26 ஏப்ரல் 2013

இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா?


ஜோசப்: நம்ம டிஸ்கஷன துவங்கறதுக்கு முன்னால இன்னைக்கி வெளியான ஒரு லேட்டஸ்ட் நியூஸ பத்தி சொல்றேன். ஒரு வாரத்துக்கு முன்னால தில்லியில நடந்த போராட்டத்துல கலந்துக்கிட்ட ஒரு லேடிய தில்லி ஏசிபி ஒருத்தர் தேவையில்லாம கன்னத்துல அறைஞ்சி அந்த வீடியோ மீடியாவுலல்லாம் வந்து அவர சஸ்பென்ட் பண்ணாங்களே, ஞாபகம் இருக்கா?

ரஹீம்: ஆமா, அதுக்கென்ன? அவரெ டிஸ்மிஸ் செய்யணும்னு கூட கெஜ்ரிவால் டிமான்ட் பண்ணாரே!


ஜோசப்: அவரேதான்.  இப்ப IPC section 323 படி அவர் மேல ஒரு கேஸ் புக் பண்ணியிருக்காங்களாம்.


கணேஷ்: அப்படீன்னா? அந்த செக்‌ஷன்  என்ன சொல்லுது?


ஜோசப்:  வேணும்னே அடிச்சி துன்புறுத்துறதாம் (voluntary hurt). ஏசிபி அந்த பொண்ணெ அடிச்சதுக்கு எந்த காரணமும் இருக்கலே இல்லையா? அதான்.


ரஹீம்: (சிரிக்கிறார்) என்னைய்யா இது புது கதை? நம்ம ஊர்ல நடக்கற எல்லா போராட்டத்துலயும்தான் தேவையில்லாம சாதாரன கான்ஸ்டபிள் கூட ஆண், பொண்னுன்னு பாக்காம அடிக்கிறாங்க. அப்ப அவுங்க எல்லார் மேலயும் கேஸ் புக் பண்ணுவாங்களா? அதாவது, படிச்ச ஆளுங்கள அடிச்சா அது தப்பு. அடிச்ச ஆள சஸ்பென்ட் பண்ணுவாங்க, அவங்க மேல கேஸ் புக் பண்ணுவாங்க. ஏழைங்கள அடிக்கலாம். ஏன் கொல கூட செய்யலாம். கேக்க ஒரு நாதி இருக்காது.


கணேஷ்: அதுக்கு ஒரு காரணம் இருக்கு பாய்.


ரஹீம்: (எரிச்சலுடன்) என்னய்யா காரணம்? அது நடந்த இடம் தில்லி, அதானே சொல்ல வரே?


கணேஷ்: அது மட்டுமில்ல. டிவி காரங்க கேமரா வச்சுக்கிட்டு படம் பிடிச்சிக்கிட்டிருக்கறப்பவே  அந்த பொண்ணெ அடிக்கிறார்னா அந்தாளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? அதான்..


ரஹீம்: அப்ப இங்க மட்டும்? எத்தன கலெக்டர் ஆஃபீஸ் முன்னால நியாயமா போராட்டம் நடத்துறவங்கள பொம்பளைங்கன்னு கூட பாக்காம லத்தியால அடிக்கறதும் எட்டி உதைக்கறதும் உடம்பு மேல கைய வச்சி தள்ளி வுடறதும்.... ஏன் கொஞ்ச நாளைக்கி முன்னால ஒரு டீச்சரம்மாவ எல்லார் முன்னாலயும் முகத்துலயே அடிச்சி கீழ தள்ளி விடல? அந்த போலீஸ என்ன செஞ்சாங்க? தில்லியில இருக்கற பெரிய எடத்து பசங்க மேல கைய வச்சா, இல்ல அங்க இருக்கற பொம்பளைங்கள பாலியல் கொடுமை பண்ணா அது பெரிய குத்தம். ஒடனே டிவியில வரும், பேப்பர்ல வரும்... அதே இங்க நடந்தா? எல்லாம் சுத்த வேஸ்ட். நாம வேற எதையாவது பேசுவோம் ஜோசப். இந்த மாதிரி விஷயத்த பேசினாலே எனக்கு பிரஷர் ஏறுது.


ஜோசப்: நீங்க சொல்றதுல உண்மை இல்லாம இல்ல பாய். ஆனா அதுக்காக நாம டென்ஷனாயி என்ன ஆகப் போவுது? போன வாரமும் இப்படித்தான் கணேஷ் ஏதோ ஒரு பேச்சுக்கு குஜராத்த பத்தி சொல்ல போயி நீங்க கோச்சிக்கிட்டு சடார்னு எழுந்து போய்ட்டீங்க. இந்த மாதிரி பொலிடிக்கல் டிஸ்கஷன்ல எதிரும் புதிருமா பேச்சு வரத்தான் செய்யும் பாய். அதுக்கெல்லாம் போயி டென்ஷன் ஆனா அப்புறம் எதப்பத்தித்தான் டிஸ்கஸ் பண்றது?


ரஹீம்: உண்மைதான் ஜோசப். நா அன்னைக்கி பண்ணது கொஞ்சம் ஓவர்தான். நானே அப்புறம் கணேஷ கூப்ட்டு சாரி சொன்னேன். என்ன கணேஷ்?


