17 பிப்ரவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் 82

தஞ்சை கிளையில் நான் பணிபுரிந்த இரண்டு ஆண்டுகளில் எனக்கு கிடைத்த அனுபவங்களை முழுவதும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கென்றே இன்னும் இருபது இடுகைகளுக்கும் கூடுதலாக எழுத வேண்டியிருக்கும்.

ஆகவே அதைத் தவிர்த்து எனக்கு கிடைத்த சில முக்கியமான அனுபவங்களை மட்டும் அடுத்து வரும் இரண்டு, மூன்று பாகங்களாக எழுதிவிட்டு என்னுடைய அடுத்த கிளைக்குச் செல்லலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்.

நான் முன்பே கூறியிருந்தபடி தஞ்சையின் முக்கியமான தொழில் விவசாயம்தான்.

தஞ்சையில் அப்போது இருந்த கனரக தொழிற்சாலைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தஞ்சையின் நுழைவாயிலில் இருந்த Tantex என்ற உள்ளாடை நிறுவனம் மற்றும் லக்ஷ்மி சீவல் நிறுவனம். இவ்விரண்டையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நெல் அரவை மில்கள்தான் அதிகம் இருந்தன.

பிறகு எங்கு பார்த்தாலும் இருந்த உணவகங்களும், துணிக்கடைகளும் தான் தஞ்சையின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள்.

ஆகவே, தஞ்சையில் அதிக அளவில் வணிகக் கடன்கள் கொடுக்க வாய்ப்பிருக்கவில்லை. என்னுடைய வங்கியில் மட்டுமல்லாமல் தஞ்சையில் இயங்கி வந்த மற்ற எல்லா வங்கிகளிலும் சேமிப்பு (Deposit Accounts) கணக்குகள்தான் அதிகமே தவிர கடன் கணக்குகள் (Loan Accounts) முக்கியமாக, தொழில்கள் துவங்குவதற்கு கொடுக்கப்பட்ட கடன் கணக்குகள் மிகவும் குறைவாகவே இருந்தன. அதிலும், தங்க நகைகளை ஈடாக வைத்துக்கொண்டு பெரும்பாலும் விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட கடன்களே அதிகமிருந்தன.

மத்திய, மாநில மற்றும் தஞ்சை ஆயர் பொறுப்பில் இயங்கிவந்த Multipurpose Social Service Society போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட டு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, என்ற பல்வேறு கால்நடை பராமரிப்புத் திட்டங்களுக்கான சலுகைக் கடன்களே அதிகம்.

நான் அங்கிருந்த காலத்தில் என்னுடைய வங்கியிலிருந்து விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கடன் வழங்கியது கனரக வாகனங்கள் வாங்குவதற்குத்தான்.

பிறகு தமிழக அரசால் பரபரப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளை ஏலம் எடுக்கவும் சரக்கு கொள்முதல் செய்யவும் வழங்கப்பட்ட கடன்கள்!

சாராய உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று தஞ்சையில் துவக்கப்பட அதைச் சார்ந்து பல வர்த்தகங்களும்! வெற்றிகரமாக துவக்கப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று பழைய சாராய மற்றும் கள் குப்பிகளை வாங்கி விற்பது.. இதை ரீசைக்கிள் என்பார்கள். அதில் கிடைத்த லாப விகிதத்தை நான் எழுதினால் நீங்கள் நம்ப மறுப்பீர்கள் என்பது உறுதி.

என்னுடைய அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் பரிச்சயமான நாயக்கரின் நெருங்கிய நண்பருக்குத்தான் தஞ்சையில் சாராய உற்பத்தி உரிமம் கிடைத்தது.

எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராகவும், என்னுடைய வங்கியின் வெல்விஷராகவும் இருந்ததால் அவர் வழியாக அந்த தொழிற்சாலையின் கணக்கும் எனக்கே கிடைத்தது.

இதில் ஒரு விவகாரமான காரியம் உள்ளது.

அன்று ஆட்சிப் பொறுப்பிலிருந்தவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு பெரிய புள்ளிக்குத்தான் த.நாவிலிருந்த சாராய தொழிற்சாலைகளில் பெரும்பாலானவைக்கு உரிமம் கிடைத்தது. அவரும் சரி, அவருக்கு உரிமம் வழங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டியவரும் சரி, இப்போது உயிருடன் இல்லை.

