<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-17031544</id><updated>2012-01-24T15:38:27.456+05:30</updated><category term='நகைச்சுவை'/><category term='தேர்தல் 2011'/><category term='நிகழ்வுகள்'/><category term='ஆன்மீகம்'/><category term='வங்கி தில்லுமுல்லுகள்'/><category term='கடந்து வந்த பாதை'/><category term='வீடும் அலுவலகமும்'/><category term='அனுபவம்'/><category term='மலேஷியாவில் இருந்து'/><category term='கணினி அனுபவங்கள்'/><category term='ரிட்டையர்மெண்ட்'/><category term='மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக்'/><category term='தி.பா. தொடர்'/><category term='சினிமா'/><category term='செய்தி'/><category term='பதிவர் வட்டம்'/><category term='பதின்ம வயது நினைவுகள்'/><category term='சுற்றுலா'/><category term='செய்தி விமர்சனம்.'/><category term='வாழ்க்கை'/><category term='திரை விமர்சனம்'/><category term='அரசியல்'/><category term='பொருளாதாரம்'/><title type='text'>என்னுலகம்</title><subtitle type='html'>உலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்..

                          டி.பி.ஆர்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>482</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-2510521850663150205</id><published>2012-01-24T15:38:00.000+05:30</published><updated>2012-01-24T15:38:27.467+05:30</updated><title type='text'>அம்மையாருக்கு மேலும் ஒரு குட்டு!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா அம்மையாருக்கும் அவருடைய தலைமையில் இயங்கும் தமிழக அரசுக்கும் நீதிமன்றங்களிலிருந்து குட்டு வாங்குவது வாடிக்கையாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதவியேற்றவுடனேயே அவசர அவசரமாக அமைச்சரவையை கூட்டி திமுக அறிமுகப்படுத்திய சமச்சீர்கல்வியை ரத்து செய்யும் முகமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி பிறகு சட்டசபையிலுள்ள தனது அசுர பலத்தை பயன்படுத்தி சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து சமச்சீர் கல்வியை ஓராண்டுக்கு ஒத்தி வைக்க முயற்சி செய்தது. ஆனால் உண்மையில் சமச்சீர் கல்வியை ஒரேயடியாக ஒழித்துக்கட்டி அதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதுதான் அரசின் உள்நோக்கம் என்பதை உணர்ந்த உயர்நீதி மன்றமும் உச்ச நீதி மன்றமும் சமச்சீர் கல்வியை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இது முதல் குட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை செலவிட்டு கட்டப்பட்ட தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவது என முடிவெடுத்தது. சட்டமன்றத்தை முந்தைய ஜார்ஜ் கோட்டையிலேயே கூட்டுவது என்ற அரசின் முடிவில் தலையிட விரும்பாத நீதிமன்றங்கள் அம்மையார் அதை மருத்துவமனையாக மாற்றும் முடிவுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்து நிறுத்தி வைத்தது. பிறகு நடுவண் அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும் அது வரை கட்டடத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யலாகாது என்றும் உத்தரவிட்டு பிறப்பித்து அரசின் உள்நோக்கம் நிறைவேற முடியாமல் செய்துவிட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மாசு கட்டுப்பாடு வாரியத்திலிருந்து அம்மையாருக்கு தடையில்லா சான்று கிடைப்பத்து அவ்வளவு எளிதல்ல என்பதால் தற்போதைக்கு அம்மையாரின் நோக்கம் நிறைவேறப்போவதில்லை. இது இரண்டாவது குட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அடையாரிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதென்ற முடிவு. இவ்விரண்டு முடிவுகளுமே முந்தைய அரசின் முடிவை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே எடுக்கப்பட்டது. இதுவும் ஒரு துர்நோக்கம் கொண்ட முடிவு என்பதுதான் சரி. அதாவது இதன் பின்னனியில் இருந்தது அரசியல் காழ்ப்புணர்வுதான். இது ஒரு மனமுதிர்வற்ற ஆட்சியாளரின் செயல்பாடு என்றாலும் தவறில்லை. ஆகவே அதற்கும் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்ததுடன் இவ்வழக்கு நிலுவையிலுள்ள வரையில் புதிய இடத்தில் இதற்கென எவ்வித கட்டட மாற்றங்களும் செய்யலாகாது என்றும் உத்தரவிட்டது. இது மூன்றாவது குட்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மக்கள் நல பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது செல்லாது என்ற உத்தரவு. அரசின் சமீபத்திய முடிவுகளில் இதுதான் மிகவும் மோசமான முடிவு. மேற்குறிப்பிட்ட முடிவுகளால் எந்த ஒரு தனிமனிதனும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் முந்தைய ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்தை பாதிக்கப்படக் கூடிய ஒரு முடிவை அரசு எடுத்தது எவ்விதத்திலும் நியாயம் இல்லை என்பதை மிகத்தெளிவாக&lt;br /&gt;சுட்டிக்காட்டி அதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இது நான்காவது குட்டு. இதை எதிர்த்து அரசு உச்சநீதி மன்றம் சென்றாலும் நிச்சயம் அதற்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கப்போவதில்லை என்பதை அம்மையாரை தவிர அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆகவேதான் பல எதிர்க்கட்சி தலைவர்கள் உச்ச நீதி மன்றம் செல்லாமல் பணி நீக்கப்பட்டவர்களே உடனே மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனாலும் பிடிவாதத்திற்கு பெயர்பெற்ற அம்மையார் உச்ச நீதி மன்றம் வரை சென்று மீண்டும் குட்டுப்படப் போவது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் தனக்கெதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சில மாதங்களில் பலமுறை உச்ச நீதி மன்றத்தை அணுகி குட்டுப்பட்டுள்ளார் அம்மையார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக அரசு தலைமையில் அமர்ந்திருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளை கடுமையாக கண்டித்து நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும்போது அதற்கு தார்மீக பொருப்பேற்று பதவி விலகுவது வாடிக்கை. ஆனால் அது தன்மானம் உள்ளவர்கள் செய்யும் செயல். மேலும் எப்போதாவது ஒருமுறை குட்டுப்பட்டால் பதவி விலக வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தினம் ஒரு குட்டு என்று பழகிப்போனவர்களிடமிருந்து அதை எதிர்பார்ப்பது நியாயமல்லவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லட்சணத்தில் அவர் நாட்டின் பிரதமராக தகுதிபெற்றவர் என கூறுபவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதிலும் தமிழ்நாட்டிற்கு ஒரு நல்லது நடக்க வாய்ப்புண்டு. அவர் பிரதமராகி தில்லி சென்று தேவகவுடாவைப் போன்று அதில் நீடிக்க முடியாமல் தோற்றுப் போனால் அவருடைய அரசியல் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடும்!! அவருடைய காழ்ப்புணர்வு கொண்ட ஆட்சியிலிருந்து தமிழக மக்களும் ஒரு நிரந்தர விடுதலை பெறக் கூடும். ஆகவே அவருடைய கட்சிக்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான ஏன், அனைத்து நாடாளுமன்ற இடங்களையும் அளித்து அவரை நாட்டின் பிரதமராக உதவிட வேண்டும் என்று&lt;br /&gt;கேட்டுக்கொள்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;************* &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-2510521850663150205?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/2510521850663150205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=2510521850663150205' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/2510521850663150205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/2510521850663150205'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2012/01/blog-post_24.html' title='அம்மையாருக்கு மேலும் ஒரு குட்டு!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-4485969604143213666</id><published>2012-01-17T11:51:00.001+05:30</published><updated>2012-01-17T11:51:12.834+05:30</updated><title type='text'>ச்சே, சோ, ச்சை!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரையாவது நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி நினைக்கும்போதே 'ச்சே இவனா? இவன் சங்காத்தமே வேணாம்' என்ற சலிப்பு நம் மனதில் எழும். அதேபோல் யாருடைய பேச்சையாவது கேட்க விருப்பமில்லை என்றால் 'ச்சை இவனும் இவன் பேச்சும்' என்று கூற தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு வசவு சொற்களும் (எழுத்துக்கள் என்பதுதான் சரி) வருகிற அதே அகர வரிசையில் வருகிற எழுத்தையே தன்னுடைய பெயராக வைத்திருப்பவர் 'சோ' என்கிற ராமசாமி! எத்தனை பொருத்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தன் திருவாயை திறந்தாலே 'ச்சை' என்றோ 'ச்சே' என்றோ சொல்ல தோன்றுவது இயற்கைதானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய பத்திரிகையான 'துக்ளக்' - அவருடைய பெயருக்கு ஏற்ற பெயர்தான் அவருடைய பத்திரிகைக்கும் - சார்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் தன் திருவாய் மலர்ந்திருக்கிறார். இந்த அற்புத சொற்பொழிவை மீண்டும்&amp;nbsp; மறுஒளிபரப்பு செய்து தங்களுடைய கட்டுக்கடங்கா மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது அம்மையாரின் தொலைக்காட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பேசும்போது, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் வேறு எந்த கட்சியையாவது ஆதரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் பிரதமர் பதவிக்கு அம்மையாரை பரிந்துரைக்க வேண்டுமாம். ஏனாம்? அம்மையாருக்கு ஐந்து மொழிகள் தெரியுமாம். இது தேசிய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் உதவுமாம். மேலும், எதையும் படித்தவுடனே&amp;nbsp;புரிந்துக்கொள்ளக் கூடிய திறமையும் உண்டாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு தகுதிகளையும் ஒருங்கே கொண்ட தலைவர் இந்திய தேசிய அரசியலிலேயே அம்மையாரை விட்டால் யார் இருக்க முடியும்? மேலும், அடுத்த பிரதமரை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு அவருடைய கட்சியும் கூடை நிறைய பாராளுமன்ற இடங்களை பெற்றிருக்கும் என்பது நிச்சயமாம். ஆகவே அவரை விட்டால் பிரதமராக மிகவும் தகுதி வாய்ந்த தலைவர் வேறு யாரும் இருக்க முடியுமா என்பதுதான் சோ அவர்களின் வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை படித்ததும் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த ஒரு House Maid - பச்சையாக சொல்ல வேண்டுமென்றால் 'வேலைக்காரி'யின் நினைவு வருகிறது. நான் குடியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் சுமார் நாற்பது குடியிருப்புகள். அது ஒரு குட்டி பாரதம் என்று கூட கூறலாம். நாட்டிலுள்ள பெரும்பாலான மொழி பேசுகின்றவர்கள் குடியிருந்தனர். அதில் பலருடைய வீட்டில் பணியாற்றிய அந்த பெண்ணும் நாளடைவில் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் சரளமாக பேச தெரிந்து வைத்திருந்தாள், ஆங்கிலத்தை தவிர. 'இந்த இங்கிலீசுதாங்க பேச வரமாட்டேங்கிது.. சொன்னா பிரியுது...ஆனா பேசினா தஸ்சு, புஸ்சுன்னு காத்துதான் வருது. அது மட்டும் வந்துருச்சின்னா..' என்று இழுப்பாள். எட்டாவது வரை படித்திருந்ததால் எதையும் கோடி காட்டினால் போதும் 'டக்' என்று புரிந்துக்கொள்வாள். வேலையில் படு சுட்டி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய சோவின் கூற்றுப்படி அவளும் ஒருவழியில் பிரதமராக தகுதி உள்ளவர்தான்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிந்திய மொழிகளில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்துடன் ஆங்கிலத்திலும் சரளமாக பேசக் கூடிய நடிக, நடிகைகள் இன்றைய தமிழ் திரையுலகில் பலர் இருக்காங்க சோ சார்! ஏன் ஒருவேளை நம்ம மன்சூர் அலி கானுக்கு கூட இது தெரிஞ்சிருக்கலாம். அவருக்கும் ஏற்கனவே தேர்தல்ல நின்னு ஜெயிக்கலன்னாலும் தோத்த அனுபவம் இருக்கே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மையாரும் ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர்தானே? பிறப்பால் கன்னடர், பிழைப்புக்காக தமிழ் நாட்டுக்கு வந்தவர். பணத்திற்காக தெலுங்கிலும், மலையாளத்திலும் நடித்திருப்பார்.பத்தாவது வரை ஆங்கில பள்ளியில் படித்தவர். ஐந்து மொழிகளிலும் பேசுவதற்கு இந்த அனுபவம் போதுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல மொழிகளில் பேசக் கூடிய திறமை மட்டுமே ஒருவருக்கு ஒரு நாட்டின் பிரதமராக தகுதியை ஏற்படுத்தி விடுமா? அதை விட வேடிக்கை, அம்மையார் எதையும் சொன்னவுடன் புரிந்துக்கொள்ளக் கூடியவர் என்றதுதான். அதுவும் அத்வானி, மோடி ஆகியோரை வைத்துக்கொண்டே இப்படி பேசுவது உண்மையிலேயே சத்யராஜ் 'லொள்ளை' விட கொஞ்சம் ஓவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வயசுல இவருக்கு அம்மையாருக்கு இந்த அளவுக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரே இனம், குலம், கோத்திரம் என்பதாலா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அம்மையார் தமிழகத்தை நாட்டின் முன்னனி மாநிலமாக்கட்டும். பிறகு பிரதமர் பதவியைப் பற்றி யோசிக்கலாம். இதே போல் 2001-2006ல் சிந்தித்ததன் விளைவு அனைவரும் அறிந்ததுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மையாருக்கு ஒரு வேண்டுகோள். இம்மாதிரியான கோமாளிகள் பேச்சை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவதுதான் நல்லது. சு.சாமியை நம்பி நட்டாற்றில் இறங்கிய அனுபவம் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவரையும் விட கோமாளிதான் இந்த ச்சே, சோ, ச்சை ரா.சாமி! இரண்டு பேருமே 'சாமி'கள்தான் என்பதே போதும் இவர்களை நம்பி ஆற்றில் இறங்கலாகாது என்பதற்கு!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******************&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-4485969604143213666?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/4485969604143213666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=4485969604143213666' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4485969604143213666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4485969604143213666'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2012/01/blog-post.html' title='ச்சே, சோ, ச்சை!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-5132936436834340561</id><published>2011-12-09T12:53:00.001+05:30</published><updated>2011-12-09T13:02:30.416+05:30</updated><title type='text'>சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு (நிறைவு)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் உள்நாட்டு சிறு வணிகர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்னும் வாதம் ஒரு மாயை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா போன்று வளரும் நாடுகள் இன்னும் அதி வேகத்துடன் வளர்வதற்கு உதவுவது அன்னிய முதலீடு மட்டுமே. கடந்த பத்தாண்டுகளில் இதைஏற்றுக்கொண்டு வளர்ந்த நாடுகளான சீனா, தைவான், இலங்கை போன்ற நாடுகள்தான் நமக்கு முன்னுதாரணம். இந்தியாவை விடவும் பிந்தங்கியிருந்த பல நாடுகள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறி இருப்பதற்கு மூல காரணம் அந்நாட்டில் தடையில்லா அன்னிய முதலீட்டை அனுமதித்ததுதான். &lt;br /&gt;&lt;br /&gt;நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இதற்கு வித்திட்டாலும் அதை தொடர்ந்து வந்த மத்திய, மாநில அரசுகள் அதை முழு மூச்சுடன் நடைமுறைபடுத்தியிருந்தால் நாம் எங்கோ சென்றிருப்போம். இந்தியா போன்ற நாடுகள்தான் இனி எதிர்வரும் காலத்தில் நம்முடைய முதலீட்டிற்கு &lt;br /&gt;ஏற்ற நாடுகள் என மேற்கத்திய நாடுகள் கருதுவதன் நோக்கம் நம்முடைய மிக அதிக அளவிலான நடுத்தர மற்றும் அதற்கு மேலுள்ள நுகர்வோர் எண்ணிக்கையும் அவர்கள் கைவசமிருக்கும் செலவழிக்கக் கூடிய வருமானமும்தான் (disposable income). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாடு வேகமாக வளர்வதற்கு முதலீடு (Investment) எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதன் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாட்டு மக்கள் வாங்கி பயன்படுத்துவது (consumption). நாட்டு மக்கள் ஈட்டிய வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை செலவு செய்தால்தான் சந்தையிலுள்ள பொருட்கள் விற்பனையாகும், அதன் தயாரிப்பாளர்கள்/வணிகர்களுக்கு அதிக விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபம் அவர்களை மேலும், மேலும் அத்தகைய பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகப்படுத்த ஊக்கப்படுத்தும். இதைத்தான் பொருளாதார நிபுணர்கள் 'Demand spurs more supply , increased supply creates more consumption and increased consumption creates more demand' என்கிறார்கள்.&amp;nbsp; இது ஒரு முடிவில்லா சுழற்சி. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த தொடர்ந்த ஓட்டம் மிகவும் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வளர்ந்து வரும் நாட்டின் சந்தையில் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மட்டும் இருந்தால் போதாது. ஒரு ஆரோக்கியமான சந்தை வளர்ச்சிக்கு ஒருசில பெரிய மற்றும் மிகப் பெரிய வணிகர்களும் மிக அவசியம். அது அந்த நாட்டைச் சார்ந்ததா அல்லது அயல்நாட்டைச் சார்ந்ததா &lt;br /&gt;என்பதல்ல முக்கியம். அனைவரும் சந்தையில் வாணிகம் செய்ய சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் (level playing ground) என்பதுதான் முக்கியம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிய நாட்டிலிருந்து வரும் சிந்தனைகள், யுக்திகள், முன்னேற்றங்கள் நமக்கு உகந்ததுதான் என்றால் அவற்றை கற்றுக்கொண்டு நாமும் நம்முடைய வணிகத்தில் செயல்படுத்தி முன்னேற முயல வேண்டுமே தவிர அவர்கள் நம்மை விடவும் தேர்ந்தவர்கள் அல்லது அதை நம்மால் &lt;br /&gt;கற்றுக்கொள்ள முடியாது என்று அச்சத்துடன் அவர்களை வரவே விடாமல் தடுக்க முயல்பவர்கள் தன் தலையை நிலத்தில் புதைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழிக்கு சமம். &lt;br /&gt;&lt;br /&gt;எந்த கொம்பன் வந்தாலும் என்னால் சரியான போட்டியை அவனுக்கு கொடுக்க முடியும் என்கிற திமிர் இந்தியனுக்கு இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் நம் தமிழகத்தில் நுழைந்த பெரிய மற்றும் மிகப் பெரிய வட நாட்டு அல்லது பன்னாட்டு நிறுவனங்களால் எந்த தமிழக நிறுவனம் &lt;br /&gt;திவாலானது அல்லது நொடித்துப் போனது? ரிலையன்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் தன்னுடைய காய்கறி கடைகளை திறந்தபோது எத்தனை கூப்பாடு போட்டார்கள்? தெருமுனை காய்கறி கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிடும் என்றார்களே? அதுவா நடந்தது? இல்லை. நம்முடைய நாட்டில்&amp;nbsp; &lt;br /&gt;ஒவ்வொரு வணிகருக்கும் அதற்கென்ற பிரத்தியேக வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ரிலையன்ஸ் வந்தது அதை தொடர்ந்து மோர், ஃபுட்வேர்ல்ட் என எத்தனை கடைகள் வந்துள்ளன? இருப்பினும் அனைத்திலும் லாபகரமான வணிகம் நடப்பதால்தான் இன்றும் அவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. அதுதான் இந்தியாவின் தனித்தன்மை. அண்டை மாநிலமானாலும் சரி அண்டை நாடானாலும் சரி. யார் வேண்டுமானாலும் இங்கு வந்து வணிகம் அல்லது தொழில் செய்யலாம். அதனால் உள் நாட்டு வணிகர்கள் பாதிக்கப்படப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தாலும் அப்படித்தான். அப்படியே ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டாலும் அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் தெருமுனை சிறு வணிகர்கள் அல்ல. சமீப காலமாக புற்றீசல் போன்று ஊரெங்கும் பெரிய அளவில் வணிக வளாகங்களை திறந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். இத்தகையோருடைய எதிர்கால வளர்ச்சி விகிதம் ஒருவேளை பாதிக்கப்படலாம். வலிமையான&amp;nbsp;பொருளாதாரம், சிறந்த வியாபார யுக்தி, நிர்வாகத் திறன் உள்ள நிறுவனங்கள் நிலைத்து நிற்கும். மற்றவை பன்னாட்டு நிறுவனங்களால் விழுங்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுடைய வருகையினால் கிடைக்கவிருக்கும் நன்மைகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;1. பன்னாட்டு நிறுவனங்களுடைய நேரடி கொள்முதல் விவசாயிகளை தங்களுடைய விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க உதவும். &lt;br /&gt;&lt;br /&gt;2. இடைத்தரகர்களுடைய ஆதிக்கம் குறையும் அல்லது நாளடைவில் அடியோடு ஒழிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. விலைவாசி, முக்கியமாக உணவுப் பொருட்களுடைய விலையில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படும். &lt;br /&gt;&lt;br /&gt;4. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையில் ஏற்படும் வியாபார போட்டி பொருட்களின் விலையை நிச்சயம் குறைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. தரமான, சுத்தமான, கலப்படமில்லாத உணவுப் பொருட்கள் கிடைக்கும் (இப்போது உணவுப் பொருட்களில் கலப்பதற்கென்றே இயங்கிவரும் நிறுவனங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும்).&lt;br /&gt;&lt;br /&gt;6. மேலைநாடுகளிலிருந்து தருவிக்கப்படும் பொருட்களால் விரயமாகும் அன்னிய செலவாணி மிச்சமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;7. அன்னிய முதலீட்டின் வருகையால் நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு மேலும் அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை 51 விழுக்காடு வரை அனுமத்திப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாட்டின் வணிக சூழலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய முடிவை சம்பந்தப்பட்ட அனைவரையும் முக்கியமாக எதிர்க்கட்சியினரையும் மாநில அரசுகளையும் கலந்தாலோசிக்காமல் இது ஒரு அதிகார முடிவுதான் (executive decision) என்று கருதி அவசர, அவசரமாக மத்திய அமைச்சரவை முடிவு எடுத்ததுதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல நேர்மையான, திறமையுள்ள, பொருளாதார நிபுணத்துவமுள்ள பிரதமராக இருந்தால் மட்டும் போதாது, விவேகமுள்ள முக்கியமாக அரசியல் சாணக்கியம் தெரிந்த பிரதமராக இருப்பதும் அவசியம்&amp;nbsp; என்பதை எப்போதுதான் மன்மோகன்சிங் உணர்ந்துக்கொள்ளப் போகிறாரோ தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***********&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-5132936436834340561?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/5132936436834340561/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=5132936436834340561' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/5132936436834340561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/5132936436834340561'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/12/blog-post_09.html' title='சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு (நிறைவு)'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-7687553200848870141</id><published>2011-12-09T10:18:00.001+05:30</published><updated>2011-12-09T10:19:46.185+05:30</updated><title type='text'>சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு 3</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டிலுள்ள சிறு மற்றும் நடுத்தர சில்லறை வணிகர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்க வாய்ப்புள்ளது என்பதுதான் இந்த திட்டத்தை எதிர்க்கும் பலருடைய வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எந்த அளவுக்கு உண்மை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிய முதலீட்டுடன் இந்தியாவில் நுழைய விழையும் மேலை நாட்டு நிறுவனங்களால் வால்மார்ட்,டெஸ்கோ,மெட்ரோ தங்களுடைய முதன்மை நுகர்வோர்களாக கருதப்படுபவர்கள் நடுத்தர மற்றும் நடுத்தரத்திற்கும் மேலுள்ள நுகர்வோர்களும் மேல்தட்டு மக்கள் எனப்படும் வசதிபடைத்த நுகர்வோர்களே தவிர இன்று நாட்டில் கிராம மற்றும் சிறு நகரங்களில் செயல்பட்டு வரும் தெருமுனை கடைகளை நம்பி வாழும் நடுத்தரத்திற்கும் சற்று கீழுள்ள அல்லது வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள வறிய நுகர்வோர்களை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைய விரும்புவது பொது சேவை செய்வதற்காக அல்ல என்பதும் உண்மை. அவர்களுக்கு சமீப காலங்களில் தாராளமாக செலவு செய்ய விரும்பும், உபரி வருமானமுள்ள நடுத்தரத்திற்கு மேலுள்ள மற்றும் பணக்கார நுகர்வோர்களுடைய வசம் இருக்கும் உபரி வருமானத்தை ஈர்ப்பதன் மூலம் தங்களுடைய வணிகத்தை பெருமளவு பெருக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் எப்படியாவது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என முன்வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நுழைந்தவர்கள்தான் கோக்கோ கோலா, பெப்சி, கெண்டக்கி சிக்கன், மெக்டனோல்ட்,ஆதிதாஸ், ரீபோக்,சோனி போன்ற நிறுவனங்கள். அவர்கள் தங்களுடைய பெயரிலேயே கடைகளை திறக்க இன்றைய விதிமுறைகள் தடுப்பதால் இந்திய நிறுவனங்களுடைய இணைந்தனர். ஆக, இதுவும் ஒருமுறையில் அன்னிய முதலீடுதான். அதாவது மறைமுக முதலீடு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் வாய் மூடி மவுனம் காத்த இன்றைய எதிர்க்கட்சிகள் இப்போது ஏன் கூப்பாடு போடுகின்றன என்பதும் இந்த உத்தியை ஆதரிப்பவர்களுடைய கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்களுடைய முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறிவந்த காங்கிரஸ் நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் போனதால் வேறு வழியின்றி இதை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதென தீர்மானித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் தாங்கள் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக கருதும் எதிர்க்கட்சிகள் இதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றும் கூறி வருகின்றன என்றாலும் அவர்களுடைய உண்மையான நோக்கம் அதுவல்ல. தமிழக முதல்வர் கூறியுள்ளதுபோன்று மைனாரிட்டி அரசை நடத்திவரும் காங்கிரஸ் எப்படி தங்களை கலந்தாலோசிக்காமல் இப்படியொரு முடிவை எடுக்கலாம் என்பதுதான். இது வெறும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையிலுள்ள ஈகோ பிரச்சினையே தவிர இந்திய வணிகர்கள் மீதுள்ள பாசத்தாலோ அக்கறையாலோ அல்ல என்பது நாளடைவில் தெரிய வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டுக்கு நல்லதல்ல என்றால் எதற்காக ஆசிய நாடுகளான சீனா, தைவான், மலேசிய போன்ற நாடுகள் இதை தாராளமாக அனுமதித்துள்ளன என்பது காங்கிரசின் கேள்வி. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் பதிலளிக்காமல் சமாளிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நாட்டில் விலைவாசி உயர்வு விகிதத்தை (Inflation rate) மிகவும் பாதிப்பது உணவுப் பொருட்கள்தான் என்றால் மிகையல்ல. இதற்கு முக்கிய காரணம் விவசாயப் பொருட்கள் நேரடியாக நுகர்வோரை சென்றடைய விடாமல் தடுக்கும் இடைத்தரகர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு நான் வசிக்கும் சென்னை புறநகர் பகுதியான ஆவடியை எடுத்துக்கொள்கிறேன். இந்த நகராட்சி சென்னையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு சென்னையிலும் கூட காணமுடியாத பெரிய காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சில்லறை காய்கறி கடைகள் மார்க்கெட்டிற்கு உள்ளும் வெளியிலும் இயங்கி வருகின்றன. இதற்கு நேர் எதிரிலில் இப்போதும் வீசை கணக்கில் காய்கறிகளை மொத்த விலைக்கு விற்கும் ஒரு சந்தையும் உள்ளது. இது ஆவடியை சுற்றிலும் அமைந்துள்ள கிராமங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை நேரடியாக சிறு வியாபாரிகளுக்கு விற்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இங்கு நடப்பது அதுவல்ல. இங்கு கடை வைத்திருக்கும் இடைத்தரகர்கள் லாரிகளில் ஏற்றி வரும் காய்கறிகளை இடைமறித்து மொத்தமாக பேரம் பேசி வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதை காணலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே பகுதியில் தனியார் நடுத்தும் நடுத்தர வணிக கடைகள் இரண்டும், பொன்னு ஸ்டோர்ஸ் எனப்படும் ஐந்து மாடி வணிக வளாகமும், ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடையும் அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த சந்தையில் வீசை கணக்கில் சிறு வியாபாரிகளுக்கு விற்கப்படும் விலையை காட்டிலும் ஒரு கிலோவுக்கு நான்கிலிருந்து ஐந்து ரூபாய் குறைவாக ரிலையன்ஸ் நிறுவனத்தால் விற்க முடிகிறது என்றால் இதன் பொருள் என்ன? ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்தே மொத்தமாக கொள்முதல் செய்வதால் அவர்களுடைய லாபத்தையும் சேர்த்தாலும் சந்தை விலையை விடவும் குறைவாக விற்க முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரிலையன்ஸ், ஃபுட் வேர்ல்ட் போன்ற நிறுவனங்களால் இந்த விலைக்கு விற்க முடிகிறதென்றால் இவர்களை விட பன்மடங்கு பொருளாதார பலமும் நிர்வாக திறனும் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களால் எவ்வளவு மலிவாக பொருட்களை வழங்க முடியும்? உணவுபொருட்களின் தட்டுப்பாட்டுக்கும் விலை உயர்வுக்கும் முக்கியமாக காரணமாக விளங்கும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமே முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-7687553200848870141?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/7687553200848870141/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=7687553200848870141' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/7687553200848870141'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/7687553200848870141'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/12/3.html' title='சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு 3'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-3477896815322752536</id><published>2011-12-06T12:54:00.001+05:30</published><updated>2011-12-06T12:58:08.797+05:30</updated><title type='text'>சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு - 2</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தத்தான் செய்யும். நம்முடைய நாட்டின் மொத்த உற்பத்தித் திறன் எனப்படும் GDPயில் 44 விழுக்காடு, அதாவது ரூ.11 இலட்சம் கோடி சில்லறை வணிகத்தின் பங்கு என்கிறபோது அதில் அன்னிய முதலீடு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும், மறுப்பதற்கில்லை. அதுவும் அன்னிய முதலீடு இல்லாமலேயே சில்லறை வணிகத்தின் வளர்ச்சி வருடத்திற்கு சுமார் 12 முதல் 15 விழுக்காடு வரையில் வளர்ந்துக்கொண்டே செல்கிறது என்றால் அன்னிய முதலீடும் இதை தீனி போட்டு வளர்க்க ஆரம்பித்தால் அதன் வளர்ச்சி எத்தனை அசுரத்தனமாக இருக்கும்! &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய கணிப்பின்படி இப்போது சுமார் 100 நபர்களுக்கு ஒரு சில்லறை கடை என்ற அடிப்படையில் நாட்டின் சில்லறை வணிகத்தை சார்ந்து மட்டும் சுமார் நான்கு கோடி தொழிலாளர்கள் இருக்கின்றனராம்! அதில் கார்ப்பரேட் மற்றும் தனிநபர்கள் நடத்தும் பெரிய வணிக நிறுவனங்களின் பங்கு மிகவும் சிறியதே. &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, தெரு முனை துணி, மளிகை மற்றும் இதர கடைகள் (இதில் டீக்கடை உள்ளிட்ட உணவு விடுதிகள், பேக்கரி, ஃபேன்சி ஸ்டோர் மற்றும் குறிப்பிட முடியாத பொருட்களை விற்பனை செய்யும் நடைபாதை கடைகள்) ஆகியவை சுமார் நான்கு கோடி ஊழியர்களின் வாழ்வாதாரமாக உள்ளது! இது நாட்டின் மொத்த தொழிலாளர்களில் வெறும் 8 விழுக்காடுதான் என்றாலும் நான்கு கோடி ஊழியர்கள் என்பது கணிசமான எண்ணிக்கையல்லவா? அதுவும் இத்தகையோர் பெரும்பாலும் பொருளாதார அடிமட்டத்திலிருந்து வருபவர்கள் என்ற கோணத்தில் இருந்து பார்த்தால் அன்னிய முதலீட்டால் இவர்களுடைய வேலை பறிபோக வாய்ப்புள்ளது என்று இடதுசாரிகள் கூக்குரலிடுவது தவறில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அன்னிய முதலீட்டின் நம் நாட்டிற்குள் நுழையவிருக்கும் நிறுவனங்கள் எவை, அவை என்னென்னவ்பொருட்களை விற்பனை செய்யவிருக்கின்றன என்பது இதை ஒட்டுமொத்தமாக தடுக்க வேண்டும் என்ற வாதிடும் சில்லறை வணிகர்களுக்கு தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அன்னிய முதலீடு வழியாக நாட்டிற்குள் நுழைய விரும்பும் உலகின் பெரு வணிக நிறுவனங்களில் சில வால் மார்ட், டெஸ்கோ, மெட்ரோ. இத்தகைய வணிக நிறுவனங்கள் கையாளும் பொருட்களுக்கும் நம்முடைய சில்லறை வணிகர்கள் (அதாவது தெருமுனை கடைகளுக்கும்) எவ்வித சம்பந்தமும் இருக்கப் போவதில்லை. இப்போதும் கூட நம்முடைய நாட்டின் பெரு வணிக நிறுவனங்களான ரிலையன்ஸ், டாட்டா, பிர்லா, நிறுவனங்கள் நடத்து ஹைப்பர் ஸ்டோர்ஸ் எனப்படும் சூப்பர் மார்க்கெட் கடைகள் கையாளும் பொருட்கள் பலவும் தெருக்கடை வணிகர்கள் கையாளும் பொருட்களிலிருந்து வெகுவாக மாறுபட்டவை. அவை எதிர்நோக்கும் நுகர்வோர்களும் (targeted consumers) தெருக்கடைகளை சார்ந்திருக்கும் நுகர்வோர்கள் அல்ல. ஆகவே இத்தகைய வணிக நிறுவனங்களின் வருகையால் தெருக்கடை வணிகர்கள் நிச்சயம் நேரடியாக பாதிக்கப்படப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் இத்தகைய மேலை நாட்டு நிறுவனங்களின் வருகையை ஏன் சில்லறை வணிகர்கள் எதிர்க்கின்றனர்? இதனால் உண்மையில் நஷ்டமடையப் போவது இத்தகைய வணிகர்களா அல்லது நம்மைப் &lt;br /&gt;போன்ற நுகர்வோரா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-3477896815322752536?