கணேஷ்: (சிரிக்கிறார்) ஆமா ஜோசப். பாய் நா வீட்டுக்கு போன உடனே கூப்ட்டார்.


ஜோசப்: சரி அத விடுங்க. நாம ராசா விஷயத்த பத்தி பேசுவமா?


ரஹீம்: (சிரிப்புடன்) அவர் பிஎம்முக்கு வழிகாட்டுன விஷயம்தானே? அதான் ஊரே சிரிக்கிதே. இவர் போயி அவருக்கு தப்பா வழிகாட்டுனாராம். இந்த பார்லிமென்ட் கூட்டு கமிட்டி நடத்துன விசாரனையே ஒரு சால்ஜாப்புதானே ஜோசப்?


ஜோசப்: இப்ப அவங்க ரிப்போர்ட்ல சொல்லியிருக்கறத பாத்தா நீங்க சொல்றது சரிதான்னுதான் படுது.


கணேஷ்: நம்ம மு.கவும் நாசூக்கா வாழைப்பழத்துல ஊசி ஏத்துனா மாதிரி சொன்னத கேட்டீங்க இல்ல? ஒரு நாட்டோட பி.எம்ம அவர் கீழ இருக்கற ஒரு இலாக்கா மினிஸ்டர் தப்பா வழி நடத்துனார்னு சொன்னா எப்படி நம்ப முடியும்னு கேட்டாரே, நியாயந்தானே?


ஜோசப்: நியாயம்தான், இல்லேன்னு சொல்லலே. ஆனா முப்பதுக்கும் மேல மினிஸ்டர்ஸ் இருக்கற ஒரு கேபினெட்ல ஒவ்வொரு மினிஸ்டரும் செய்யற விஷயங்கள எல்லாம் துருவி, துருவி ஒரு பி.எம் பாத்துக்கிட்டே இருக்கணும்னு சொன்னா அப்புறம் அந்த மினிஸ்டர் எதுக்கு கணேஷ்? அது மட்டுமில்ல இன்னொன்னையும் நாம கவனிக்கணும்.


கணேஷ்: என்னது?


ஜோசப்: நா தப்பு பண்ணலேன்னு ராசா சொல்றது இருக்கட்டும். ஆனா அப்படியே நா தப்பு செஞ்சிருந்தா பிரதமரும் தப்பு செஞ்சிருக்கார்னு சொல்றது ஒரு ரெஸ்பான்சிபிள் மினிஸ்டர் பேசற பேச்சா தெரியல. அவர் சொல்றது எப்படியிருக்குன்னா நா தப்பு செஞ்சிருந்தாக்கூட அத பிஎம் கண்டுபிடிச்சிருக்க வேணாமாங்கறா மாதிரி இருக்கு. நா என்ன சொல்ல வரேன்னா, நீ தப்பு செஞ்சியா? அதோட நிறுத்திக்க. அதே தப்ப பி.எம்முந்தான் செஞ்சார் ஃபைனான்ஸ் மினிஸ்டருந்தான் செஞ்சார்னு சொல்றதுக்கு நீ யாரு? அவங்க தப்பு செஞ்சிருந்தா அத விசாரிக்கறதுக்கு நாட்ல கோர்ட் இருக்கு. என்னோட சேர்ந்து அவருந்தான் தப்பு செஞ்சார் அப்ப அவர விட்டுப்போட்டு என்னெ மட்டும் ஏன் புடிக்கிறீங்கன்னு கேட்டா என்ன சொல்றது?


கணேஷ்: அப்போ 2G விவகாரத்துல ராசா மட்டும்தான் தப்பு செஞ்சிருக்கார்னு அந்த ரிப்போர்ட் சொல்றது சரின்னு சொல்ல வறீங்களா?


ஜோசப்: அப்படியில்ல. ராசா தப்பு செஞ்சிருக்காரா இல்லையா? அதான் கேள்வி.


ரஹீம்: அதெப்படி அப்படி சொல்ல முடியும்? ராசா சொல்றது என்ன? நா எத செஞ்சாலும் அத பி.எம் அப்புறம் ஃபைனான்ஸ் மினிஸ்டர் ரெண்டு பேர் கூடயும் டிஸ்கஸ் பண்ணிட்டுத்தான் செஞ்சேன்னு சொல்றாரே? அப்புறம் எப்படி ராசா பி.எம்ம மிஸ்கைட் பண்ணார் கமிட்டி சொல்றாங்க?