அப்பெரிய புள்ளி தனக்கு மிகவும் வேண்டியவர்களுக்கு அத்தொழிற்சாலை உரிமங்களை பகிர்ந்தளித்தார் என்பதும் எல்லோரும் அறிந்த உண்மை. அதில் பெரும்பாலோனோர் அண்டை மாநிலமான கேரளத்தைச் சார்ந்தவர்கள். அதற்கு என்ன காரணம் என்று நான் வெளிப்படையாக இங்கே எழுதுவது அத்தனை உசிதமானதல்ல என்று நினைப்பதால் அதை உங்களுடைய ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

அதற்கு பிரதியுபகாரமாக த.நா குடிமகன்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு குப்பிக்கும் 'இத்தனை' என்று உரிமம் வழங்க காரணமாயிருந்தவர்களுக்கு கப்பம் செலுத்தப்பட்டது என்பதையும் நான் அறிவேன்.

அதற்கு கணக்கில் வராத பணம் தேவைப்படும் அல்லவா? அதற்கு மூலாதாரம்தான் இந்த பழைய பாட்டில் ரீசப்ளை டெக்னிக் உதவியாயிருந்தது.

எப்படி?

சாராய கடைகளிலிருந்து காலியான பாட்டில்களை சுமார் ஐம்பது காசிலிருந்து ஒரு ரூபாய் வரைக்கும் சாராய தொழிற்சாலைக்கு மிகவும் நெருங்கியவர்கள் வாங்குவார்கள். அதை சேகரித்து ச்சாக்கு பைகளில் கட்டி சாராய தொழிற்சாலை உரிமையாளர் நடத்திவந்த ஒரு நிழல் நிறுவனத்திற்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று ரூபாய்க்கு விற்பார்கள். ஒரு மாதத்தில் சுமார் ஒரு லட்சம் குப்பிகள் வரை சாராய மற்றும் கள்ளுக் கடைகளிலிருந்து வாங்கப்பட்டன என்று நினைக்கிறேன்.

அவை சுத்தம் செய்யப்பட்டு புதிய குப்பிகளை அதை தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வாங்குவதுபோல் போலியான குப்பி தயாரிக்கும் தொழிற்சாலைகள் பேரில் இன்வாய்ஸ் செய்வார்கள். எவ்வளவுக்கு என்று நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு ரீசைக்கிள்ட் குப்பியும் பத்திலிருந்து பதினைந்து ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக செலவுக் கணக்கு எழுதப்படும்!

கூட்டி, கழித்து பாருங்கள்..

எவ்வளவு க.பணம் திரட்டப்பட்டிருக்கும் என்கின்ற விவரம் புரியும்!

இந்த தங்கச்சுரங்கத்திலிருந்துதான் அ.வாதிகளுக்கும், அ.காரிகளுக்கும் கப்பம் அளிக்கப்பட்டது.

சாராய உற்பத்தி உரிமம் பெற்றிருந்தவர்கள் தொழிற்சாலை துவங்க வேண்டுமென்றால் அதை உள்ளூரில் வசிப்பவர் பெயரில்தான் துவக்கவேண்டும் என்ற நியதியை அரசு வைத்திருந்ததால் நம்முடைய நாயக்கரின் நண்பருக்கு அந்த அதிர்ஷ்டம் இருந்தது!

அவருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் நிலம் தொழிற்சாலை நிறுவுவதற்கு ஏதுவாய் இருந்தது. நிலம் மட்டும்தான் அவருடையது. முதலீடு நான் முன்னே குறிப்பிட்ட மாநிலத்தைச் சார்ந்தவர்களுடையது..

என்ன பெரிய தொழிற்சாலை!

சர்க்கரை ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரெக்டிஃபைட் ஸ்பிரிட்டுடன் ஃபில்டர்ட் குடிநீரைச் சேர்த்து மீண்டும் வடிகட்டினால் கிடைப்பதுதான் சாராயம்!

இதற்கு என்ன பெரிய தொழிற்சாலை தேவை?