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/3477896815322752536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=3477896815322752536' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/3477896815322752536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/3477896815322752536'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/12/2.html' title='சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு - 2'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-865593019552996093</id><published>2011-12-05T13:01:00.001+05:30</published><updated>2011-12-05T13:10:46.980+05:30</updated><title type='text'>சிறு வணிகத்தில் அன்னிய முதலீடு.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;கடந்த சில வாரங்களாக இந்திய நாடாளுமன்ற கூட்டத்தை சுமுகமாக நடத்த முடியாமல் மத்திய அரசு படும் அவஸ்தைக்கு சிறு வணிகத்தில் 51 விழுக்காடு வரை அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய&lt;br /&gt;அமைச்சரவை எடுத்த முடிவுதான் முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அமைச்சரவை முடிவை பின்வாங்க போவதில்லை என காங்கிரசும் இந்த முடிவால் இந்தியாவிலுள்ள பல சிறு வணிகர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அதை பின்வாங்கும் வரை நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த விடப்போவதில்லை என எதிர்க்கட்சிகளும் பிடிவாதம் பிடிக்கும் இச்சூழலில் ஒரு நடுநிலையான நுகர்வோன் என்ற கோணத்திலிருந்து இந்த அன்னிய முதலீட்டால் ஒரு சராசரி நுகர்வோனுக்கு கிடைக்கவிருக்கும் பலன்களையும் ஏன் எவரும் எண்ணிப் பார்க்க மறுக்கின்றனர் என்ற ஆதங்கத்துடன் அலச முடிவெடுத்ததன் விளைவே இந்த கட்டுரை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இதே சில்லறை வணிகத்தில் பெரிய முதலீட்டாளர்களை, அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் எனப்படும் ரிலையன்ஸ், டாட்டா நிறுவனங்களை அனுமதிப்பது சரியா என்ற கேள்வி எழுந்தபோது அதில் தவறேதும் இல்லை என்ற கோணத்தில் நான் எழுதிய கட்டுரைக்கு சாதகமானஓரிரண்டு கருத்துக்களை விட எதிர்த்து வந்த கருத்துக்களே மிக அதிகம் என்பதும் என் நினைவுக்கு வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்' கிளைகளை தமிழகமெங்கும் நிறுவ முற்பட்டிருந்தது. அதை எதிர்த்து பல எதிர்க்கட்சிகள், குறிப்பாக பா.ம.க., பல சாலை போராட்டங்களை டத்தியது. இத்தகைய நிறுவனங்கள் சில்லறை மற்றும் சிறு வணிகர்களுடைய பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடும் என்றெல்லாம் வாதிட்டார்கள். அப்போது இந்தியா போன்ற பல தரப்பு வருமானமுள்ள &lt;br /&gt;நுகர்வோர் (Income Groups) உள்ள நாட்டில் எத்தனை பெரிய நிறுவனங்கள் வந்தாலும் அவற்றால் மற்ற சிறு வணிகர்களூக்கு பாதிப்பு ஏற்படாது என்று வாதிட்டேன். கடந்த சில ஆண்டுகளில் நான் கூறியதுதான் சரி என்பது எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபணமாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல் பல கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்று சென்னையில் சில்லறை வணிகத்தை மட்டுமே நம்பி மிகப்பெரிய&lt;br /&gt;அளவில் வணிக வளாகங்களை திறந்துள்ளபோதும் சிறு வணிகர்கள் எனப்படும் தெருமுனை கடைகள் எதுவும் மூடப்பட்டுவிடவில்லை. ஒவ்வொரு பகுதியிலுமுள்ள காய், கறி மார்கெட்டுகளும் முன்பை விட &lt;br /&gt;சிறப்பாகவே நடக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது இந்தியாவிலுள்ள தெருமுனை கடைகளுக்கு முதல் எதிரியாக கருதப்பட்டவை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள். ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது விளையும் பொருட்களை பெரிய அளவில் விற்பனை செய்யும் இத்தகைய நிறுவனங்களாலேயே சிறு வணிகர்களுடைய சந்தை பங்கை (market share) பாதிக்க முடியவில்லை என்றால் உலக சந்தையில் மிகப் பெரிய சில்லறை வியாபாரிகள் எனப்படும் நிறுவனங்கள் நுழைவதால் ஏற்படப் போவதில்லை என்பது நிதர்சனம். &lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் மத்திய அரசின் இந்த முடிவை ஏன் எதிர்க்கட்சிகளும் சிறு வணிகர்களும் எதிர்க்கின்றன என்பதையும் ஆராய வேண்டும் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவை அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று முடிவு எடுத்தபோது அதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களான டாட்டா, &lt;br /&gt;பிர்லா நிறுவனங்கள் இதை பல வகைகளிலும் எதிர்த்ததை பார்த்தோம். உற்பத்தி துறையிலும், எலக்ட்ரானிக் மற்றும் தொலைதொடர்பு துறைகளிலும் கடந்த பத்தாண்டுகளில் நம் நாடு அடைந்த அசுர வளர்ச்சிக்கும் உலக சந்தையில் மிக சகஜமாக கிடைக்கும் பல நுகர்வோர் பொருட்களும் (consumer items) சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடனேயே ஏறக்குறைய அதே விலையில் இந்தியாவிலும் கிடைப்பதற்கும் அன்னிய முதலீட்டை இத்தகைய துறைகளில் அனுமதித்ததுதான் முக்கிய காரணம் என்பதை மறந்துவிட முடியாதே!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கணினி துறையில் மட்டுமல்லாமல் தொலை தொடர்பு, எலக்ட்ரானிக், வாகன தயாரிப்பு போன்ற துறைகளில் நம் நாடு கண்ட அசுர வளர்ச்சியின் நேரடி விளைவாக கருதப்படுவது இந்தியர்கள் கையில் &lt;br /&gt;உள்ள உபரி வருமானம் (disposable income). கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள நடுத்தர மற்றும் நடுத்தரத்திற்கு சற்று மேலேயுள்ளவர்களுடைய (middle and above middle income groups) மக்கள் தொகை 25% விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது என்கிறது சமீபத்திய கணிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய உபரி வருமானத்தை செலவிட சந்தையில் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டுமல்லவா? எவ்வளவு காலத்திற்குத்தான் எதிர்காலத்திற்கு தேவை, தேவை என்று சேமித்து வைப்பது? செலவழிக்க &lt;br /&gt;வழியில்லாமல் அனைவருமே தங்கத்தில் முதலீடு செய்ய முறப்பட்டதும் இன்று வானளவுக்கு உயர்ந்துள்ள தங்கத்தின் விலைக்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில ஆண்டுகளில், அதாவது 2005-06 முதல் 2008-09 ஆண்டுடன் முடிந்த காலத்தில் இந்திய நுகர்வோர் செலவிட்ட தொகையின் வளர்ச்சி விகிதமும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்றுள்ளதை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்காணும் பட்டியலை பார்த்தால் விளங்கும்:&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 2005-06 06-07 07-08 08-09 (விழுக்காடு வளர்ச்சி)&lt;br /&gt;&lt;br /&gt;1. உணவு மற்றும் உணவு பொருட்கள் :11.7 11.1 13.0 14.4&lt;br /&gt;&lt;br /&gt;2. ஆடை மற்றும் காலணி :&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 18.0 25.0 27.7 22.0&lt;br /&gt;&lt;br /&gt;3. வீட்டு உபயோக பொருட்கள் :&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 18.0 22.0 19.4 11.0&lt;br /&gt;&lt;br /&gt;4. இதர செலவினங்கள் :&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 12.0 14.8 14.1 14.2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதர செலவினங்கள் வகையில் பெரும்பாலான விழுக்காடு பொழுதுபோக்கு, சுற்றுலா செலவினங்களே!&lt;br /&gt;&lt;br /&gt;இதன் நேரடி விளைவுதான் இன்று சென்னை மற்றும் பெருநகரங்களில் எங்கு பார்த்தாலும் முளைத்துள்ள பலமாடி வணிக வளாகங்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் மலேஷியா சென்றபோது அங்கு நான் &lt;br /&gt;பார்த்து மலைத்துப்போன வணிக வளாகங்களை என்று இந்தியாவில் காணப்போகிறோம் என்ற என்னுடைய கனவு இத்தனை விரைவில் நனவாகும் என்று நான் நினைக்கவில்லை. அதே சமயம் பல ஆண்டுகளாக நடந்துவந்துள்ள பல சிறிய சில்லறை வணிகர்களுடைய கடைகளும் இன்று வரையிலும் திறந்துதான் உள்ளன என்பதையும் பார்க்கும்போது சமீபத்திய முடிவால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை என்றுதான் நினைக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும், பாதிப்பே இல்லை என்றும் கூறிவிட முடியாது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-865593019552996093?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/865593019552996093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=865593019552996093' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/865593019552996093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/865593019552996093'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/12/blog-post.html' title='சிறு வணிகத்தில் அன்னிய முதலீடு.'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-5721290499879306967</id><published>2011-11-29T13:07:00.001+05:30</published><updated>2011-11-29T13:12:14.301+05:30</updated><title type='text'>கனிமொழியின் பிணை மனு - சில சந்தேகங்கள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல முறை பிணை பெற முயன்று சோர்ந்து போயிருந்த கனிமொழிக்கு இறுதியாக பிணை வழங்கியுள்ள தில்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையை படித்து பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கனிமொழி மீதான குற்றச்சாட்டு பெரும்பாலும் ஆவணங்களை சார்ந்தே இருப்பதால் அவர் சாட்சியங்களை கலைக்கக் கூடும் என்ற ஐயம் உள்ளதாக கூறி அவருக்கு பிணை வழங்க மறுத்த சிபிஐ சிறப்பு மன்ற நீதிபதியின் உத்தரவு சரியில்லை...."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் உயர்நீதிமன்ற நீதிபதியின் கணிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக இருக்கும் நீதிபதியின் சட்ட அறிவில் குறை உள்ளது என கொள்ளலாமா? அல்லது அவர் வேண்டுமென்றே அதாவது சட்ட காரணங்களுக்காக அல்லாமல் வேறேதும் காரணங்களுக்காக அவர் கனிமொழியின் பிணை மனுவை நிராகரித்தாரா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விசாரணைக்கு தீர்ப்பு வழங்கும்&amp;nbsp; பொறுப்பிலுள்ள நீதிபதி வழக்கு விசாரனையில் உள்ள சமயத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் - அவர் யாராக இருப்பினும் - குற்றவாளிதான் என்ற முடிவெடுத்துவிட்டால் அவருடையை தீர்ப்பில் எந்த அளவுக்கு நியாயம் அல்லது நீதி இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழி குற்றவாளிதானா அல்லது அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளனவா என்றெல்லாம் விசாரனையின் இறுதியில்தானே தெரியவரும்? அவருக்கு எதிராக திரட்டப்பட்டுள்ள ஆவண ஆதாரங்களை வைத்து மட்டுமே அவர் குற்றவாளை என்ற முடிவுக்கு ஒருவர் - இங்கு நீதிபதி - வந்துவிட முடியுமென்றால் பிறகு எதற்கு வழக்கை மேலும் நடத்தி அரசின் பணத்தை வீணடிப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-5721290499879306967?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/5721290499879306967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=5721290499879306967' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/5721290499879306967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/5721290499879306967'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/11/blog-post.html' title='கனிமொழியின் பிணை மனு - சில சந்தேகங்கள்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-8709844847425449874</id><published>2011-10-31T12:36:00.000+05:30</published><updated>2011-10-31T12:45:06.712+05:30</updated><title type='text'>சென்னை மாநகராட்சி அதிரடி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு சீல்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாநகராட்சியின் ஆட்சி பொறுப்பு கைமாறியபின் எடுக்கப்பட்ட முதல் அதிரடி முடிவு இது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அதிகாலையில் சென்னை தியாகராய நகரில் கட்டுமான விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள சுமார் 61 கடைகளுக்கு சீல் வைத்தது சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்ற செய்தி சென்னைவாசிகள் மத்தியில் நிச்சயம் வரவேற்பை பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தியாகராய நகரில் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் அதை சுற்றிலுமுள்ள துணை, இணை நகரங்களில் இத்தகைய முறையில் இயங்கிவரும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீதும் சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கட்சி பாகுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதும் சென்னைவாசிகளின் கோரிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் இத்தகைய நிறுவனங்கள் இத்தனை ஆண்டுகள் எவ்வித இடைஞ்சலும் இன்றி இயங்கி வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களை மட்டும் குறை கூறி பயனில்லை. அவர்களை ஆட்டிப்படைக்கின்ற வார்டு உறுப்பினர்களும், நகரமன்ற தலைவருமே முக்கிய காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இயங்கிவரும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பலவற்றில் அடிப்படை தேவைகளான பார்க்கிங், விபத்து சமயங்களில் பயன்படுத்தக் கூடிய மாற்று வாயில்கள், லிஃப்ட் மற்றும் விசாலமான படிகட்டுகள் என எதுவுமே இல்லாதது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தியாகராய நகர், பாண்டிபஜார், பனகல்பார்க் பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளில் பிரம்மாண்ட முகப்புகளுடன் துவக்கப்பட்ட பல கடைகளில் முகப்பிலுள்ள ஒரேயொரு குறுகிய வாயிலைத் தவிர விபத்து சமயங்களில் வெளியேற வேறு வழிகளே இல்லை என்பதுதான் உண்மை. மூன்று மாடிகளுக்கு மேல் கடை அமையும் பட்சத்தில் லிஃப்ட் வசதியுடன் விசாலமான படிகட்டுகளும் இருக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் இந்த பகுதியில் சமீபத்தில் துவக்கப்பட்ட ஒரு நான்கு மாடி துணிக்கடையில்&amp;nbsp;ஐந்து நபர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய ஒரு லிஃப்ட். படிகட்டும் மூன்றடிக்கும் குறைவான விசாலம்தான். கடந்த தீபாவளி விற்பனையின் போது கூட்டமிகுதியால் மூச்சுவிடக் கூட முடியாமல் படிகட்டில் மயங்கிவிழுந்த பெண்கள் பலரை என் கண்ணால் காண முடிந்தது. மயங்கி விழுந்த பெண்களை எழுந்திருக்கக் கூட விடாமல் முட்டி மோதி சென்ற வாடிக்கையாளர்களைப் பார்த்தபோது இப்படியெல்லாம் அவதிப்பட்டு பண்டிகைக்கு ஆடைகளை எடுக்க வேண்டுமா என்று தோன்றியது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே பகுதியில் ஒரு சில வாடிக்கையாளர்களுடைய வாகனங்களைக் கூட கடைகளுக்கு முன்பு நிறுத்த வசதியில்லாத கடைகள்தான் அதிகம். மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை கபளீகரம் செய்து அடாவடியாக தங்களுடைய வாடிக்கையாளர்களுடைய வாகனங்களை நிறுத்த வளைத்துப்போட்ட கடைகளும் உண்டு. இப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் அடிப்பகுதியை முழுவதுமாக தங்களுடைய வாடிக்கையாளர்களுடைய வசதிக்கென அடைப்புகளை ஏற்படுத்தி அவ்வழியில் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி வந்த ஒரு மிகப்பெரிய கடையும் இன்றைய சீல் வைக்கும் நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்பது ஆறுதலை அளிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதில் சென்னை மாநகராட்சி உறுதியாக நிற்குமா அல்லது கடந்த பதினைந்தாண்டுகளைப் போன்று சம்பந்தப்பட்ட வணிகர்களிடமிருந்து 'வசூலைப்' பெற்றுக்கொண்டு நடவடிக்கையை பின்வாங்கிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-8709844847425449874?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/8709844847425449874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=8709844847425449874' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/8709844847425449874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/8709844847425449874'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/10/blog-post.html' title='சென்னை மாநகராட்சி அதிரடி!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-7012182036595825681</id><published>2011-08-09T11:49:00.000+05:30</published><updated>2011-08-09T11:49:05.841+05:30</updated><title type='text'>தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_srzve0="76"&gt;சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைபடுத்துவது குறித்து அளிக்கப்பட்ட சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சமர்ப்பிக்கப்பட்ட தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது!&lt;/div&gt;&lt;div closure_uid_srzve0="77"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு அம்மையாரைத் தவிர தமிழகத்தின் அனைத்து தரப்பினராலும் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். எப்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து சமச்சீர் கல்வி பாடத் திட்ட புத்தகங்களை உடனே வினியோகிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோ அப்போதே இத்தகைய ஒரு முடிவுக்குத்தான் உச்ச நீதிமன்றம் வரும் என்பது தெளிவாக தெரிந்தது. அப்போதே பெருந்தன்மையுடன் சமச்சீர்கல்விக்கென அச்சடிக்கப்பட்டு வினியோகிக்க தயார் நிலையிலிருந்த புத்தகங்களை வினியோகித்திருந்தால் தமிழக மக்களின் நன்மதிப்பை அம்மையார் பெற்றிருக்கலாம். ஆனால் பெருந்தன்மைக்கும் அம்மையாருக்கும் பொருத்தமேயில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உச்சந்தலையில் அடித்து கூறினால்தான் சிலருக்கு எதுவுமே புரியும். அந்த ரகத்தைச் சார்ந்தவர் அம்மையார். இனியாவது தன்னுடைய சுயகவுரவத்திற்காக வினியோகத்தை இழுத்தடிக்காமல் முடிப்பார் என நம்புவோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மையாரின் பிடிவாத போக்கால் கடந்த இரண்டு மாத காலமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் அம்மையாருக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர ஏதேனும் வழியுள்ளதா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-7012182036595825681?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/7012182036595825681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=7012182036595825681' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/7012182036595825681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/7012182036595825681'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/08/blog-post.html' title='தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-6540470732689917096</id><published>2011-07-05T12:56:00.000+05:30</published><updated>2011-07-05T12:56:44.882+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சமச்சீர் கல்வி கமிட்டி அறிக்கை தாக்கல்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;"சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்த கமிட்டி தன் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், தற்போது இருக்கும் பாடத்திட்டங்கள், நடப்பு வருடத்துக்கு பயன்படத்தக்க வகையில் இல்லை என்றும், பாடத்திட்டங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வி குறித்த வழக்கை 7ம் தேதிமுதல் தினமும் விசாரிக்கும் என்று தெரிகிறது."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: தினமணி இணைய தளம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசு தலைமைச் செயலர் தலமையில் தனியார் பள்ளிகளுடைய முதலாளிகளுடன் கூட்டு சேர்ந்து அமைக்கப்பட்டுள்ள ஒரு கமிட்டி வேறென்ன சொல்லும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் தமிழகமெங்கும் கல்வியாளர்களும், அரசியல் கட்சிகளும் ஏன், பள்ளி மாணவர்களும் கூட சமச்சீர் கல்வியை உடனே அமுல்படுத்த போராட்டங்களை நடத்தியதை பார்த்த பிறகும் இப்படியொரு அறிக்கையை தயார் செய்து உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஜெயலலிதாவுக்கு நிறைய நெஞ்சுறுதி வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் என்ன சொன்னாலும் எனக்கென்ன, என் வழி தனி வழி, அதில்தான் நான் பயணம் செய்வேன் என்கிற அம்மையாரின் பிறவிக் குணம் மாறவே மாறாது என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சியம் வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கட்டும், இன்னும் ஐந்தாண்டுகள் தானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-6540470732689917096?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/6540470732689917096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=6540470732689917096' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/6540470732689917096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/6540470732689917096'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/07/blog-post.html' title='சமச்சீர் கல்வி கமிட்டி அறிக்கை தாக்கல்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-3925547352389685616</id><published>2011-06-13T14:01:00.000+05:30</published><updated>2011-06-13T14:01:23.939+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சமச்சீர் கல்வியும் ஜெயலலிதாவும்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;சமச்சீர் கல்வி என்ற தத்துவம் ஜெயலலிதா போன்ற மேல்குடி மக்களுக்கு நிச்சயம் ஒவ்வாது என்பது தெரிந்ததே. சேரியில் வசிக்கும் குப்பனுக்கும் மாளிகையில் வசிக்கும் குமாருக்கும் ஒரே தரத்திலான கல்வியா என கேட்கத் தோன்றும்.&amp;nbsp; மேலும் இவர்&amp;nbsp;&lt;br /&gt;மூதாதை ராஜாஜி வழிவந்த வம்சத்தை சார்ந்தவராயிற்றே. வண்ணான் மகன் வண்ணானாகவும் தோட்டி மகன் தோட்டியாகவும் நாவிதன் மகன் நாவிதனாகவும்தான் வரவேண்டும் என்று குலத்தொழிலின் மகத்துவத்தை எடுத்துரைத்தவரை சார்ந்தவர்களால் வேறு எப்படி சிந்திக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுனர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து தமிழகத்தை மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலுள்ள கல்வி நிலையங்களில் பயன்பாட்டிலுள்ள பாடத்திட்டங்களை அலசி, ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டு பிறகு மாணவ மற்றும் ஆசிரிய சமுதாயங்களுடைய ஒப்புதல் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களின் ஒப்புதல் என அனைத்தையும் கடந்து தமிழக அமைச்சரவையின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு முதலாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து தரப்பினருடைய ஏகோபித்த (சாதி, சமூக மற்றும் பணத்தாசை போன்ற வெறிகளுக்கு ஆளான ஒரு சில பள்ளி நிர்வாகங்கள், அறிவுஜீவிகளேன் தங்களை வரித்துக்கொண்ட சில ஆசிரியர்களை தவிர்த்து)ஆதரவையும் பெற்ற சமச்சீர் கல்வி திட்டத்தை எவ்வித குழுக்களின் அடிப்படை ஆய்வும் இல்லாமல் ஒரே நாளில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவை ஒத்திவைக்கிறோம் என்ற சாக்கில் மறுத்திருக்கிறது.&lt;br /&gt;பாடத்திட்டங்கள் உலகதரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் ஆகவே ஓராண்டுக்கு ஒத்தி வைக்கிறோம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பே. அப்படியானால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் இத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக குறை கூறி வாதிட்டதை என்ன சொல்வது? அவருடைய வாதத்தை கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளும் கூட எதிர்த்தனவே. இருப்பினும் சமச்சீர் கல்வியை ஆதரித்து முழக்கமிட்டு வந்த நடிகர் வாய் மூடி இருக்க காரணம் வேறு. அவரை விட்டுத்தள்ளுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய தமிழக அரசு முடிவு செய்த பாடத்திட்டங்களில் என்ன குறைபாடுகள் இருப்பினும் அவற்றை இயன்றவரையிலும் சரிசெய்து அறிமுகப்படுத்துவதை விட்டுவிட்டு தரமே இல்லை என ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது நியாயமான காரணமாக தென்படவில்லை, இதற்கு உண்மையான காரணம் என்ன என்று உயர்நீதிமன்றம் கேட்டதே அதற்கு மேடத்தின் பதில் என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் முந்தைய அரசு நியமித்த குழுக்கள் அனைத்துமே தரமற்றவைகளா? அவர்கள் முடிவு செய்த பாடத்திட்டங்களில் இன்னின்ன குறைபாடுகள் உள்ளன என உயர்நீதி மன்றத்தில் நீங்கள் பட்டியலிட்டிருந்தால் ஒருவேளை அதை ஏற்று நீதிமன்றம் உங்களுடைய முடிவுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்குமே? அதை ஏன் உங்களால் செய்ய முடியவில்லை? &lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் அதுவல்ல காரணம். திமுகவையும் கலைஞரையும் புகழ்பாடி ஒரு சில பாடங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அதையும் நீக்கிவிட உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய மனுவை அனுமதிக்காமல் தள்ளுபடி செய்துவிடும் என எதிர்பார்த்தேன்... ஏனோ தெரியவில்லை உச்சநீதிமன்றம் அதை விசாரனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையுத்தரவு பிறப்பிக்காமல் இருந்தால் நல்லது. ஒருவேளை மனுவை விசாரிக்கும் சாக்கில் உங்களுடைய அரசு எடுத்த முடிவை குறுக்கு விசாரணை என்ற பெயரில் கடுமையாக விமர்சிக்க உத்தேசித்துள்ளதோ என்னவோ.. இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்னைப் போன்றோர்கள் மனதில் சமச்சீர் கல்வி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் பாடத்திட்டங்கள் மாநகராட்சி மற்றும் அரசு/அரசின் உதவியுடன் நடத்தப்படும் பெரும்பாலான பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்ற ஐயப்பாடு இருந்ததென்னவோ உண்மைதான். நானே அறிமுக நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து பதிவுகள் எழுதியுள்ளேன். ஏனெனில் அடிமட்ட மாணவனுடைய தரத்தை உயர்த்துகிறோம் என்று கூறிவிட்டு இன்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடைய தரத்தை குறைத்துவிடுவார்களோ என்று அச்சம் இத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடைய பெற்றோர்கள் மனதில் இல்லாமல் இல்லை. ஆனால் சமச்சீர் கல்வியின் திட்டத்தின் அடிப்படை நோக்கம் எல்லோருக்கும் கல்வி என்பது மட்டுமல்லாமல் எல்லோருக்கும் ஒரே கல்வி என்பதால் இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது தமிழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய தரமும் ஒரே சீராக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் நானும் இந்த திட்டத்தை அறிமுக நிலையில் எதிர்த்தவர்களும் எங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டோம். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்தவரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தோடு மெட்றிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டங்கள் அமுலில் இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். கர்நாடகா, ஆந்திரா,கேரளா ஏன் மஹாராஷ்டிராவிலும் கூட சிபிஎஸ்சியை விட்டால் மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்தான் அமுலில் உள்ளன. ஆனால் இந்த பாடத்திட்டங்கள் சிபிஎஸ்சி, மெட்றிக் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் அமுலில் உள்ள பாடத்திட்டங்களை விட பல வகைகளில் சற்று தரம் குறைந்தவையே என்பதும் உண்மை. ஆனால் இந்த குறைபாட்டை&amp;nbsp; நாளடைவில் சரிசெய்து அனைத்து மாணவர்களும் கல்வியில் ஒரே தரம் உள்ளவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக இத்தகைய சமச்சீர் கல்வி திட்டத்தை பின்பற்றுவது அவசியமாகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் அமுல்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அறிமுக நிலையிலுள்ள இந்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒத்திப்போடுவது பிறகு முழுவதுமாக கைவிடுவது என்கிற பாணியில் சிந்திக்காமல் உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் இத்திட்டத்தை இவ்வாண்டிலேயே அனைத்து வகுப்புகளிலும் அமுல்படுத்துவதுதான் மேடத்திற்கு அழகு சேர்ப்பதாக இருக்கும். அதை விட்டுவிட்டு நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என்ற வீம்பில் திட்டத்தை அமுல்படுத்த தவறினால் மேடம் இனியும் மாறவே இல்லை என்று சிலர் கூறுவது உண்மைதான் என்றாகிவிடும். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-3925547352389685616?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/3925547352389685616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=3925547352389685616' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/3925547352389685616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/3925547352389685616'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/06/blog-post_13.html' title='சமச்சீர் கல்வியும் ஜெயலலிதாவும்.'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><uri>http://www.blogger.com/profile/16737274864584950722</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-495837965821571414</id><published>2011-06-10T12:24:00.001+05:30</published><updated>2011-06-10T12:39:19.718+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மு.க. என்ன செய்யப் போகிறார்?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;இன்று பிற்பகல் திமுகவின் உயர்மட்டக் குழு கூடி அவசர ஆலோசனை செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அவசரக் கூட்டம் எதற்காக?&lt;br /&gt;&lt;br /&gt;சில நாளேடுகள் திமுக தன்னுடைய மத்திய அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொள்ளக் கூடும் என்கின்றன. அது அவர்களுடைய ஊகம் மட்டுமல்ல, விருப்பமும் கூட. மாநிலத்தில் ஆட்சியை இழந்த திமுக மத்தியிலும் ஆட்சியில் இல்லையென்றால் அது மக்கள் மனதிலிருந்து அறவே அழிந்து ஒழிந்து போகும், போக வேண்டும் என்பது இத்தகைய பத்திரிகைகளின் ஆவல். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆவலை, எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைக்கப் போகிறாரா மு.க? இதைத்தான் சமீபத்தில் 'கூடா நட்பு தீதாய் முடியும்' என சூசகமாக கூறினாரா? அவருடைய அன்பு மகள் கனிமொழி இருமுறை முன்ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு இருக்கும் அவல நிலைக்கு மத்தியில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ்தான் மறைமுக காரணம் என்று அவர் கருதும் சூழலில் அவருக்கு அத்தகைய நட்பே வேண்டாம் என முடிவெடுக்க வாய்ப்புள்ளது. அவருடைய இப்போதைய மனநிலையிலிருக்கும் எவராலும் அப்படித்தான் முடிவெடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை. ஆனால் &lt;br /&gt;அத்தகைய முடிவு அது எந்த வகையில் அவருடைய கட்சிக்கு பலனளிக்கப் போகிறது என்பதை விட எப்படியெல்லாம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் நல்லது என கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சரவையிலிருந்து விலகிக்கொள்ளலாம் என அவர் முடிவெடுக்க வேறொரு காரணமும் உண்டு. மத்திய அமைச்சர் திருத்தி அல்லது மாற்றி&lt;br /&gt;அமைக்க வாய்ப்புள்ளது என பிரதமர் அவர்கள் சமீபத்தில் கூறினார். அத்தகைய சூழலில் தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள தயாநிதி &lt;br /&gt;மட்டுமல்லாமல் திமுகவை சார்ந்த வேறு அமைச்சர்களும் கூட பதவியை பறிகொடுக்கலாம் என தெரிகிறது. அப்படியொரு சூழல் ஏற்படுவதை &lt;br /&gt;தவிர்க்க நாமாகவே அமைச்சரவையிலிருந்து விலகிக்கொண்டால் என்ன என்றும் முக நினைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் எதுவானாலும் அத்தகையதொரு முடிவு கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் முகவும் கட்சியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது திமுக பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வந்த கொள்கை. ஆனால் &lt;strong&gt;&lt;em&gt;மாநிலத்தில் &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ஆட்சியில் இல்லாத சமயத்தில்தான் மத்தியில் ஆட்சியில் இருக்க வேண்டும்&lt;/em&gt;&lt;/strong&gt; என்பதை மறந்ததன் விளைவுதான் இன்றைய திமுகவின் இழிநிலைக்கு முக்கிய காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காலத்தில் மத்தியிலுள்ள கூட்டாட்சியில் அங்கத்தினராக இருக்கும் பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த நிலையை கருதி மத்தியிலுள்ள கூட்டணியரசு எடுக்கும் சில முடிவுகள் தாங்கள் ஆட்சியிலிருக்கும் மாநிலத்திற்கு எதிரானதாக இருக்க &lt;br /&gt;வாய்ப்புள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஐந்தாண்டுகளில் அடிக்கடி உயர்த்தப் பட்ட பெட்ரோல் விலை, சிங்கள அரசுக்கு சாதகமாக &lt;br /&gt;மத்திய அரசு எடுத்த பல முடிவுகள், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோதும் அந்த நாட்டுடனான பொருளாதார உறவில் விரிசல் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலையில் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்த நிலை.... இத்தகைய முடிவுகளுக்கு திமுக காரணம் இல்லை என்றாலும் மத்திய கூட்டணியில் இருந்ததால் பகிரங்கமாக எதிர்க்க முடியாத சூழல்....