ஜோசப்: இல்ல பாய். Raja misled the PMனு சுப்ரீம் கோர்ட்டே சொல்லத்தான் செஞ்சாங்க. அத்தோட இந்த விஷயத்துல ஃபைனான்ஸ் மினிஸ்டர் ப.சி.மேல எந்த குத்தமும் நிரூபமனமாகலன்னும் ஸ்பெஷல் கோர்ட் சொல்லிட்டாங்க. அப்புறமும் இவர் எதுக்கு சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்கணும்? எல்லா விஷயத்தையும் பி.எம் ஒருத்தரே செய்ய முடியாதுன்னுதான் ஒவ்வொரு இலாக்காவுக்கும் ஒரு மினிஸ்டர்னு அப்பாய்ன்ட்மென்ட் பண்றாங்க. இவங்க எல்லார் வேலையையும் சூப்பர்வைஸ் பண்றதுக்கா பி.எம்ம வச்சிருக்காங்க? இல்ல பாய். ஏதாவது முக்கியமான பாலிசி விஷயம்னா அத தனியா டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்கறதுக்கு காபினெட்ல இருக்கற சீனியர் மினிஸ்டர்ஸ் க்ரூப் ஒன்னு வச்சிருக்காங்க. அவங்களும் ராஜாவுக்கு சில முக்கியமான கைட்லைன்ஸ்லாம் குடுத்துத்தான் இருக்காங்க. ஆனா இவர் தன் மனம்போன போக்குல என்ன காரணத்துக்காகவோ சில தேவையில்லாத டிசின்ஷன்ஸ்லாம் எடுத்து இருக்கார். இன்னைக்கி அத மறைக்கறதுக்கு என்னவெல்லாமோ பேசிக்கிட்டு இருக்கார். இந்த வாதமெல்லாம் ஸ்பெஷல் கோர்ட்ல நடந்துக்கிட்டிருக்கற கேஸ்ல எடுபடப் போறதில்லங்கறது நிச்சயம். இப்ப இவர் செய்ய வேண்டியது என்னன்னா வாய மூடிக்கிட்டு இருக்கறது. அத விட்டுட்டு பாக்கற மீடியா காரங்கக்கிட்ட எல்லாம் வாய்ல வந்ததையெல்லாம் உளறிக்கிட்டிருக்கறது நல்லாவே இல்ல.


ரஹீம்: எனக்கு ஒரு சந்தேகம் ஜோசப்.


ஜோசப்: சொல்லுங்க.


ரஹீம்: இப்படி பி.எம் முக்கு எதிரா பகிரங்கமா மு.கவும் அவரோட கட்சி ஆளுங்களும் பேசறாங்களே அப்ப வரப்போற ஜெனரல் எலக்‌ஷன்ல காங்கிரசோட கூட்டணி இல்லங்கற முடிவுக்கு வந்துட்டாங்களோ?


கணேஷ்: அதிலென்ன சந்தேகம் பாய்? இனிமே இவங்களே போனாக் கூட காங்கிரஸ் இவங்கள சீந்தாதுன்னுதான் நா நினைக்கேன்.


ரஹீம்: அப்போ தனியா நிப்பாங்களா என்ன? அப்படி நின்னா கிடைக்கற ஒரு, ரெண்டு சீட் கூட இல்லாம போயிரும். அதுக்கு பேசாம கேப்டன் சொல்றா மாதிரி எலெக்‌ஷன பாய்காட் பண்ணிறலாம். சிறிலங்கா விஷயத்த காட்டி போட்டியிடாம இருந்துட்டா அப்புறம் வர்ற அசெம்பிளி எலெக்‌ஷனுக்காவது யூசாவும், என்ன சொல்றீங்க?


கணேஷ்: (சிரிக்கிறார்) அதுவும் இப்ப உறுதியா சொல்ல முடியாது பாய். அதுக்கு இன்னும் மூனு வருசம் இருக்கே.


ஜோசப்: ஒருவேளை பிஜேபியோட கூட்டு வச்சிக்கலாம்னு நினைக்கறாரோ என்னவோ?


ரஹீம்: அப்புறம் மதச்சார்பு இல்லாத கட்சிக்குத்தான் எங்க ஆதரவுன்னு இதுவரைக்கும் சொல்லிக்கிட்டிருந்ததெல்லாம்? அவ்வளவுதானா?


ஜோசப்: (சிரிக்கிறார்) ஏற்கனவே ஒருதரம் அவங்களோட கூட்டு சேர்ந்து சென்ட்ரல்ல ஆட்சி பண்ணவங்கதான பாய்? மதச்சார்பில்லாதவங்கன்னு சொல்றதெல்லாம் சும்மா. காரியம் ஆவணும்னா காவடியும் எடுப்பாங்க.


ரஹீம்: அதென்னவோ உண்மைதான்.


கணேஷ்: அப்புறம் ஒரு விஷயம் பாய். கோபப்படாம கேக்கணும். அப்படீன்னாதான் இத பத்தி பேசலாம். என்ன சொல்றீங்க?

ரஹீம்: (எரிச்சலுடன்) யோவ் என்ன கிண்டலா? என்ன சொல்ல வறீரு?


கணேஷ்: அதான் பாய். பெங்களூர்லயும் அமெரிக்காவுல பாஸ்டன்லயும் நடந்த பாம் ப்ளாஸ்ட் பத்தி....


ரஹீம்: அதுக்கென்ன இப்போ? அதான் ரெண்டு எடத்துலயும் சம்மந்தப்பட்டவங்கள புடிச்சிட்டாங்களே?


கணேஷ்: அது இல்ல பாய் நா சொல்ல வர்றது.


ரஹீம்: (எரிச்சலுடன்) வேற என்னய்யா? சொல்ல வந்தத சொல்லும்யா.


கணேஷ்: பாத்தீங்களா? சொல்றதுக்குள்ளவே எரிச்சல் வருதே. அப்புறம் எப்படி மேக்கொண்டு சொல்றது?


ரஹீம்: (சிரிக்கிறார்) சரிய்யா.. .கோவப்படல. என்ன சொல்ல வந்தே?


