இன்னொரு தலைவலியா? போறும்டா சாமி. எல்லா தலைவலியும் ஒரே நேரத்துலதான் வரணுமா என்றிருந்தது எனக்கு.
வலுக்கட்டாயமாக ஒரு போலி சிரிப்பை உதடுகளில் தவழவிட்டவாறு அவரையும் அவருடன் கூட வந்தவரையும் எழுந்து வரவேற்றேன்.
You should be able to conceal your emotions and deal with the customers with a smile! இதுதான் மேலாளராக பதவியமர்த்தப்படும் முன் பயிற்சி வகுப்புகளில் முக்கியமாக சொல்லிக் கொடுக்கப்படும் பாடம்.
அது எப்படியெல்லாம் உபயோகப்படுகிறது பாருங்கள்!
‘எப்படி இருக்கீங்க சார்? திறப்பு விழா சமயத்துல நான் சிங்கப்பூர்ல இருந்தேன். அதான் வர முடியலை (நான் அழைப்பிதழே அனுப்பலை. அப்புறம் எப்படி வர்றது?) . நம்ம தலைவர் திறப்புவிழாவுல ரொம்ப சிறப்பா பேசினார்னு கேள்விப்பட்டேன். சேட் உங்கள பத்திகூட தலைவர்கிட்ட சொன்னாராம். ஆமாப்பா ரொம்ப சின்ன பையனா தெரியுதேன்னு தலைவர் ஆச்சரியப்பட்டாராம்.’ என்றவரை பார்த்தேன். யோவ்! பொய் சொல்றதுக்கும் ஒரு அளவில்லையா என்று நினைத்துக்கொண்டேன். முதல்வர் வந்திருந்தபோது நான் இருந்த பக்கம் கூட அவர் திரும்பி பார்க்கவில்லை. நான் தான் கிளையின் மேலாளர் என்றே அவருக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை! ஏனென்றால் அன்றைக்கு அவ்வளவு கூட்டம். என் சேர்மனே முதல்வரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டியடித்துக்கொண்டு நிற்க வேண்டியிருந்தது!
‘அதுக்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும் சார்.’ எனக்கும் நன்றாக பொய் சொல்ல வந்துவிட்டது என்பதை நிரூபித்தேன்.
பெருமையுடன் புன்னகைத்தவரை மனதுக்குள் சபித்துக்கொண்டு வெளியே ஒரு புன்னகையுடன் பார்த்தேன்.
‘சொல்லுங்க சார். எப்படி இருக்கு உங்க பிசினஸ் எல்லாம். சேட் எப்படியிருக்கிறார்?’
‘அவருக்கென்ன தம்பி, நாங்கதான் கொட்டி, கொட்டி குடுக்கறமே மாசா மாசம். வட்டி குடுத்து குடுத்தே ரோட்டுக்கு வந்துருவோமோன்னு சில சமயத்துல நினைச்சிப்பேன். என்ன பண்றது? உங்க மாதிரி மானேஜருங்க மனசு வச்சாத்தான் நாங்கல்லாம் பொழைக்கமுடியும். என்ன சொல்றீங்க சார்?’
வாய்யா வா, தெரியுமே. அதுக்குத்தானே வந்திருக்கே. ஒரு அசட்டு புன்னகையுடன் பதில் சொல்லாமல் அவரை பார்த்தேன். நானாக ‘கமிட்’ செய்துக்கொள்ள எனக்கென்ன பைத்தியமா. உனக்கு வேணும்னா நீயே கேளு. இப்படியெல்லாம் மனசுக்குள்தான் சொல்லிக்கொள்ள முடியும், என்ன பண்றது? நாய் வேஷம் போட்டா குலைத்துத் தானே ஆகவேண்டும்?
‘என்ன சார் நான் சொல்றது விளங்குதா?’ என்றார்.
‘நல்லா விளங்குது சார். சொல்லுங்க.’
‘உங்கள முத முதலா பார்த்தப்பவே கேட்டிருந்தேன்.’
அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு நன்றாக எனக்கு புரிந்தும் ‘என்ன சொல்றீங்க?’ என்று கேட்டேன்.
அவருடைய முகத்தில் லேசாக எரிச்சல் தெரிந்தது. ‘அதான் சார். ஒரு ரெண்டு, மூனு வண்டி வாங்கறதுக்கு லோன் கேட்டிருந்தேனே. நீங்களும் சரி பார்க்கலாம்னு சொன்னீங்களே?’
அப்படி கேளு வாய திறந்து. ‘சொல்லுங்க. ரெண்டு வண்டிக்கா, இல்ல மூனு வண்டிக்கா? ரெண்டு, மூனுன்னு சொல்றீங்க?’
அசட்டு சிரிப்புடன் தன்னுடன் வந்தவரை திரும்பி பார்த்தார். ‘சார் எப்பவும் இப்படித்தான். வேடிக்கையா பேசுவார். சின்ன வயசுதானே.’ அதாவது டேய் சின்ன பையா என்கிட்ட வாலாட்டாதேங்கறார். அவருடைய குரலில் இருந்த ஒரு சின்ன மிரட்டல் எனக்கு புரிந்தது.
கண்டிப்பா உனக்கு குடுக்க போறதில்லை என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, ‘எவ்வளவு வேணும்னு சொல்லுங்க.’ என்றேன்.