இன்று ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசு தைரியமாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறதென்றால் அதற்கு மத்தியிலுள்ள ஆட்சியில் தங்களுக்கு பங்கில்லை என்கிற துணிவால்தான். இல்லையென்றால் மேடமும் வாயை மூடிக்கொண்டுதான் இருந்திருப்பார்!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், நாட்டின் மிகப் பெரிய ஊழலில் திமுக அமைச்சர்களில் சிலர் சிக்கிக்கொண்டதற்கு முழு காரணமே மத்தியில் கட்சியின் சார்பில் &lt;br /&gt;அமைச்சர்களாக இருந்த ஒரு சிலரின் அரசியல் மற்றும் மேலாண்மை (Management) முதிர்வின்மையே காரணம். குறிப்பாக ராஜா. அவர் சட்டம்&lt;br /&gt;படித்தவர்தான் என்றாலும் நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர்கள் ஒருசிலர் மற்றும் அரசியல் தரகர்கள் சிலரின் வியாபார/அரசியல் தந்திர &lt;br /&gt;வலையில் சிக்கி அவர்களுக்கு சாதகமாக முடிவெடுக்கக் வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் என்றால் அதற்கு அவருடைய அனுபவமின்மையும் &lt;br /&gt;ஒரு காரணம். எங்களுக்கு சாதகமாக நீங்கள் முடிவெடுங்கள்...கலைஞர் தொலைகாட்சியில் முதலீடு செய்கின்ற சாக்கில் உங்களுக்கும் &lt;br /&gt;உங்களுடைய தலைவருக்கும் வேண்டிய தொகையை நாங்கள் தருகிறோம் என்பதுபோன்ற ஆசை வார்த்தைகளை நம்பி அவரும் வீழ்ந்து&lt;br /&gt;கட்சியையும் வீழ்த்திவிட்டார். அதற்கு ஒத்து போன கனிமொழிக்கும் இத்தகைய அனுபவின்மையே காரணம்... திருடுபவனை விட கையும் களவுமாய் சிக்கிக்கொள்பவனுக்குத்தான் தண்டனையின் வீரியம் அதிகம் தெரியும்.... அதைத்தான் கனிமொழி இப்போது அனுபவித்து படித்துக்கொண்டுள்ளார்...இனி திருடுவார்... ஆனால் சிக்கிக்கொள்ள மாட்டார்... தற்போதைய தமிழக முதல்வரைப் போல....&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய வங்கியிலும் கூட முதல் முதலாக மேலாளர் பதவிக்கு உயர்த்தப்படுபவர்கள் முதலில் மிகச் சிறிய கிராம கிளைகளில் &lt;br /&gt;அமர்த்தப்படுவார்கள். மும்பை, கொல்கொத்தா, தில்லி போன்ற பெரு நகரங்களில் கிளை மேலாளராக பணிபுரிய திறமை மட்டுமே ஒருவருக்கு&lt;br /&gt;போதாது. தொழிலில், வணிகத்தில் அனுபவம் மிகுந்த அதிபர்கள், முதலாளிகளின் வசிய வலையில் சிக்காமல் இருக்கக் கூடிய அனுபவமும் (work experience and maturity) மேலாளர்களுக்கு மிகவும் தேவை என்பதை அனுபவ பூர்வமாக உயர் அதிகாரிகள் அறிந்திருப்பதால்தான் தங்களைப் &lt;br /&gt;போன்றே புதியவர்களும் இத்தகைய வலையில் சிக்கி சீரழிந்துபோய்விடக் கூடாது என்று கருதி கிராம, நகர கிளைகளில் தகுந்த அனுபவம் பெற்ற&lt;br /&gt;பிறகே பெருநகர கிளைகளில் மேலாளர்களாக அமர்த்துவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும்... இத்தகைய மாபெரும் ஊழலுக்கு திமுக மட்டுமே பொறுப்பு என்கிற வாதத்தையும் என்னால் ஏற்கவே முடியவில்லை. ஏனெனெலில் ஹிந்து தினத்தாள் ராஜாவுக்கும், பிரதமருக்கும் இடையே எழுதப்பட்ட பல கடிதங்களை வெளியிட்டிருந்தது. அதன்படி ராஜா மற்றும் அவருடைய &lt;br /&gt;அமைச்சரகம் எடுத்த ஒவ்வொரு முடிவுக்கும் பிரதமர் மட்டுமல்லாமல் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவும் (GoM) முழு பொறுப்பு &lt;br /&gt;ஏற்கவேண்டும். பிரதமர் தனிப்பட்ட முறையில் நாணயஸ்தன், நேர்மையானவர் என்று கூறிக்கொள்வதில் பெருமையில்லை தன் கண் எதிரே&lt;br /&gt;நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு ஊழலை, முறை கேட்டை, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலை கண்டும் காணாதவாறு இருந்ததன் &lt;br /&gt;மூலம் ஒரு accomplice என்கிற நிலைக்கு உள்ளாகிறார். ராஜாவுக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் சிறை என்றால் குறைந்தபட்சம் பிரதமருக்கும்&lt;br /&gt;மூத்த அமைச்சர்களுக்கும் பதவி இழப்பாவது ஏற்பட வேண்டும்.. அதுதான் நியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காரணத்திற்காகவே திமுக அமைச்சரவையிலிருந்து விலகாமல் பிரதமருக்கும் சோனியாவுக்கும் ராஜாவின் முடிவுகளுக்கு பங்கு உண்டு&lt;br /&gt;என்பதை உரத்தக் குரலில் கூற வேண்டும். அரசியல் ரீதியாக அவர்களுடன் ஒத்துழையாமல் இருக்க வேண்டும். வேறு வழியின்றி பதவி விலகுவது &lt;br /&gt;என்று தீர்மானிக்கும்பட்சத்தில் அரசுக்கு அளித்துவரும் ஆதரவையும் ஒருசேர விலக்கிக்கொள்ள வேண்டும். அமைச்சரவையில் பங்கில்லை ஆனால் &lt;br /&gt;ஆதரவு வெளியிலிருந்து என்பதுபோன்ற அங்கும் இல்லை இங்கும் இல்லை என்பதுபோன்ற முடிவு எடுப்பதால் திமுகவுக்கு எவ்வித நன்மையும் &lt;br /&gt;இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக ஒன்று. இனியும் கனிமொழி, ராஜா போன்றவர்கள் நிரபராதிகள் என்கிற பத்தாம்பசலி போக்கை முக கைவிட்டுவிட வேண்டும். &lt;br /&gt;இருவருமே ஒருவேளை போதிய ஆதாரங்கள் இல்லை என்று உச்சநீதிமன்றத்தால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படலாம்... டான்சி வழக்கில் ஜெயலலிதா தன் மனசாட்சிக்கு எதிராக தன்னுடைய கையொப்பத்தை தன்னுடையதல்ல என்று கூறியதால்தான் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் குற்றவாளி என்பது அவருக்கும் தெரியும் உச்சநீதிமன்றத்திற்கும் தெரியும். அதுபோன்று கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்ட தொகையில் கனிமொழியை சம்மந்தப்படுத்த எந்த ஆவணங்களும் இல்லை என்கிற அடிப்படையில் கனிமொழி விடுவிக்கப்பட வாய்ப்புண்டு. அதுபோன்றே ராஜா எடுத்த முடிவுகளால் மத்திய அரசுக்கு இத்தனை லட்சம் கோடி இழப்பு என்ற வாதத்தை மெய்ப்பிக்க சிபிஐயிடம் எவ்வித ஆவண ஆதாரமும் இல்லை... மத்திய அரசே இழப்பு ஏதும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கூறவும் வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில் ராஜாவை விடுவிப்பதை தவிர வேறு வழியிருக்காது. ஆயினும் இருவருக்குமே தெரியும் தாங்கள் குற்றவாளிகள்தான் என்பது தெளிவாக தெரியும்...&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இனியும் என் மகள் நிரபராதி, திமுகவை அழித்தொழிக்க காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்றெல்லாம் முக புலம்புவதை தவிர்த்து இந்த சிக்கலில் இருந்து கட்சியை மீட்க என்ன வழி என்பதை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-495837965821571414?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/495837965821571414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=495837965821571414' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/495837965821571414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/495837965821571414'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/06/blog-post.html' title='மு.க. என்ன செய்யப் போகிறார்?'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-4394730200129044800</id><published>2011-05-18T12:42:00.000+05:30</published><updated>2011-05-18T12:42:16.631+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கலைஞரின் பரிதாப நிலை!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;1991ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கலைஞர் தலைமையிலான திமுக இத்தகைய மாபெரும் தோல்வியை தழுவியதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் கூட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை ஏற்படுத்திய அனுதாப அலைதான் ஜெயலலிதா தலைமியிலான கூட்டணி திமுக கூட்டணி வென்ற இரண்டு இடங்களை தவிர அனைத்து சட்டமன்ற இடங்களையும் கைபற்றி சட்டமன்றத்தில் எதிர்கட்சி என்ற ஒரு கட்சியே இல்லாமல் செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன்பும், பின்பும் முதலமைச்சர் அல்லது எதிர்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்தை கலைஞர் இழந்ததே இல்லை என்றே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரின் ஐம்பதாண்டு அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இப்படியொரு பரிதாப நிலைக்கு அவர் தள்ளப்படவில்லை. அவருடைய ஐம்பதாண்டுகால அரசியல் வாழ்க்கையை நினைவுகூரும் விதமாகத்தான் அவரை ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்தனர் போலும் அவருடைய சொந்த ஊரைச் சார்ந்த வாக்காள பெருமக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் ஏன் இத்தகைய மாபெரும் தோல்விக்கு உள்ளாகி தனிப்பட்ட முறையிலும் கட்சி தலைவர் என்ற முறையிலும் அவமானத்திற்குள்ளானார்? &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் அவர் வெற்றிபெற்று முதலமைச்சர் பதவியில் அமர்ந்தபோது அவருக்கு ஒரு &lt;a href="http://ennulagam.blogspot.com/2006/05/blog-post_10.html"&gt;பகிரங்க கடிதம்&lt;/a&gt; எழுதியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் குடும்ப அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும், ஊழல் பேர்வழிகளுக்குஅமைச்சரவையில் இடமளிக்க வேண்டாம் என்றும், தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் சரியாக மக்களை சென்றடைவதில் கவனம் தேவை என்றெல்லாம் பத்து கோரிக்கைகளை வைத்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் எதையெல்லாம் தவிர்த்தால் அவர் தமிழகத்தை வெற்றிப் பாதையில் செலுத்த முடியும் என்று கூறியிருந்தேனோ அதையெல்லாம் அவர் தவிர்க்க தவறியதன் விளைவுதான் இந்த வரலாறு காணாத மாபெரும் தோல்வி என்றால் மிகையாகாது என கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் 2001ல் திமுக தோல்வியை தழுவிய போதும் இப்போது 2011ல் தோல்வியை தழுவிய போதும் உள்ள கலைஞரின் போக்கில் நிறைய மாற்றங்களை நம்மால் காண முடிகிறது.&lt;br /&gt;2001ல் ஜெயலலிதா பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதலே கலைஞர் அண்ணா அறிவாலய அலுவலகத்தில் தினமும் நிரூபர்களை சந்தித்து அன்றைய சட்டமன்றத்தில் நடந்தவற்றைப் பற்றி விமர்சித்து பேசி வந்ததை நாம் கண்டோம். சில சமயங்களில் அது சிறுபிள்ளைத்தனமாக தோன்றினாலும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்கானிக்க ஒரு வலுவான எதிர்கட்சி இருந்ததை நம்மால் உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது?&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் ஒரு வாரம் ஆகியும் கலைஞரிடமிருந்து எவ்வித அறிக்கையும் இல்லை. 'தமிழக மக்கள் எனக்கு ஓய்வு அளித்துவிட்டனர். வாழ்த்துக்கள்' என்ற சுருக்கமான அறிவிப்பைத் தவிர மவுனம், மவுனம், மவுனம்!!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ 900 கோடியை வாரி இறைத்து கட்டப்பட்ட புதிய சட்டமன்ற வளாகத்தை ஜெயலலிதா வீம்புக்கு புறக்கணித்துவிட்டு முந்தைய கோட்டை வளாகத்தை புதுப்பிக்க இன்னும் சில கோடிகளை வீணடித்துக்கொண்டிருப்பதை சட்டமன்றத்தில் பிரதிநிதிகளே இல்லாத மதிமுகவும், திகவும் விமர்சிக்க கலைஞரிடம் இருந்து எவ்வித விமர்சனமும் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த ஆழ்ந்த மவுனம்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மக்களுக்கு உழைத்தது போதும் அவர்கள் எப்படியோ போகட்டும் என்று நினைத்துவிட்டாரா?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது தோல்வியின் தாக்கத்திலிருந்து அவர் இன்னும் விடுபடவில்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் வாழ்க்கை போதும் என்று அவர் நினைத்துவிட்டால் அதைப்பற்றியாவது உடனடியாக அவர் அறிக்கையொன்றை வெளியிட வேண்டும். செய்வாரா?&lt;br /&gt;&lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-4394730200129044800?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/4394730200129044800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=4394730200129044800' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4394730200129044800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4394730200129044800'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/05/blog-post_18.html' title='கலைஞரின் பரிதாப நிலை!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-8016519129157359129</id><published>2011-04-18T13:03:00.000+05:30</published><updated>2011-04-18T13:03:11.178+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களுக்கு....</title><content type='html'>திரு சகாயம் அவர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக உங்களுடைய பெயர் தினத்தாள்களில் அதிகம் அடிபடுகிறது. மத்திய அமைச்சர் ஒருவர் மீது நீங்கள் பொய் வழக்கு போடச் சொல்லி உங்களுக்கு கீழ் பணியாற்றிய ஒரு அதிகாரியை வற்புறுத்தியதாகவும் அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு தன்னை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று விண்ணப்பிக்க அவரை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் அதிகாரி தமிழக அரசுக்கு பரிந்துரைத்ததாகவும் அதற்கும் நீங்கள்தான் காரணம் என்பதுபோலவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்னர் தினமலரில் வெளியான உங்கள் அலுவலக வாழ்க்கைப் பயண விவரங்களை படித்த பிறகு &lt;br /&gt;உங்களைப் போன்ற ஒரு நேர்மையான அதிகாரி ஒரு மத்திய அமைச்சர் மீது பொய் வழக்கு போடச் சொல்லும் அளவுக்கு தரமிறங்கியிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தினமலரில் வெளியாகியிருந்த அந்த கட்டுரையில் "இவர் பந்தாடப்பட்ட விதமே இவருடைய நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாக்கியம்தான் என்னை உங்களுக்கு இந்த கடிதத்தை எழுத தூண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாக்கியம் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் நான் பட்ட பாட்டை நினைவுக்கு கொண்டு வருகிறது. நான் பணியாற்றிய வங்கியில் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற நாளிலிருந்து  பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை அதாவது சுமார் இருபத்தைந்து ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட கிளைகளில்/அலுவலகங்களில் பணியாற்ற வேண்டியிருந்தது.  நான் என்னுடைய இறுதி பத்தாண்டுகளில் கொச்சியில் நான்கு வருடங்களும் சென்னையில் ஆறு வருடங்களும் பணியாற்றிய காலத்தை இதிலிருந்து குறைத்துவிட்டு பார்த்தால் மீதமுள்ள பதினைந்து ஆண்டுகளில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பணியாற்றியுள்ளது தெரியவரும். சாதாரணமாக ஒரு அதிகாரியை நான்காண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வேறொரு இடத்திற்கு மாற்றுவார்கள். ஆனால் நானோ ஒரு இடத்திலும் சராசரியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருந்ததில்லை அல்லது இருக்க அனுமதிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு காரணம் நான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் மட்டுமல்ல. நான் மனமுதிர்வு இல்லாதவனாய், அவசரபுத்திக்காரனாய், அளவுக்கு மீறிய கண்டிப்புள்ளவனாய் இருந்ததும் ஒரு காரணம் என்பதை இப்போது உணர்கிறேன். நேர்மையான பல அதிகாரிகளும் செய்யும் தவறுதான் இது. ஏதோ நான் மட்டும்தான் நேர்மையானவன் என்றும் கண்டிப்புடன் நடந்துக்கொண்டால் மட்டுமே நமக்கு கீழே பணியாற்றுபவர்கள் நம்மைக் கண்டு அஞ்சி பணிபுரிவார்கள் என்றும் நான் நினைத்துக்கொண்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம். அதுமட்டுமல்லாமல் மேலதிகாரிகள் அனைவருமே நேர்மையற்றவர்கள் ஆகவே அவர்களுடன் எதிலும் ஒத்துப்போக தேவையில்லை என்று எண்ணியிருந்ததும் ஒரு காரணம். ஆகவேதான் எந்த ஒரு இடத்திலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மேல் என்னால் நிலைத்து பணியாற்ற முடியவில்லை. இளம் வயதிலேயே அதிகாரியானதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை இப்போது உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்தாண்டு காலம் அதிகாரியாக பணியாற்றியபிறகுதான் என்னுடைய தவறுகளை என்னால் உணர முடிந்தது. என்னுடைய முன்கோபம், தேவையற்ற பிடிவாதம், கண்டிப்பு ஆகியவைகளை களைந்து மனப்பக்குவம் அடைந்த பின் என்னுடைய இறுதி பத்தாண்டுகளில் இரண்டு இடங்களில் நிலைத்து பணியாற்றி நிம்மதியுடன் ஓய்வுபெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறிய தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றிய எனக்கே இந்த நிலை என்றால் அரசு அதிகாரியாக பணியாற்றுகின்ற உங்களுடைய நிலை?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கட்டுரையில் நீங்கள் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி அதில் 'நேர்மையான அதிகாரிகள் புறக்கணிப்படுகின்றனர்' என்று குறிப்பிட்டதுடன் உங்களுடைய சொத்து விவரம், வங்கிக் கணக்கு ஆகியவற்றையும் குறிப்பிட்டு இதை தவிர வேறு ஏதாவது சொத்து இருப்பதாக தெரியவந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்' என்று முதல்வருக்கே சவால் விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இது உங்களுடைய நேர்மையையும் துணிச்சலையும் விட உங்களுடைய மனமுதிர்வின்மையையே காட்டுகிறது. நாம் நேர்மையானவர்கள் என்பதை பிறர்தான் கூற வேண்டும். அதை நாமே பறைசாற்றிக்கொள்வது சிறுபிள்ளைத்தனம். நேர்மையானவன் என்பது பட்டமோ அல்லது  நீங்கள் உங்கள் சட்டையில் அணிந்துக்கொண்டு செல்லும் 'பேட்ஜோ' அல்ல மிஸ்டர் சகாயம். மேலும் நேர்மை என்பது உங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு virtue அல்ல என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். நீங்கள் நேர்மையானவர் என்பதாலேயே அரசு உங்களை தலை மீது தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்பதில்லை. அல்லது உங்களுடைய நேர்மைக்கு அங்கீகாரம் அளித்து கவுரவிக்க வேண்டும் என்றும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்களை சுற்றிலுமுள்ள நேர்மையற்ற அதிகாரிகள் மத்தியில் நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டீர்கள், அல்லவா? அதனுடைய பலனை அல்லது விளைவுகளை (consequence) எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அடிக்கடி ஏற்படுகின்ற ஊர் மாற்றங்களால் நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடைய மனைவி, மக்களும் சிரமங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் நேர்மையாக மட்டுமே இருப்பேன், எவருக்கும் அடிபணிய மாட்டேன் என்பது நீங்களாக தெரிவு செய்துக்கொண்ட நிலை. அந்த நிலைபாட்டால் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்பதில்லை... இந்த பத்து பதினைந்தாண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரி என்னும் அந்தஸ்த்தை எட்டிப் பிடித்துள்ளீர்களே அது உங்களுடைய நேர்மைக்கு கிடைத்த பரிசாக எடுத்துக்கொள்ளுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியலில் மலிந்து கிடக்கும் ஊழலை அடியோடு ஒழிக்க அவதாரம் எடுத்தவன் நான் என்றும் கூட உங்களைக் கற்பித்துக்கொண்டு உங்களுடைய பதவிக்கு மீறிய செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதும் கூட இதுவரை நீங்கள் கடந்து வந்த அலுவலக வாழ்க்கை பாதையை பற்றிய குறிப்புகளை அந்த கட்டுரையில் காண முடிகிறது. கோவையிலுள்ள சைவ உணவு விடுதியில் அனுமதி பெறாமல் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபான சரக்குகளை அரசு அதிகாரி ஒருவர் நேரடியாக சென்று ரெய்டு நடத்தி பிடிப்பதும், மணல் திருட்டை தடுக்கப் போன இடத்தில் கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாவதும்... ஒரு சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு உங்களை நீங்கள் கற்பனை செய்துக்கொள்வதை எடுத்துக்காட்டுகின்றன. இதெல்லாம் செய்துதான் ஒரு அரசு அதிகாரி தன்னுடைய நேர்மையை அல்லது யாருக்கும் எதற்கும் நான் அஞ்சாதவன் என்று காட்டிக்கொள்ள தேவையில்லை மிஸ்டர் சகாயம். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தன்னுடைய பதவிக்கு உரிய அதிகாரத்தை மட்டும் பயன்படுத்தி சட்டத்தை நிலைநாட்டுவதுதான் ஒரு அதிகாரியிடமிருந்து அரசு எதிர்பார்க்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Playing to the gallery என்பார்களே அதுபோல மக்கள் நம்மை பாராட்ட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தேவையற்ற வேலைகளில் நீங்கள் ஈடுபடுவதால்தான் உங்களுடைய மேலதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலருடைய பகைக்கும் நீங்கள் உள்ளாக வேண்டிய நிலையில் இருந்திருக்கிறீர்கள். நேர்மையான அதிகாரி என்றால் இப்படித்தான் செயலாற்ற வேண்டும் என்று நீங்கள் கருதுவது உங்களுடைய மனமுதிர்ச்சியின்மையையே காட்டுகிறது என்றால் தவறில்லை என கருதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;மதுரை ஆட்சியராக உங்களுடைய சமீபத்திய செயல்பாடுகளால் பத்திரிகைகள் பாராட்டும் அளவுக்கு நீங்கள் புகழடைந்திருக்கிறீர்கள் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வரை தொடர்ந்து பணியாற்ற வேண்டியது இதே அரசியல்வாதிகளுக்கு கீழேதான் என்பதையும் நினைவில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எறும்பை எடுத்து காதுக்குள் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்று புலம்பும் நிலைதான் உங்களுடைய நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு அதிகாரியாக பணியாற்றும் ஒருவர் நாட்டில் நிலவும் அரசியல் அமைப்புடன் இணைந்து அதன் துணையுடன் திறம்பட பணியாற்ற முயல வேண்டுமே தவிர அதை எதிர்த்துக்கொண்டு போராட முயல்வது சிறுபிள்ளைத்தனம். You should know how to use the SYSTEM for more effective functioning instead of fighting it. ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் விதிமீறல்களை, ஊழலை ஒரே இரவில் ஒழித்துவிட முயல்வது சிறுபிள்ளைத்தனம் மட்டுமல்ல முட்டாள்தனமும் கூட என்பதை நீங்கள் உணர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரசு அதிகாரியின் பெயர் பத்திரிகைகளில் வந்து பிரபலமடைய வேண்டும் என்பது முக்கியமல்ல. அது அரசியல்வாதிகளுக்கு. திரை மறைவில் பணியாற்றுவது அதிகாரிகளுடைய கடமை. அவர்களுடைய திறமைக்கு கிடைக்கும் பரிசு? அரசியல்வாதிகளிடமிருந்து கிடைக்கும் பாராட்டு. அங்கீகாரமும் பாராட்டும் உங்களை தேடி வர வேண்டும். அது கிடைக்கவில்லை என்பதற்காக அந்த அமைப்பையே எதிர்கொண்டு போராடுவேன் என்று எல்லா அரசு அதிகாரிகளும் இறங்கினால் நாட்டின் நிலை என்னவாகும்?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய செயல்பாடுகளால் பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகளிடமிருந்து கிடைக்கும் பாராட்டுகளால் நீங்கள் பெறும் மகிழ்ச்சி சொற்ப காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். ஆனால் மனப்பக்குவத்துடன் உங்களுக்கு மேலுள்ள அதிகாரிகளையும் மற்றும் உங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களையும் அரவணைத்து செல்வதால் மட்டுமே அரசு இயந்திரத்தை திறம்பட கையாள முடியும். அதன் காரணமாக உங்களுடைய பணியிலும் நீங்கள் வெற்றியடைய முடியும். அதனால் உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கிறதோ இல்லையோ நீங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும்போது உங்களுக்கு நிம்மதியான மனதிருப்தி கிடைக்கும். அதுதான் நிரந்தரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டிபிஆர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-8016519129157359129?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/8016519129157359129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=8016519129157359129' title='70 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/8016519129157359129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/8016519129157359129'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/04/blog-post_18.html' title='மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களுக்கு....'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>70</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-6581137215598603870</id><published>2011-04-12T16:54:00.001+05:30</published><updated>2011-04-13T08:13:36.183+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2011'/><title type='text'>என் வாக்கு யாருக்கு, ஏன்?</title><content type='html'>முதலில் இந்த கட்டுரைக்கு 'என் கணிப்பு' என்று தலைப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் கருத்துக் கணிப்புகளுக்கு தடையுள்ளதே என்பது நினைவுக்கு வந்தது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஏதோ இப்போதுதான் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவதுபோன்றல்லவா இப்போதைய தேர்தல் கமிஷன் இத்தகைய தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது? ஆகவே நான் என்னுடைய அனுமானங்களை கணிப்பு என்று எழுதப்போக கமிஷன் என்னையும் 'சஸ்பெண்டோ' ஏன், கைதோ செய்துவிட்டால்? (நல்லவேளையாக சஸ்பெண்ட் செய்ய நான் அரசு ஊழியன் இல்லை.. ஓய்வுபெற்ற, வேலையற்ற பேர்வழி!!).&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்பதை ஓரிரு விழுக்காடு வாக்காளகர்களை விசாரித்துவிட்டு அதன் அடிப்படையில் ஒட்டுமொத்த வாக்காளர்களும் இவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கணித அடிப்படையில் 'கணிப்பு' என்ற பெயரில் தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சிகள்தான் இம்முறை வெற்றியடையும் என்கிற பம்மாத்து வேலைதான் (களவாணித்தனம் என்று எழுத மனம் வரவில்லை) இந்த கருத்துக்கணிப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே அஇஅதிமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றிவிட்டதுபோன்றதொரு மாய சூழலை வடமாநில தொலைக்காட்சி நிறுவனங்கள் உருவாக்க அதை நம்பி தில்லி ஆறு நட்சத்திர விடுதி ஒன்றின் ஒரு சொகுசு தளத்தையே புக் செய்துவிட்டு தலைவி ஏமாந்து நின்றதை நான் பார்த்ததுதானே. &lt;br /&gt;&lt;br /&gt;வாக்காளர்களுடைய மனதை எடைபோட, அதுவும் தமிழக வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் கணிப்பதற்கு 'கணித' அறிவு போதாது. அவர்களுடைய மனநிலையை அறிந்துக்கொள்ளக் கூடிய சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும். அந்த கலை இன்றைய 'கணித மேதை'களுக்கு அது கைவரப்போவதில்லை. ஆகவே தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் முடிந்தபிறகு புற்றீசல் போன்று வரப்போகின்ற கணிப்புகளையும் நம்பத் தேவையில்லை. வருகின்ற மே மாதம் 13ம் தேதி நள்ளிரவு அல்லது 14ம் தேதி விடியற்காலைவரை  காத்திருக்க வேண்டியதுதான் ஒரே வழி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்னுடைய ஓட்டு யாருக்கு என்பதை தெரிவிக்கக் கூடிய உரிமை எனக்கு உண்டு அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என்னுடைய குடும்பமும் பரம்பரை, பரம்பரையாகவே காங்கிரசுக்குத்தான் வாக்களித்திருக்கிறோம் என்பதை பலமுறை கூறியுள்ளேன். அந்த கட்சியின் வேட்பாளர் என்னுடைய தொகுதியில் நிற்கவில்லையென்றால் அந்த கட்சி சார்ந்திருக்கும் கூட்டணி எதுவோ அந்த கட்சியின் வேட்பாளருக்குத்தான் வாக்களித்து வந்திருக்கிறோம். ஆனால் எங்களுடைய துரதிர்ஷ்டம் நான் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒரே வருடத்தில் இரண்டு முறை என்னுடைய குடியிருப்பை மாற்ற வேண்டி வந்ததால் இம்முறை எனக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. என்னுடைய முந்தைய விலாசத்தில் என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தும், பட்டியல் வெளிவந்ததும் என்னுடைய விலாச மாற்ற விண்ணப்பத்தை அடுத்திருந்த முனிசிபல் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தும் வழக்கம்போல அரசு இயந்திரம் தனக்கே உரிய தாமதத்துடன் இயங்கி என்னை 'வாக்கு' அற்றவனாக ஆக்கிவிட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை, தன்னுடைய இரு மகன்களுக்கும் புதிய பதவிகளை (ஒருவருக்கு துணை முதல்வர் பதவி மற்றவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் பதவியாம்!) மட்டுமே பெற்று தந்திருக்கிறார் என்கிற அம்மையாரின் வாதத்தையோ அல்லது தன்னுடைய திருமண மண்டபம் பறிபோனதே என்கிற ஆதங்கத்தில் ஊழல் மன்னர் கலைஞர் என்கிற வெத்துவேட்டு நடிகரின் வாதத்தையோ என்னால் ஏற்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரின் தலைமையிலுள்ள ஆட்சி என்னைப் போன்ற நடுத்தர மற்றும் உயர்நடுத்தர நகரவாசிகளுக்கு என்ன செய்ததோ இல்லையோ கீழ்நடுத்தர மற்றும் வருமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு என்ன செய்யவில்லை? இதுவரை இல்லாத அளவுக்கு அரசு கருவூலத்தில் இருந்து அவர்களுக்கு இலவச திட்டங்கள் என்ற பெயரில் தாரைவார்த்தது எத்தனை கோடிகள்? அது அனைத்தும் மக்கள் வரிப்பணம்தான் என்றாலும் அதை அனுபவித்தவர்கள் எவரும் வரி செலுத்துபவர்கள் இல்லை என்பதை மறந்துவிட முடியவில்லை. உள்ளவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு அளிப்பதுதான் அரசு திட்டங்கள். அதுவும் ஏழை எளியவர்களுக்கென்று கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு நிறைவேற்றிய பல இலவச திட்டங்கள் அதற்கு ஒரு படி மேலே சென்று ஏழை எளியவர்களுக்கு பல வசதிகளை செய்துக்கொடுத்துள்ளது இன்றைய அரசு. இதில் ஒன்றைக் கூட அம்மையாரின் பத்தாண்டு கால ஆட்சியில் செய்ததில்லை. கடந்த 2006 தமிழக தேர்தலில் திமுக இத்தகைய திட்டங்களை தேர்தல் அறிக்கையில் பட்டியலிட்டபோது இது சாத்தியமில்லை என்று எள்ளி நகையாடியவர்தானே இவர்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இந்த ஒரு நல்ல காரியத்துக்காகவே திமுகவுக்கும் அவற்றை நிறைவேற்ற நிதியுதவி அளித்த மத்திய அரசு கூட்டணியின் மூத்த உறுப்பினரான காங்கிரசுக்கும் என்னுடைய ஓட்டு, இம்முறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி ஊழல் மலிந்துபோய் தமிழகத்தையே 2G மூலம் தலைகுணிய வைத்துவிட்டாரே கலைஞர் அவரை எப்படி மீண்டும் தெரிவு செய்வது என்றால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அவரை புறக்கணியுங்கள் என்பதுதான் என்னுடைய பதில். &lt;br /&gt;&lt;br /&gt;சட்டமன்ற தேர்தல் நடப்பது தமிழகத்தை யார் ஆளவேண்டும் என்பதற்காக, அதில் மத்தியில் நடந்தவற்றைப் பற்றி சிந்திப்பதில் பலனில்லை. இன்று தமிழக கிராமப்புறத்திலுள்ள வாக்காளர்கள்தான் அதிக அளவில் வாக்களிக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு எங்களுக்கு என்ன செய்யப்போகிறது என்ற கவலைதானே தவிர 2Gயில் யார் எத்தனை கோடி சுருட்டினார்கள் என்ற கவலை இல்லை. அத்தகைய கவலை இன்று ஊடகங்களில் எழுதிக்கொண்டிருக்கின்ற படித்த மேதைகளுக்குத்தான். கடந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழர்களை முன் வைத்து இந்த கூட்டணியை தோற்கடிக்கவேண்டும் என்று அணல் பறக்க எழுதிய கூட்டம்தானே இது. மக்களின் அன்றாட பிரச்சினைகள் முன்பு அடிபட்டுபோகிற பிரச்சினைகளை அவர்கள் முன் வைப்பதில் என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோன்ற பிரச்சினைதான் இந்த 2G பிரச்சினையும். அதைவிடவும் திமுகவின் வெற்றியை பாதிக்கக் கூடிய பிரச்சினைகள் பல உள்ளன. விலைவாசி உயர்வு (அதில் பெட்ரோல் விலையுயர்வை பற்றி பாமரன் கவலைப்படப் போவதில்லை), மின் தட்டுப்பாடு, நகரவாசிகளை அன்றாடம் பாதிக்கின்ற பழுதடைந்த சாலைகள் (சென்னைவாசிகளுடைய நிலமை எவ்வளவோ மேல்).... இவைகளை முன்வைத்து அம்மையாரோ அல்லது அவருடைய கூட்டணி தலைவர்களோ அவற்றை முழுமையாக தீர்த்துவிடுவோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து கலைஞரும் அவருடைய குடும்பத்தாரும் கோடி, கோடியாக சுருட்டுகின்றனர் என்று ஒப்பாரி வைப்பதை கேட்டு, கேட்டு மக்களுக்கு வெறுப்புத்தான் வந்திருக்கும். இதை கிலோ கணக்கில் தங்க நகைகள், நூற்றுக் கணக்கில் காலணிகள், ஒரு அறை முழுவதும் 'சூட்கேஸ்கள்' என தன்னுடைய வீட்டில் அடுக்கி வைத்திருந்தவர் பேசினால் எப்படி எடுபடும்? இரு நூறு நபர்கள் தங்கக் கூடிய போயஸ் கார்டன் மாளிகையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் 'உடன் பிறவா சகோதரி மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் ராஜபோக வாழ்க்கை அனுபவிக்கும் ஒருவர் சென்னை கோபாலபுரத்தில் எவ்வித வசதிகளும் இல்லாத, நடுத்தரவாசிகள் வாழும் பகுதியில் எவ்வித பந்தாவும் இல்லாமல் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் கலைஞரை கோடி கோடியாய் சுருட்டுகிறார் என்றால்..... அந்த வீட்டையும் தன்னுடைய காலத்திற்குப் பிறகு ஏழை எளியவர்களுக்கென எழுதி வைத்தவர் கலைஞர். அவர் சுருட்டுவதாக கூறுகின்ற கோடிகள் அவர் எங்கு பதுக்கி வைத்திருப்பார் என எண்ண தோன்றுகிறதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அரசியலில் பரவி இருப்பது ஊழல். அது இந்தியாவில் சற்று கூடுதல்தான். ஏனெனில் இங்கு கையூட்டு கொடுப்பதையே தவறு என்று உணராத மக்கள் இருப்பதுதான். பிறப்பு சான்றிதழிலிருந்து மரண சான்றிதழ் வரை ஒரு 'தொகை'யை கொடுத்துவிட்டு சான்றிதழை விரைவில் பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்று கருதும் மக்கள் வசிக்கும் சூழலில் கையூட்டு வாங்கும் பழக்கத்தை எப்படி ஒழிக்க முடியும்? அரசியல்வாதிகளை விட்டுவிடுங்கள், இந்திய மருத்துவ கழகத்தின் மெத்தப் படித்த தலைவரே ஆயிரம் கோடி வரை ரொக்கமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததைத்தான் சமீபத்தில் கண்டோமே. அவர் வளர்ந்த குடும்ப சூழலும், அவர் படித்த பட்டமும், ஆற்றிய மருத்துவ சேவைகளும் அவரை ஊழலில் இருந்து மீட்கவில்லையே. இன்று அரசு அதிகாரிகளில் 90 விழுக்காட்டுக்கு குறையாமல் இத்தகையோர்தாமே.  