கணேஷ்: ரெண்டு எடத்துலயுமே அக்யூஸ்ட் இஸ்லாமியர்கதான்.


ரஹீம்: ஆமா. அப்படித்தான் சொல்றாங்க.


கணேஷ்: எதுக்கு பாய் ஒங்க ஆளுங்க மட்டும் எப்ப பாத்தாலும்....


ரஹீம்: (கோபத்துடன் குறுக்கிடுகிறார்) யோவ்.... எங்க ஆளுங்கன்னு சொல்லாதே.... இந்த மாதிரி எல்லாம் செய்யிறவங்க உண்மையான முஸ்லீம்சே இல்ல... அத முதல்ல தெரிஞ்சிக்கோ. எந்த உயிருக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடாதுன்னுதான் எங்க குர்ரான் சொல்லுது.. எங்க நபியும் சொல்லியிருக்காரு. இந்துக்கள்ல தீவிரவாதியே இல்லையா? அதனால எல்லா இந்துக்களும் தீவிரவாதிங்கன்னு சொல்லிறலாமா? குஜராத்ல முஸ்லீம்ஸ குறிவச்சி அடிச்சவங்க எல்லாம் யாருய்யா? ஒங்க இந்துக்கதானே? அப்ப மட்டும் இப்படி எங்க ஆளுங்க ஏன் இப்படின்னு ஒன்னையே நீ கேட்டுறுக்கியா?


ஜோசப்: சரி பாய்... நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி. கணேஷ் இந்த மாதிரி பேசறது சரியில்ல. எல்லா மதத்துலயும்தான் தீவிரவாதம் இருக்கு. தீவிரவாதத்துக்கும் மத நம்பிக்கைக்கும் எந்த சம்மந்தமும் இல்லங்கறத நாம பல சமயங்கள்ல பாத்துருக்கோம். ஏறக்குறைய நூறு வருசத்துக்கும் மேல அயர்லாந்துல இங்கிலாந்துக்கு எதிரா தீவிரவாத அட்டாக்ஸ் நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஒரே மதத்துக்குள்ளவே இரண்டு பிரிவுகளுக்கு இடையில இந்த மாதிரி கேவலமான அட்டாக்ஸ் நடக்கறப்ப எப்படி கணேஷ் எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள்னு முத்திரை குத்தறது? படிச்சவங்களே இப்படியெல்லாம் திங்க் பண்ண ஆரம்பிச்சா அதுக்கு முடிவே இல்ல கணேஷ்.


கணேஷ்: நா அப்படி ஒட்டுமொத்தமா எல்லா இஸ்லாமியர்களையும் குத்தம் சொல்ல வரலே ஜோசப். நா சொல்ல வந்தது என்னன்னா...


ஜோசப்: (குறுக்கிட்டு) வேணாம் கணேஷ். இந்த விஷயத்த இத்தோட விட்டுருவோம். இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம். இந்த வாரத்துல பரபரப்பா பேசப்பட்ட இன்னொரு விஷயம் பெங்கால்ல நடந்த சிட்ஃபன்ட் கம்பெனி ஏமாத்து. அதப்பத்தி பேசலாம்.


ரஹீம்: அதுல பேசறதுக்கு என்ன இருக்கு ஜோசப். அதான் சிஎம் 500 கோடிய நிவாரணமா தந்துட்டாங்களே?


ஜோசப்: அதான் ஏன்னு கேக்கறேன்? அது ஒரு தனியார் கம்பெனி. இந்த மாதிரி நாட்டுல எத்தனையோ கம்பெனி திவாலாயிருக்கு. ஏன் நம்ம தமிழ்நாட்டுல ராயப்பேட்டா பெனிஃபிட் ஃபன்டுங்கற கம்பெனி திவாலாயி எத்தனையோ படிச்ச ஆளுங்களோட பணமும் போச்சே அப்போ இங்க ஏதாச்சும் கவர்ன்மென்ட் செஞ்சிதா?


ரஹீம்: நீங்க சொல்றது வாஸ்தவம்தான் ஜோசப்.


கணேஷ்: (சிரிக்கிறார்) அப்போ மமதா மேடம் ரொம்ப நல்லவங்கன்னுதான் அர்த்தம். ஒன்னா ரென்டா 500 கோடி!


ரஹீம்: (எரிச்சலுடன்) அட நீ வேறய்யா, காமெடி பண்ணிக்கிட்டு. அது யார் பணம்? எல்லாத்தையும் பப்ளிக்கிட்டருந்து செஸ்னு போட்டு வாங்க போறாங்களாமே?


ஜோசப்: அதுல இன்னொரு விஷயமும் இருக்கு பாய். அந்த சிட் கம்பெனியிலருந்து போன அசெம்பிளி எலக்‌ஷன்ல மேடத்தோட திரினாமூல் காங்கிரசுக்கு கோடி கணக்குல டொனேஷன் போயிருக்காம். அத்தோட அந்த பார்ட்டி எம்.பிங்க, ஸ்டேட் மினிஸ்டர்ங்க எல்லாம் கம்பெனி எம்டிய மிரட்டி, மிரட்டியே நிறைய கோடி கபளீகரம் பண்ணியிருக்காங்கன்னும் கேள்வி. இங்கயும் அந்த அக்கிரமம் நடந்துருக்கு பாய். ராயப்பேட்டா பெனிஃபிட் கம்பெனி விழுந்ததுக்கே முக்கிய காரணம் இங்கருக்கற சில முக்கிய பிரபலங்கள் வாங்குன பெரிய, பெரிய லோன திருப்பி கட்டாததுதானாம். அங்க அந்த கம்பெனி எம்டியே தைரியமா சிபிஐக்கு எழுதிட்டார். இங்க எல்லாத்தையும் மூடி மறைச்சிட்டாங்க. ஏன் கொஞ்ச வருசத்துக்கு முன்னால பாலு ஜ்வெல்லர்ஸ் விழுந்துச்சே.. ஞாபகம் இருக்கா?