கொண்டுவந்திருந்த கைப்பையிலிருந்து ஒரு கவரை எடுத்து பிரிக்காமல் என்னிடம் கொடுத்தார். சென்னையில் ஒரு பிரபல நாற்சக்கர டீலரின் பெயர் பொறித்திருந்த கவரை பிரித்து அதனுள் இருந்த மூன்று Chassisக்கான Quotationsஐ வெளியே எடுத்து நிதானமாக படித்தேன். ஒரு Chassis ரூ.2.75 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8.25 லட்சம் என்றிருந்தது. Quotesஐ மேசையில் விரித்து வைத்து அதன் மேல் ஒரு paper weightஐ வைத்துவிட்டு நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். ‘சொல்லுங்க.’ என்றேன்.
மேசையிலிருந்த quotesஐ சுட்டிக்காட்டியவர், ‘இதோட Body Buildingக்கு ஒரு வண்டிக்கு சுமாரா ரெண்டு லட்சம் வரும் சார். ஆக மொத்தம் மூனு வண்டிக்கும் சேர்த்து ஒரு பதினாலு, பதினைந்து லட்சம் வரும். நான் அஞ்சி லட்சம் கேஷ் வச்சிருக்கேன். மீதி பத்து லட்சம் லோனா குடுத்தா போதும். ரெண்டு மூனு மாசத்துக்குள்ள Chassis டெலிவரி கிடைச்சிரும், அப்புறம் பாடி கட்டுறதுக்கு ஒரு ரெண்டு மாசம். முதல் ஆறு மாசம் தவிர்த்துட்டு பாத்தா நாலரை வருஷத்துக்குள்ள லோன திருப்பி கட்டிருவேன் சார். சேட்ட வேணும்னாலும் உங்க ஹெட் ஆஃபீஸ்ல பேச சொல்றேன். நீங்க ஃபைல அனுப்பிச்சா போறும். மத்தத நான் பாத்துக்கறேன். உங்களுக்கு வேண்டியதையும் செஞ்சிருவேன் தம்பி. அதப்பத்தி எந்த கவலையும் வேணாம். என்ன சொல்றீங்க வேலு? இதெல்லாம் எல்லா எடத்துலயும் உள்ளதுதானே.’ என்றவாறு தன்னுடன் வந்தவரை பார்க்க அவரும் ஆமாம், ஆமாம் என்றார் அவசர, அவசரமாக.
அதாவது எனக்கு வேண்டியத (வேறென்ன லஞ்சத்தைத்தான் இப்படி நாசூக்கா சொல்றார்) குடுத்திடுவாராம்! அது எல்லா எடத்துலயும் உள்ளதுதானாம்! !
என்ன பண்ணலாம். சொல்லுங்க!
தொடரும்..
இந்தியன் மாதிரி கத்தி எடுத்து குத்தல்லியே நீங்க சார்?
பதிலளிநீக்குவாங்க ஜோ.
பதிலளிநீக்குஒரு குத்தத்துக்கு ஜெயில் இல்லன்னு வைக்கணும்னா அது இந்த மாதிரிங்கள கொலை பண்றதுக்குத்தான்.
தமிழ்நாடு எவ்வளவோ தேவலை. மும்பையில இத விட கேவலம்.
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குநாளைக்குத்தானே! போட்டுரலாம்.
நீங்க சொல்றாப்பல நாம சொல்ற பொய் மத்தவங்களுக்கு பாதகம் விளைவிக்காத வரைக்கும் தப்பில்லேன்னுதான் நினைக்கிறேன்.
//(நான் அழைப்பிதழே அனுப்பலை. அப்புறம் எப்படி வர்றது?) //
பதிலளிநீக்கு:))
காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த சூப்பர் மசாலாவா இருக்கு உங்க தொடர்.. ஜாதகத்தில் பாதகத்தையே இப்பத்தான் படிச்சு முடிச்சிருக்கேன். அதுக்குள்ள இங்க 27 போட்டுத்தாக்கிட்டீங்க.
அப்படியே 50 வது பதிவிற்கும்..
அட விட்டுப்போச்சு.
பதிலளிநீக்கு50 பதிவிற்கும் வாழ்த்துகள்...
எப்படி எப்படி?
பதிலளிநீக்கு//நாய் வேஷம் போட்டா குலைத்துத் தானே ஆகவேண்டும்?//
அப்ப வாலை ஆட்டவேணூமா இல்லையா?
10 லட்சத்துக்கு பட்டை நாமமா?
வாங்க ராமனாதன், மிக்க நன்றி,
பதிலளிநீக்குஜாதகத்தில் பாதகத்தையே இப்பத்தான் படிச்சு முடிச்சிருக்கேன்.
ஓ! அதக்கூட படிச்சீங்களா? அதுக்கு ஒரு நன்றி.
இரண்டாவது 50வது பதிவுக்கு நீங்க சொன்ன வாழ்த்துக்கும் நன்றி.
ஆக மொத்தம் மூன்று நன்றிகள்!!!
வாங்க துளசி, நன்றி!
பதிலளிநீக்குஅப்ப வாலை ஆட்டவேணூமா இல்லையா? //
கண்டிப்பா ஆட்டணும். ஆனா பிள்ளை மாதிரி ஆளுங்களுக்கில்ல.
நான்தான் சூசகமா 'லோன் குடுக்கப் போறதில்லை'ன்னு இந்த பதிவிலேயே சொல்லிட்டேனே. அத எப்படி நாசூக்கா செஞ்சேங்கறததான் அடுத்த பதிவில சொல்லணும்.