பிறப்பிலிருந்தே ரத்தத்தில் ஊறிப்போயுள்ள இந்த 'கொடுக்கும்' மற்றும் 'வாங்கும்' பழக்கம் இன்றோ அல்லது நாளையோ மறையப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே எதிர்வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளை தெரிவு செய்வது ஊழலின் அடிப்படையில் மட்டும் இருக்கலாகாது என்பதுதான் என்னுடைய வாதம். கடந்த ஐந்தாண்டு காலத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தமிழகத்தில் இப்போதுள்ள இரு முக்கிய திராவிட தலைவர்களான கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியவர்களுடைய கடந்த கால ஆட்சி திறனை கணித்து வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அடிப்படையில் ஆட்சித் திறன், எந்த பிரச்சினையையும் பதறாமல் அணுகும் திறன், அனைத்து  இனத்தவரையும் முக்கியமாக சிறுபான்மையினரையும் அணைத்து செல்கின்ற திறன், மத்தியிலுள்ள ஆட்சியாளர்களுடன் இணைந்து செயலாற்றுகின்ற திறண் ஆகியவற்றின் அடிப்படையில் கணிப்பிடுகையில் என்னுடைய ஓட்டு நிச்சயம் கலைஞர் தலைமையிலான கூட்டணிக்குத்தான். &lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணி அமைப்பதிலும் அவர்களை அரவணைத்து செல்வதிலும் நிதானத்தை இழந்து செயல்பட்டதை வைத்து பார்க்கையில் மீண்டும் ஆட்சி செய்யக்கூடிய மனப்பக்குவம் அம்மையாருக்கு வரவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.  &lt;br /&gt;&lt;br /&gt;***************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-6581137215598603870?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/6581137215598603870/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=6581137215598603870' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/6581137215598603870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/6581137215598603870'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/04/blog-post.html' title='என் வாக்கு யாருக்கு, ஏன்?'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-4622337974947904928</id><published>2011-03-23T12:42:00.000+05:30</published><updated>2011-03-23T12:42:51.953+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2011'/><title type='text'>தேர்தல் 2011 - இலவச திட்டங்களும் ஒருவகையில் லஞ்சம்தான்!</title><content type='html'>ஓட்டுக்கு பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை தடுக்கும் முகமாக தேர்தல் கமிஷன் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கையில் அரசு&lt;br /&gt;திட்டங்கள் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்களை இலவசமாக வாரி வழங்குவதாக தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடுவது எந்த வகையில் நியாயம்?&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த முறை திமுக அறிவித்திருந்த இலவச திட்டங்கள் மூலமாக தொலைக்காட்சி பெட்டி, எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு என அவற்றிற்கு &lt;br /&gt;தகுதியற்ற பலரும் பயனடைந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. என்னுடைய குடியிருப்புக்கு அருகாமையில் குடும்ப அடையாள அட்டை&lt;br /&gt;வைத்திருப்போருக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டபோது நாற்சக்கர வாகனங்களில் வந்து அவற்றை பெற்றுக்கொண்டு சென்றவர்களையும் காண முடிந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;அரசின் நலத்திட்டங்கள் அவற்றை பெற தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பது அடிப்படை நியதி. மக்களின் வரிப்பணத்திலிருந்து செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களை குடும்ப அடையாள அட்டைதாரர்கள் அனைவருக்கும் செயல்படுத்துவது  முட்டாள்தனம். குடும்ப அட்டை வழங்கப்படுகின்ற சமயங்களில் நிரந்தர வருமானம் உள்ள பல அரசு ஊழியர்களும் கூட தங்களுடைய நிஜ வருமானத்தை மறைத்து அல்லது குறைத்து குறிப்பிட்டு குடும்ப அட்டைகளை பெற்றுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே குடும்ப அட்டைதாரர்கள் என்ற அடிப்படையில் மட்டும் அரசு வழங்கும் இலவச பொருட்களை வினியோகிப்பது அரசு பணத்தை வீணடிப்பதற்கு சமம். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்களித்திருந்த அனைத்து இலவச திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுவிட்டது என பெருமை அடித்துக்கொள்ளும் தற்போதைய அரசு அதனால் அரசுக்கு மொத்தமாக எத்தனை கோடிகள் செலவிடப்பட்டன அவற்றை அரசு எவ்வாறு அல்லது &lt;br /&gt;எங்கிருந்து திரட்டியது (Mobilised) என்பதையும் வெளியிடுவது அவசியம்.  மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களுக்கென&lt;br /&gt;ஒதுக்கப்படும் நிதி இத்தகைய திட்டங்களுக்கு புறம்பான  செலவினங்களாக (Non-Plan expenditure) வீணடிக்கப்படுகின்றனவா என்பதையும் மாநில &lt;br /&gt;அரசு தெளிவுபடுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் ஆகியவை வழங்கப்படுவது சட்டவிரோதம் என்று கூறும் தேர்தல் கமிஷன் இத்தகைய இலவச திட்டங்களை எப்படி தடைசெய்யப் போகிறது? இவை இரண்டிலும் உள்ள வேறுபாடு என்ன? வேட்பாளர் வழங்கும் பணம் அல்லது பொருட்களுக்கு தேவைப்படும் பணம் அவர்களுடைய சொந்த அல்லது கட்சிப்பணமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே அவற்றை தனிநபர் &lt;br /&gt;செலவினங்கள் என்று விட்டுவிடலாம். ஆனால்  எங்களுடைய கட்சி அரசமைக்க வாக்களித்தால் இவற்றை இலவசமாக வழங்குகிறோம் என்று ஒரு &lt;br /&gt;அரசியல் கட்சி வாக்குறுதியளிக்கும்போது அது அரசு கஜானாவையே அல்லவா பாதிக்கிறது?  முந்தையது சட்டவிரோத செயல் என்றால் பின்னது? &lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட மோசமாயிற்றே?&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் வெளியிடப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையில் பட்டியலிடப்பட்ட இலவசங்கள், சலுகைகள் என்பவற்றை நீக்கிவிட்டு பார்த்தால்&lt;br /&gt;உருப்படியாக எந்த நலத்திட்டங்களும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. போனால் போகிறது என்று 'மின் உற்பத்தியை பெருக்க மேலும் பல மின்&lt;br /&gt;அணு நிலையங்களை நிறுவுவோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரி, கடந்த ஐந்தாண்டுகளில் ஏன் இவற்றை செயல்படுத்தவில்லை? &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரங்கநாதசாமியின் பாதத்தில் வைத்து பூஜசெய்துவிட்டு வெளியிடப்படப்போகும் அதிமுக அறிக்கையிலும் இத்தகைய இலவச திட்டங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. இடதுசாரி கட்சிகளின் அறிக்கையை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் (அவர்கள் எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதேயில்லை என்பது வேறு விஷயம்!) மற்ற அனைத்துக் கட்சிகளின் அறிக்கைகளுமே இதே பாணியில்தான் இருக்கப்போகிறது என்பதில் ஐயம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய குறிக்கோளற்ற, கொள்கைகளற்ற அறிக்கைகளால் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எவ்வித நீண்ட கால பயனும் கிடைக்கப்போவதில்லை. இலவசம் என்ற பெயரில் மக்களின் இன்றைய தேவைகளை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்ற நினைப்பில் அரசியல் கட்சிகள் செயல்படுகின்ற வரையில் நிலைமை இப்படித்தான் நீடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் தமிழக மக்களின் தலையெழுத்து!&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-4622337974947904928?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/4622337974947904928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=4622337974947904928' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4622337974947904928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4622337974947904928'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/03/2011_23.html' title='தேர்தல் 2011 - இலவச திட்டங்களும் ஒருவகையில் லஞ்சம்தான்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-3960487628344941038</id><published>2011-03-21T13:01:00.000+05:30</published><updated>2011-03-21T13:01:49.940+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2011'/><title type='text'>தேர்தல் 2011 - அதிமுக கூட்டணி குழறுபடி தொடர்கிறது</title><content type='html'>என்னுடைய கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்த அதிமுக தொகுதி உடன்பாட்டில் ஏற்பட்ட குழறுபடி இன்னும் தீர்ந்தபாடில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;'மேடம்' தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட, கொதிப்படைந்த அதிமுக தோழமை கட்சிகளில் இடது சாரி கட்சிகள் இரண்டும்தான் முதலில் போர்க்கொடி உயர்த்தின. அவர்களுடன் துக்கடா கட்சிகளான புதிய தமிழகம் போன்ற கட்சி தலைவர்கள் ஒட்டுமொத்தமாக 'கேப்டன்' அலுவலகத்திற்கு படையெடுத்துச் சென்று அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி மூன்றாம் அணியை உருவாக்குவதைப் பற்றி ஆராய அவரை அழைத்தனர். ஆனால் இத்தகைய முடிவு திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று கருதிய கேப்டன் அவர்களை சமாதானப்படுத்தி ஓரிரு நாட்கள் காத்திருக்கச் செய்தார். ஆயினும் மார்க்சிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் நிரூபர்கள் 'அதிமுகவுடன் சமரசம் செய்துக்கொள்வீர்களா?' என்று கேட்டபோது 'நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்யுங்கள், நான் அதை செய்யப்போவதில்லை.' என்றார் காட்டமாக. &lt;br /&gt;&lt;br /&gt;அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சை மீண்டும் துவங்குவதற்கு கேப்டன் மூன்று நிபந்தனைகள் முன்வைத்ததாகவும் செய்திகள் வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;1. மதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;2. தேதிமுக விரும்பிய தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.&lt;br /&gt;3. தேர்தல் பிரச்சாரத்தை தங்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு யாரும் நிபந்தனை வைப்பதை எப்போதும் விரும்பாத 'மேடம்' இவற்றை ஏற்றுக்கொண்டதுபோன்ற பாவனையை செய்து தன்னுடைய பிரச்சார கூட்ட சுற்றுப்பயணத்தை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.  மதிமுகவை கூட்டணியில் சேர்ப்பதில்லை என்ற தன்னுடைய முந்தைய முடிவை ஒருபோதும் மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்பதை மேடம் முடிவெடுத்திருந்தாலும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல், தன்னுடைய 'மூத்த' தலைவர்கள் குழுவை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடர அனுப்பிவைத்தார்.இடதுசாரிகள், புதிய தமிழகம், சமக மற்றும் இதர சிறு, சிறு கட்சிகளுக்கு அவை விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவர்களும் தங்களுடைய மூன்று நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு தாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைத்துவுடன் மேடத்தை சந்தித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இடதுசாரிகளின் இந்த நடவடிக்கை ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். மதிமுகவை கூட்டணியில் இணைத்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;மீதமுள்ள இரு கட்சிகளான தேமுதிக மற்றும் மதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தேமுதிகவுக்கு இருந்த ஓட்டு வங்கியை மனதில் வைத்து அவர்களுடன் தொடர்ந்து மணிக்கணக்காக பேச்சு வார்த்தை நடத்தி ஒருவழியாக அவர்கள் விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் மதிமுகவுடன் ஒப்புக்கு பேச்சுவார்த்தை என்ற நாடகம் நடந்து வைகோ எப்படியும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தே அவர் கேட்டிருந்த 21 தொகுதிகளுக்கு பதில் 12 தொகுதிகளை ஒதுக்க மேடம் பெரிய மனதுடன் முன்வந்துள்ளார் என்றது அதிமுக குழு. 'கொடுத்தால் 21 இல்லையேல் கூட்டணியிலிருந்து விலகல்' என்றார் வைகோ பிடிவாதமாக. 'சரி சென்று வாருங்கள்' என்றார் மேடம் பதிலுக்கு. 'தேர்தலையே புறக்கணிக்கப்போகிறேன்' என்றார் வைகோ. 'உங்கள் முடிவுக்கு உங்களுடைய அன்பு சகோதரி என்ற பெயரில் வருந்துகிறேன்' என்று கடிதம் ஒன்றை எழுதி இனி பேசி பயனில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார் மேடம். &lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் முன்வைத்த மூன்று நிபந்தனைகளில் ஒரு  நிபந்தனையைக் கூட மேடம் நிச்சயம் ஏற்கப்போவதில்லை என்று கேப்டனுக்கு தெரியாமல் இல்லை. அவர் நினைத்ததுபோன்றே மதிமுக விலகியதையும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மதிமுக விலகிய செய்தி வெளியானதும் அவருக்கு வழங்கவிருந்த தொகுதிகளில் தங்களுக்கு சில தொகுதிகளை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிகிறது. அதாவது எரிகிற வீட்டில் முடிந்தவரை கொள்ளிகளை பிடுங்கலாம் என்ற நினைப்பில். ஆக, மதிமுகவைப் பற்றி இந்த கட்சிகள் பேசியதெல்லாம் வெறும் வெளிவேஷம், வடித்ததெல்லாம் வெறும் முதலைக் கண்ணீர் என்பது வெட்டவெளிச்சமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டனின் மீதமுள்ள இரு நிபந்தனைகளையும் மேடம் நிச்சயம் ஏற்கப்போவதில்லையென்பது, பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில் இப்போதும் தேமுதிக முழு திருப்தியடையவில்லை என்றும் இன்றும் தன்னுடைய பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களுடன் கேப்டன் இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார் என்றும் வெளியாகியுள்ள செய்தியும் மீண்டும் உறுதிபடுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து என்ன தெரிகிறது? நான் ஏற்கனவே கூறியிருந்ததைப் போன்று இந்த கூட்டணி, குறிப்பாக தேமுதிக-அதிமுக கூட்டணி, அற்ப ஆயுளைக் கொண்ட கூட்டணி என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இவ்விரு கட்சிகளின் தலைவர்களுமே ஒரே குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதால் இவர்களுக்குள் எந்த ஒரு விஷயத்திலும் ஒற்றுமை ஏற்படப் போவதில்லை என்பதும் தெளிவாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் முடிவுகள் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை புரட்டிப் போடப் போவது என்னவோ உண்மை. திமுக மற்றும் அதிமுக கட்சிகளைத் தவிர கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்த கட்சியும் எந்த கூட்டணிக்கும் தாவலாம் என்பதும் உண்மை. ஆனால் ஜெயித்தாலும் உடையக் கூடிய ஒரே கூட்டணி அதிமுக-தேமுதிக கூட்டணிதான். &lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக 160 இடங்களில் போட்டியிட முடிவு செய்திருப்பதிலிருந்தே மாநிலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடந்தான். சட்டசபையில் சிம்பிள் மெஜாரிட்டி கிடைக்க தேவையான தொகுதிகளை தாங்களாக தனித்து பெற்றுவிடக்கூடிய சூழலில் கேப்டனை தூக்கியெறிய ஒரு நொடி கூட மேடம் தாமதிக்கமாட்டார் என்பதும் உறுதி!&lt;br /&gt;&lt;br /&gt;தங்களுடைய நிழலுடனேயே ஒத்துப்போக முடியாதவர்கள் மேடமும், கேப்டனும். ஆகவே இவ்விரு கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதி கூட்டணி என்பதை வாக்களர்கள் உணர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஊழலற்ற ஆட்சி தேவைதான். ஆனால் அரசியல் நிச்சயமற்ற சூழல் தமிழகத்திற்கு தேவைதானா?&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-3960487628344941038?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/3960487628344941038/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=3960487628344941038' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/3960487628344941038'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/3960487628344941038'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/03/2011_21.html' title='தேர்தல் 2011 - அதிமுக கூட்டணி குழறுபடி தொடர்கிறது'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-8434974655551074598</id><published>2011-03-17T11:51:00.000+05:30</published><updated>2011-03-17T11:51:19.562+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2011'/><title type='text'>தேர்தல் 2011 - இன்று ஆலோசனை நாள்!</title><content type='html'>ஆலோசனை, ஆலோசனை, ஆலோசனை!!&lt;br /&gt;&lt;br /&gt;சன் செய்தி தொலைக்காட்சியில் தினமும் காலை 11.00 மணிக்கு ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவது வழக்கம். அதாவது மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி இது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்த ஆலோசனை நேரம் ஒளிபரப்படுகின்ற நேரத்தில் திரையின் கீழ்ப்பகுதியில் அதிமுக தோழமை கட்சிகளான இடதுசாரிகள், விஜயகாந்தின் தேதிமுக ஆகிய கட்சிகள் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக நாடா செய்திகள் ஓடிக்கொண்டே இருப்பதால் மருத்துவ ஆலோசனை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த அவசர ஆலோசனை?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் அம்மா நேற்று அதிரடியாக வெளியிட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல்தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு மாவட்டங்களில் ஒரு தொகுதி கூட கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கப்படவில்லை. தோழமை கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள பல மாவட்டங்களில் தோழமை கட்சிகளுக்கு போனால் போகிறது என்று தலா ஒரு தொகுதி. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஏறத்தாழ அம்மாவின் அனைத்து தோழமை கட்சிகளுமே பாதிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனவாம்!&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல்தான் இருக்கிறது இந்த ஆலோசனை!&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுகவின் நிலையோ அதைவிடவும் பரிதாபம். நேற்று காலை கூட அம்மா அவர்கள் பெருந்தன்மையுடன் 9 தொகுதிகளை தர முன்வந்துள்ளார், மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொண்டு கையெழுத்திடுங்கள் என்று தூது அனுப்பிவிட்டு அவருக்கு ஆலோசிக்கக் கூட சமயம் அளிக்காமல் அவருக்கு அளிப்பதாக கூறியிருந்த  தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது வைகோவின் முகத்தில் அடிப்பதற்கு சமம். இனியும் பொறுமையுடன் சனிக்கிழமை வரை காத்திருங்கள் என்கிறார் அவர்!&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாய் அமைத்த கூட்டணியில் இத்தகைய குழப்பம் ஏற்பட்டுவிட்டதே என்று வருத்தம் அடைந்துள்ளாராம் விஜயகாந்த்! ஆகவே தன்னுடைய கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் இன்று காலை ஈடுபட்டுள்ளாராம். அந்த கூட்டத்தில் பண்ருட்டியாரை அனுமதிக்காமல் இருந்தால் சுயகவுரவத்தை தக்கவைத்துக்கொள்ளும் அளவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் பாரத பிரதமரைப் போல கூட்டணி தர்மத்திற்காக அவமானத்தை சகித்துக்கொண்டு அம்மா தூக்கியெறியும் தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வ வேண்டியதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;இடது சாரிகளும் இன்று ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் பெரிதாக ஒன்றும் நடைபெறப்போவதில்லை என்பது உறுதி. அவர்களுக்கு என்றைக்கு மானம், ரோஷம் இருந்திருக்கிறது? கூட்ட முடிவில் ஏதாவது சமாதானம் கூறிக்கொண்டு கூட்டணியில் தொடர்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் 'மாபெரும் நடிகர்-தலைவர்' கார்த்திக் வைகோவுக்கு அதிமுகவை உதறிவிட்டு வாருங்கள் நாம் இருவரும் இணைந்து போட்டியிடலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.  ஒருவேளை வைகோ பாஜகவுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற செய்தியும் வருகிறது. நடிகர் சரத்குமார் திருச்செந்தூர், தூத்துக்குடி தங்களுக்கு கிடைக்கும் என்று கருதியிருந்தார் போலும். அவரும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தன்னுடைய அனைத்து தோழமை கட்சிகளையும் விரோதித்துக்கொள்ள அம்மா எப்படி துணிந்தார்? வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதுபோன்ற வேலையில் ஏன் இறங்கியுள்ளார்?&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய ஆஸ்தான சோதிடர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நீங்கள்தான் அமோக வெற்றிபெற்று முதல்வராக வருவீர்கள் என்று கூறியுள்ளனராம். அத்துடன் தென் இந்திய மற்றும் வட இந்திய பத்திரிகைகள் சிலவும் அதிமுகவின் அமோக வெற்றியை Predict செய்திருக்கிறார்களாம். ஆகவேதான் எதற்கு தேவையற்ற luggage என்று நினைத்து தோழமை கட்சிகளை கழற்றிவிட தீர்மானித்துவிட்டார் போலிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இனியாவது பாதிக்கப்பட்ட கட்சிகள் தங்களுடைய தவறுகளை உணர்ந்து கூட்டணியிலிருந்து விலகினால் தேர்தலில் தோற்றாலும் தன்மானத்துடன் அரசியலில் நிலைத்திருக்க முடியும். இல்லையென்றால் ஓரிரு இடங்களில் வெற்றிபெற்றாலும் போதும் என்று நினைத்து தன்மானத்தை விலைக்கு விற்க முன்வந்தால் எதிர் வரும் தேர்தல்களில் இருக்கும் இடம் தெரியாமல் போக வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-8434974655551074598?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/8434974655551074598/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=8434974655551074598' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/8434974655551074598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/8434974655551074598'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/03/2011_17.html' title='தேர்தல் 2011 - இன்று ஆலோசனை நாள்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-4076787604940569135</id><published>2011-03-16T14:35:00.000+05:30</published><updated>2011-03-16T14:35:17.104+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2011'/><title type='text'>தேர்தல் 2011 - அம்மாவின் சாணக்கியம்!</title><content type='html'>தான் வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை எதிராளி தோற்கவேண்டும் என்று நினைப்பவர்கள் சிலர். அதுபோன்றே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்களும் உள்ளனர். இவர்களுள் ஒருவர் நம்முடைய 'அம்மா' தலைவி! சமீபத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட இடைக்கால பிணக்கில் அவருடைய சாணக்கியத்தனமான நிழல் விளையாட்டு இதை மீண்டும் நிரூபித்துள்ளது. காங்கிரசை பாமகவையும் தன்னுடைய கூட்டணிக்கு இழுப்பதுபோல் ஒரு பாவனையை உண்டாக்கியதுதான் கலைஞரை இரு கட்சிகளுமே விரும்பிய தொகுதி எண்ணிக்கையை கொடுக்க வைத்தது என்றால் மிகையல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்குள் பிரச்சினை என்பதை கேள்விப்பட்டவுடனே தன்னுடைய தோழமை கட்சிகளான இடது சாரி மற்றும் மதிமுக கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை தன்னிச்சையாக தள்ளிப்போட்டவர் அம்மா! ஒருவேளை காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்குள் ஏற்பட்ட இடைக்கால பிணக்கு தீர்க்க முடியாமல் போயிருந்தால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ் தன்னை அணுகும் சூழலில் தோழமை கட்சிகளுக்கு வழங்க உத்தேசித்திருந்த தொகுதிகளை காங்கிரசுக்கு தாரைவார்த்துவிட்டு இரண்டு இடது சாரி கட்சிகளையும் மதிமுகவையும் கழற்றிவிடவும் தயங்கியிருக்க மாட்டார் அவர். இதை முழுமையாக உணர்ந்திருந்தும் வேறு வழியின்றி அம்மாவின் அழைப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழலில் இருந்தன இந்த கட்சிகள். &lt;br /&gt;&lt;br /&gt;துவக்க முதலே காங்கிரசையும் பாமகவையும் தன்னுடைய கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்ற எண்ணம் அம்மாவுக்கு துளியும் இருந்ததில்லை. அவருடைய நோட்டம் எல்லாம் கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தன்னுடைய கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற விடாமல் வாக்குகளை சிதறடித்த தேமுதிகவை இம்முறை தன்னுடைய கூட்டணியில் இணைத்து அந்த கட்சியை, அல்லது அந்த கட்சி தலைவர் விஜயகாந்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவதில்தான் இருந்தது. தன்னுடைய எண்ணத்தை விஜயகாந்தின் நம்பிக்கையை பெற்ற பண்ருட்டியாரை வளைத்துப்போடுவதன் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார் அம்மா! அரசியலிலும் சரி அரசு செயல்பாடுகளிலும் சரி இனியும் அனா, ஆவன்னா கூட தெரியாத, அம்மாவின் சாணக்கியத்தனத்தில் அடிபட்டுப்போனதை கூட உணரமுடியாத, விஜயகாந்த் திமுக என்னும் பேயை ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தை ஓட்டிக் காட்டுகிறேன் என்று மார்தட்டிக்கொள்வது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக, நான், எனது என்று தன்னைப் பற்றியே பெருமை பேசிக்கொள்வது அம்மாவின் தனி ஸ்பெஷாலிட்டி. இந்த குணாதிசயம் அப்படியே, சற்றும் குறையாமல், விஜயகாந்துக்கும் உள்ளது என்பதை அவருடைய இத்தகைய பேச்சுக்கள் காட்டுகின்றன. தமிழகத்தை ஐந்தாண்டு காலமாக ஆட்டிப்படைக்கும் தீய சக்தியான கருணாநிதியை ஒழித்துக்காட்டுவேன் என்றவர் அம்மா. தமிழகத்தை பிடித்திருக்கும் பேயை ஓட்டிக்காட்டுவேன் என்கிறார் நடிகர்! ஆக, இருவருமே தனியொரு ஆளாக தாங்கள் நினைத்ததை செய்துக் காட்டுவார்களாம்.  அதாவது தங்களுடைய தலைமையில் பணியாற்றும் கட்சி தலைவர்களோ, தொண்டர்களோ தேவையில்லை என்பதுபோல் இருக்கிறது இவர்கள் இருவருடைய தொனியும். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய குணாதிசயம் கொண்ட இரு தலைவர்கள் எத்தனை காலம் இணைந்து, கருத்தொருமித்து செயல்பட முடியும் என்பது புரியாத புதிர். இவர்கள் இருவரையும் இணைத்தது இருவருக்கும் பொதுவான எதிரியான தீய சக்தி என்றாலும் மிகையாகாது. இருவருமே தனிப்பட்ட முறையில் கலைஞரால் பாதிக்கப்பட்டவர்கள். இருவருமே கலைஞரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கட்டாயத்திலுள்ளவர்கள். மற்றபடி தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கை தன்மீது சுமத்தி தன்னை அண்டை மாநிலங்களிலும் அவமானப்படுத்தியவர் கலைஞர் என்ற குரோதம் அம்மாவுக்கு. சென்னை கோயம்பேட்டிலிருந்த தன்னுடைய மிகப்பெரிய சொத்தான திருமண மண்டபத்தை வேண்டுமென்றே மேம்பாலம் கட்டுகிற சாக்கில் தன்னிடமிருந்து அபகரித்ததில் கலைஞருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்ற கடுப்பில் இருப்பவர் நடிகர்!&lt;br /&gt;&lt;br /&gt;இருவருடைய கட்சிகளுமே சர்வாதிகாரத்திற்கு பெயர் போனவை. வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் கூட இது வெளிப்பட்டிருக்கிறது.  திமுகவில் இருந்ததுபோன்று அதற்கென குழு ஒன்றும் இருந்ததாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அது வெறும் கண்துடைப்பாகவே செயல்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் (முதலில் மூன்று, பிறகு  ஐந்து என்றார்கள்!) வேட்பாளர்களை தெரிவு செய்து அம்மாவின் பார்வைக்கு அனுப்ப அதிலிருந்து அவர் நேரடி நேர்காணல் மூலம் ஒருவரை  தெரிவு செய்வாராம். அவருடைய நேர்காணலுக்காக  நாள் கணக்கில் காத்திருந்துவிட்டு முடியாமல் மனம் வெறுத்து தற்கொலைக்கு முயன்றார் ஒரு பெண் வேட்பாளர்!  அவருடைய வீட்டு முன் காத்திருந்த கூட்டத்தை கட்டுப்படுத்தவே ஒரு பெரிய போலீஸ் படையே வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர் கட்சியை எடுத்துக்கொண்டால் துவக்க முதலே 'வீட்டு அம்மா' வரைந்த கோட்டுக்குள்ளேயே வளைய வந்தவர் அவர். அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் வைத்ததுதான் சட்டம். எப்போதாவது நடைபெறும் கட்சி கூட்டங்களில் தன்னை எதிர்த்துபேசும் தலைவர்களை சினிமா பாணியில் கை நீட்டி அடிக்கவும் தயங்கியதில்லை நடிகர். அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு சில நாட்கள் முன்பு  அதிமுக தலைவியை என்று சந்திக்கப் போகிறீர்கள் என்ற நிரூபர்கள் கேட்டபோது 'நான் யாரையும் சந்திக்க போவதில்லை' என்று அலட்சியமாக பதிலளித்தவர். அதற்குப்பிறகு ஆந்திராவிலுள்ள தன்னுடைய குலதெய்வத்தை சந்தித்தப் பிறகு ஞானோதயம் ஏற்பட்டு - ஒருவேளை பண்ருட்டியாரின் அறிவுரையை தட்டமுடியாமல் இருக்கலாம் - வேண்டா வெறுப்பாக அம்மாவை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார். அவர் அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த விதமே 'சந்தர்ப்ப சூழலால்தான் நான் இங்கு அமர்ந்திருக்கிறேன் என்னுடைய விருப்பப்படியல்ல' என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியது. &lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய சாணக்கியத்தனத்தால் திமுக-காங்கிரஸ் ஒரு பொருந்தா கூட்டணி என்பதை தமிழகத்திற்கு எடுத்துக்காட்டிவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் அம்மா அந்த முயற்சியில் தன்னுடைய கூட்டணியிலுள்ள மற்ற சிறிய தோழமை கட்சிகளின் வெறுப்பிற்கு ஆளானதை மறந்துவிட்டார் போலிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி என்றால் அதை விடவும் பொருந்தா கூட்டணிதான் அம்மா-நடிகர் கூட்டணி. முதல் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் தோற்றாலும் நீடிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் பிந்தைய கூட்டணி தேர்தலில் தோற்றால் அல்ல வெற்றி பெற்றாலும் அடுத்த சில மாதங்களிலேயே உடைந்துவிடும் என்பது நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை நம்பி இந்த கூட்டணிக்கு வாக்களிக்கப் போகும் வாக்காளர்கள் நிலையை நினைத்தால்தான்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-4076787604940569135?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/4076787604940569135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=4076787604940569135' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4076787604940569135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4076787604940569135'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/03/2011_16.html' title='தேர்தல் 2011 - அம்மாவின் சாணக்கியம்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-8765151301045945110</id><published>2011-03-14T14:16:00.000+05:30</published><updated>2011-03-14T14:16:36.611+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2011'/><title type='text'>தேர்தல் 2011 - கலைஞரின் சறுக்கல்!</title><content type='html'>போருக்குச் செல்லும்போது தன்னுடைய படைத்திறன் மற்றும் ஆளுமையை மட்டும் நம்பியிராமல் எதிராளியின் திறனையும் சரியாக கணக்கிட்டு அதனை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது ஒரு அடிப்படையான நியதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ தான் மட்டும்தான் சாணக்கியன் என்று நினைத்துக்கொண்டு செயலில் இறங்கிவிட்டு எதிராளி தன்னைவிடவும் தந்திரமாக எரியும் அஸ்திரத்தை எதிர்கொள்ளவியலாமல் பின்வாங்குவது சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வதற்கு ஒப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் முடிந்துள்ளது கலைஞரின் சமீபத்திய நாடகம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாடகத்தை அரங்கேற்ற முடிவெடுத்தபோது காங்கிரஸ் நிச்சயம் அடிபணிந்துவிடும் என்று கலைஞர் நினைத்திருந்தால் அது சிறுபிள்ளைத்தனம். 