கணேஷ்: நா கூட கேள்விப்பட்டுருக்கேன் ஜோசப். அதுல நிறைய சினிமாகாரங்களும் சம்மந்தப்பட்டிருக்காங்களாமே?


கணேஷ்: அவுங்க மட்டுமா? அன்னைக்கி அரசியல்ல கொடிகட்டி பறந்துக்கிட்டிருந்த சில அரசியல்வாதிங்களும்தான்னு பேசிக்கிட்டாங்களே?


கணேஷ்: ஆமா பாய்... நாட்டுல நடக்கறத நல்லதுங்களுக்கு இவங்க காரணமோ இல்லையோ நடக்கற கெட்டதுங்களுக்கெல்லாம் பின்னால இவங்கமாதிரி ஆளுங்க நிச்சயம் இருப்பாங்கன்னு சொல்றது சரிதான் போலருக்கு.


ஜோசப்: நிச்சயமா. சரி... மத்தத அடுத்த வாரம் பேசலாம்.

******

இந்த வார தமாஷ்!


சிவகாசிக்கு செல்லவேண்டிய பிரதமர் தென்காசிக்கு சென்றது அம்பலமானது.
கர்நாடகாவில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் இணைந்த கூட்டணி அரசு அமைக்கிறது.

கிறிஸ்கெய்ல் ஊக்கமருந்து அருந்திவிட்டு விளையாடுவதாக குற்றச்சாட்டு!

19 ஏப்ரல் 2013

ராஜபக்‌ஷேவின் அரசக் குடும்பம்!




ரஹீம்: போன தடவ நாம கூடி பேசினப்போ இலங்கைக்கு இந்த வருசத்தோட பொருளாதார உதவிய அமெரிக்கா 10 சதவீதம் குறைச்சிருச்சின்னு ஜோசப் சொன்னாரே நினைவிருக்கா?

கணேஷ்: ஆமா பாய், அதுக்கென்ன இப்போ?

ரஹீம்: அந்த நியூஸ் வந்த 24 மணி நேரத்துக்குள்ளாறவே அங்க பாஸ்டன் சிட்டியில பாம்ப் வெடிச்சிருக்கு பாத்தீங்களா?

ஜோசப்: (சிரிக்கிறார்) நீங்க என்ன பாய் எதுக்கும் எதுக்கும் முடிச்சி போடறீங்க? அது ஒரு தற்செயலா நடந்த சம்பவம்னுதா நான் நினைக்கேன். அதுக்கும் இலங்கைக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை.

கணேஷ்: அப்படித்தான் நானும் நினைக்கேன். அப்படிப் பார்த்தா ஏறக்குறைய அதே நேரத்துல இங்க பேங்ளூர்லயும் ஒரு பாம்ப் ப்ளாஸ்ட் நடந்துருக்கே இதுக்கும் இலைங்கைதான் காரணமா இருந்துருக்கும்னு சொல்லலாமா?

ரஹீம்: இருந்தாலும் இருக்கும் யார் கண்டா?

கணேஷ்: அதெல்லாம் இருக்காது பாய். ஆனாலும் இந்த அமெரிக்க உளவுதுறை இவ்வளவு அசால்டா இருந்துருக்கக் கூடாது.

ரஹீம்: எதுக்கு அப்படி சொல்ற?

கணேஷ்: ட்வின் டவருக்கு அப்புறம் அங்க இதுவரைக்கும் இந்த மாதிரி பெரிசா எந்த டெரர்ரிஸ்ட் அட்டாக்கும் நடக்கல இல்லையா, அதனால பெரிசா எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாம அசால்டா இருந்துட்டாங்கன்னு சொல்ல வரேன்.

ஜோசப்: அதென்னவோ உண்மைதான்னு எனக்கும் தோனுது. இல்லன்னா இந்த மாதிரி ஒரு இன்டர்னேஷனல் ஈவென்ட் நடத்தறப்போ ஸ்டார்ட்டிங் அன்ட் ஃபினிஷிங் ஸ்பாட்ல கூடவா செக்யூரிட்டி இவ்வளவு ஸ்லாக்கா (slack)
இருக்கறது? ஃபினிஷிங் லைன்லருந்து ஐந்நூறு அடி தூரத்துக்குள்ளவே ரெண்டு பாம் வச்சிருக்காங்களாமே. அதுவும் எதுல? நாம ரெகுலரா யூஸ் பண்ற ப்ரெஷர் குக்கர்ல! ஒரு பேசிக் செக்யூரிட்டி ஸ்கேன்ல கூட கண்டுபிடிச்சிருக்கக் கூடிய த்ரெட் (threat) இது, என்ன சொல்ற கணேஷ்?

