கியமாயிர்ராங்க.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குகடன் வாங்கிக் கல்யாணம் பண்ணுன்னு நம்மூர்ல ஒரு பழமொழி உண்டு. கடன் வாங்கித் தொழில் நடத்துன்னு வணிகம் சொல்லுதோ!//
கடன் வாங்கி கல்யாணம் பண்ணா கடனாளியாயிருவீங்க. கடன் வாங்கி வணிகம் பண்ணா பணக்காரராவீங்க..
இதான் வித்தியாசம் :-)
Anbulla Joseph Sir,
பதிலளிநீக்குSorry for writing in english as my
tamil typing is slow.
The last sentance of your post
seems controversial. India remains
a developing nation and is highly corrupt. the main culprit is the
'socialistic' model we followed until 1991. Like all sectors the
industrialists and traders too became unethical.
Rajaji rightly warned us about the
"license, permit, raj" thru his
Swathanthra Party (in vain).
Monopoly Act, highest tax rates (some 98 % of max IT in 1971), coupled with double digit inflation
due to large defict financing has
resulted in economic stagnation and
erosion of our morals. even now
almost all the business people (me
included) evade income tax, as it is deemed too high. hence a large
black economy exists and corrupts the tax admn and govt. and this black economy acts as a buffer to too much intervention by govt in the name of "public good"
The purchasing power of the rupee depreciated over the decades and
effective income of many govt and
other officers was reduced. hence most are forced to b corrupt. their
gross salary is not proportion to
their power. Pls compare the salary of a MD/ GM of a new pvt bank like ICICI with a old nationalised bank. hence most higher officiers of old banks try to earn commision (illegally).
Nationalisation of the banks by
Indira Gandhi for cheap populism
has damaged the banking structure and corrupted the system, with
blatant cronyism ; more important is the erosion of ethics of the people, as they are taught not to repay loans from (govt) banks.
The recent discount of 'agri' loans
by this DMK govt (some Rs.8000 crores) is too much. i knew rich
farmers who made a fortune of some
45 lacs (tractor loans, etc).
and worse the non-beneficiaries are lamenting their bad luck in
not getting loans from co-op banks.
these banks will soon be bankrupt while the ethics (in repaying the loans, willful default) is eroded..
I am passionately intersted in
economic issues. Pls try
athiyaman.blogspot.com for such
articles.
anbudan
K.R.Athiyaman
Chennai - 96
வாங்க அதியமான்,
பதிலளிநீக்குநீங்க ரொம்பவுமே எமோஷனலாத்தான் டிஸ்கஸ் பண்றீங்க...But whatever you have said in your response is absolutely right.
But in an economy like India the business people and industrialists play a major role.. When these people who do not deseve concessional rate of interest do not use it purposefully and squander away the funds lent by the banks how can we blame the poor farmers who are affected by the nature!
I agree that the loans granted to the farmers should not be written off because it in turn affects the viability of the Banks... But it is a political decision prompted by certain compulsions... At the same time the agricultural loans written off during the past two decades might form only a miniscule portion of the debts owned by the industrialists and merchants which the banks were forced to write off...
I am also very much interested in discussing these issues and it is easy to write in english... I'll visit your blog and leave my feedback there... Thanks for coming...
Reg : bad debts in banks by big
பதிலளிநீக்குindustrialists : only after nationalisation of banks were the
NPA increased. and the crooked businessmen are only one side of the coin ; they could not have got the illicit loans without the active collaboration of corrupt bank officers. and most important is the lack of debt recovery stucture (only now DRTs are organisned with some real power) ;
Sick Industres Act, BIFR are useful shields for vested interests to hide behind. In Western nations stringent securitisation acts prevents such
willful defaults. and before 1947,
how was the situation ?
i am from Karur and knew about KVB.
Indian Bank had the misfortune to be 'nationalised' in 1969 and became sick in the 90s due to cronyisim and corruption (the chariman himself) and govt had bail out the bank thru infusion of
fresh capital of some 1000s of crores (our money0. Pls compare
KVB and Indian Bank. Both were founded by the Chettiyar community in the early 1910s at Madras and Karur and grew more or less on similar patterns. Only nationalisation had destroyed the work culture and ethics on IB while KVB is flourishing...
Anbudan
athiyaman.blogspot.com
Writing off loans to farmers indiscriminately and arbitarily without any benchmark, is cheap populism and highly unethical.
பதிலளிநீக்குthere was no survery or reports of the exact number of farmers affected by draught. And there should have been a maximum limit of waiver for each farmer. (not this unlimited waiver ; i knew rich farmers, who had other business who git waiver for more than 50 lacs). or interst could have been waived and principle restructured to paid back in a decade or so.
In the long run it affects the really poor and draught prone farmers as they will not be able to get new loans since co-op banks will become bankrupt.
And the free power scheme has resulted in over exploitation of ground water and is bankrutiing the EBs. (see what happened in Maharastra). One of the reasons for the farmer suicides in AP is this free power. One farmer had borrowed from money lenders to sink some 32 borewells in his farm ; and as he failed to find water, he had to take the drastic step. if there is no free power assured, then the poor farmers would have become a migrant worker....
And comparision with huge NPAs to
big business is not valid. Lack of
proper laws / securitisation acts
enable the crooks to get away. In
US housing market, the lenders can
attach and take possesion of assets/collateral of defaulting parties in a matter of weeks. here it takes decades of wrangling.
more on this later.
Anbudan
K.R.Athiyaman