2G ஸ்பெக்ட்ரம் சிக்கலில் தலை வரை மூழ்கியிருப்பது திமுகதான், காங்கிரஸ் அல்ல என்பதை அவர் இன்னமும் உணரவில்லை போலிருக்கிறது. சோ அவர்கள் வட இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தபோது சொன்னதுபோல கலைஞரின் குடும்பத்தினரை சிபிஐ விசாரனை செய்யக் கூடாது என்ற கோரிக்கையை காங்கிரஸ் செவிமடுக்க மறுத்ததுதான் கலைஞரின் நாடகத்திற்கு உண்மையான காரணமாயிருக்குமோ என்கிற ஐயமும் இப்போது அனைவர் மனதிலும் எழ காரணமாகிவிட்டது அவருடைய சமீபத்திய அவசர முடிவு. இதை அவசர முடிவு என்பதை விட ஒரு அசட்டு முடிவு என்றே கூற வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;திமுக-காங்கிரஸ் கூட்டு ஒரு பொருத்தமில்லாத கூட்டு என்பதை தமிழக மக்களுடைய மனதில் ஒரு ஐயத்தை ஏற்படுத்தவே நான் காங்கிரசை என்னுடைய கூட்டணிக்கு இழுப்பதுபோன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தினேன் என்று ஜெயலலிதா கூறுவதிலும் தவறில்லை என்றே கருதத் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஜெயலலிதா கூறியுள்ளதுபோன்று தேர்தலில் இட ஒதுக்கீடுக்கு மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற முடிவெடுத்த கலைஞர்  பெட்ரோல் விலை உயர்வுக்கோ அல்லது தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டபோதோ ஏன் வெறுமனே கடிதங்களை பிரதமருக்கு எழுதிக்கொண்டிருந்தார் என்ற கேள்வியும் தமிழக வாக்காளர்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பதாண்டு காலம் அரசியலில் இருந்த கலைஞர் அதில் சரிபாதி அனுபவமுள்ள இரண்டு பெண்களிடம் (சோனியா-ஜெயலலிதா) தோற்றுப்போயிருப்பது அரசியல் விந்தைகளில் ஒன்று!&lt;br /&gt;&lt;br /&gt;சரி, காங்கிரசுக்கு இந்த வெற்றியால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? திமுக அளிக்க முன்வந்த 60 இடங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டிருந்தால் மக்கள் மத்தியில் இது ஒரு பொருந்தா கூட்டணி என்கிற எண்ணம் எழுந்திருக்க வாய்ப்பில்லை. திமுக தொண்டர்களும் முழுமூச்சுடன் காங்கிரஸ் தொண்டர்களுடன் இணைந்து காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றிபெற பணியாற்றியிருப்பார்கள். மக்கள் மத்தியில் கலைஞரின் முகத்தில் கரியை பூசிய காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொள்ள கலைஞர் வேண்டுமானால் சம்மதிக்கலாம், ஆனால் அவரை தெய்வமென மதிக்கும் திமுக தொண்டர்கள் நிச்சயம் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற முழுமனதுடன் பணியாற்ற மாட்டார்கள். ஆக, இது காங்கிரசுக்கும் ஒருவகையில் தோல்வியே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே தமிழகத்தில் தனக்கென்று விசுவாசமுள்ள வாக்காளர்கள் இல்லாத காங்கிரஸ் இந்த நாடகத்தின் முடிவில் திமுக ஆதரவாளர்களையும் இழந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவுக்கு மட்டுமல்லாமல் காங்கிரசுக்கும் பங்கு உண்டு என்ற எண்ணம்தான் பலருடைய மனதிலும் உள்ளது என்பதை தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைவர்கள் உணரவேண்டும். கூட்டணி தர்மத்திற்காக மட்டுமே நான் இந்த ஊழலை கண்டும் காணாதவாறு இருக்க நேர்ந்தது என்று பிரதமர் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவருடைய நேரடி பார்வையிலுள்ள இலாக்காவில் நடந்த S Band ஊழல், காமன்வெல்த போட்டி அமைப்பாளர்கள் செய்த ஊழல், மஹாராஷ்டிரத்தில் நடந்த ஹவுசிங் ஊழல் என கூட்டணி தர்மத்தை காரணம் காட்ட முடியாத பல ஊழல்கள் காங்கிரசும் ஒரு ஊழல்வாதிகள் நிறைந்த கட்சிதான் என்பதை நிரூபித்துள்ளன. ஆகவே 2G ஸ்பெக்ட்ரத்தில் சிக்கிய சங்கடத்தில் திமுக இருப்பதால் அதை மிரட்டி பணிய வைக்க காங்கிரஸ் நினைத்திருந்தால் அது அவர்களுடைய வெற்றி வாய்ப்பையே நிச்சயம் பாதிக்கும் என்பதை மறந்துபோனதுதான் வேடிக்கை. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்தமாதம் வரை எப்படியோ ஆனால் சமீபத்திய திமுக-காங்கிரஸ் இழுபறி கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பெருமளவுக்கு பாதிக்கப்போகிறது என்றுதான் கருதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கூட்டணியில் நிலை என்ன? அடுத்த பகுதியில்...&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-8765151301045945110?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/8765151301045945110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=8765151301045945110' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/8765151301045945110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/8765151301045945110'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/03/2011_14.html' title='தேர்தல் 2011 - கலைஞரின் சறுக்கல்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-4402696355832924157</id><published>2011-03-03T14:15:00.000+05:30</published><updated>2011-03-03T14:15:30.323+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2011'/><title type='text'>தேர்தல் 2011 - அஇஅதிமுக தேதிமுக கூட்டணி</title><content type='html'>தேர்தல் 2011 - அஇஅதிமுக தேதிமுக கூட்டணி&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயன்று தோல்வியுற்ற நடிகர் விஜயகாந்த் இந்த தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தவறில்லை என்று இப்போது முடிவு செய்திருக்கிறார். அவருடைய தற்போதைய ஒரே குறிக்கோள் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான். ஊழல் இல்லாத ஆட்சியை என்னால் மட்டுமே தரமுடியும் என்று நேற்றுவரை கோஷமிட்டுக்கொண்டிருந்தவர் வருமானத்திற்கு மீறி சொத்து குவித்த வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் தலைவியுடன் கூட்டு சேர்வது இன்றைய அரசியல் விநோதங்களில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் நடைபெற்ற கடந்த சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும்  பெரும்பான்மை இடங்களில் தேதிமுக பெற்ற வாக்குகளை சம்பந்தப்பட்ட தொகுதியில் இரண்டாவதாக வந்திருந்த அஇஅதிமுக கூட்டணியின் வேட்பாளருடைய வாக்குகளுடன் சேர்த்து கணக்கிட்டால் வெற்றிபெற்றவர் நிச்சயம் தோற்றிருப்பார் என்கிறது இந்து தினத்தாளில் இன்று வெளியாகியுள்ள ஒரு ஆய்வறிக்கை.  &lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான். அதுமட்டுமல்லாமல் பல தொகுதிகளில் பாமகவை, ஏன் சில தொகுதிகளில் அஇஅதிமுகவையும் கூட மூன்றாம் இடத்துக்கு தேதிமுக தள்ளியதும் உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த இரண்டு தேர்தல்களிலும் தேதிமுகவுக்கு கிடைத்த வாக்குகளில் பெரும்பாலானவை இரண்டு திராவிட கட்சிகள் மீதும் வெறுப்பு கொண்டவர்கள் மற்றும் நடுநிலையாளர்கள், குறிப்பாக படித்த இளைஞர்களின் வாக்கு என்பதை மறுக்கவியலாது. என்னைப் போன்ற உண்மையான காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய கட்சியினர் மீதே வெறுப்புகொண்டு அதை வெளிக்காட்ட அளித்த வாக்குகளும் இதில் அடக்கம். ஆகவேதான் இரண்டு தேர்தல்களிலும் எந்த ஒரு தொகுதியையும் (ஒரேயொரு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றாலும் நடிகர் சட்டமன்ற கூட்டங்களுக்கே எத்தனை நாள் சென்றிருந்தார், என்ன பேசினார் என்பது அவருக்கு வாக்களித்த தொகுதி வாக்காளர்களை கேட்டால் தெரியும்!) கைப்பற்றவில்லை என்றாலும் தன்னுடைய கட்சி தனித்து நிற்பதையே வாக்காளர்கள் விரும்புகின்றனர் என்பது தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன என அறிக்கைவிட்டார் நடிகர்! அவருடைய அறிக்கையில் ஓரளவு உண்மையும் இருந்ததாக அப்போது நான் உணர்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஊழலை ஊழலுக்கு பெயர்பெற்றவரால்தான் ஒழிக்க முடியும் என நினைத்தாரோ என்னவோ தங்களுடைய இரு கட்சிகளுக்கும் பொதுவான எதிரியான திமுகவை ஒழிக்க அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அவருடைய இந்த முடிவுக்கு இது மட்டும்தான் காரணமா அல்லது தமிழக அரசின் சில முடிவுகளால் தனிப்பட்ட முறையில்  ஏற்பட்ட இழப்புகளுக்கு வஞ்சம் தீர்க்க இது ஒன்றுதான் வழி என்று நினைத்தாரா என்பதை காலம்தான் பதிலளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் காலத்தில் கூட்டணி அமைத்து மக்களை சந்திப்பதில் தவறேதும் இல்லை. கொள்கை அளவில் இருதுருவங்களாக செயல்படும் பல கட்சிகள் தேர்தல் காலங்களில் தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்வதும் தேர்தலுக்குப் பிறகு தங்கள் வழியில் செல்வதும் அல்லது விடுதலை சிறுத்தைகள், பாமகவினரைப் போன்று தேர்தல் முடிந்த உடனேயே கூட்டணியிலிருந்து விலகி எதிர் அணியினருடன் சேர்ந்துக்கொள்வதும் சகஜம்தான். தேர்தல் தியதி அறிவிக்கப்படும்வரையிலும் வசைமாரி பொழிந்துக்கொள்வதும் தியதி அறிவிக்கப்பட்டவுடன் எந்த கூட்டணி அதிக தொகுதிகள் தருகின்றனரோ அந்த கூட்டணியில் இணைந்துக்கொள்வதும் தமிழகத்தில் மிக, மிக சகஜமாகிவிட்ட கூத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இரண்டு திராவிடக் கட்சிகளுமே ஊழலின் பிறப்பிடங்கள் ஆகவே தமிழகத்தை அந்த கட்சிகளின் பிடியிலிருந்து காப்பாற்றவே நான் அவதாரம் எடுத்திருக்கிறேன் என்றெல்லாம் கூறிவந்த ஒருவர் அத்தகைய கட்சிகள் ஒன்றுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் அளவுக்கு தன்னுடைய கொள்கையிலிருந்து இறங்கி வந்திருப்பது வியப்பை அளிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கொள்கை அளவில் மாறுபடும் இரு கட்சிகள் தேர்தலுக்காக இணைந்து செயல்படுவதே சற்று சிரமம்தான். தலைவர்கள் இணைந்தாலும் தொண்டர்கள் அத்தனை எளிதாக பகைமையை மறந்து இணைந்து தேர்தல் பணியாற்றுவது அதை விட சிரமம். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரே மாதிரியான (அதாவது தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், தன்னுடைய சொல்லுக்கு மறுசொல் இல்லை, தன்னை சுற்றியுள்ள அனைவருமே ஆமாம் சாமிகளாக இருக்க வேண்டும் என்ற) குணாதிசயங்கள் கொண்ட இரு தலைவர்கள் இணைந்து செயல்பட முடியுமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது சுமுகமாக நடந்து முடிந்தாலும் தேர்தல் தியதிவரையிலும் கூட இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்குமா என்பது சந்தேகமே. பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது யாருடைய வீட்டில் அல்லது அலுவலகத்தில் என்பதில் கூட கருத்து ஒவ்வாமை இருக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு பிரச்சாரம்... இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய முடியுமா? எதிரில் நிற்பவரை பொசுக்கிவிடக்கூடிய அளவுக்கு நெருப்பு நீரோடையாக பொங்கி பீறிவரும் தலைவியின் பேச்சுக்கு தட்டித்தடுமாறும் தலைவரின் பேச்சு ஈடுகொடுக்க முடியுமா? அல்லது எடுபடத்தான் செய்யுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் போகட்டும். தேர்தலில் வெற்றிபெற்றாகிவிட்டது என்றே வைத்துக்கொள்வோம். அஇஅதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற்று தேதிமுக ஓரிரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றால் (இதை உறுதி செய்ய தலைவி தன்னுடைய தொண்டர்களுக்கு நிச்சயம் கட்டளையிட்டிருப்பார்) தலைவி நடிகரை சீந்துவாரா என்ன? இதில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் நடிகர் மருத்துவர் ஐயாவிடம் கேட்டு தெரிந்துக்கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகருக்கு ஒரு கோரிக்கை: எந்த ஒரு சூழலிலும் அஇஅதிமுக  நீங்கள் அறிவித்த ஊழலற்ற ஆட்சியை தரப்போவதில்லை. தலைவி விரும்பினாலும் அவருடைய தோழியும் சுற்றியுள்ள சில்லறை தலைவர்களும் ஊழலை விடப்போவதில்லை. ஆகவே இப்போதே ஆட்சியைப் பிடிப்பதைப் பற்றி கவலைப்படாமல் கட்சியை வளர்ப்பதில் முனையுங்கள். இம்முறையும் தனித்து நின்று உங்களுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதையும் மீறி திமுகவை வீழ்த்துவதுதான் இன்றைய தேவை என்ற முடிவுடன் விருப்பமில்லாத ஒரு கூட்டணியில் நுழைவது என்று முடிவெடுக்கும் பட்சத்தில் எதிர்கொள்ளவிருக்கும் அவமானங்களை தாங்கிக்கொள்ளக் கூடிய மனவுறுதியை அளிக்க உங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூட்டனியில் தலைவி வீசியெறியும் எலும்புத்துண்டுகளுக்காக ஏங்கி நிற்கும் மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிலை... பரிதாபம்! அவர்களுக்கும் திமுக என்கிற ஒரு பொது எதிரி இருப்பதால்தானே அனைத்து அவமானங்களையும் பொறுத்துக்கொள்ள முடிகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இந்த கூட்டணியை திமுக எதிர் அணி என்று குறிப்பிட்டாலும் தவறில்லை என்று கருதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-4402696355832924157?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/4402696355832924157/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=4402696355832924157' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4402696355832924157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4402696355832924157'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/03/2011_03.html' title='தேர்தல் 2011 - அஇஅதிமுக தேதிமுக கூட்டணி'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-9115596438851573030</id><published>2011-03-02T14:28:00.000+05:30</published><updated>2011-03-02T14:28:07.358+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல் 2011'/><title type='text'>தேர்தல் 2011 - திமுக காங்கிரஸ் கூட்டணி</title><content type='html'>தேர்தல்களம் 2011 களைகட்ட துவங்கிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை ஒரு கட்சி ஆட்சி என்றிருந்த தமிழகத்திலும் அண்டை மாநிலங்கள் சிலவற்றின் பாணியில் இனி கூட்டணி ஆட்சிதான் என்கிற சூழல். &lt;br /&gt;&lt;br /&gt;திமுக, காங்கிரஸ், பாமக கட்சிக, விடுதலை சிறுத்தை மற்றும் இதர கட்சிகள் ஒருபுறம் அஇஅதிமுக, தேதிமுக, இடதுசாரிகள் என மற்றொருபுறம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் எந்த ஒரு கூட்டணியும் இதுவரை தங்களுக்கிடையில் போட்டியிடக் கூடிய இடங்களை முழுவதுமாக தீர்மானித்தபாடில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைதான் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளது. முதல் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் ஆட்சியில் பங்கு என்று தீர்க்கமாக அறிவித்த காங்கிரஸ் இன்றைய தினத்தாள் செய்திகளின்படி சற்று 'அடக்கி வாசிக்க' முடிவெடுத்துள்ளது!&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசுக்கு தமிழகத்தில் தங்களுடைய செல்வாக்கு என்ன என்பது இப்போதும் தெளிவாக தெரியவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். நான் தலைமுறை தலைமுறையாக காங்கிரஸ்காரன் என்றாலும் இன்றைய தமிழக காங்கிரசின் பரிதாப நிலையை மறுக்க முடிவதில்லை. கட்சிக்குள்ளே சில்லறை தலைவர்களுக்கிடையில் அவ்வப்போது ஏற்படுகிற போட்டியும் பொறாமையும்தான் கட்சியின் இத்தகைய அவலநிலைக்கு காரணம் என்பதை தில்லியில் பொறுப்பில் இருப்பவர்களும் புரிந்துக்கொள்ளாமல் இருப்பது அதை விட வேதனை. &lt;br /&gt;&lt;br /&gt;2G ஊழலில் சிக்கி திமுக சற்று சுருதி இறங்கிப் போயிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்காக காங்கிரசின் அடாவடி கோரிக்கைகளுக்கு பணிந்துபோக வேண்டிய நிலையில் திமுக இல்லை என்பதுதான் நிதர்சனம். இளங்கோவன் போன்ற தரங்கெட்ட தலைவர்களுடைய வெத்துவேட்டு  பாவலாக்களை நம்பாமல் காங்கிரஸ் தமிழகத்தில் தன்னுடைய உண்மை நிலையை உணர்வது மிகவும் அவசியம். இன்றைய தலைவர்களில் பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு பெற்றவர் என்ற பெருமைக்குரிய தலைவர் ஒருவர் கூட தமிழக காங்கிரசில் இப்போது இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆகவே காங்கிரசுக்கு என்று ஓட்டு வங்கி ஏதும் தமிழகத்தில் இல்லை. அவர்கள் இணைந்து போட்டியிடும் கட்சியின் செல்வாக்கைப் பொருத்துத்தான் அதன் வெற்றியும் தோல்வியும். ஆகவே அந்த கட்சியின் செல்வாக்கை குறைக்க முயல்வது தனக்குத்தானே குழி தோண்டிக்கொள்வதற்கு சமம் என்றால் மிகையாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் எப்படியோ, இன்றைய சூழலில் திமுகவை அனுசரித்து தங்களுக்கு வழங்கப்படவுள்ள இடங்களை மறுப்பின்றி ஏற்றுக்கொண்டு திமுக தொண்டர்களுடன் இணைந்து முழுமூச்சுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு முந்தைய சட்டமன்ற தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் வெற்றிபெற முயல்வதுதான் இன்றைய தேவை என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உணர்வது நல்லது. தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் - அதேசமயம் திமுகவுக்கு பாதகமாக, அதாவது முந்தைய தேர்தலைக் காட்டிலும் அவர்களுடைய பலம் குறைந்துவிடும் பட்சத்தில் - ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் கோரிக்கை நிறைவேற வாய்ப்புள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இனியும் திமுகவுடனான பேச்சுவார்த்தையை மூன்றாம், நான்காம் சுற்று என நீட்டிக்காமல் சுமுகமாக முடித்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது கூட்டணிக்கும் நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-9115596438851573030?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/9115596438851573030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=9115596438851573030' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/9115596438851573030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/9115596438851573030'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2011/03/2011.html' title='தேர்தல் 2011 - திமுக காங்கிரஸ் கூட்டணி'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total><georss:featurename>Chennai, Tamil Nadu, India</georss:featurename><georss:point>13.060422 80.249583</georss:point><georss:box>12.8932015 80.0161235 13.227642500000002 80.4830425</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-6193465812220515653</id><published>2010-12-31T12:50:00.001+05:30</published><updated>2010-12-31T12:59:44.434+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மன்மதன் அம்பு - உண்மைத்தமிழனின் விமர்சனம் தவறில்லை!</title><content type='html'>நான் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லையென்றாலும் (ஏன் என்று பதிவின் இறுதியில் கூறுகிறேன்) எனக்கு பிடித்த பதிவாளர்களின் பதிவுகளை படிக்க தவறுவதில்லை. இதற்காகவே ப்ளாகரின் ரீடிங் லிஸ்ட்டில் பட்டியலிட்டு இத்தகையோர் எழுதும் பதிவுகளை படித்துவிடுவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் உண்மைதமிழனும் ஒருவர். சமீபத்தில் அவர் எழுதிய மன்மதன் அம்பு திரைப்பட விமர்சனமும் அதற்கு வந்திருந்த பலதரப்பட்ட பின்னூட்டங்களும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மிக, மிக சாதாரணமான ஒரு படத்தை (அதுவும் சொந்த சரக்கு அல்ல) எடுத்துவிட்டு அதிலுள்ள மிக, மிக, மிக சாதாரணமான பாடல்களுக்காக ஒரு பகட்டான (பூனை சூடு போட்ட கதையாக) வெளியீட்டு விழாவையும் நடத்திய உதார் நாயகனின் (என்னை பொருத்தவரை அவரை இப்போதெல்லாம் உலக நாயகனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை) படத்தைப் பற்றிய உண்மைத் தமிழனின் விமர்சனத்தை விமர்சிப்பதில் பொருளில்லை. அது 'என்னுடைய கருத்து' என்று அவரே கூறிவிட்டார்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதில் அவர் கூறியிருந்த கருத்துக்களில் ஒன்றைப் பற்றி மட்டும் சற்று விமர்சிக்கலாம் என்று நினைத்ததன் விளைவே இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திரைப்படத்திலுள்ள பாத்திரங்கள் பேசுகின்ற வசனங்கள் அந்த வசனகர்த்தாவின் கருத்துக்களாக கருதுவது சரியா? &lt;br /&gt;&lt;br /&gt;உண்மைத்தமிழனின் கருத்துக்கு அவரை சிலர் கிண்டல் செய்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவருடைய கூற்று தவறில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில உதாரணங்கள் மூலம் இதை விளக்கலாம் என எண்ணுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பழம்பெரும் இயக்குனர் மற்றும் வசனகர்த்தா கே.எஸ். கோபாலகிருஷ்ணன் காலத்திலிருந்து பாலசந்தர், பாலு மகேந்திரா, விசு என சமீபத்திய மணிரத்தினம் வரையிலும் உண்மைத்தமிழனின் கருத்து சரிதான் என்பதை எடுத்துக்காட்டியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கோபாலகிருஷ்ணன் மற்றும் விசு எழுதி இயக்கிய அனைத்து திரைப்படங்களில் வரும் பாத்திரங்கள் வளவளவென்று பேசுவார்கள். பாணி மட்டுமல்லாமல் அவர்கள் பேசும் வசனங்களில் தொனிக்கும் கருத்துக்களும் வசனகர்த்தாவைத்தான் முன் நிறுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலசந்தரும் அப்படித்தான். அவருடைய எண்ணங்களைத்தான் அனைத்து படங்களிலும் பாத்திரங்கள் வழியாக எடுத்துரைப்பார். அனைவருமே நாடக பாணியில், உரத்த குரலில், எதுகை மோனையுடன் பேசுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பாலு மகேந்திரா படங்களில் பாத்திரங்கள் அதிகம் பேச மாட்டார்கள். புருவத்தை உயர்த்தி, தோள்களை குலுக்கி, உதட்டை பிதுக்கி, தலையை மேலும் கீழும் அசைத்து... இப்படி அதிகம் பேசாமல் முக, உடல் சேஷ்டைகள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துவர். 'நீங்கள் கேட்டவை' என்ற மசாலா படத்தில் அன்றைய சில இயக்குனர்களின் பாணியில் கதாபாத்திரங்கள் செயல்பட்டிருந்தாலும் வசனம் என்னவோ ஏறத்தாழ அவர் பாணியில்தான் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்தினம்? அவர் படங்களில் வரும் அனைத்து படங்களிலும் வசனம் ஒரே ஸ்டைலில்தான் இருக்கும். அவருடைய 'ஒருசொல்' வசன பாணியை 'தமிழ்படத்தில்' மிக அருமையாக கிண்டல் செய்திருப்பார்கள். பாணி மட்டுமல்லாமல் அவருடைய 'அடிதடியை நியாயப்படுத்தும்' நோக்கத்தில்தான் அவருடைய பெரும்பாலான படங்களில் வரும் வசனங்களும் இருந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிசையில் பாரதிராஜா மட்டுமே விதிவிலக்கு என கருதுகிறேன். இதற்கு அவருடைய திரைப்படங்களுக்கு வசனம் அவர் எழுதியதில்லை என்பதும் ஒரு காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்கள் என்றில்லை. சிறுகதைகளும், நாவல்களும் அப்படித்தான். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு பாணி இருக்கும். அதே பாணியை அவர்கள் புனையும் அனைத்து கதைகளிலும் காணலாம். அவர்களுடைய பெரும்பாலான கதைகளில் வரும் பாத்திரங்கள் வழியாக சமூகத்தைப் பற்றிய அவர்களுடைய பார்வையே வெளிப்பட்டு வந்துள்ளன. இதற்கு உதாரணமாக நான் மிகவும் மதித்துப் போற்றும் ஜெயகாந்தனை கூறலாம். அவருடைய பெரும்பாலான புனைவுகள் இலக்கியங்களாக போற்றப்பட்டாலும் இன்றைய எழுத்தாளர்களைப் போன்று பாமரனும் படித்து புரிந்துக்கொள்ளவோ அல்லது படிப்பதற்கு சரளமாகவோ அல்லது சுவையாகவோ அவருடைய எழுத்து இருக்கவில்லை. அவருக்கு தான் ஒரு இலக்கியவாதி என்கிற மமதை அவருடைய எல்லா கதைகளிலும் இழையோடுவதை காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய மமதை சமீபகாலமாக கமலுக்கும் ஏற்பட்டுள்ளது. தனக்கு தெரியாத விஷயம் இல்லை என்பதைப் போன்ற ஒரு எண்ணம். அவர் ஒரு நல்ல அற்புதமான நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவர் ஒருபோதும் ஜனரஞ்சக நடிகராக முடியாது. அல்லது ஒரு திறமையான கதாசிரியராகவோ அல்லது வசனகர்த்தாகவோ ஆக முடியாது. அதை அவர் உணர்ந்துக்கொள்ளாமல் இருப்பதுதான் துரதிர்ஷ்டம். இபோதெல்லாம் அவர் பேசுகின்ற தமிழே புரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நடிப்பு மட்டுமே முழு நேர சிந்தனையாக அவருக்கு இருந்த காலகட்டத்தில் வந்த அவருடைய அனைத்து திரைப்படங்களும் அனைவராலும் ரசிக்கப்பட்டதுடன் வசூலையும் அள்ளி தந்தன. 'ஹே ராமில்' துவங்கிய அவருடைய இந்த 'மமதை'  தசாவதாரம், மன்மதன் அம்பு என தோல்விகளாக தொடர்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இதை அவர் மட்டுமல்லாமல் அவருடைய தீவிர ரசிகர்களும் (இவர்களுள் பெரும்பாலானோரும் அறிவுஜீவிகள்தான்) உணர்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்போது ஏன் அதிகம் எழுதுவதில்லை என கூறிவிடுகிறேன். கடந்த ஆறு மாதங்களாக எனது வலது தோள்பட்டையில் பயங்கர வலி. அப்போல்லோவில் சி.டி. ஸ்கேன் செயததில் தோள் எலும்பு தேய்ந்துவிட்டது என தெரிந்தது. இதற்கு பிசியோதெரப்பி மற்றும் தினசரி உடற்பயிற்சியை தவிர வேறு நிவாரணம் இல்லையாம். ஒரு ஆகவே வலது கையால் கீபோர்டை பயன்படுத்த முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முக்கிய காரணம் தினமும் தொடர்ந்து லேப்டாப் மவுஸ் பேடை பயன்படுத்தியதுதான் என்கிறார் எலும்பு மருத்துவர். நான் சுமார் பத்து ஆண்டுகளாக தினமும் எட்டு மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தியதன் விளைவு!&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நண்பர்களே, லேப்டாப் பயன்படுத்துபவர்களும் தனியாக ஒரு எக்ஸ்டேர்னல் எலிக்குடியை பயன்படுத்துவது நல்லது. மேலும் எலிக்குட்டியை இடது கையிலும் பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள். அரைமணிக்கு ஒருமுறை கையை மாற்றி பயன்படுத்துவது நல்லதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-6193465812220515653?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/6193465812220515653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=6193465812220515653' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/6193465812220515653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/6193465812220515653'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/12/blog-post.html' title='மன்மதன் அம்பு - உண்மைத்தமிழனின் விமர்சனம் தவறில்லை!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-8680341832724906937</id><published>2010-10-25T12:12:00.001+05:30</published><updated>2010-10-25T12:13:37.300+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>எந்திரன் - லாஜிக் இல்லா மாஜிக்!</title><content type='html'>நான் தீவிர ரஜினி ரசிகன்  என்றாலும் 'முதல் நாள் முதல் காட்சி' ரகம் இல்லை. அம்மாதிரியான ரசிகர்கள் அடிக்கும் விசில் சப்தம் ஏதும் இன்றி எனக்கு மிகவும் பிடித்த நடிகரின் படத்தை ரசித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ரஜினியின் படத்தை முதல் நான்கு வாரங்கள் கழித்துத்தான்  குடும்பத்துடன்  பார்ப்பது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வழக்கப்படி எந்திரன் படத்தை கடந்த வியாழனன்று சென்னை பிவிஆர் திரையரங்கில் பார்த்தேன். என் அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ தெரியவில்லை நான் சென்றிருந்த அன்று என்னை சுற்றிலும் ஒரு பெரிய குடும்பம். குழந்தை, குட்டி சகிதம் சுமார் இருபது பேர் அமர்ந்திருந்தனர். (கட்டண சீட்டின் விலை ரூ.120/-, ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தால் கூடுதலாக ரூ.30/- - ஆக இருபது பேர் திரைப்படம் பார்க்க கட்டணம் மட்டும் ரூ.3,000/- - எப்படித்தான் கட்டுப்படி ஆகிறதோ தெரியவில்லை.) &lt;br /&gt;&lt;br /&gt;ஆக, நான் எதை தவிர்க்கலாம் என்று நினைத்து நான்கு வாரங்கள் கழித்து சென்றேனோ அது பலிக்கவில்லை. காட்சிக்கு காட்சி விசில், கைதட்டல், சூப்பர் என்ற பாராட்டு மழையில் பல சமயங்களில் திரையில் பேசுவதே கேட்கவில்லை. இதில் பலர் ஏற்கனவே படத்தை பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது. ஷங்கரின் திரைப்படங்களில் பெரிதாக சஸ்பென்ஸ் ஏதும் இருப்பதில்லை என்றாலும் இருந்த ஓரிரண்டு சஸ்பென்சையும் அருகில் இருந்த வானரங்கள் (அப்படி சொல்லலாமா?) தீர்த்து வைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;'உதார் நாயகன்' கமலின் படங்களுக்கு செல்வதுபோன்று பெரிய எதிர்பார்ப்புகளுடன் 'ஸ்டைல் மன்னன்' ரஜினியின் படங்களுக்கு நான் செல்வதில்லை. ஆகவே அவருடைய படங்களை வெகுவாக ரசிக்க முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணத்தில் எந்திரனைப் பற்றி வந்த பல்வேறு விமர்சனங்களை நான் படித்திருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி ரஜினிக்காகவே படத்தை ரசிக்க முடிந்தது. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகின் முடிசூடா மன்னன், சூப்பர் ஸ்டார் என்ற நிலையில் இருக்கும் ரஜினி போன்ற ஒரு நடிகர் ஒரு படத்திற்காக இத்தனை சிரமங்களை பட தேவையில்லை என்று கூறும் அளவுக்கு இருந்தது அவருடைய நடிப்பு. அதுவும் தன்னுடைய டிரேட் மார்க் பஞ்ச் வசனங்கள், மாஸ் ஹீரோயிசம், மானரிசங்கள் என எதுவும் இல்லாமல்.... நிர்வாணமாக ஒரு இளம் பெண்ணை அப்படியே கொண்டு வந்து அதனால் அவர் தற்கொலை செய்துக்கொள்ள காரணமாக இருப்பதுபோல்... அதாவது இத்தகைய பெண்களை காக்கும் நாயகன் என்ற அவருடைய இமேஜையும் கூட கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரத்திற்காக அவர் இறங்கி வந்திருப்பது வியப்பை அளிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இயக்குனர் ஷங்கரை பற்றி லாஜிக்கே இல்லாமல் பிரம்மாண்டம் என்ற பெயரில் பம்மாத்து செய்பவர் என்பதுதான் என்னுடைய கணிப்பு. அவருடைய இந்தியன், அன்னியன், சிவாஜி வரிசையில் எந்திரனும் பல இடங்களில் அப்படித்தான் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனாலும் அந்த படங்களில் இல்லாத ஏதோ ஒரு ஈர்ப்பு இந்த படத்தில் உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முழு நேர உல்லாச படம் என்ற கணிப்புடன் பார்த்துவிட்டு (அதாவது சற்று நேரம் நம்முடைய ரீசனிங் பவரை மறந்துவிட்டு) வரலாம் என்று சென்றால் இந்த படத்தை ம்ழுமையாக ரசிக்க முடியும் என நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த நான் ஷங்கரின் இணையதளத்திற்கு சென்று 'என்னை கேளுங்கள்' என்ற பகுதியில் அவருக்கு இவ்வாறு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். "இந்த படத்தின் ஒரு நகலில் (Print) பாடல் மற்றும் நகைச்சுவை காட்சிகளை நீக்கிவிட்டு சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் அளவுக்கு எடிட் செய்து சென்னையிலுள்ள ஒரு சிறிய திரையரங்கில் வெளியிடுங்களேன்.' அவர் அதை கண்டுக்கொள்ளவே இல்லை. இதற்கு என்ன காரணம் என்று படத்தை பார்த்ததும்தான் தெரிந்தது. படத்தை இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்க்க பாடல்கள் எந்த அளவுக்கு உதவுகின்றன என்பது. 'காதல் அணுக்கள்' மற்றும் 'கிளிமஞ்சாரோ' பாடல்களை படமாக்கிய விதமும் லொக்கேஷனும் மிகவும் அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் க்ளைமாக்சில் சுமார் அரை மணி நேரம் வரும் அனிமேஷனை சரிபாதியாக குறைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;லாஜிக் பல இடங்களில் உதைக்கத்தான் செய்கிறது. Most glaring என்று ஒன்றையாவது சொல்ல வேண்டும் என்றால் விஞ்ஞானி ரஜினிக்கு ரோபோட்டை உருவாக்க உதவ இரண்டே உதவியாளர்களாம்! தேவையற்ற காட்சிகளில் எல்லாம் 'ரிச்' ஆக இருக்க வேண்டுமே என்று திரை நிறைய உதிரி நடிகர்களை  காட்டிய ஷங்கர் ரஜினியின் லாபில் குறைந்தபட்சம் ஒரு ஐம்பது உதவியாளர்கள் இருப்பதுபோல் ஒரு காட்சியிலாவது காண்பித்திருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் எந்திரன் இவற்றையெல்லாம் மறந்து ஒரு மூன்று மணிநேரம் உல்லாசமாக இருக்க செய்யும் அளவுக்கு ஒரு லாஜிக் இல்லா மாஜிக் என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-8680341832724906937?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/8680341832724906937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=8680341832724906937' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/8680341832724906937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/8680341832724906937'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/10/blog-post.html' title='எந்திரன் - லாஜிக் இல்லா மாஜிக்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-7920851724017925311</id><published>2010-09-30T17:04:00.000+05:30</published><updated>2010-09-30T17:04:53.520+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>நிஅயோத்தி தீர்ப்பு சாராம்சம்</title><content type='html'>அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் சாராம்சம்:&lt;br /&gt;&lt;br /&gt;1. 2.5 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை நிர்மோகி அகாரா அமைப்புக்கும், பாபர் மசூதி அமைப்புக்கும் மற்றும் இந்து மகாசபை அமைப்புக்கும் வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மூன்று மாத அவகாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அதுவரை தற்போதைய நிலை தொடர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சர்ச்சைக்குரிய இடம் உண்மையில் ராமர் பிறந்த இடம்தான் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிஜேபி வழக்கறிஞர் பேட்டி. இஸ்லாமிய சகோதரர்கள் இதை ஏற்றுக்கொண்டு அங்கு மசூதி கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை!&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பின் முழு விவரமும் வெளிவராத நிலையில் அவருடைய இந்த பேட்டி சரிதானா என்று தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-7920851724017925311?