கணேஷ்: ஆமா ஜோசப். இந்த மாதிரி சில்லறைத் தவறுகள FBI மாதிரி ஏஜென்சிகளே செய்யறதுதான் ஆச்சரியமா இருக்கு. ஏறக்குறைய 48 மணி நேரம் ஆகப்போகுது இதுவரைக்கும் சஸ்பெக்ட்டுன்னு சொல்லி யாரையும் அரெஸ்ட் கூட பண்ண முடியலையாம். ஆக்சிடென்ட் ஸ்பாட்ல ரகசிய கேமரா கூட இல்ல போலருக்கு. இல்லன்னா இந்த பாம்ப யார் அங்க கொண்டு வந்து ப்ளான்ட் (plant) பண்ணான்னு தெரிஞ்சிருக்கும் இல்ல?

ஜோசப்: அதுக்கு நம்ம போலீஸ் எவ்வளவோ தேவலை. பங்ளூர்ல பாம்ப் எங்க வச்சா யார் வச்சான்னு சம்பவம் நடந்த அஞ்சாறு மணி நேரத்துக்குள்ள ஒருவிதமா கண்டுபுடிச்சிட்டாங்களே?

ரஹீம்: அப்படியா, யாராம்?

ஜோசப்: அதெல்லாம் இப்போதைக்கு நிச்சயமா சொல்ல முடியாதாம் பாய். அங்க நிறுத்தியிருந்த டூ வீலர்கள்ல ஒன்னுல வச்சிருக்க வாய்ப்புண்டுன்னுதான் சொல்றாங்க. ஆனா அந்த பைக்க அங்க கொண்டு வந்து பார்க் பண்ணிட்டு போன ஆள அங்க வச்சிருந்த வீடியோ காமராவுல பதிஞ்சிருக்கற இமேஜ பாத்து கண்டுபுடிச்சிறலாம்னு போலீஸ் சொல்றாங்க. அதோட அந்த வண்டியோட ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர வச்சி அது தமிழ்நாட்டு வண்டின்னும் கண்டுபிடிச்சிருக்காங்களாம்.ஆனா அந்த வண்டியோட நம்பர் இருந்தும் ஓனர கண்டுபிடிக்க முடியலையாம். அப்புறம் எதுக்கு இந்த RTO எல்லாம் கம்ப்யூட்டரைஸ் பண்ணாங்க?

ரஹீம்: அப்புறம்?

ஜோசப்:  வண்டிக்குள்ளாற இருக்கற எஞ்சின் நம்பர வச்சி அந்த பிராண்ட் வண்டி விக்கற கம்பெனிய புடிச்சாங்களாம்.  அவங்க மூலமா அத வித்த டீலர புடிச்சி பாத்தா அந்த வண்டியோட ஓனர் மூனு மாசத்துக்கு முன்னாலதான் அத நான் காஞ்சிபுரத்துல இருக்கற ஒருத்தருக்கு வித்தேன்னு சொல்றாராம். ஆனா வண்டிய வாங்குனவன் இதுவரைக்கும் தன் பேருக்கு மாத்திக்கவே இல்ல
போலருக்கு. இப்ப எவனோ செஞ்ச தப்புக்கு இவர் மாட்டிக்கிட்டா மாதிரி இருக்கு. இதெல்லாம் ஒரு பேசிக் விஷயம். வண்டிய வித்து காச வாங்கிட்டா மத்தும் போறாது. அத முழுசா வித்தவங்க பேர்ல மாத்தி குடுத்துறனும். இல்லாட்டி இப்படி மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதுதான். ஆனா அதனாலயே இத முழுசா சால்வ் பண்ணிட்டதா சொல்ல
முடியாதுன்னு நினைக்கறேன்.

கணேஷ்: அப்புறம் இலங்கை விஷயமா இன்னொரு புது நியூஸ் ஜோசப்.

ஜோசப், ரஹீம்: அப்படியா, அது என்னதுய்யா?

கணேஷ்: தன் கையில் இருக்கும் தினமணி நாளிதழை விரிக்கிறார்: இதுல வந்த ஒரு ஆர்டிக்ள்ல இலங்கை பிரசிடென்ட் ராஜபக்‌ஷேயோட குடும்பத்துல இருக்கறவங்க எப்படியெல்லாம் இலங்கை அதிகாரத்த வளைச்சி போட்டுருக்காங்கன்னு சொல்லியிருக்காங்க.

ஜோசப்: என்ன கட்டுரை அது, படிங்க கேப்போம்?

கணேஷ்: ஆக்சுவலா கட்டுரை வந்து இப்ப உலக நாடுகள்ல அதிகாரத்துல இருக்கறவங்களோட குடும்ப அரசியலப் பத்திதான். இங்க நேரு குடும்பம்,  உ.பியில முலாயம் குடும்பம், மஹாராஷ்டிராவில பவார், கர்நாடகாவுல எடியூரப்பா, அப்புறம் நம்ம ஊர் கலைஞர் குடும்பம் அப்படீன்னு சொல்லிக்கிட்டே வந்து கடைசியில  ராஜபக்‌ஷேவ பத்தி டீட்டெய்லா
மென்ஷன் பண்ணிருக்காங்க.

ரஹீம்: அத அப்படியே படியேன் கணேஷ்.