ஆனால் டேங்கர், டேங்கராக ரெக்டிஃபைட் ஸ்பிரிட் கொள்முதல் செய்வதற்கு கணிசமான தொகை தேவைப்பட்டது என்பது உண்மைதான். அண்டை மாநிலத்தில் இத்தகைய தொழிலில் காலங்காலமாக ஈடுபட்டிருந்தவர்கள் இடத்தில் பணத்திற்கு கேட்கவா வேண்டும்? மேலும் அம்மாநிலத்தில் அக்பாரி (சாராய மற்றும் மதுபான விற்பனை) வர்த்தகம் என்பது மிகவும் பிரபலமானது. அதற்கு கடன் வழங்க போட்டி போட்டுக்கொண்டு நின்றன வங்கிகள்.

லட்சக் கணக்கில் புழங்கும் வர்த்தகமாயிற்றே.. லாப விகிதம் நம்மால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது.. எனவே வங்கிகள் வழங்கும் கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தும் வணிகர்களுக்கு முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அளவிற்கு கடன் வழங்கவும் வங்கிகள் தயாராயிருந்தன..

அங்கு பெற்ற கடன் தொகைகள் திருப்பிவிடப்பட்டு த.நாவில் தொழிற்சாலைகள் துவக்கப்பட்டன, வங்கிகளுக்கே தெரியாமல்..

அண்டை மாநிலத்தைவிடவும் அதிக அளவிலான லாபம் த.நாவில் கிடைத்து தாங்கள் வழங்கிய கடன் தொகைகளும் ஒழுங்காக திருப்பி அடைக்கப்பட்டதால் வங்கிகளும் இத்தகைய மாநில எல்லைகளைக் கடந்து பணம் கைமாறுவதையும் கண்டும் காணாததுபோல் பாவனை செய்தன என்பதுதான் உண்மை.

அத்தகைய வழியில் துவக்கப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பெயரிலேயே நகரில் இருந்த பெரும்பாலான கடைகளும் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தன (அதனால்தான் நான் முன்னே குறிப்பிட்ட ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருந்தவருக்கு கடைகள் கிடைக்காமல் போயின. இன்னொரு விஷயம். இவருடைய வணிகத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட என்னிடம் கடனுதவி கேட்டிருந்தாரே, அதையும் என்னுடைய மேலிடம் மறுத்துவிட்டதாக நாசூக்காக - பொய் சொல்வதை இப்படித்தான் கூறுவோம் - நானே மறுத்துவிட்டேன்.). தொழிற்சாலை உற்பத்தி செலவு, பாக்கிங் செலவுகள் உட்பட ஒரு பாட்டிலுக்கு சுமார் பதினைந்திலிருந்து இருபது ருபாய் என்றால் கடையில் விற்க்கப்பட்ட விலை சுமார் இரண்டு மடங்கு!

ஆக, ஒரு குப்பிக்கு நூறு சதவிகித லாபம்!

குடிசைவாசி குடித்தே அழிந்தான் என்றால் விற்றவன் மாட மாடங்கள், கூடகோபுரங்கள் கட்டும் அளவுக்கு வளர்ந்தான் என்பது உண்மையிலும் உண்மை..

பலர் குடியைக் கெடுக்கும் குடி அதே சமயத்தில் சில கோபுரங்களையும் உருவாக்கியது என்பதும் நான் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை!

இந்த அபிரிதமான லாபம் அன்றைய ------- கட்சியைச் சார்ந்தவர்களைச் சென்றடையாமல் வழிமாறி போய்விட்டது என்பதை அறிந்துதான் அன்றைய அரசு ‘தாஸ்மாக்’ என்ற நிறுவனத்தை உறுவாக்கியது.

இந்நிறுவனம் சாராயத் தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாக சாராயத்தைக் கொள்முதல் செய்து சில்லரைக் கடைகளுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தது நான் தஞ்சையிலிருந்த காலத்தில்தான்.

அதனால் தொழிற்சாலை அதிபர்களுக்கு கிடைத்துவந்த கொள்ளை லாபம் எந்த அளவுக்கு குறைந்து போனது என்பதை நேரில் கண்டவன் நான்.