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/7920851724017925311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=7920851724017925311' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/7920851724017925311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/7920851724017925311'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/09/blog-post_30.html' title='நிஅயோத்தி தீர்ப்பு சாராம்சம்'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-5963773591345178482</id><published>2010-09-28T16:36:00.000+05:30</published><updated>2010-09-28T16:36:02.837+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>என்று மாறும் இந்த இழிநிலை!</title><content type='html'>நேற்று நான் எழுதியிருந்தது, அதாவது காமன்வெல்த் போட்டி கிராமத்தில் (Games Village) பத்திரிகைகளும் ஊடகங்களும் கூறியிருந்ததுபோன்று அவ்வளவு மோசமாக இல்லை என்பதற்கு நேற்று வந்திறங்கிய வெளிநாட்டு வீரர்களின் பேட்டிகளிலிருந்து உண்மைதான் என்பது தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'Impressed with Games Village' என்ற தலைப்பில் ஹிந்து தினத்தாளில் வெளியாகியுள்ள சில கருத்துக்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தின் ஹாக்கி அணியின் வீரர்களுள் ஒருவரான அலெக்சாண்ட்றா: &lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்னுடைய நாட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளை படித்துவிட்டு எப்படி இருக்குமோ என்று இங்கு வந்தேன். ஆனால் அப்படி ஏதும் குறைகள் இல்லை என்பதுடன் நான் இதுவரை பார்த்த ஏற்பாடுகளை விடவும் இங்கு மிகவும் சிறப்பாகவே உள்ளன. வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து அறைகளும் விசாலமாகவும், தூய்மையாகவும் உள்ளன. உங்களுடைய உள்ளூர் பத்திரிகைகள் சற்று அதிகமாகவே எதிர்மறையாக இதைப்பற்றி எழுதியுள்ளன என்றே தோன்றுகிறது. அதை அப்படியே எங்களுடைய பத்திரிகைகளும் பிரசுரித்துவிட்டன என்று நினைக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த உலகைக் கோப்பை ஹாக்கியின் சிறந்த கோல்கீப்பர் என்ற பட்டத்தை வென்ற பெத் என்னும் வீராங்கனை:&lt;br /&gt;&lt;br /&gt;"வீரர்கள் உணவருந்தும் பகுதி மிகவும் சிறப்பாக உலகதரம் வாய்ந்ததாக அமைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த போட்டிகள் மிகவும் சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன். இங்கு வந்து இவற்றைக் கண்டவுடனே என்னுடைய குடும்பத்தினருக்கு 'இங்கு எல்லாமே சிறப்பாக உள்ளது கவலைப்படாதீர்கள்' என்று மின்னஞ்சல் செய்தேன்.'&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரண்டு நாட்களில் போட்டி கிராமத்திற்கு வந்து சேர்ந்துள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாண்ட், நைஜீரியா, மலேசியா வீரர்கள் பலரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். இதிலிருந்து  NDTV மற்றும் CNN-IBN தொலைக்காட்சிகள் ஒரு வார காலமாக அளித்து வந்த எதிர்மறை செய்திகள் அனைத்தும் உண்மையல்ல என்பது தெளிவாகிறது. அவ்ர்களுடைய செய்திகளை அப்படியே காப்பியடித்து ஒளிபரப்பி வந்த சன் நெட்வொர்க் இப்போதும் அதே பல்லவியை பாடிக்கொண்டிருப்பது வேதனை.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமா கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் வெளியாகியிருந்த எதிர்மறை பதிவுகளை எழுதிவந்த பதிவர்களும் வெட்கப்பட வேண்டும். விஷயம் என்னவென்றே புரிந்துக்கொள்ளாமல் சகட்டுமேனிக்கு எழுதி வந்தவர்களை என்ன சொல்வது? அந்த பதிவுகளுக்கு  பின்னூட்டத்தில் வெறுப்பை உமிழ்ந்தவர்களுடைய எண்ணிக்கையைப் பார்த்தால் நாட்டில் எதிர்மறை கருத்துக்களுக்குத்தான் மவுசு அதிகம் என்பதும் தெளிவாகிறது. என்று மாறும் இந்த இழிநிலை? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-5963773591345178482?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/5963773591345178482/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=5963773591345178482' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/5963773591345178482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/5963773591345178482'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/09/blog-post_28.html' title='என்று மாறும் இந்த இழிநிலை!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-7797543132572334769</id><published>2010-09-27T12:12:00.001+05:30</published><updated>2010-09-27T12:18:38.916+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>காம்ன்வெல்த் போட்டிகள் நிச்சயம் வெற்றிபெறும்</title><content type='html'>&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தியதி துவங்கவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு 2010 போட்டிகள் நம் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி நாட்டின் ஆளுமை மற்றும் நிர்வாக திறனுக்கும் ஒரு சவாலாகவும் இருந்தாலும் இறுதியில் முழுமையான வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;இதை நடத்தும் உரிமையை பெறுவதற்கு இந்தியாவைத் தவிர ஏற்கனவே இந்த போட்டியை நடத்தி அனுபவம் பெற்றுள்ள கனடாவும் போட்டியிட்டது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆயினும் காமன்வெல்த் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினர்களுள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இந்தியாவையே தெரிவு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;இதன் பின்னணியில் ஏதோ தில்லுமுல்லு இருப்பதாக சமீபத்தில் ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ளதையும் படித்திருப்பீர்கள். இதில் ஒன்றும் ரகசியமில்லை. இந்த போட்டியை நடத்த இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்ததற்கு இதில் பங்குபெறும் ஒவ்வொரு நாட்டின் விளையாட்டுத்துறைக்கும் 100,000 அமெரிக்க டாலர் மற்றும் இந்தியாவுக்கு வந்து செல்ல விமான சீட்டு &lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;உட்பட அனைத்து செலவினங்களையும் தாங்களே ஏற்றுக்கொள்ள முன்வந்ததும் ஒரு முக்கிய காரணம் (ஆதாரம்:விக்கிபீடியா).&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இந்த போட்டியை நடத்தும் உரிமையை 2003ம் ஆண்டே இந்தியா பெற்றது என்றாலும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேவையான செலவினங்களை (சுமார் 43,000/- கோடி!) கணக்கில் கொள்ளும்போது இதன் பிரம்மாண்டத்தையும் அதற்கு தேவைப்படும் கால அவகாசத்தையும் நம்மால் உணர முடிகிறது. இந்த செலவினம் மற்றும் முதலீடுகளின் அளவு கடந்த போட்டிக்கு ஆஸ்திரேலியா செலவிட்டதை விட ஆறு மடங்கு!&lt;br /&gt;&lt;br /&gt;எழுபத்திரண்டு நாடுகள் பங்குபெறப் போகும் இந்த போட்டி நம்முடைய நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே கல்மாடி தலைமையில் ஒரு தலைமை நிர்வாக குழுவும் அதன் கீழ் ஒவ்வொரு துறையையும் சார்ந்த பல குழுக்களும் நியமிக்கப்பட்ட பிறகும் நம் நாட்டுக்கே உரித்தான சம்பந்தப்பட்ட அமைச்சக அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட உட்பூசல், போட்டி, பொறாமை நம்முடைய நாட்டின் ஆட்டின்&amp;nbsp;நிர்வாக&amp;nbsp;மற்றும்&amp;nbsp;ஆளுமை திறமைகளை பல நாடுகளும் (அவற்றில் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வெறும் பொறாமை காரணமாகவும்) சந்தேகப்பட வைத்துவிட்டது என்னவோ உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் பலவும் இரண்டு நாட்களுக்குள்ளேயே பின்வாங்கப்பட்டு இப்போது நிலைமை சீராகிவிட்டது என்று அவர்களே கூறுவதிலிருந்தே அவர்கள் கண்ட குறைகளின் அளவு எவ்வளவு என்பதை உணர முடிகிறது. படுக்கை விரிப்பு சரியில்லை, பாத்ரூமில் குழாய்கள் ஒழுகுகிறது, வாஷ் பேசின் சுத்தமாக இல்லை என்பதுதான் அவர்கள் கூறிய&lt;br /&gt;'சுகாதாரமின்மை'. இவை யாவுமே ஆங்கிலத்தில் கூறும் 'last minute things to do' அலுவல்கள்தான் என்பதும் விளையாட்டு வீரர்கள் வருவதற்கு முந்தைய இரண்டு, மூன்று தினங்களில் செய்து முடிக்க வேண்டியவையே என்பதும் புலனாகிறது. இத்தகைய குறைகள் நம் நாடு அல்ல எந்த நாட்டிலும் &lt;br /&gt;இருந்திருக்கும். ஆனால் அவற்றை சம்பந்தப்பட்ட நாட்டின் பத்திரிகைகளே வெளிச்சம் போட்டு காட்டியதில்லை. சீனா போன்ற நாடுகளில் நிலவும் இரும்புத்திரை இல்லாத பத்திரிகை சுதந்திரம் நம் நாட்டில் இருப்பதும் அதை தவறாக பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் நம்மவர்கள் என்பதுதான் இவை&lt;br /&gt;யாவும் வெளிச்சத்திற்கு வர காரணம். இதற்கு வேறு ஒரு கோணமும் உண்டு கல்மாடி துவக்கமுதலே பத்திரிகைத் துறையை சரியாக 'கவனிக்க' தவறிவிட்டார். ஆகவே அந்த கோபத்தில் சகட்டுமேனிக்கு சிறிய விஷயங்களைக் கூட பூதாகரமாக எழுதி பழிதீர்த்துக்கொள்கிறது இந்தத்துறை. இடையில் நாட்டின் மானம் கப்பலேறுவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TKA7aqD7bRI/AAAAAAAAAMo/k6IPRJKexpQ/s1600/CWG2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" px="true" src="http://2.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TKA7aqD7bRI/AAAAAAAAAMo/k6IPRJKexpQ/s1600/CWG2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TKA8s1vKyxI/AAAAAAAAAMs/uRt4Nndi7ts/s1600/CWG3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" px="true" src="http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TKA8s1vKyxI/AAAAAAAAAMs/uRt4Nndi7ts/s1600/CWG3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுபது நாடுகள். சுமார் 2000 தடகள வீரர்கள், 500க்கும் மேற்பட்ட நடுவர்கள், அதிகாரிகள். இவர்களை தங்க வைக்க சுமார் 2000 குடியிருப்புகளைக் கொண்ட வின்னைத் தொடும் கட்டிடங்கள். இவர்களுக்கு &lt;br /&gt;அவரவர் விரும்பும் உணவு வழங்க சமையற்கூடம். பொழுதுபோக்கு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த கூடங்கள், பயிற்சி மையங்கள், மருத்துவக் கூடம்.... இவை அனைத்தும் ஒன்றுமில்லா பாலைவனம் போன்ற இடத்திலிருந்து from scratch என்பார்களே அதுபோன்று உருவாக்க வேண்டும். அதிகபட்சம் ஆறு அறைகளைக் கொண்ட ஒரு இரண்டு மாடி வீட்டைக் கட்டி முடிக்கவே ஓராண்டுகாலம் தேவைப்படுகிறதே.. அதையும் கட்டி முடித்து குடியேறுவதற்குள் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளோகிறோம். நம்மில் &lt;br /&gt;எத்தனை பேர் கட்டுமானப் பணிகளை பாதியிலேயே விட்டுவிடுகிறோம். இதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே இதன் சிரமமும் வேதனையும் புரியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 2000 குடியிருப்புகள் (10000 அறைகள்!) கொண்ட விளையாட்டு கிராமத்தில் ஒரு அறையில் பாம்பாம், சில அறைகள் இன்னும் சுத்தப்படுத்தப்படவில்லையாம், சில அறைகளில் படுக்கை விரிப்பில் நாய்கள் ஏறி அழுக்காகிவிட்டனவாம்.... இன்னும் என்னவெல்லாம் கூப்பாடுகள்! என்னைக் கேட்டால் பாலம் இடிந்து விழுந்ததை தவிர வேறு எந்த குறைபாடும் இத்தனை பெரிதுபடுத்தப்பட தேவையில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இடிந்து விழுந்த பாலத்திற்கும் ஊழலுக்கும் தொடர்பு உண்டா, 'கமிஷன்' பெற்றுக்கொண்டு தரமற்ற நிறுவனத்திற்கு இந்த பணியை ஒப்புவித்ததால்தான் பாலம் இடிந்து விழுந்ததா என்பது விசாரனையில்தான் தெரிய வரும். மற்றபடி அரங்கத்தின் கூரையே பெயர்ந்து விழுந்துவிட்டது என்றெல்லாம் சில ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் பேசி தீர்த்ததே அது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள். உண்மையில் விழுந்தது அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்து 'False ceiling'கின் ஒரு சிறிய பகுதியே. அரை நாளி சரி செய்துவிடக் கூடிய குறை! ஒன்றுமில்லாத விஷயத்தையெல்லாம் 'Just Now' என்ற நாடாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தங்களுடைய 'பிழைப்பை' ஓட்டும் இத்தகைய சானல்கள் தங்களுடைய நாட்டின் மதிப்பையே கெடுக்கிறோமே என்று ஒரு சில நொடிகளாவது சிந்தித்துப் பார்த்தால் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போட்டி சம்பந்தப்பட்ட கட்டுமான ஏற்பாடுகளைத் தவிர தில்லி மாநகரத்தை அழகுபடுத்தவும் போக்குவரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அவற்றை உரிய நேரத்தில் முடிக்க&lt;br /&gt;விடாமல் விடாது கொட்டி தீர்த்த மழையின் தீவிரத்தையும் கருத்தில்கொள்ளும்போது பத்திரிகைகள் வெளிச்சம் போட்டு காட்டிய குறைகள் ஒன்றும் பெரிதல்ல. ஆயினும் நாட்டின் ஆளுமை மற்றும் நிர்வாக திறனை வெளிநாடுகள் பலவும் குறைத்து மதிப்பிட வேண்டிய சூழலுக்கு உள்ளாக்கிவிட்டீர்களே என்ற ஆதங்கத்தில்தான் நம்முடைய பிரதமர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சாடியிருக்கிறார். ஆனால் இதை சில மாதங்களுக்கு முன்னரே அவர் செய்திருக்கலாமோ என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில வெளிநாடுகள் கூறும் இன்னுமொரு குற்றச்சாட்டு பாதுகாப்பு. இதில் முன்னால் நிற்பது ஆஸ்திரேலியா. தங்களுடைய நாட்டில் சில ஆண்டுகள் தங்கி படிக்க வரும் ஒரு சில மாணவர்களையே தங்களுடைய நாட்டின் 'வன்முறை கும்பல்களிலிருந்து' பாதுகாக்க வக்கில்லாத நாடு அது! அதற்கு சில பொறுப்பற்ற தீவிரவாதி நாடுகளின் தூண்டுதலால் நம் நாட்டில் ஏற்படும் ஒருசில தீவிரவாத செயல்களை சுட்டிக்காட்டி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்ட என்ன தகுதி உள்ளது? அந்த நாட்டிலிருந்து வந்த&lt;br /&gt;கிரிக்கெட் அணி கேப்டனே என்னைப் பொருத்தவரை பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளபோது தங்களுடைய தடகள வீரர்களை தில்லிக்கு வர நிர்பந்திக்கமாட்டோம் என்று &lt;br /&gt;அறிக்கை விட்டால் அது உள்நோக்கம் கொண்டது என்று கூறுவதைத் தவிர வேறென்ன கூறுவது? எங்கே நம் நாட்டில் நடைபெறவிருக்கும் போட்டி அவர்கள் 2006ம் ஆண்டு நடத்திய போட்டிகளைவிட சிறப்பாக மைந்துவிடுமோ என்கிற பொறாமையும்தான் காரணமாக இருக்க முடியும். கனடாவுக்கு இது நம்முடைய நாட்டுக்கு கிடைத்திருக்க வேண்டிய போட்டியாயிற்றே என்கிற பொறாமை!&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை இடர்கள் வந்தாலும் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் போட்டியை நடத்தியே தீருவோம் என்கிற உறுதியுடன் பிரதமரும் அவருடைய சகாக்களும் இறுதிகட்ட ஏற்பாடுகளை முனைப்புடன் ஈடுபடும் இந்த வேளையில் 'மேதாவித்தனமாக' இது இப்படித்தான் முடியும் என்று எனக்கு தெரியும் என்கிற தொனியில் பேசிவரும் மணிசங்கர் ஐயர் போன்றவர்களை புறக்கணிப்போம், எந்தவித தடங்கலும் இன்றி போட்டி வெற்றிகரமாக நடந்து முடிய வாழ்த்துவோம். &lt;br /&gt;&lt;br /&gt;என் வீடு, என் குடும்பம் என்பதில் பெருமை கொள்ளும் நான் என் குடும்பத்தார் என்ன செய்தாலும் மற்றவர்கள் முன்பு அவர்களை விட்டுக்கொடுக்க முன்வருவேனா? அதுபோன்றுதான் நம் நாடும். நான்&lt;br /&gt;இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். என்னுடைய நாட்டைப் பற்றி நானே தேவையில்லாமல் குறை கூறமாட்டேன். நிச்சயமாக பிற நாடுகள் குறை கூறுவதை அனுமதிக்கவே மாட்டேன் என்று நாம் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் கோடானுகோடி மக்கள் பட்டினியில் வாடும் இன்றைய சூழலில் இத்தனை பொருட்செலவில் இப்படியொரு பிரம்மாண்ட போட்டி தேவைதானா என்ற கேள்வியும் எழுப்பபடுகின்றது. நிச்சயம் தேவைதான். இந்தியா இன்னும் வளர்ந்து வரும் ஒரு நாடாகவே பல நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.&amp;nbsp; ஆகவே இத்தகைய போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவது அவசியமாகிறது. அத்தகைய முயற்சியில் இடையில் ஏற்படும் சிறு,சிறு தவறுகளை, குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டி நம்முடைய முயற்சிகளை, சாதனைகளை நாமே குறை கூற புறப்பட்டுவிடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-7797543132572334769?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/7797543132572334769/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=7797543132572334769' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/7797543132572334769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/7797543132572334769'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/09/blog-post_27.html' title='காம்ன்வெல்த் போட்டிகள் நிச்சயம் வெற்றிபெறும்'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TKA7aqD7bRI/AAAAAAAAAMo/k6IPRJKexpQ/s72-c/CWG2.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-118081337853093307</id><published>2010-09-21T16:34:00.000+05:30</published><updated>2010-09-21T16:34:00.168+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>தலை வெடித்துவிடும் போலிருக்கிறது!</title><content type='html'>கடந்த சில தினங்களாக வாசகர் பரிந்துரை பட்டியலில் சில பிரபல பதிவர்களின் (மும்மூர்த்திகள்) பதிவுகள் காணோமே. என்ன காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும்போலிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தவிப்புடன்,&lt;br /&gt;&lt;br /&gt;டிபிஆர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-118081337853093307?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/118081337853093307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=118081337853093307' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/118081337853093307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/118081337853093307'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/09/blog-post_21.html' title='தலை வெடித்துவிடும் போலிருக்கிறது!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-4982908272965230685</id><published>2010-09-08T12:25:00.001+05:30</published><updated>2010-09-08T16:41:27.730+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>இது யார் வீட்டு சொத்தும் அல்ல, பொதுச் சொத்து!</title><content type='html'>சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சுமார் 12000 டன் உணவு தானிய இழப்பைப் பற்றி எழுதாத பத்திரிகைகள் இல்லை. உச்ச நீதிமன்றமும் இதில் தலையிட்டு இத்தகைய இழப்புகளை தவிர்க்க ஏன் உபரி தானியங்களை வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கக் கூடாது என்ற வினாவையும் எழுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மறுமொழியாக பிரதமர் இத்தகைய கொள்கை &lt;br /&gt;விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும்&lt;br /&gt;தானிய இழப்பு ஏற்படாவண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதும் சர்ச்சையக் கிளப்பிவிட்டது. உச்ச நீதிமன்றமே பிரதமரின் மறுமொழியை தவறாக எடுத்துக்கொள்ளாத &lt;br /&gt;நிலையில் நம்முடைய 'பிரபல' பதிவாளர்கள் சிலர் நம்முடைய பிரதமரை 'யார் வீட்டு அப்பன் சொத்து'; 'எங்கிருந்து வந்தது இந்த ஆணவம்' என்றெல்லாம் தலைப்பிட்டு பதிவுகள் எழுத கொதித்தெழுந்து பின்னூட்டத்தில் பலர் பிரதமரையும், விவசாய &lt;br /&gt;அமைச்சரையும் திட்டித் தீர்த்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னணி என்ன? ஏன் இத்தகைய இழப்புகள்&lt;br /&gt;ஏற்படுகின்றன? அதை தவிர்ப்பதற்கு ஏன் இந்திய உணவுக்&lt;br /&gt;கழகத்தால் (FoodCorporation of India) இயலவில்லை&lt;br /&gt;என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் வெறும் &lt;br /&gt;sensationalisation என்பார்களே அந்த வகையில் பதிவுகளை எழுதி சக பதிவர்களின் பார்வையை ஈர்ப்பதிலேயே சிலர் குறியாயிருப்பது வாடிக்கையாகி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்து உணவு தானியத்தையும் விவசாயிகளிடத்திலிருந்து கொள்முதல் செய்து அவற்றை உணவு பகிர்ந்தளிக்கும் கழகம் வழியாக (Civil Supply Corporation) குடும்ப அட்டைதாரர்களுக்கு&lt;br /&gt;வினியோகம் செய்யும் பணியை காலம் காலமாக இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் கோதுமையை வடமாநில விவசாயிகளிடத்திலிருந்தும் நெல் மற்றும் பிற தானியங்களை மற்ற பகுதிகளிலிருந்தும் கொள்முதல் செய்து அதற்கு சொந்தமான சுமார் &lt;br /&gt;2000 கிடங்குகளில் சேமித்து வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த பன்னிரண்டு மாத காலத்தில் இந்த கழகம் கொள்முதல் செய்த அளவு இவை:&lt;br /&gt;&lt;br /&gt;கோதுமை: 2.53 கோடி மெட்ரிக் டன்&lt;br /&gt;நெல் : 3.05 கோடி மெட்ரிக் டன்&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் எத்தனை டன் &lt;br /&gt;தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற இலக்கை இந்த கழகத்தின் நிர்வாகக் குழுவினருடைய பரிந்துரையின் பேரில் மத்திய அரசின் விவசாய இலாக்கா நிர்ணயிக்கிறது. இது குறைந்தபட்ச அளவு மட்டுமே.&lt;br /&gt;அதிக அளவு (Maximum limit) என்ற இலக்கு ஏதும் இல்லை. அதாவது இந்த கழகத்தின் கொள்ளளவு எவ்வளவோ அந்த அளவு தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதானே அடிப்படை நியதியாயிருக்க முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;இதே கழகம் தனியார்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டால் தன்னுடைய மொத்த கொள்ளளவுக்கு மேல் ஒரு கிலோ தானியத்தைக் கூட அந்த கழகம் கொள்முதல் செய்யாது. ஏனெனில் விலை கொடுத்து தானியத்தை வாங்கி திறந்தவெளியில் வைத்து மழைக்கும், காற்றுக்கும், எலிக்கும்&lt;br /&gt;அவற்றை தாரை வார்க்க லாப நோக்குடன் இயங்கும் எந்த&lt;br /&gt;நிறுவனமாவது முன்வருமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அரசு நிறுவனம் அப்படி இயங்க முடியாதே. விளைச்சல் அதிகமாக இருக்கும் காலங்களில் எந்த அளவுக்கு கழகத்தின் கொள்முதல் நிலையங்களில் (Procurement outlets) தானியங்கள் வருகின்றனவோ அவை அனைத்தையும் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற அரசின் கொள்கையை தலைமேல் ஏற்று தங்களுடைய மொத்த கொள்முதல் அளவையும் மீறி இந்த கழகம் கொள்முதல் செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் வசம் உள்ள கிடங்குகள் நிறம்பியதும் எஞ்சியுள்ள&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TIcx6Bn5SCI/AAAAAAAAAMg/c3c6a73WCUg/s1600/fci15.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="209" ox="true" src="http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TIcx6Bn5SCI/AAAAAAAAAMg/c3c6a73WCUg/s320/fci15.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தானியங்களை வேறு வழியின்றி அரசுக்கு சொந்தமான அல்லது தனியார்களிடமிருந்து வாடகைக்கு எடுத்த நிலங்களில் அதாவது திறந்தவெளியில் தானிய மூடைகளை ஒரு சிறிய மர மேடைகளில் கோபுர வடிவில் அடுக்கி மழை நீர் புக முடியாத தார்பாய்களில் மூடி பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர் &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதிர்பாராத காற்று, மழையால் சில சமயங்களில் இப்படி சேமித்து வைக்கும் தானியங்களில் சில பாதிக்கப்படுவதுண்டு. மேலும் விவசாயிகள் கொண்டு வரும் தானியங்களின் ஈரப்பதம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற அரசின் நியதியையும் மீறி சில உள்ளூர் அரசுகளின் நிர்பந்தத்திற்கு பணிந்து ஈரப்பதம் அதிகம் உள்ள தானியங்களையும் கொள்முதல் செய்ய நேரிடுகிறது. அத்தகைய தானியங்கள் என்னதான் பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டாலும் புளுத்து போகக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உணவுக் கழகத்தின் தானிய பாதுகாப்பு அளவு (Storage Capacity) வருடா வருடம் அதிகரிக்கப்பட்டாலும் தானிய&lt;br /&gt;விளைச்சலும் அதிகரித்துகொண்டே செல்வதால் கழகத்தின்&lt;br /&gt;கொள்முதல் எப்போதுமே அதன் பாதுகாப்பு அளவை விட&lt;br /&gt;அதிகமாகவே இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கழகத்தின் ஒட்டுமொத்த கொள்முதலுடன் ஒப்பிடுகையில் அதன் இழப்பீடு மொத்த சேமிப்பில் அரை விழுக்காட்டுக்கு மேல் சென்றதில்லை என்கின்றன கழகத்தின் அறிக்கைகள். சமீபத்தில் உச்சநீதி மன்ற கண்டனத்திற்குள்ளான இழப்பின் மதிப்பு 12000&lt;br /&gt;டன். இதை கழகத்தின் மொத்த கொள்முதலான 2.53 கோடி டன் ஒப்பிட்டு பார்த்தால் அரை விழுக்காட்டுக்கும் கீழ்தான் என்பது தெளிவாகும். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன இருந்தாலும் இழப்பு, இழப்புதானே என்றால், அது &lt;br /&gt;உண்மைதான். அதை தடுத்து நிறுத்த மத்திய அரசும், இந்திய உணவுக் கழகமும் ஆவன செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்படி தானியத்தை வீணாக்குவதை விட அவற்றை ஏழை மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கலாமே என்பது நடைமுறைக்கு சாத்தியமாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காடு வறுமைக்கோட்டுக்கும் கீழுள்ளவர்கள் என்கின்றன சமீபத்திய கணக்கீடுகள். அதாவது சுமார் 37 கோடி. இதை ஐவர் அடங்கிய குடும்பமாக பிரித்து ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ தானியத்தை இலவசமாக வழங்கினாலும் எத்தனை கோடி டன் வேண்டும் என்று கணக்கிடுங்கள். இது சாத்தியமாகுமா!&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அரசையும், அதன் தலைவரான பிரதமரையும்&lt;br /&gt;சகட்டுமேனிக்கு சாடுவதற்கு முன்பு ஒரு அரசை நடத்திச் செல்வது எத்தனை சிரமம் என்பதை எண்ணிப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் உணர்வுபூர்வமாக அணுகுவதால்தான் இத்தகைய தவறுகள் ஏற்படுகின்றன. இதை நிச்சயம் தானிய இழப்பீட்டையோ அல்லது பிரதமரின் செயல்பாடுகளையும் அவர் உச்சநீதி மன்றத்திற்கு அளித்த மறுமொழியை நியாயப்படுத்தவோ எழுதவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உணவுக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்கள் யார் அப்பன் சொத்தும் அல்ல. நம் சொத்து. அரசே முன்வந்து இலவசமாக பகிர்ந்தளிக்கிறோம் என்று முன்வந்தாலும் அதை எதிர்க்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. இதை அனுமதித்தால் ஓட்டுக்கு பணம் என்பதற்கு பதிலாக ஒரு ஓட்டுக்கு ஐந்து கிலோ அரிசி என்று புறப்பட்டுவிடுவார்கள், எச்சரிக்கை!&lt;br /&gt;&lt;br /&gt;இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச எரிவாயு மற்றும் அடுப்பு, இலவச மின் இணைப்பு என்பதுபோன்றதல்ல இலவச தானிய வினியோகம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-4982908272965230685?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/4982908272965230685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=4982908272965230685' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4982908272965230685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4982908272965230685'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/09/blog-post_08.html' title='இது யார் வீட்டு சொத்தும் அல்ல, பொதுச் சொத்து!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TIcx6Bn5SCI/AAAAAAAAAMg/c3c6a73WCUg/s72-c/fci15.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-4061849757878756212</id><published>2010-09-06T13:01:00.002+05:30</published><updated>2010-09-06T13:05:34.704+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பதிவுலக இரட்சகர்கள்!</title><content type='html'>சமீபகாலமாக &lt;strike&gt;பல&lt;/strike&gt; சில பதிவர்கள் தங்களை தமிழகத்தை காக்கும் இரட்சகர்களாக முன்நிறுத்திக்கொள்ள முளைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ தமிழகத்தில் இதுவரை நடந்திராத அளவுக்கு ஊழல் நடப்பதாகவும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பழிவாங்கப்படுவதாகவும் கற்பித்துக்கொண்டு அதை எதிர்த்து தங்களுடைய குரலை எழுப்பியே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் கிளம்பியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நான்காண்டு கால சொற்ப பதிவுலக அனுபவத்தில் இப்படி முளைத்து வந்த பலரைக் கண்டிருக்கிறேன். தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு பதிவுலகை ஆட்டிப்படைத்துவிட்டு பிறகு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனவர்கள் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோன்றுதான் இப்போது கிளம்பியிருப்பவர்களும் என்று நான் சொல்லத் தேவையில்லை. இவர்களுக்கெல்லாம் நன்றாக, சரளமாக தமிழ் எழுத வருகிறது என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு நிறுவனத்தையாவது குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்திலுள்ள இலாக்காவையாவது தலைமையேற்று நடத்தியிருந்த அனுபவம் இருந்திருந்தால் ஒரு அரசை நடத்திச் செல்வது எவ்வளவு சிரமம் என்பது இவர்களுக்கு புரிந்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இலவசமாக கிடைத்துள்ள எழுத்து சுதந்திரம், அலுவலக தயவில் இணைய இணைப்பு, கணினி, தோன்றியதை எல்லாம் எழுதி தள்ள ஊதியத்துடன் கிடைக்கும் நேரம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தை எப்படியாவது இந்த ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டு எடுத்து ஊழல் அரசியிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதித்தள்ளுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையும் படித்து மற்ற பதிவர்களுக்கும் பரிந்துரைக்க என்று வேறொரு கூட்டம். இப்போதெல்லாம் அதுவும் தேவையில்லை போலிருக்கிறது. எனக்கு நீ, உனக்கு நான் என்று பரஸ்பரம் நட்சத்திர குத்து விட்டு பரிந்துரை பட்டியலையே எவ்வித கூச்சமும் இல்லாமல் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கும் இவர்கள்தான் தமிழகத்தில் நடக்கும் ஊழலை எதிர்த்து குரல் எழுப்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை பார்த்து சொல்வது ஒன்றுதான். சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டாரே அவரை ஏன் மனத்தளவில் கிறிஸ்துவனாகவும் சட்டப்படி இந்துவாகவும் இன்னும் தொடர்கிறார் என்பதை கேட்டுச்&amp;nbsp;சொல்லுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தலித் அதிகாரி ஒருவர் தண்டிக்கப்பட்டால் அவருடைய சாதியையே சுட்டிக்காட்டி போராட பல அரசியல் கட்சிகள் உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி தலித் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட சலுகையை அனுபவிக்க தகுதியுள்ளவர்தானா என்பதிலேயே சந்தேகம் இருக்கும் சூழலில் அத்தகைய ஒருவருக்கு வரிந்துக்கட்டிக்கொண்டு செயல்பட வேண்டிய அவசியம் பதிவர்களுக்கு தேவையில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-4061849757878756212?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/4061849757878756212/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=4061849757878756212' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4061849757878756212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4061849757878756212'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/09/blog-post.html' title='பதிவுலக இரட்சகர்கள்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-8379916276997669250</id><published>2010-08-19T16:32:00.001+05:30</published><updated>2010-08-19T16:58:17.085+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ஜெ சொன்ன குட்டிக் கதை!</title><content type='html'>&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TG0OhW5XXWI/AAAAAAAAAMU/kzhrxEaec_0/s1600/19_08_2010_007_018.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="255" ox="true" src="http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TG0OhW5XXWI/AAAAAAAAAMU/kzhrxEaec_0/s320/19_08_2010_007_018.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;இந்த கதையில் வரும் &lt;strong&gt;கருமிதான்&lt;/strong&gt; யார் என்று தெரியவில்லை. ஏனெனில் வாரி வழங்குபவர் அம்மையார் என்பது அனைவருக்கும் தெரியுமே! பிறந்த நாள் பரிசாக கிடைத்த அனைத்து நன்கொடைகளையும் ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கியவராயிற்றே!!&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-8379916276997669250?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/8379916276997669250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=8379916276997669250' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/8379916276997669250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/8379916276997669250'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/08/blog-post_19.html' title='ஜெ சொன்ன குட்டிக் கதை!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TG0OhW5XXWI/AAAAAAAAAMU/kzhrxEaec_0/s72-c/19_08_2010_007_018.