கணேஷ்: சரி, சரி, முழுசையும் படிச்சா ரொம்ப நேரம் ஆவும். அதனால ராஜபக்‌ஷேவ பத்தி சொல்லியிருக்கறத மட்டும் வாசிக்கிறேன்.

"இலங்கை அதிபர்  மகிந்த ராஜபட்ச இலங்கையின் குடியரசுத் தலைவர்,
அவரது தம்பி கோத்தபய ராஜபட்ச ராணுவ அமைச்சகத்தின் செயலாளர்,
இரண்டாவது தம்பி பாசில் ராஜபட்ச பொருளாதார மேம்பாட்டுத் துறையின் அமைச்சர்,
நான்காவது தம்பி சமல் ராஜபட்ச அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர்,
ராஜபட்சவின் மருமகன் சசீந்தர ராஜபட்ச, உவி மாநிலத்தின் முதன்மந்திரி,
நாடாளுமன்ற அவைத்தலைவர் சமல்,
ராஜபட்சவின் மகன் சமீந்தர ராஜபட்ச, ஸ்ரீலங்கா விமானக் கம்பெனியின் டைரக்டர்,
மகிந்த ராஜபட்சவின் மருமகன்கள்:
ஜலியா விக்ரமசிம்கா அமெரிக்காவில் இலங்கை அரசின் தூதர்,
உதய விக்ரமசூரியா ருஷியாவில் இலங்கை அரசின் தூதர்,
பிரசன்ன விக்ரமசூரியா விமான நிலையங்களின் சேர்மன்,
மகிந்த ராஜபட்சவின் மைத்துனர் நிஷாந்த விக்ரசிங்கா ஸ்ரீலங்கா விமானக் கம்பெனியின் சேர்மன்."

ரஹீம்: அடேயப்பா, பஞ்ச பாண்டவர் குடும்பம் மாதிரி இவருக்கும் நாலு தம்பிங்க போலருக்கு. இந்த லிஸ்ட்டுல மூனாவது தம்பி பேரதான் காணம். அந்த காலத்துல இருந்தா மாதிரி ராஜபக்‌ஷே குடும்பம் ஒரு அரச குடும்பம்தான் போலருக்கு. இதுக்கு நம்ம ஆளுங்களே தேவல போலருக்கே?

கணேஷ்: (சிரிக்கிறார்) ஆமா பாய். கலைஞர் அம்பது வருசமா அரசியல்ல இருந்தாலும் ரெண்டு மகன்கள தவிர வேற எந்த குடும்பத்தாரையும் அரசியலுக்கு இழுத்து விடல. அத்தோட, ஸ்டாலின், அழகிரி ரெண்டு பேருமே
அடிமட்டத்துலருந்து வேல செஞ்சி வந்தவங்கதான்னு நினைக்கறேன்.

ரஹீம்: அப்போ கனிமொழி?

கணேஷ்: அது ஒரு எக்செப்ஷன் (exception) பாய். ஆனா அந்தம்மாவையும் நேரடியா அமைச்சராக்கலையே. எலெக்‌ஷன்ல நின்னு ஜெயிச்சி பார்லிமென்ட்டுக்கு போனாங்க. அவ்வளவுதான?

ஜோசப்: அப்புறம், நம்ம நரேந்திர மோடி விஷயத்துல புதுசா ஒரு திருப்பம் வந்துருக்கு படிச்சீங்களா?

கணேஷ்: படிக்கறதுக்கு முன்னால பாக்கவும் செஞ்சேன். முந்தா நேத்து ராத்திரி ஹெட்லைன்ஸ் டுடே சானல்ல காம்ச்சான அதானே?

ஜோசப்: ஆமா அதேதான். இன்னைக்கி பேப்பர்ஸ்லயும் டீட்டெய்லா வந்துருக்கு. இந்த விஷயமா செட்டப் (set up) பண்ண special investigation team (SIT) மோடிக்கு எதுவுமே தெரியாதுங்கறா மாதிரி குடுத்த ரிப்போர்ட்ட
சுத்த ஃப்ராடுங்கறா மாதிரி field levelலருந்து போலீசும் செக்யூரிட்டி ஸ்டாஃபும் (security staff) அவங்க ஹையர் அப்சுக்கு (higherups) சரமாரியா அடுத்தடுத்து கைபட எழுதி அனுப்புன spot reports எல்லாம் இப்ப வெளியில வந்துருச்சி.

ரஹீம்: அப்படியா? அந்த ரிப்போர்ட்லாம் அழிஞ்சிருச்சிங்கறா மாதிரில்ல இதுவரைக்கும் சொல்லிக்கிட்டு இருந்தானுங்க?

ஜோசப்: அதுவும்  ஒரு செட்டப்தான் பாய். உண்மை மெதுவாத்தான் வெளியில வரும்னு சொல்வாங்க, கேள்விப்பட்டதில்ல? அதுமாதிரிதான் இதுவும். இதுக்கும் மோடி தரப்புலருந்து புதுசா ஏதாச்சும் பதில் வரும் பாருங்க.

ரஹீம்: எது எப்படியோ இந்த மோடி மட்டும் பிரதமரா வந்துறக் கூடாது ஜோசப்.