அதுமட்டுமா? இந்த விற்பனை முறை தாஸ்மாக் நிறுவன அ.காரிகளுக்கும் மறைமுகமாக உதவியது என்பதும் உண்மை. தொழிற்சாலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சரக்குக்கு லட்சக் கணக்கில் காசோலை வழியாக பணம் பட்டுவாடா செய்யப்படும். அத்தகைய ஒவ்வொரு காசோலையைப் பெறுவதற்கும் ஆயிரக் கணக்கில் கவரில் வைத்து ‘தள்ளி’னால்தான் காசோலை கைமாறும்.

சாராயக் கொள்முதலை முதலில் துவக்கிய இந்நிறுவனம் பிறகு இந்தியன் மேட் மேலைநாட்டு மதுபான வகைகளையும் (விஸ்கி, பிராந்தி வகையறாக்கள்) கொள்முதல் செய்து விநியோகிக்கத் துவங்கியது..

சரி.. அப்போதும் சில்லரை வியாபாரிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வந்தது என்பது உண்மை..

அதனால்தான் இப்போது சமீபத்தில் சில்லறைக் கடைகளையும் அரசே ஏற்று நியாய விலை கடைகளிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியரை வைத்தே விஸ்கி, பிராந்தியை விற்க வைத்தது!

(இதற்கு வேறு ஒரு மறைமுகமான காரணமும் உண்டு என்று கடைகளை இழந்தவர்கள் கூறினாலும்.. நமக்கேன் வம்பு? கண்ணால் காண்பதே பொய்யாகப் போய்விடும்போது காதால் கேட்டதை எப்படி நம்புவது?)

இத்தகைய கடைகளில் பணிபுரிபவர்களும்கூட தங்களை இப்போதெல்லாம் அரசு ஊழியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்..!

கார்ப்பரேஷன் கழிப்பிடத்தை சுத்தம் செய்பவரிலிருந்து மதுபானத்தை ஊற்றி கொடுப்பவர் வரை அரசு ஊழியர்தான்!

நாளைக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் சலுகைக் கடன்கள் எப்படி கொள்ளையடிப்படுகின்றன என்பதைக் கூறுகிறேன்.

தொடரும்..




18 கருத்துகள்:

  1. வாங்க ராஜ்,

    நாம சாதாரணமா சொல்ற 'தண்ணி'யில எவ்வளவு விஷயம் இருக்கு பாத்தீங்களா?

    பதிலளிநீக்கு
  2. Sir, your decision of finsihing off Thanjai matters in 2 or 3 episodes has effect on the write up. I have a feeling of "Running". So My request is reverse of mega serial request. Dont squeeze. Please give the space required for the matter.

    பதிலளிநீக்கு
  3. congrats
    sollavendiyadhai marai mugama sonnalum en ponravarkalukku thelivagave puriginradhu
    idhuvarai oru banker in pirachniai
    ini samooga pirachnayai thoduginreergal
    pls dont cut it short
    posterity should know how the social welfare was subordinated to individual welfare by the power
    centers
    welldone


    welldone

    பதிலளிநீக்கு
  4. வாங்க கிருஷ்ணா,

    I thought some of you would get bored with detailed episodes. Did you read Idli Vadai's comments on this serial?

    Though I did not bother about what is written there I thought I should not be too elaborate. That is the reason.

    Anyway I'll think about what you said.

    Thanks for the interest shown by you.

    பதிலளிநீக்கு
  5. வாங்க சிவஞானம்ஜி,

    உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி..

    நான் கிருஷ்ணாவின் கேள்விக்கு அளித்த பதிலை வாசியுங்கள்..

    உங்களுடைய தேவையை பூர்த்தி செய்ய முயல்வேன்..

    I'll try to be as elaborate as possible in my future episodes.

    பதிலளிநீக்கு
  6. ஜோசப் சார்,
    சுவாரஸ்யமான தகவல்கள்.ந்ன்றி!

    //‘ஊத்திக் குடுக்கற’வரா இருந்துறப் போறாரு..//
    ஓரளவு படித்த நடுத்தர வர்க்கத்தை கணக்கில் கொண்டு நகைச்சுவையாக இதை சொல்லியிருக்கிறீர்கள் என நம்புகிறே.