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-1909689276473455148</id><published>2010-08-17T17:40:00.001+05:30</published><updated>2010-08-17T17:42:00.741+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>பின்னூட்ட மோகமும் வாசகர் பரிந்துரையும்</title><content type='html'>சாதாரணமாக இத்தகைய விஷயங்களைப் பற்றி நான் அதிகம் எழுதுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சமீபகாலமாக வாசகர் பரிந்துரை பட்டியலில் தினமும் தரிசனம் தரும் சில பதிவர்களின் இடுகைகளை வாசித்துவிட்டு இனியும் வாளாவிருப்பது நல்லதல்ல என கருதியதால் இந்த இடுகை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில நாட்களாகவே இந்த பட்டியலில் வரும் அனைத்து இடுகைகளையும் தவறாமல் வாசித்ததில் நான் கண்டது இது ஒரு வடிகட்டின அயோக்கியதனம் என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் ஒரு வங்கியில் பணியாற்றும் பதிவர் ஒருவர் கடந்த வாரம் எழுதிய இடுகைகளில் எதுவுமே இந்த பட்டியலில் வர தகுதியற்றவை என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை தன்னுடைய தினசரி இடுகைக்கு ஓட்டளிக்க வைக்கின்றாரோ என்று கூட கருத தோன்றுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில பதிவர்களைப் பற்றி கூற வேண்டுமென்றால் ஓட்டுக்கு காசு என்கிற அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஓரிரண்டு பின்னூட்டங்கள் கூட இல்லாத பதிவுகள் எப்படி இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற முடிகிறது? அதிசயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கக்கேடு. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணத்தின் செயல்பாடுகளையே ஒருசிலர் கேலிக்கு உள்ளாக்குகின்றனர் என்பதை நிர்வாகம் உணர்ந்து இந்த பட்டியலையே முகப்பிலிருந்து என்று நீக்குமோ அன்றுதான் தமிழ்மணத்திற்கு விடிவுகாலம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-1909689276473455148?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/1909689276473455148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=1909689276473455148' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/1909689276473455148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/1909689276473455148'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/08/blog-post_17.html' title='பின்னூட்ட மோகமும் வாசகர் பரிந்துரையும்'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-4011101471618600283</id><published>2010-08-06T13:01:00.000+05:30</published><updated>2010-08-06T13:01:11.128+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி விமர்சனம்.'/><title type='text'>நாமம் போட்டு பேயை விரட்டும் கிராமம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TFu4Q1sUeCI/AAAAAAAAAMQ/SA0ZcOPO2Pk/s1600/06_08_2010_005_006.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" bx="true" height="257" src="http://2.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TFu4Q1sUeCI/AAAAAAAAAMQ/SA0ZcOPO2Pk/s320/06_08_2010_005_006.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;என்று அகலும் இந்த மூட நம்பிக்கை!! &lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலமாக நாட்டுப்புறங்களில் இத்தகைய மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருவதற்கு&amp;nbsp; தொலைக்காட்சிகள்&amp;nbsp;பூதக்கண்ணாடி,&amp;nbsp;நிஜம்&amp;nbsp;போன்ற&amp;nbsp;பிரத்தியேக&amp;nbsp;நிகழ்ச்சிகள்&amp;nbsp;மூலம்&amp;nbsp;இத்தகைய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்புவதும் ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய நிகழ்ச்சிகளில் தொலைகாட்சி நிரூபர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கிராமவாசிகளை பேட்டிக் கண்டு அவர்கள் கூறுவதை அப்படியே அதாவது எவ்வித தணிக்கைக்கும் உட்படுத்தாமல் ஒளிபரப்புவதன் மூலம் மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு பதில் அதை வளர்க்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளும் பேயும் மனித மனங்களில்தான் என்பதை என்றுதான் மக்கள் உணர்வார்களோ தெரியவில்லை.&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-4011101471618600283?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/4011101471618600283/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=4011101471618600283' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4011101471618600283'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4011101471618600283'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/08/blog-post_06.html' title='நாமம் போட்டு பேயை விரட்டும் கிராமம்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TFu4Q1sUeCI/AAAAAAAAAMQ/SA0ZcOPO2Pk/s72-c/06_08_2010_005_006.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-4757818304029404908</id><published>2010-08-02T16:28:00.000+05:30</published><updated>2010-08-02T16:28:14.952+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி விமர்சனம்.'/><title type='text'>மின் கட்டண உயர்வு!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TFajXCK7KlI/AAAAAAAAAMM/0Ge8On3KrZ4/s1600/02_08_2010_004_009.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" bx="true" height="149" src="http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TFajXCK7KlI/AAAAAAAAAMM/0Ge8On3KrZ4/s320/02_08_2010_004_009.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உண்மைதான். &lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் ஏ.சி மட்டும்தான் இல்லை. மற்ற அனைத்து வீட்டு உபயோக மின் சாதனங்களான வாஷின் மிஷின், ஃப்ரிட்ஜ், ஹாட் ப்ளேட், ஹாட் ஜக், ஓவன், என அனைத்தையும் பயன்படுத்துகிறோம். பகலில் இரண்டு மின் விசிறிகளும் இரவில் நான்கு மின்விசிறிகளும் பயன்படுத்தப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;எனினும் கடந்த ஐந்தாண்டுகளில் என்னுடைய மாத மின் பயன்பாடு 300 யூனிட்டுகளை கடந்ததே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மின் கட்டண உயர்வு நிச்சயமாக என்னைப்போன்ற நடுத்தர மக்களை பாதிக்கவில்லை. இரவெல்லாம் குளுகுளு இன்பத்தை அனுபவிக்க நினைப்பவர்கள் சற்று கூடுதல் சிலவு செய்வதில் தவறேதும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகுப்பில் வருபவர்கள்தானே அரசியல்வாதிகளும்! நிச்சயம் அவர்களுக்கு இது பாதிப்புதான். அதனால்தான்&amp;nbsp; அலறுகிறார்கள்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-4757818304029404908?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/4757818304029404908/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=4757818304029404908' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4757818304029404908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/4757818304029404908'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/08/blog-post.html' title='மின் கட்டண உயர்வு!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_XTQ1_-eUXcQ/TFajXCK7KlI/AAAAAAAAAMM/0Ge8On3KrZ4/s72-c/02_08_2010_004_009.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-2457308872031639081</id><published>2010-07-16T12:58:00.002+05:30</published><updated>2010-07-16T13:02:42.503+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஒருமுறை குழந்தையாக மாறித்தான் பாருங்களேன்!!</title><content type='html'>&lt;a href="http://ennulagam.blogspot.com/2010/07/1.html"&gt;பகுதி 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://ennulagam.blogspot.com/2010/07/2.html"&gt;பகுதி 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://ennulagam.blogspot.com/2010/07/blog-post.html"&gt;பகுதி 3&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://ennulagam.blogspot.com/2010/07/blog-post_14.html"&gt;பகுதி 4&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://ennulagam.blogspot.com/2010/07/blog-post_15.html"&gt;பகுதி 5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;3. மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நேரத்தை ஒதுக்குவது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தில் நம்மைச் சார்ந்திருக்கும் மனைவி, குழந்தைகள் ஜடப் பொருட்கள் அல்ல அவர்களுக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் உண்டு. 'நம்மைச் சார்ந்திருப்பவர்கள்' என்ற வாக்கிலேயே அவர்களுக்கு நம்முடைய வழிகாட்டுதலை எதிர்நோக்கியிருப்பவர்கள் என்பதும் தெளிவாகிறதே. 'குழந்தைகள் விஷயத்த எங்கிட்ட சொல்லாதே அத நீயே பாத்துக்கோ' என்று மனைவியிடம் வேண்டுமானால் விட்டுவிடலாம் ஆனால் மனைவியின் குறைகளை நம்மை விட்டால் யாரால் தீர்க்க முடியும் என்பதை ஆண்கள் நினைத்துப்பார்ப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாளில் பத்து மணி நேரம் அலுவலகத்திற்கு ஒதுக்குவதில் ஆண்கள் யாரும் முறையிடுவதில்லை. ஆனால் ஒரு மணி நேரம் மனைவி, குழந்தைகளுக்கு ஒதுக்குவதென்றால் அவர்களுக்கு நேரம் இல்லை. 'ஏங்க சனி, ஞாயிறுலயாவது பசங்க என்ன படிக்கிறாங்க, எப்படி படிக்கிறாங்க, அவங்களுக்கு என்ன வேணும்னு ஏதாச்சும் கேக்கறீங்களா?' இந்த முறையீடு இல்லாத வீடுகள் இன்று உண்டா என்று கேட்கும் அளவுக்கு சனி, ஞாயிறிலும் அலுவலகத்தை தஞ்சம் அடைவது அல்லது அலுவலக நண்பர்களுடன் வெளியில் செல்வது ஆண்களின் வழக்கமாகி வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பணிக்கு செல்லும் பெண்களுள்ள குடும்பங்களிலும் அலுவலக பணிகளுடன் வீட்டை நிர்வகிப்பது, குழந்தைகளுடைய தேவைகளை கவனித்துக்கொள்வது பெண்களின் கடமையாகிவிடுகிற அவல நிலை இன்று பல குடும்பங்களில் காணப்படுகிறது என்றால் மிகையல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;ஆண்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் நீங்கள் என்னதான் வெற்றியடைந்தாலும் மாலையில் நீங்கள் திரும்புவது மனைவியிடம்தான். இதை ஒருபோதும் மறக்கலாகாது. அலுவலகத்தில் நீங்கள் அடையும் வெற்றியை உண்மையான மகிழ்ச்சியுடன், பெருமையுடன் கொண்டாடி மகிழ்வது உங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகள்தான். அவர்களுடைய தேவைகளை, மனத்தாங்கல்களை கண்டும் காணாததுபோல் இருக்கும் ஆண்களின் அலுவலக வெற்றிகள் காணல் நீர் போன்றவையே. &lt;br /&gt;&lt;br /&gt;இளம் வயதில் நேரமின்மையை காரணம் காட்டி குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற மறக்கும் குடும்பத்தலைவனை அவனுடைய முதிய வயதில் குடும்பத்தினரும் மறந்துவிடக் கூடிய சூழல் உருவாகலாம்,ஜாக்கிரதை!&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு குடும்பத்தினரின் 'தேவைகள்' என்பது அவர்களுடைய பொருளாதார தேவைகளை மட்டும் குறிப்பிடவில்லை. அன்பு, பாசம், பராமரிப்பு எனப்படும் உணர்வுபூர்வமான தேவைகள் எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் அளிக்கக்கூடிய பொருளாதார தேவைகளை விடவும் முக்கியமானவை. ஒரு கணவன் அல்லது தகப்பனிடம் இருந்து மட்டுமே கிடைக்கக் கூடிய இத்தகைய தேவைகளை மனைவியோ மக்களோ வேறொரு ஆணிடமிருந்து பெற முடியுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் Quality time என்பார்கள். அதாவது இவ்வளவு நேரத்தை என் குழந்தைகளுக்கென தினமும் ஒதுக்குகிறேன் என்றால் போதாது. எவ்வளவு நேரம் குழந்தைகளுடன் செலவிட்டேன் என்பதை விட அதை எப்படி செலவிட்டீர்கள் என்பதுதான் முக்கியம். Quality என்பதை 'தரமுள்ள' என புரிந்துக்கொள்வதை விட 'பயனுள்ள' என புரிந்துக்கொள்வது நலம் என கருதுகிறேன். தந்தை என்ற நிலையிலிருந்து குழந்தைகளின் நண்பன் என்கிற நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே, அதாவது நம் குழந்தைகளுடன் குழந்தையாக மாறினால் மட்டுமே, அவர்களுடன் நாம் செலவிடும் நேரம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒருமுறை குழந்தையாக மாறித்தான் பாருங்களேன், உங்களுக்கும் அது எத்தனை புத்துணர்ச்சியை அளிக்கிறது என்பதை உணர்வீர்கள்! பெண்களும் தங்களுடைய தாய் அந்தஸ்த்திலிருந்து இறங்கி வந்து குழந்தைகளின் தோழியாக மாறினால் மட்டுமே அவர்களுடைய செலவிட்ட நேரத்தின் உண்மை பொருளை உணர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் தன் மனைவிக்காக ஒதுக்கும் நேரமும் அப்படித்தான். கணவன் என்கிற நிலையிலிருந்து காதலன் என்கிற நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே மனைவியுடன் செலவிடும் நேரம் பயனுள்ளதாகவும் புத்தணர்ச்சியளிப்பதாகவும் இருக்கும். இது மனைவிக்கும் இது பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவி, குழந்தைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்களுடைய உணர்வுபூர்வமான தேவைகளை நிறைவேற்றும் கணவர்களால் மட்டுமே வீட்டு நிர்வாகத்தில் வெற்றி காண முடியும் என்பதும் அவர்களால் மட்டுமே அலுவலக நிர்வாகத்திலும் வெற்றியடைய முடியும் என்பது உறுதி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;4. பணிக்கு செல்லும் பெண்கள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய அனைத்தும் பணிக்கு செல்லும் பெண்களுக்கும் பொருந்தும். ஏனெனில் அதிகார ஏணியில் இன்று பல பெண்கள் இருபது வருடங்களுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத நிலைகளில் அமர்ந்துள்ளனர். ஆகவே நிர்வாக பொறுப்பிலுள்ள ஆண்கள் உள்ளாகும் அனைத்து மனப்பதட்டங்களுக்கும் இத்தகைய பெண்களும் உள்ளாக வாய்ப்புண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;அதிகார வர்க்கத்தில் ஆண்களுக்கு நிகரான நிலையிலுள்ள பெண்களுக்கு ஆண்களுக்கு இல்லாத பொறுப்புகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அலுவலகத்தை நிர்வகிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு வீட்டு நிர்வாகத்தில் அதே அளவுக்கு பங்கு இல்லை என்பதும் உண்மை. குறிப்பாக, பெண்கள் பணிக்கு செல்லாத காலத்தில் இருந்துவந்த குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இன்றும் அவர்கள் தலையில் சுமையாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்திற்கு தேவையானவற்றை (சமையல் சாமான்கள் எனப்படும் மளிகை, காய்கறி ஆகியவற்றிலிருந்து டாய்லெட்றி எனப்படும் சில்லறை பொருட்கள் என பட்டியல் நீண்டுக்கொண்டே போவதுண்டு) கொள்முதல் செய்வது, சமைப்பது, குழந்தைகளுடைய வீட்டுப் பாடம் உட்பட அவர்களுக்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வது , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக/பேராசிரியராக பணிபுரியும் பெண்களுக்கு அடுத்த நாள் எடுக்க வேண்டிய பாடங்களுக்கு தயார் செய்வது, தேர்வுத்தாள்களை திருத்துவது ஆகியவை வெறுப்பையளித்தாலும் தவிர்க்க முடியாத சில அலுவல்களில் சில. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஆண்களை விடவும் அதிகமான அளவு மன உளைச்சலுக்கு பெண்கள் ஆளாகின்றனர் என்றால் மறுப்பதற்கில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இதை எப்படி எதிர்கொள்வது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அ) குடும்ப நிர்வாகத்தில் ஆண்களை ஈடுபடுத்துவது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புருஷ லட்சணம் சம்பாதிப்பது மட்டுமே என்பதுபோன்ற பண்டைகாலத்து நிலைப்பாட்டை முழுமையாக கைவிடுவது. சமையலில் இருந்து குழந்தைகளை குளிக்க வைத்து, உடை மாற்றி, உறங்க வைப்பது வரை ஆண்களையும் துவக்கத்திலிருந்து (அதாவது திருமணம் ஆன நாளிலிருந்தே) ஈடுபடுத்துவது. குடும்பத்தில் ஆண்கள் செய்யத்தகாத வேலை என்று ஒன்றுமே இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும். வீட்டு அலுவல்களுக்கென பல்வேறு இயந்திரங்கள் பயன்பாட்டிலுள்ள இன்றைய சூழலில் எந்த அலுவலையும் எவ்வித கவுரவு இழப்பும் இல்லாமல் ஆண்களாலும் திறம்பட செய்ய முடியும் என்பதை ஆண்களுக்கு புரிய வைக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பெண்களால் ஆகாதது ஒன்றும் இல்லை என்பார்கள். அவற்றுள் கணவனை தன்வயப்படுத்தி குடும்ப அலுவல்களில் தனக்கு உதவியாய் இருக்கச் செய்வதும் ஒன்று. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடுகிற மாட்டை பாடி கறக்க வேண்டும் என்பதுபோன்று ஆண்களை அவர்கள் வழியிலேயே சென்று குடும்ப அலுவல்களில் சரிபாதியை அவர்கள் தலையில் சுமத்துங்கள். உங்களுடைய சுமை வெகுவாக குறைந்துபோகும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆ) குழந்தைகளுக்கு அவர்களுடைய பொறுப்பை உணர்த்துவது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் அவர்களுடைய அனைத்து விஷயங்களிலும் உதவி செய்ய முயல்வது தேவையற்றது. ஆங்கிலத்தில் இதைத்தான் Spoon feeding என்பார்கள். உண்ணும் உணவிலிருந்து, உடுத்துவது, படிப்பது என எல்லாவற்றிலும் அவர்களுக்கு உதவ முயலாதீர்கள். இப்போதெல்லாம் குடும்பத் தலைவிகளின் பெரும்பாலான நேரம் இதற்காகவே செலவிடப்படுவதை காண முடிகிறது. குழந்தைகளுக்கு தேர்வு என்றால் அது குடும்பத்தலைவிகளுக்கே தேர்வு என்பதுபோலாகிவிட்டது. ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு தேர்வு என்று தொடங்குகிறது என்பது கூட தெரிவதில்லை. இத்தகைய குழந்தைகள் தேர்வுகளில் வேண்டுமானால் முதலிடம் பிடிக்க முடியும் ஆனால் வாழ்க்கையில் முழுமையாக வெற்றிபெறுகிறார்களா என்பது சந்தேகமே. வாழ்க்கையின் வெற்றி என்பது நல்ல வேலையில் அமர்வதும் கைநிறைய ஈட்டுவதும்தான் என்றால் ஒருவேளை அது இத்தகைய குழந்தைகளுக்கு சாத்தியமாகலாம். ஆனால் வீட்டையும் அலுவலகத்தையும் திறம்பட நிர்வகிக்கக் கூடிய நல்ல நிர்வாக திறனுள்ளவர்களாக உருவாக சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய திறன் மிகவும் அவசியம். அதை குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு உணர்த்துவது மிக மிக அவசியம். இதனால் தங்களின் பாரமும் பாதியாக குறைய வாய்ப்புள்ளது என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இ) வீட்டில் முதியவர்களின் வழிகாட்டுதல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலங்களில் nuclear family எனப்படும் நான், என் கணவர், என் குழந்தைகள் என யாரையும் குறிப்பாக கணவனின் குடும்பத்தினரை சார்ந்திராத குடும்பங்களின் எண்ணிக்கை பெருகிவருவதை காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் உடன் வசிக்கும் முதியவர்களால் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்படுவதாக உணரும் பெண்கள் தாங்களும் அந்த நிலையை அடையப் போகிறவர்கள்தான் என்பதை கவனத்தில் கொள்வதில்லை. Generation gap எனப்படும் இரண்டு தலைமுறைகளுக்கிடையில் அபிப்பிராய பேதம் ஏற்படுவது மிகவும் சகஜம். ஆனால் இத்தகைய முரண்பாடுகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. சச்சரவும் சல்லாபமும் கலந்ததுதான் தாம்பத்தியம் என்பார்கள். கட்டியவனுடன் சல்லாபமும் அவனுடைய குடும்பத்தாருடன் சச்சரவும் என்பதைத்தான் முன்னோர்கள் இப்படி நாசூக்காக கூறி வைத்துள்ளனரோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு கருத்து பேதங்களுக்கும் அதனால் ஏற்படும் சச்சரவுகளுக்கும் முதியோர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் கூட பல சமயங்களில் காரணங்களாகிவிடுகின்றன. குறிப்பாக கணவன் - மனைவி இருவரும் பணிக்குச் செல்பவர்களாக இருந்துவிட்டால் குழந்தைகளை பேணுவதற்கு வீட்டில் முதியவர்கள் மிகவும் அவசியம். பள்ளியிலிருந்து வீடுதிரும்பும் குழந்தைகளுக்கு யாரும் இல்லாத வீடு ஒரு பெரிய வெற்றிடத்தை அவர்களுடைய மனதில் ஏற்படுத்துவதுதான் அவர்களால் ஏற்படும் பல சச்சரவுகளுக்கு காரணிகளாக அமைகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த வெற்றிடத்தை போக்க வீட்டிலிருக்கும் தாத்தா, பாட்டியால் நிச்சயம்&amp;nbsp;முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். மேலும் குடும்பம் மற்றும் அலுவலகம் ஆகிய இருவேறு சுமைகளை ஏற்கனவே சுமந்துக்கொண்டிருக்கும் பெண்கள் குழந்தைகளை பேணுவது என்ற பாரத்தையும் தனியே சுமக்க வேண்டுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;வீடு - அலுவலகம். இரண்டும் வெவ்வேறுதான் என்றாலும் இவை இரண்டுமே நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஒன்றில் நாம் எந்த அளவுக்கு வெற்றிபெறுகிறோமோ அந்த அளவுக்குத்தான் மற்றதிலும் வெற்றிபெற முடியும் என்பதில் ஐயமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நிறைவுபெறுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-2457308872031639081?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/2457308872031639081/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=2457308872031639081' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/2457308872031639081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/2457308872031639081'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/07/blog-post_16.html' title='ஒருமுறை குழந்தையாக மாறித்தான் பாருங்களேன்!!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-1063134113675603874</id><published>2010-07-15T14:01:00.001+05:30</published><updated>2010-07-15T14:05:50.365+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>போதும் என்ற மனம்!</title><content type='html'>&lt;b&gt;உ) போதும் என்கிற மனப்பாண்மை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'உலகிலுள்ள அனைத்தையும் நீ சம்பாதித்தாலும் உன் ஆன்மாவை (நிம்மதியை) இழந்துவிட்டால் அதனால் என்ன பயன்?' இது ஒரு கிறிஸ்துவ பாதிரியார் தன்னைத்தானே கேட்டுக்கொண்ட கேள்வி. அவர் ஒரு பெரிய செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவர். பிறந்த வயதிலிருந்தே 'தேவைகள்' என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு சகலத்தையும் கிடைக்கப் பெற்றவர். குழந்தை மற்றும் மாணவ பருவத்தில் அவருக்கு மகிழ்ச்சியை அளித்து வந்த வசதி வாய்ப்புகள் வாலிப பருவத்தில் ஒரு சுமையாகவே தெரிந்தன. ஆகவே நாளடைவில் தன்னுடைய மனநிம்மதியை இழக்கலானார். எதற்காக இந்த வாழ்க்கை என்ற தோன்றவே அனைத்தையும் துறந்து ஆன்மீகவாதியானார். &lt;br /&gt;&lt;br /&gt;'People have become so materialistic these days' என்கிறார் ஒரு பிரபல மேலாண்மை ஆய்வாளர். இன்றல்ல, மனிதன் உலகில் தோன்றிய நாள் முதலே அவன் உலகத்திலுள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொள்ளத்தான் விரும்பினான். &lt;br /&gt;&lt;br /&gt;நான் வங்கியில் குமாஸ்தாவாக நுழைந்தபோது எப்படியாவது ஒரு அதிகாரியாகிவிட வேண்டும் என்று நினைத்தேன். பணிக்கு சேர்ந்த ஆறு ஆண்டுகளில் அது சாத்தியமாகிற்று. அதற்குப் பிறகு திருமணமாவதற்குள் ஒரு கிளைக்கு மேலாளராகிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இரண்டும் நிகழ்ந்தும் ஆசை அத்துடன் அடங்கவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணியாற்றினால்தான் மேலும் பதவி உயர்வு கிடைக்கும் என்று நினைத்து மாணவ பருவத்திலிருந்த மகள்களை மனைவியுடன் சென்னையில் விட்டுவிட்டு மும்பை சென்றேன். பதவி உயர்ந்தது. ஆனாலும் அத்துடன் திருப்திகொள்ள முடியவில்லை. எனக்கு பதவி உயர்வே தேவை என்பதைவிட என்னுடன் பணிக்கு சேர்ந்தவர்கள் என்னைவிட உயர்ந்த பதவிக்கு சென்றுவிடக் கூடாதே என்கிற எண்ணத்தில் என் பயணம் தொடர்ந்தது. எட்ட நினைத்த பதவிகளை அடைந்து முடித்து திரும்பிப் பார்த்தபோது வாலிபம் என்னை கடந்துபோயிருந்தது. மகள்கள் இருவரும் தோளுக்கு மேல் வளர்ந்து நின்றனர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு இதனால் எனக்கு என்ன பெரிதாக கிடைத்துவிட்டது என்று எண்ணிப் பார்க்கிறேன். 'வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் இருந்தும்... No peace of mind' நடிகர் திலகம் திரைப்படம் ஒன்றில் (ஞானஒளி என நினைக்கிறேன்) உதிர்க்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது: &lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம். 'போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்பது எத்தனை சத்தியமான உண்மை! இளம் வயதில் நம்மில் பலருக்கும் இந்த தத்துவம் ஒரு வறட்டு தத்துவமாகவே தோன்றுகிறது. வாணமே எல்லை என்று உயர, உயர பறந்துபோய் யாரும், நம் குடும்பத்தினர் கூட எட்ட முடியாத உயரத்தை அடைந்துவிடுகிறோம். அமெரிக்காவில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவிட்டு இப்போது தாயகம் திரும்புவதா, திரும்பினால் அந்த சூழலுக்கு நம்மால் இறங்கிவர முடியுமா? என்று கடந்த ஆறு மாத காலமாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் திணறுகிறார் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர். அவருடைய மனைவிக்கு தாயகம் திரும்பினால் போதும் என்ற மனநிலை. பிள்ளைகள் இருவருக்கும் அந்த எண்ணமே கசப்பை தருகிறது. ஒருகாலத்தில் சுவர்க்கமாய் தெரிந்த அமெரிக்கா இப்போது தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ என்ற மனக்கலக்கத்தில் என் உறவினர். இத்தகைய மனக்கலக்கத்தில் பல மேற்கத்திய நாடுகளில் பணிக்கு சென்று நிரந்தரவாசிகளாகிப்போன பலர் உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக வாழ்க்கையில் எத்தனைதான் சாதித்தாலும் அந்த வெற்றிக்காக இழந்தவைகளை கணக்கிடும்போதுதான் நம்மில் பலருக்கும் புரிகிறது... எத்தனை விலைகொடுத்து பெற்ற வெற்றி இது என்பது! அலுவலக வேஷங்களை களைந்துவிட்டு வீடு திரும்பும்போது குடும்பத் தலைவனாகவும், தலைவியாகவும் எளிதில் மாறிவிட முடிகிறவர்களால் மட்டுமே வீட்டையும் அலுவலகத்தையும் சரிவர நிர்வகிக்க முடியும் என்பது உறுதி!  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;2. அலுவலகமும் வீடும் ஒன்றல்ல&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய மனப்பாண்மைகளை முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு களைந்தாலும் வீடு வீடுதான் அலுவலகம் அலுவலகம்தான் என்பதை முழுமையாக உணரும் வரையிலும் இரண்டையும் முழுமையாக நிர்வகிப்பது எளிதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகம் என்பது நாம் மட்டுமல்லாமல் நம்மைப் போன்ற பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒன்றுசேரும் இடம். ஆகவே அதற்கென்றே பல சட்ட திட்டங்கள், ஒழுங்குமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி நடக்க வேண்டியது நம்முடைய கடமையாகிறது. அவற்றில் சிலவற்றுடன் நமக்கு உடன்பாடில்லை என்றாலும் அவற்றை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கு. அதுபோன்றே நம்முடன் பணியாற்றும் சிலருடன் நம்மால் ஒத்துப்போக முடியாமல் போகலாம். அவர்களுடைய சில பழக்கங்கள், பேச்சு, செயல்பாடு ஆகியவற்றுடன் நமக்கு உடன்பாடில்லாமல் போகவும் வாய்ப்புண்டு. ஆனால் அத்தகையோருடன் ஒத்துப்போய்த்தான் தீர வேண்டிய கட்டாயத்தில் நாம் இல்லை. நம்முடைய எண்ணங்களுக்கு ஒத்துப்போகாத சக ஊழியர்களை விட்டு விலகிச் செல்கிறோம். நாம் உண்டு நம் வேலையுண்டு என இருந்துவிடுகிறோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நம் வீடு அப்படியல்ல. நம்முடன் வீட்டில் உடன் வசிக்கும் அனைவரும் நம் சொந்தங்கள், ஒரே இரத்தம். ஆகவே அவர்களை அவர்களுடைய நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்வது அவசியமாகிறது. அலுவலகத்திலுள்ளதைப் போன்ற சட்ட திட்டங்களையோ அல்லது ஒழுங்குமுறைகளையோ வீட்டிலும் நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதையும் நாம் உணரவேண்டும். பல குடும்பங்களில் குடும்ப தலைவன் வைத்ததுதான் எழுதா சட்டம். இதை குடும்பத் தலைவியிலிருந்து குடும்பத்திலுள்ள அனைவரும் மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குடும்பத்திலுள்ளவர்களை நிர்பந்திக்க எண்ணுவது காலங்கடந்த செயல் என்பதை ஆண்கள் பலரும் உணர்வதில்லை. இதை என்றைக்கு உணர்கிறார்களோ அன்றுதான் வீடு வீடாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்தின் செயல்பாடுகள் நமக்கு பிடிக்கவில்லையென்றால் வேலையை உதறிவிட்டு சென்றுவிட முடியும். ஏனெனில் நம்முடைய நோக்கம் ஊதியம் மட்டுமே. மாறாக நாம் பணியாற்றும் நிறுவனத்தை மேம்படுத்துவதல்ல. எந்த நிறுவனம் நமக்கு அதிக ஊதியம் அளிக்க முன்வருகிறதோ அதற்கு நம்முடைய உழைப்பை அளிக்க முன்வருகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் குடும்பத்திலுள்ளவர்களுடன் ஒத்துப்போக முடியாமல் போகும் சூழலில் விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிடலாம் என்கிற மனப்பாங்கு சிலரிடம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் பெரும்பான்மையோருக்கு அது இன்றும் அத்தனை எளிதல்ல. சொந்தங்களை உதறிவிட்டு செல்வது எளிதல்ல என்பதை உணர்ந்தே இருக்கின்றனர். நம் நாட்டை பொருத்தவரை இன்றும் திருமணம் ஒரு ஒப்பந்தம் மட்டுமே என்கிற மனப்பாங்கு வெகு சிலரிடமே காணப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதில் வேறொரு உண்மையும் உண்டு. 'என்னுடைய ஆஃபீஸ் பிரச்சினைய சால்வ் பண்றதுக்கே எனக்கு நேரம் போற மாட்டேங்குது இதுல வீட்டு பிரச்சினைகள வேற எங்கிட்ட ஏன் சொல்லி என் டென்ஷன் பண்றே?' இது பல ஆண்கள் தங்களுடைய மனைவியிடம் கூறும் முறையீடு. ஏதோ வீட்டு பிரச்சினை பெண்களின் பிரச்சினை என்பதுபோல. Charity begins at home என்பதுபோன்று வீட்டு பிரச்சினை தீராமல் அலுவலக பிரச்சினை தீரப்போவதில்லை என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. வீடு வீடாக இருக்கும் வரைதான் அலுவலகத்தில் நாம் திறம்பட பணியாற்ற முடியும். அலுவலக தோல்விகளில் சிலவற்றிற்கு வீட்டிலுள்ள சுமுகமற்ற சூழலும் கூட காரணிகளாக இருக்கலாம். அதுபோன்றே குடும்பத்தில் ஏற்படும் சில சச்சரவுகளுக்கு அலுவலக தோல்விகளும் காரணிகளாக அமையலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே வீடும் அலுவலகமும் வெவ்வேறு என்றாலும் இரண்டையும் சரிவர நிர்வகிப்பது நம்முடைய வெற்றிக்கு மட்டுமல்லாமல் மனநிம்மதிக்கும் மிக, மிக அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை நிறைவுபெறும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-1063134113675603874?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/1063134113675603874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=1063134113675603874' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/1063134113675603874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/1063134113675603874'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/07/blog-post_15.html' title='போதும் என்ற மனம்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-2128467287016607261</id><published>2010-07-14T13:53:00.000+05:30</published><updated>2010-07-14T13:53:25.161+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சார் லீவ் வேணும்!</title><content type='html'>&lt;strong&gt;இ) அவ்வப்போது விடுப்பில் செல்வது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக அலுவல்களில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்படியென்றால் நிச்சயம் உங்களுக்கு ஓய்வு தேவை. &lt;br /&gt;&lt;br /&gt;சில பள்ளிகளில் மாணவர்களுக்கு நூற்றுக்கு நூறு அட்டெண்டன்ஸ் என்ற விருது அளிக்கப்படுவதை கண்டிருக்கிறோம். என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய மகளுக்கு அவருடைய பள்ளியில் 'hundred percent attendance' விருது கிடைத்ததென்று பெருமையுடன் அலுவலக நண்பர்களுக்கு ஒரு விருந்தே அளித்து கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. அவரும் அப்படித்தான். வருடத்தில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் அலுவலகத்திற்கு வருவதில் குறியாயிருப்பார். இதைத்தான் gene கோளாறு என்கிறோம். அதாவது வம்சாவழி குணநலன்கள். இத்தகையோருக்கு தான் இல்லாவிட்டால் அலுவலகம் ஸ்தம்பித்துவிடும் என்று நினைப்பு. எப்போதாவது உடல்நலக் குறைவினால் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் வீட்டிலிருந்தவாறே மணிக்கொரு முறை தொலைபேசியில் தொடர்புகொண்டு remote control செய்ய முயலுவார்கள். இத்தகையோர் தங்களுடைய அலுவல்களில் உண்மையுள்ளவராக இருக்கிறார்கள் என்று பொருளாகாது. இவர்களுடைய நடவடிக்கைகளில் ஏதோ மர்மம் இருப்பதுபோலவும் தோன்றும். எங்கே நாம் செய்கிற தவறுகளை நாம் இல்லாத சமயத்தில் வேறு எவரேனும் கண்டுபிடித்துவிடுவார்களோ என்கிற ஒருவித அச்சம் இருப்பது போலவும் தோன்றும். ஆகவே எங்களுடைய வங்கியில் கிளை மேலாளர்கள் வருடத்தில் இரண்டு வாரங்கள் விடுப்பில் செல்ல வேண்டும் அல்லது வேறொரு அலுவலகத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற நியதியை அறிமுகப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக சூழல்களிலிருந்து மட்டுமல்லாமல் வீட்டு சூழல்களிலிருந்தும் அவ்வப்போது மாற்றம் தேவை. இல்லையென்றால் ஒருவித சலிப்பு மனதில் குடிகொள்ள வாய்ப்புள்ளது. வருடம் ஒருமுறையாவது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவருவது உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என்றால் மிகையல்ல. பெரும் பொருட்செலவுடன் நீண்ட தூரப் பயணம் சென்று வரவேண்டும் என்றில்லை. எவ்வளவு தொலைவு அல்லது எங்கு செல்கிறோம் என்பதல்ல முக்கியம். ஆனால் வெளியூர் செல்கிறேன் என்று அலுவலக நண்பர்கள் அனைவரிடமும் 'don't worry I will always be available in my cell phone' என்று கூறிவிட்டு செல்வதில் எவ்வித பயனும் இல்லை. சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாமல் அவருடன் வெளியூர் செல்லும் அனைவருக்குமே அவர் ஒரு தொல்லையாகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. 