    மற்றபடி ,ஊற்றிக்கொடுப்பவர்களெல்லாம் ஊற்றிக்கொள்பவராக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை .அதை ஒரு வேலையாக அரசாங்கம் கொடுக்கும் போது ,கட்டுப்படி ஆகிறவர்கள் அந்த வேலை செய்வது ஒன்றும் பாவமில்லை .ஏதோ அவர்கள் பொண்டாட்டி கட்டிக்க லாயக்கு இல்லாதவர்கள் ரேஞ்சுக்கு நீங்கள் சொல்லுவதை நான் ரசிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  7. வாங்க ஜோ,

    நச்சுன்னு தலையில அடிச்சிட்டீங்க.

    சரிதான். I'll delete my comment.

    Thanks for pointing out.

    பதிலளிநீக்கு
  8. குடி குடியைக் கெடுக்கும்நு சொல்றது எவ்வளவு உண்மையா இருக்கு. பணக்காரன் குடிச்சி என்ன ஆனாலும் பிரச்சனை இல்லை. ஆனா ஏழை குடிச்சு வேனா போனா குடும்பம் கஷ்டப் படும். அதுனால தன்னை தான் காபாதிக்க ஏழைகளும் நடுத்தர மக்களும் இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. மிக்க நன்றி ஜோசப் சார்!

    பதிலளிநீக்கு
  10. வாங்க ராகவன்,

    குடி குடியைக் கெடுக்கும்னு பாட்டில்ல போட்டு அத அரசாங்கமே அதனுடைய ஊழியர்களை வைத்து விற்பதென்பது அதை விட கொடுமையாயிற்றே..

    பதிலளிநீக்கு
  11. வாங்க ஜோ..

    மிக்க நன்றி ஜோசப் சார்! //

    Welcome.

    நீங்க சொன்னது சரின்னு பட்டதாலத்தான் மத்தவங்க படிக்கறதுக்கு முன்னால அத விலக்கிட்டேன்..

    நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  12. Sir, this is No. 82? By the way, Idli Vadai, Dont ever bother about those peoples comments. U yourself know how many readers u got after u started writing this series. So, u proceed in your way.

    பதிலளிநீக்கு
  13. ஆமாங்க கிருஷ்ணா இது 82 தான்.

    சரி செய்துவிடுகிறேன்..

    Idli Vadai, Dont ever bother about those peoples comments.//

    I did not bother about those comments. But if I say it did not hurt me, I would be liar.

    As you said, so long as I have people reading my serial I would continue to write..

    At least for the pleasure it gives me in sharing my experience with youngsters in Thamizhmanam I should continue this.

    Thanks for the encouragement Krishna.

    பதிலளிநீக்கு
  14. Sir,

    I read your articles regularly. It gives valuable insights and lessons to me.

    Do write as elaborate as you can.

    Thanks and best regards

    பதிலளிநீக்கு
  15. தங்கள் பதிவுக்கு நன்றி. தொடர்ந்து பதியவும்.

    பதிலளிநீக்கு
  16. வாங்க சிவக்குமார்,

    Do write as elaborate as you can.//

    As desired by some of our friends, I am planning to revert to my old style of elaborate writing from Monday.

    Thanks for your support.

    பதிலளிநீக்கு
  17. Joseph Sir,

    I am really inspired about your commitment inspite of the important position you hold.

    Eppa sir ezhutareenga, I am trying to gain the commitment and confidence from you.

    Thanks,
    Sridhar

    பதிலளிநீக்கு
  18. வாங்க ஸ்ரீதர்,

    Eppa sir ezhutareenga?//

    இரவு பத்து மணிக்கு மேல்.. உறங்க செல்வதற்கு முன் சுமார் இரண்டு மணி நேரம் இதற்கென்று ஒதுக்கி, அமைதியாய் பழைய நாட்குறிப்புகளைப் பார்த்து மனதை பழைய நாட்களுக்கு செலுத்தி, பழைய நினைவுகளை அசைபோடுவதில் ஒரு தனி சுகம் இருக்கிறது..

    பதிலளிநீக்கு