'விடுப்பு' என்ற சொல்லிலேயே அன்றாட சூழலில் இருந்து 'விலகி' இருப்பது என்கிற பொருள் இருப்பதை கவனத்தில் கொண்டு இயன்றவரை விலகியிருந்தால் விடுப்பின் முழு பலனை அனுபவிக்க முடியும். மீண்டும் புத்துணர்ச்சி பெற்று திரும்பி தங்களுடைய அலுவல்களை கவனிக்கவும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஈ) 'முடியாது', 'இல்லை' என்பதை தெளிவாக சொல்வது&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் ஒருவரால் மட்டுமே எதைக் கேட்டாலும் செய்ய முடியும் (அதாவது அப்படியொருவர் உள்ளார் என்பதை நம்புபவர்களுக்கு!). நம்மில் பலருடைய மன அழுத்தத்திற்கு மூல காரணமே நம்மால் செய்ய இயலாதவற்றையும் சரி என்று ஏற்றுக்கொள்வதுதான் என்றால் மிகையல்ல. 'என்னால் முடியாது' என்கிற சொல்லே என்னுடைய அகராதியில் இல்லை என்று கூறிக்கொள்வதை ஒருவித பெருமையாக கருதுபவர்களையும் நாம் கண்டிருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, நம்மால் சிலவற்றைத்தான் முழுமையாக செய்து முடிக்க முடியும். இதற்கு நம்முடைய செயல்திறன் (physical ability) மட்டுமல்ல மனத்திறனும் (Mental ability) ஒரு காரணம். உடல் வலிமையால் இயலாதவற்றை மனவலிமையால் சாதித்துவிடலாம் என கருதுபவர்களும் உண்டும். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமாகாது. நூற்றில், ஆயிரத்தில் ஒருவருக்கு ஒருவேளை சாத்தியமாகலாம். சராசரி மனிதன் ஒவ்வொருவனுக்கும் அவனால் செய்யவியலாத காரியங்கள் பல உண்டு. அதை செய்கிறேன் என ஏற்றுக்கொண்டு அதை சரிவர செய்து முடிக்கவியலாமல் போகும்போதுதான் தேவையற்ற மன அழுத்தத்திற்குள்ளாகிறான். &lt;br /&gt;&lt;br /&gt;வானத்தை ஆடையாக கேட்கும் மனைவியையோ 'மலையையே போய் விற்றுவிட்டு வா' என்கிற உயர் அதிகாரியையும் திருப்திப்படுத்த முயன்றால் தோல்வி நிச்சயம்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;'How to say NO' என்கிற தலைப்பில் பல மேலாண்மை ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளதை இணையதளங்களில் காணலாம். ஏனெனில் இது மிக அவசியமான மேலாண்மை தகுதிகளில் ஒன்று என்கின்றனர் பல வெற்றிபெற்ற சாதனையாளர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தங்களால் இயலாதவற்றை மிக சாதுரியமாக, நாசூக்காக கேட்பவர் மனம் புண்படாதவாறு கூறக்கூடியவர்களே மேலாண்மை அல்லது அதிகார ஏணியில் மிக உயர்ந்த படியை அல்லது நிலையை எட்டக் கூடியவர்கள் என்றாலும் மிகையாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்திலும் வீட்டிலும் ஒரு சுமுகமான சூழலை உருவாக்க இந்த திறமை மிகவும் உதவுகிறது. 'உங்களால நான் கேட்டத வாங்கித்தர முடியலன்னா அப்பவே சொல்லியிருக்கலாமில்ல.. எதுக்கு இத்தன நாள் இழுத்தடிச்சிட்டு இப்ப ஏமாத்தறீங்க?' என்றுதான் பல குடும்பங்களில் வாக்குவாதம் துவங்கும். 'எங்கப்பா முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லிருவார் உங்கப்பா மாதிரி இழுத்தடிச்சிட்டு கடைசியில ஏமாத்த மாட்டார்.' இத்தகைய தந்தைகளின் பிள்ளைகளும் வாழ்க்கையில் எது தங்களால் முடியும் எது முடியாது என்பதை சிறுவயதிலிருந்தே கற்றுக்கொள்வர். முடியாது என்று கூறுகையில் ஏற்படுகின்ற ஏமாற்றம் ஓரிரு தினங்களில் மறைந்துவிடக் கூடும். மாறாக இன்று கிடைக்கும், நாளை கிடக்கும் என காத்திருத்தலால் ஏற்படும் ஏமாற்றம் அத்தனை எளிதில் மறைவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எட்டிப்பிடிக்க முடியாத வர்த்தக இலக்குகளை (Business Budgets) மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொண்டு அதை எட்ட முடியாமல் தோற்று நின்ற பல கிளை மேலாளர்களை நான் கண்டிருக்கிறேன். அதே சமயம் தங்களால் எட்ட முடியாது என கூறிவிட்டு பிறகு அதை மிகவும் சிரமப்பட்டு எட்டி முடித்து சாதித்த மேலாளர்களையும் நான் கண்டிருக்கிறேன். முன்னவர்களை விடவும் பின்னவர்களுக்கே உயர் அதிகாரிகள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் இருக்கும் என்பது உறுதி. &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-2128467287016607261?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/2128467287016607261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=2128467287016607261' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/2128467287016607261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/2128467287016607261'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/07/blog-post_14.html' title='சார் லீவ் வேணும்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-7176411458283322545</id><published>2010-07-12T13:57:00.001+05:30</published><updated>2010-07-12T13:59:22.132+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடும் அலுவலகமும்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>என்னால்தான் இதை நன்றாக செய்ய முடியும்!</title><content type='html'>அலுவலக பிரச்சினைகளை அலுவலகத்திலும் வீட்டுப் பிரச்சினைகளை வீட்டிலும் விட்டுவிட்டு வருவது நல்லது என்று மேம்போக்காக சொல்லிவிட்டு செல்வதுதான் பல மேலாண்மை எழுத்தாளர்களுடைய வழக்கம். அதை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது எத்தனை கடினம் என்பதை அத்தகைய சூழலில் இருப்பவர்களால் மட்டுமே உணர முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் இது சாத்தியமே இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;சாத்தியம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதற்கு 'Instant Solution' எனப்படும் உடனடி தீர்வு ஏதும் இல்லை. ஏனெனில் இதற்கு 'personality' அல்லது 'traits' எனப்படும் ஒவ்வொருவரின் பிரத்தியேக குணநலங்களும் காரணம். இதற்கு அவருடைய 'gene'தான் காரணம் என்று கூற கேட்டதில்லையா? சிலர் பரம்பரை, பரம்பரையாகவே எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். வேறு சிலர் மலையே பெயர்ந்தாலும் அசரமாட்டார்கள். நம்முடைய பல பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் இத்தகைய 'எல்லைகளை வரையறுத்து'க்கொள்ள இயலாமைக்கு காரணமாக அமைவது என்னென்ன என்பதை இணம் கண்டுக்கொண்டு அவற்றை விலக்க முயற்சி செய்தால் இதற்கு தீர்வு நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அ) என்னால்தான் இதை நன்றாக செய்ய முடியும்!&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;'நான் மட்டுமே' அல்லது 'என்னால் மட்டுமே' என்பது போன்ற மனப்பாங்குள்ளவர்கள் அலுவலகத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் சுமை சுமக்கும் சுமைதாங்கிகளாகவே இறுதிவரையிலும் இருக்கின்றனர். எந்த ஒரு அலுவலையும் அது எத்தனை எளிதானதாக அல்லது சிறிதானதாக இருந்தாலும் தன்னால்தான் முழுமையாக செய்து முடிக்க முடியும் என எண்ணுபவர்கள் இவர்கள். தங்களால் இயலாத காரியத்தையும் தன் தலைமேல் ஏற்றுக்கொண்டு செய்து முடிக்க முடியாமல் திணறுவார்கள். குறிப்பாக மேற்பார்வையாளர் பதவியில் அமர்ந்திருப்பவர்கள் தங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களுடைய அலுவல்களை சரிபார்க்கும் பொருப்பை மறந்துவிட்டு அவர்கள் செய்துமுடிக்க வேண்டிய அலுவல்களையும் தங்களாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். விளைவு? தங்களுடைய  முதன்மை அலுவலான மேற்பார்வையை (supervisory) சரிவர ஆற்றாமல் உயர் அதிகாரிகளின் ஏச்சுக்கு ஆளாவார்கள்.  இத்தகைய ஏச்சிலிருந்து தப்பிக்க இரவு நேரம் வெகு நேரம் அலுவலகத்தில் அமர்ந்து தங்களுடைய அலுவல்களை செய்வார்கள். என்னுடைய வங்கி கிளைகள் பலவற்றில் இத்தகைய மேலாளர்களைக் கண்டிருக்கிறேன். அன்றாட அலுவல்களை முடிப்பதிலேயே குறியாயிருக்கும் இவர்களால் தங்களுடைய மேலாளர் முதன்மை பணியான கிளையின் வர்த்தக மேம்பாட்டை கோட்டை விட்டுவிடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய மனப்பாங்கிலிருந்து விடுபடுவது அத்தனை எளிதல்ல. ஆனால் தங்களால் இயன்றவரை இத்தகைய போக்கிலிருந்து விடுபட முயலவேண்டும். Delegation என்கிற அலுவல்களை அவரவருடைய பதவி அல்லது அந்தஸ்த்திற்கு ஏற்றார்போல் பகிர்ந்தளிக்கும் உத்தியை பயன்படுத்த வேண்டும். இது அலுவலகத்திற்கு மட்டுமல்லாமல் வீட்டிற்கும் பொருந்தும். மனைவி மற்றும் குழந்தைகளால் செய்து முடிக்கக் கூடிய அலுவலை அவர்களிடமே விட்டுவிட வேண்டும். இதற்கு முக முக்கியமாக தேவைப்படுவது 'என்னால் செய்து முடிக்க முடிந்த எந்த அலுவலையும் மற்றவர்களாலும் செய்ய முடியும்' என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது. ஒரு அதிகாரியின் வெற்றியே அவருடைய பணியாளர்களையும் அவரைப்போன்றே திறமையுள்ளவராய் மாற்றுவதில்தான் அமைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இது வீட்டிற்கும் பொருந்தும். ஒரு குடும்பத் தலைவனின் வெற்றி குடும்பத்திலுள்ள அனைவரையும் பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதில்தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய 'என்னால் மட்டுமே முடியும்' என்ற மனப்பான்மையால் ஏற்றுக்கொண்ட அலுவல்களை முடிக்க முடியாமல் அலுவலக வேலைகளை வீட்டுக்கு கொண்டு செல்வதும் அலுவலக நேரத்தில் வீட்டில் முடிக்க முடியாமல் போன அலுவல்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதும் தொடரத்தான் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆ) நேரத்தின் அவசியத்தை உணர்வது.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;அலுவலகங்களில் ஒரு தவறான கருத்து நிலவுவதை கண்டிருக்கிறேன். யார் அலுவலகத்திற்குள் முதலில் நுழைந்து இறுதியில் வெளியேறுகிறாரோ அவர்தான் மிகவும் உண்மையான ஊழியர் (Sincere worker) என்று கருதுவது. இது பல நேரங்களில் உண்மைக்கு நேர்மாறானதாக இருக்கும். ஒரு ஊழியர் தன்னுடைய அலுவல்களில் உண்மையானவராகவோ (sincere) அல்லது தன்னை அர்ப்பணித்துக்கொண்டவராகவோ (dedicated) இருப்பதைவிட அதை செய்துமுடிக்க தேவையான திறமை வாய்ந்தவராக (talented) அல்லது தகுதியுள்ளவராக (suitable) இருப்பதுதான் மிகவும் அவசியம்.  ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் செய்து முடிக்கக் கூடிய ஒரு அலுவலை அதிகாலையிலேயே அலுவலகத்திற்குள் நுழைந்து நாள் முழுவதும் அமர்ந்தும் அதை சரிவர செய்து முடிக்கவியலாத  'உண்மையான' ஊழியரை விட குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து தனக்கு அளித்த அலுவல்களை குறித்த நேரத்திற்குள்ளாகவே செய்து முடித்துவிட்டு குறித்த நேரத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேறுபவர் எவ்வளவோ மேல். அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு செல்வதும் அல்லது அலுவலக நேரத்தில் தங்களுடைய சொந்த அலுவல்களை செய்பவர்களும் நேரத்தின் முக்கியத்துவத்தை உணராதவர்களே. 'ஒரு நாளைக்கு முப்பத்தாறு மணி நேரம் இருந்தாக் கூட எனக்கு போறாது போலருக்கு' என்பது இப்போதெல்லாம் ஒரு கவுரவமாக போய்விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து விடுபடுவதும் உடனடியாக இயலாது என்றாலும் நாளடைவில் விடுபட முயல வேண்டும். ஒரு அலுவலை செய்து முடிக்க  அலுவலகத்திலுள்ள திறமைவாய்ந்த சக ஊழியர்கள் எவ்வளவு அவகாசம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கவனித்து தாங்களும் அதை பின்பற்ற முயல வேண்டும். துவக்கத்தில் சற்று கடினமாக தோன்றினாலும் காலப்போக்கில் அந்த கலை கைவந்துவிடும். துவக்க நாட்களில் அலுவலகத்தில் சற்று கூடுதல் நேரம் அமர்ந்திருக்க வேண்டிவந்தாலும் அலுவலக வேலைகளை அலுவலகத்திலேயே முடித்துவிட்டு செல்ல வேண்டும். அதை விடுத்து மீதமுள்ள அலுவல்களை வீட்டிற்கு கொண்டு செல்ல முயலக்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலங்களில் சில நிறுவனங்கள், குறிப்பாக கணினித்துறையில், தங்களுடைய மூத்த அலுவலர்களை அவர்களுடைய வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கின்றன. 'I work from my home' என்று கூறிக்கொள்வது ஒரு பெருமையாகக் கூட கருதுகின்றனர் சிலர். ஆனால் காலப் போக்கில் இது தங்களுடைய குடும்ப வாழ்க்கையையே சீர்குலைத்துவிடும் என்பதை இவர்கள் மறந்துபோகின்றனர். காலை ஒன்பதிலிருந்து மாலை ஆறு மணி வரை என்கிற அலுவலக நேரம் நாளடைவில் மறைந்து இருபத்திநாலு மணி நேரமும் அலுவல் என்றாகிவிடும்போது அதிலிருந்து மீள முடியாமல் திணறுவார்கள். வீடு வீடாக இருக்கும்வரைதான் குடும்பமும் குடும்பமாக இருக்கும் என்பதை ஒருபோதும் மறக்கலாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-7176411458283322545?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/7176411458283322545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=7176411458283322545' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/7176411458283322545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/7176411458283322545'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/07/blog-post.html' title='என்னால்தான் இதை நன்றாக செய்ய முடியும்!'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-1023014419729688211</id><published>2010-07-09T12:52:00.000+05:30</published><updated>2010-07-09T12:52:13.725+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வீடும் அலுவலகமும் 2</title><content type='html'>இதை எப்படி தவிர்க்கலாம் அல்லது சாமர்த்தியமாக கையாளலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;br /&gt;&lt;br /&gt;1. அலுவலகம் - வீடு எல்லைகளை வரையறுத்துக்கொள்தல்&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலங்களில் தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியின் காரணமாக வீடு, அலுவலகம் என்கிற பாகுபாடில்லாமல் போய்விட்டது என்றால் மிகையல்ல. முன்பெல்லாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுவிட்டால் அடுத்த வேலை நாள் அன்று அலுவலகம் திரும்பும்வரை அலுவலக விஷயங்களுக்காக நம்மை தொடர்புகொள்ள வழியில்லாமல் இருந்தது. இது ஒரு வகையில் சிலருக்கு, குறிப்பாக அதிகாரிகளுக்கு, குறையாக இருந்தாலும் அதிகாரத்திற்குட்பட்ட பலருக்கும் இது ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கைத்தொலைபேசி புழக்கத்திற்கு வந்த நாளிலிருந்து அலுவலக நேரம் என்பதே நம்மில் பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. ஏன் அலுவலக நாட்கள், விடுமுறை நாட்கள் என்ற பாகுபாடுகூட இல்லாமல் போய்விட்டது என்றாலும் மிகையல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழலில் அலுவலகம், வீடு என்று தீர்க்கமான எல்லைகளை வரையறுத்துக்கொள்ளுங்கள் என்பது சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக தோன்றலாம். நாம் வாசிக்கின்ற பல மேலாண்மை தத்துவங்கள் தொலைதொடர்பு தொழில்நுட்பம் இன்றைய அளவுக்கு வளர்ச்சிபெறாத சூழல்களை மையமாக வைத்து எழுதப்பட்டவை என்பதை நினைவில் கொள்வது நல்லது. ஆகவே அத்தகைய தத்துவங்கள் காலாவதியாகிப்போன வெற்று போதனைகளே!&lt;br /&gt;&lt;br /&gt;கைத்தொலைபேசியை அணைத்து செயலிழக்க செய்துவிட்டால் போதாதா என்றால் அழைத்தவர் ஒருவேளை நம்முடைய உயர் அதிகாரியாய் இருந்து அவர் அழைத்த நோக்கம் தலைபோகிற அவசரமாக இருந்துவிட்டால் என்னாவது என்கிற அச்சத்தாலேயே ஏற்படுகிற மன அழுத்தம் முந்தைய மன அழுத்தத்தை விட அபாயகரமானது.  இதற்கு மாற்றாக கைத்தொலைபேசியை நிசப்தநிலையில் (Silent Mode) வைத்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை என்று எண்ணுபவர்களும் உண்டு. அழைத்தவர் யார் என்பதை அறிந்துக்கொண்டு தேவைப்பட்டால் எடுத்து பதிலளிப்பது, இல்லையென்றால் தவிர்த்துவிடலாமே. இதிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. நம்மை அழைத்தவர் நமக்கு அறிமுகமான அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லையே! அது மட்டும் போதாதே, அவருடைய தொலைபேசி எண்ணும் நம்முடைய கைத்தொலைபேசி எண் பட்டியலில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டுமே! &lt;br /&gt;&lt;br /&gt;ஆக எல்லைகளை வரையறுத்துக்கொள்வது அத்தனை எளிதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மிகவும் நெருக்கமான அலுவலக நண்பர் வீட்டிலேயே அலுவலக கோப்புகளை மனைவி மற்றும் குழந்தைகளுடைய இடையூறு இல்லாமல் பார்வையிட அதற்கென ஒரு அறையையே ஒதுக்கியிருப்பார். அலுவலகத்திலிருந்து சரியாக ஏழு மணிக்கு கைப்பெட்டியுடன் கிளம்பும் அவரை அவருடைய சக அதிகாரிகள் பொறாமையுடன் பார்ப்பதை கவனித்திருக்கிறேன். ஆனால் அவருடைய கைப்பெட்டியில் அன்றைய கோப்புகள் இருந்தது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு நண்பர் காலை எட்டு மணிக்கே அலுவலகத்திற்கு வந்துவிடுவார். இரவு பத்து மணிக்கு மேல்தான் புறப்படுவார். காலை பத்து மணிக்குக் கூட வரமுடியாமல் ஆனால் மாலை ஏழு மணிக்குள்ளாக புறப்பட எண்ணும் என்னைப் போன்றவர்களுக்கு எங்களுடைய இலாக்கா அதிகாரியின் மண்டையிடியை பெற்றுத் தருவதில் அவருக்கு அப்படியொரு ஆனந்தம். பிறகுதான் தெரிந்தது அவருடைய குடும்பப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளத்தான் அலுவலகத்தை தஞ்சம் அடைகிறார் என்கிற விஷயம். Escapism எனப்படும் இத்தகைய அணுகுமுறையும் எல்லைகளை வரையறுத்துக்கொள்ள இயலாமையின் வெளிப்பாடுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு சிலர் வீட்டுப் பிரச்சினைகளை அலுவலகத்திற்கு கொண்டு சென்று நண்பர்கள் அனைவரிடமும் அதையே நாள் முழுவதும் கூறி சுயபச்சாதாபத்தை தேடிக்கொள்ள முயல்வார்கள். ஆனால் இத்தகைய புலம்பல்களால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதிகபட்சம் அலுவலக நண்பர்களின் அன்றைய அலுவல்கள் பாதிக்கப்படலாம். ஆனால் அவருடைய பிரச்சினைகளுக்காக யாரும் பெரிதாக கவலைப்பட்டு தங்களுடைய மனநிம்மதியை கெடுத்துக்கொள்ள போவதில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சிலர் அலுவலக தோல்விகளை வீட்டுக்குள் கொண்டு சென்று குடும்பத்திலுள்ள அனைவரையும் குறை கூறுவார்கள். இத்தகையோருடைய மனப்பாங்கு அவர்களை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரையும் தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை இவர்கள் உணர்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையவர்களுக்குத்தான் இந்த 'எல்லைகள் வரையறுத்துக்கொள்க' என்கிற அறிவுரை பொருந்தும்!&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக பிரச்சினைகளை அலுவலகத்திலும் வீட்டுப் பிரச்சினைகளை வீட்டிலும் விட்டுவிட்டு வருவது நல்லது என்று மேம்போக்காக சொல்லிவிட்டு செல்வதுதான் பல மேலாண்மை எழுத்தாளர்களுடைய வழக்கம். அதை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது எத்தனை கடினம் என்பதை அத்தகைய சூழலில் இருப்பவர்களால் மட்டுமே உணர முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் இது சாத்தியமே இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;சாத்தியம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதற்கு 'Instant Solution' எனப்படும் உடனடி தீர்வு ஏதும் இல்லை. ஏனெனில் இதற்கு 'personality' அல்லது 'traits' எனப்படும் ஒவ்வொருவரின் பிரத்தியேக குணநலங்களும் காரணம். இதற்கு அவருடைய 'gene'தான் காரணம் என்று கூற கேட்டதில்லையா? சிலர் பரம்பரை, பரம்பரையாகவே எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். வேறு சிலர் மலையே பெயர்ந்தாலும் அசரமாட்டார்கள். நம்முடைய பல பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் இத்தகைய 'எல்லைகளை வரையறுத்து'க்கொள்ள இயலாமைக்கு காரணமாக அமைவது என்னென்ன என்பதை இணம் கண்டுக்கொண்டு அவற்றை விலக்க முயற்சி செய்தால் இதற்கு தீர்வு நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-1023014419729688211?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/1023014419729688211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=1023014419729688211' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/1023014419729688211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/1023014419729688211'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/07/2.html' title='வீடும் அலுவலகமும் 2'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-3918083279970995628</id><published>2010-07-08T13:49:00.002+05:30</published><updated>2010-07-09T10:46:57.752+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வீடும் அலுவலகமும் 1</title><content type='html'>கடந்த வாரம் நான் எழுதிய 'பணியிலிருந்து ஓய்வு - சுயதயாரிப்பு' தொடரை வாசித்த நண்பர் ஒருவர் உங்களுடைய அனுபவத்திலிருந்து பணியிலிருப்பவர்கள் அலுவலக பளுவையும் குடும்ப பளுவையும் ஒருசேர எப்படி சுமப்பது அல்லது சமாளிப்பது என்பதைப் பற்றியும்  எழுதுங்களேன் என்று மின்னஞ்சல் வழியாக கேட்டுக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் விளைவே இத்தொடர்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நண்பர் 'பளு' என குறிப்பிட்டது பொறுப்புகளின் (Responsibilities arising out of Positions) விளைவாக ஏற்படுகின்ற சுமை (Burdens or Obligations) என்று கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் 'பொறுப்புகள்' என குறிப்பிடுகையில் எல்லா பதவி நிலைகளையும் ஒருமித்து குறிப்பிடவே 'Authority' என்று கூறாமல் 'Positions' என்று கூறியுள்ளேன். கடமைகள் சுமைகளாக தோன்றுவது அதிகார நிலையிலுள்ளவர்களுக்கு (Authorities) மட்டுமல்லாமல் அதிகாரத்திற்குட்படும் அடிமட்ட ஊழியர்களுக்கும் கூட அவரவர்களுடைய நிலைகளுக்குட்பட்ட சுமைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதை மறுக்கவியலாது. ஆகவே 'சுமை'யின் பாரத்தை அனைவருமே ஏதாவது ஒரு காலத்தில் உணரவே செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பங்களிலும் அப்படித்தான். தலைவர் எனப்படும் கணவன் மட்டுமேதான் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்றில்லை. அவருடைய அதிகாரத்திற்கு ஆளாகும் மனைவி மற்றும் குழந்தைகளும் கூட மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;'டென்ஷன்' என்ற ஆங்கில சொல்லை 'மன அழுத்தம்' அல்லது 'மன இறுக்கம்' என எதிர்மறைப் பொருள்பட (Negative sense) பல தமிழ் எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனக்கென்னவோ 'டென்ஷன்' என்றால் 'மனப் பதட்டம்' என்பதே பொருத்தமாக இருக்கும் என படுகின்றது. 'மன அழுத்தம்' அல்லது 'மன இறுக்கம்' என குறிப்பிடுகையில் Positive Anxiety எனப்படும் 'நேர்மறை மனப்பதட்டம்' என்கிற மனநிலை வெளிவருவதில்லை. அதாவது நல்ல அலுவல் ஒன்றை குறிப்பிட்ட நேரத்தில், வெற்றிகரமாக முடித்தாக வேண்டுமே என்கின்ற ஒரு மனநிலையைத்தான் 'நேர்மறை மனப் பதட்டம்' என குறிப்பிடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக என்னுடைய மகளின் திருமணத்தை நிச்சயித்த தியதியிலிருந்து ஒருவாரத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். 'இதை நான் எப்படி செய்து முடிக்கப் போகிறேன்' என்று என் மனதுக்குள் ஒருவிதமான பதற்றம் ஏற்படுகிறதே அதுவும் ஒருவகையில் 'டென்ஷன்' தான். அல்லது அடுத்து வருகின்ற தேர்வுக்காக மாணவர்கள் மத்தியில் ஏற்படும் டென்ஷன். இவை நல்ல விஷயங்களுக்காக  ஏற்படுகின்ற பதற்றம்.  &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய பதட்டத்தை 'மன இறுக்கம்' என குறிப்பிட முடியாது. இதை 'Positive Tension or Anxiety' என கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய 'நேர்மறை மனப் பதட்டம்' அவசியமானதும் கூட. நம்முடைய அன்றாட அலுவல்களை சரிவர செய்து முடிக்க - அது அலுவலகமானாலும் வீடானாலும் - இந்த மனநிலை ஒரு உந்துகோலாக நிச்சயம் அமைகிறது. எவ்வித மனப்பதட்டத்திற்கும் உள்ளாகாமல் ஒரு மனிதனால் எதிலும் வெற்றிபெற முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;'எதிர்மறை மனப் பதட்டம்' அதாவது தேவையற்ற அச்சங்களால் ஏற்படும் மன சஞ்சலங்களைத்தான்  'மன இறுக்கம்' அல்லது 'மன அழுத்தம்' என கூறலாம். இந்த மன சஞ்சலங்கள்தான் பல சமயங்களிலும் நம்மை எவ்வித முடிவுக்கும் வர முடியாமல் அலைக்கழிக்கின்றன. தேவையற்ற பரபரப்பை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. இத்தகைய சஞ்சலங்கள் நம்முடைய உள்ளத்துக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் கேடு விளைவிக்கின்றன. பசியின்மை, உறக்கமின்மை, உற்சாகமின்மை இவை அனைத்திற்குமே இத்தகைய சஞ்சலங்கள்தான் காரணம் என்றால் மிகையல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய மன இறுக்கத்தை எப்படி கையாள்வது என்பதை என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்துக்கொண்டவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதே இத்தொடரின் நோக்கம். அத்துடன் நான் என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக சில ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் அங்கிருந்த நூலகத்தில் இருந்த பல மேலாண்மை புத்தகங்களை படித்து வகுப்புகள் எடுக்க நான் குறித்து வைத்திருந்தவற்றையும் கையாளலாம் என்று எண்ணியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'மன இறுக்கம்' என்பது ஒரு அலுவலை சரிவர செய்துமுடிக்க வேண்டுமே என்கிற நேர்மறை மனப் பதட்டத்தை கடந்து அந்த அலுவலை சரிவர முடிக்காமல் போய்விடப் போகிறது அல்லது அதை என்னால் நிச்சயம் சரிவர செய்ய முடியாது என்கிற எதிர்மறை மனசஞ்சலத்திற்கு ஆட்பட்ட மனநிலை என்றும் கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;தோல்வியை சந்திக்க தயாராக இல்லாத மனநிலையைக் கொண்டவர்களே பெரும்பாலும் இத்தகைய மனநிலைக்கு ஆளாகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையானாலும் அலுவலக வாழ்க்கையானாலும் தோல்விகள் நிச்சயம். தோல்விகளை சந்திக்காத மனிதர்களே இல்லை. தோல்விகள் மிகவும் சகஜம். இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம். இதை உணர்ந்துக்கொள்ளாமல் நான் வெற்றிபெற்றுத்தான் தீருவேன், என்னுடைய அகராதியில் தோல்வி என்ற வார்த்தையே இல்லை என்ற தேவையற்ற தீர்மானங்களை உள்ளத்தில் உரம் இட்டு வளர்ப்பவர்களே மன இறுக்கத்திற்குள்ளாகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எப்படி தவிர்க்கலாம் அல்லது சாமர்த்தியமாக கையாளலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17031544-3918083279970995628?l=ennulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ennulagam.blogspot.com/feeds/3918083279970995628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17031544&amp;postID=3918083279970995628' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/3918083279970995628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17031544/posts/default/3918083279970995628'/><link rel='alternate' type='text/html' href='http://ennulagam.blogspot.com/2010/07/1.html' title='வீடும் அலுவலகமும் 1'/><author><name>Tbr Joseph</name><uri>https://profiles.google.com/114898708913347932066</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh3.googleusercontent.com/-Exqh1cPX3Rw/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mdeywfPAFKc/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17031544.post-1266046810395958893</id><published>2010-06-30T13:59:00.002+05:30</published><updated>2010-07-01T19:15:30.999+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பணியிலிருந்து ஓய்வு நிறைவுப் பகுதி</title><content type='html'>நடுத்தர குடும்பத்திலுள்ளவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்றபிறகு ஓரளவுக்காகிலும் வசதியுடன் வாழ தங்களுடைய பணிக்காலத்தில் சில வசதிகளை தியாகம் செய்துதான் ஆகவேண்டிய கட்டாயத்திலுள்ளார்கள் என்பதை மறுக்கவியலாது. இன்றைய நாளுக்கு மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைப்பவர்கள் பலரும் பொருளாதார அடிமட்டம் அல்லது உச்சாணியிலுள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். சாலையோரத்தில் வசிப்பவனால் எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும் ஆனால் நடுத்தர மக்கள் அப்படியல்ல. அதுவும் சமுதாயத்தில் ஓரளவுக்கு மதிக்கத்தக்க அந்தஸ்த்துடன் வாழ்ந்து பழகிப்போனவர்கள் அதே அந்தஸ்த்துடன் இறுதிவரை வாழவே விரும்புவர். இதற்கு மிகவும் அத்தியாவசியமானது பொருளாதார சுதந்திரம். இத்தகைய சுதந்திரத்தை முதிர்ந்த வயதிலும் அளிக்கக் கூடியது சேமிப்பு மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் சேமிக்க தேவையில்லை என்கிற மனப்பாண்மை சிலரிடம் இருப்பதை கண்டிருக்கிறேன். அவர்களை நன்றாக படிக்க வைத்து ஒரு வேலையை வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும் நம்முடைய முதிர்ந்த வயதில் அவர்கள் நம்மை கவனித்துக்கொள்வார்கள் என்பது போன்ற எண்ணம் இவர்களுக்கு. இத்தகைய எண்ணம் சரியா, தவறா என்பது போன்ற வாதத்தில் இறங்குவதை விட அது விரும்பத்தக்க ஒன்றா என்று சிந்திப்பது நல்லது என கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார சுதந்திரமின்மைதான் முதியவர் பெரும்பாலோரின் மனக்கவலைகளுக்கு அடிப்படைக் காரணம் என்கின்றனர் சமூக ஆய்வாளர்கள். அதாவது முதிர்ந்த வயதில் தங்களுடைய வசதிகளுக்கு பிறரை, குறிப்பாக தங்களுடைய பிள்ளைகளை சார்ந்திருப்பவர்களுக்குத்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே பெற்றது ஆணாலும் பெண்ணானாலும் பெற்றவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு எதிர்கால வாழ்வுக்கு சேமித்து வைப்பது மிகவும் அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;சேமிப்பு என்றால் தற்போதைய வசதிகளை நிறைவேற்றிக்கொண்ட பிறகு மீதமுள்ள தொகையை சேமிப்பது என்றுதான் நம்மில் பலரும் கருதுகிறோம். இதில் தவறேதும் இல்லை. எதிர்காலத்தில் வசதியுடன் வாழ வேண்டும் என்பதற்காக இன்றைய அடிப்படை தேவைகளையும் தியாகம் செய்வதில் அர்த்தம் இல்லை. நாளை, நாளை என்கிற எண்ணத்துடன் என்றுமே வாழாமல் இருப்பதில் என்ன சுகம் இருக்க முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் இன்றைய அடிப்படை தேவை என்றால் என்ன என்று வரையறுத்துக்கொள்வது அத்தனை எளிதா என்றும் கேட்கலாம். எனக்கு அடிப்படை தேவையாக நான் கருதுவது வேறு சிலருக்கு ஆடம்பரமாக தென்படலாம். இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு இவை மூன்றும் இருந்தால் போதும்&amp;nbsp;என கருதுபவர்களும் உண்டு. இருக்க இடம் என்றால் குறைந்தபட்சம் இரண்டு படுக்கையறைகள் இருக்க வேண்டும், உடுத்த உடையென்றால் குறைந்தபட்சம் ஐம்பது ஜோடிகள் வேண்டும், உணவு என்றால் தினமும் விருந்து சாப்பாடு வேண்டும் வார இறுதி நாட்களில் வெளியில் சாட், தந்தூரி வகையறா இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று கருதுபவர்களும் உண்டு. அதுபோலவே போக்குவரத்திற்கு தங்கள் வாழ்நாளெல்லாம் பொதுத்துறை பேருந்துகளை மட்டுமே சார்ந்திருப்பவர்களும் உண்டு, குறைந்தபட்சம் மொப்பெட்டாவது இருக்க வேண்டும் என்று கருதுபவர்களும் உண்டு. ஆக அவரவர் தகுதிக்கேற்ப வாழ்க்கைத்தரமும்,&amp;nbsp;தேவைகளும்&amp;nbsp;மாறுபடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சேமிப்பும் அப்படித்தான். அவரவர் வாழ்க்கைத்தரத்தைப் பொருத்தே சேமிப்பும் அமைகின்றன. சேமிப்பின் அளவு வேண்டுமானால் மாறுபடலாம் ஆனால் சேமிப்பு என்பது அனைவருக்கும் தேவை. &lt;br /&gt;&lt;br /&gt;சேமிப்பு எவ்வளவு முக்கியமோ அதை எப்படி முதலீடு செய்வது என்பதை தெரிந்துக்கொள்வது&amp;nbsp;அதைவிட முக்கியம். சேமிப்பின் அவசியத்தை உணர்ந்துள்ள நம்மில் பலரும் அவற்றை முதலீடு செய்வதில்தான் தோற்றுப்போகிறோம். சமீப காலங்களில் சரியாக ஆலோசிக்காமல் முதலீடு செய்துவிட்டு ஏமாந்து நிற்பவர்களைப் பற்றிய செய்திகள் வராத நாள் இல்லையே. இத்தகையோருள் பலர் அடிப்படை வசதிகளையும் தியாகம் செய்து சேமித்தவர்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை. படிக்காதவர்கள்தான் என்றில்லாமல் சில அரசுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும் சென்னையில் மிகவும் பிரபலமாகியிருந்த RBF நிறுவனத்திடம் தங்களுடைய சேமிப்பு அனைத்தையும் இழந்து நின்றதை படித்தோமே.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பும் இடமெல்லாம் வங்கிகள் நூற்றுக்கணக்கில் இயங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ஏன் பொதுமக்கள் இன்றும் இத்தகைய நிறுவனங்களை நம்பி ஏமாந்துபோகின்றனர்? கேட்டால் அரசுத்துறை வங்கிகள் மிகக் குறைந்த விகிதத்திலேயே வட்டி வழங்குகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆரம்பநிலை பொருளாதார பாடம் என்ன சொல்கிறது? வட்டி என்பது சேமிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (incentive). அதாவது சேமிப்பே இல்லாத பொருளாதார சந்தையில் சேமிப்பை தூண்ட அளிக்கப்படும் ஊக்கத்தொகைதான் வட்டி. சேமிப்பவர