ஜோசப்: (சிரிக்கிறார்) பார்ப்போம் இந்த லேட்டஸ்ட் ஸ்கூப்ப (scoop) அவரு எப்படி சமாளிக்கிறார்னு முதல்ல பார்ப்பம். அத்தோட அவரு பி.எம் கேன்டிடேட்டா நிக்கறதுக்கு கட்சிக்குள்ளவே அவ்வளவா சப்போர்ட் இல்ல போலருக்கே. போறாததுக்கு நிதிஷ் குமார் வேற அவர நிறுத்துனா நா கூட்டணியில இல்லேங்கறா மாதிரி சீன் காட்றாரே.

கணேஷ்: எனக்கென்னவோ இதெல்லாம் ஒரு ப்ரீப்ளான்ட் எலெக்‌ஷன் ஸ்டன்ட்டுன்னு படுது. நீங்க வேணும்னா பாருங்க கடைசியில அவர்தான் பி.எம் கான்டிடேட்டா நிப்பாரு.

ரஹீம்: எதுக்கு அப்படி சொல்றே? அவர நிறுத்துனா எங்கள மாதிரி சிறுபான்மை ஆளுங்க யாரும் ஓட்டு போட மாட்டோம் தெரியுமில்ல?

கணேஷ்: நீங்களே சொல்லிட்டீங்க பாய்... சிறுபான்மையினர்னு. நீங்க மைனாரிட்டிதான். மெஜாரிட்டி ஹிந்துஸ்தானே அவங்களுக்கு இவர் மேல என்ன ஆட்சேபனை இருக்கப் போவுது, என்ன ஜோசப்?

ஜோசப்: நீங்க சொல்றதும் ஒரளவுக்கு உண்மைதான் கணேஷ். இல்லன்னா குஜராத்ல நடந்த கலவரத்துக்கு பின்னால

இவர்தான்னு அங்க இருக்கற மெஜாரிட்டி ஹிந்துஸ்க்கு தெரியாமயா இருக்கும்? அப்படியும் தொடர்ந்து மூனு தரம் அவருக்கே ஓட்டு போட்டுருக்காங்களே? அப்போ நேஷனல் லெவல்லயும் அதே மாதிரி நடக்காதுன்னு என்ன நிச்சயம்?

ரஹீம்: அடப்போங்கய்யா நீங்களும் ஒங்க வியாக்கியானமும். அந்த ஆள மட்டும் பி.எம்மா நிறுத்தட்டும் அப்புறம் பாருங்க நடக்கறத. எனக்கு வேற வேலை இருக்கு நா வரேன்.

அவர் கோபத்துடன் எழுந்து வீட்டிற்குள் நுழைய செய்வதறியாது சிறிது நேரம் அமர்ந்திருக்கின்றனர் மற்ற இருவரும்.

கணேஷ்: எதுக்கு பாய்க்கு இவ்வளவு கோவம் வருது ஜோசப்? நா சும்மா ஒரு பேச்சுக்குத்தான சொன்னேன்?

ஜோசப்: சரி விடுங்க கணேஷ். இவர் கோவம் எத்தன நாளைக்கி? நா அப்புறமா ஃபோன்ல பேசி பாக்கேன். வாங்க போலாம்.

இருவரும் சாலையில் இறங்கி பேசிக்கொண்டே செல்கின்றனர்.


*******

இதையும் படிச்சிருங்க



16 ஏப்ரல் 2013

உலகநாயகனின் உலக மகா தத்துவம் நம்பர் ஒன்னு!


ரஹீம் பாய், கணேஷ், ஜோசப் திண்ணையில் அமர்ந்திருக்கின்றனர்.

கணேஷ்: பாய் 'சைக்கிள் டயர உருட்டறவனெல்லாம் சைக்கிள் ஓட்ட முடியாது தெரியுமா?

ரஹீம்: (குழப்பத்துடன்) என்னய்யா கேள்வி இது? ஏதாச்சும் தத்துவமா?

ஜோசப்: (சிரிக்கிறார்) ஆமா பாய், அதுவும் நம்ம உலகநாயகன் சொன்னது!

ரஹீம்: என்னது கமலா இந்த ஒப்பேறாத தத்துவத்த சொன்னது?

கணேஷ்: அட ஆமா பாய். புது வருச அன்னைக்கின்னு இப்படியொரு கழுத்தறுப்பு ப்ரோகிராம போட்டு கொன்னுட்டாங்க பாய். இதுமாதிரி நிறைய தத்துவங்கள கொஞ்சம் கூட பொருத்தமில்லாத இடத்துலல்லாம் சொல்லி நம்மள மட்டுமில்லாம அவர கேள்வி கேக்க வந்திருந்த ரெண்டு சின்ன வயசு டைரக்டருங்களையும் மனுசன் ராவிட்டாரு. நல்லா நடிக்கறாரு சரி, ஆனா அதுக்காக இப்படியெல்லாமா சீன் காட்றது?

ரஹீம்: அட போய்யா, எதையாவது உருப்படியா பேசலாம்னுதான் இருக்கற வேலையையெல்லாம் உட்டுப்போட்டு நாம மூனு பேரும் இங்கன வாரம். இந்த சமயத்துல எதுக்குய்யா... நீங்க சொல்லுங்க ஜோசப் இன்னைக்கி என்ன புதுசா நியூஸ்?

ஜோசப்: நேத்தைக்கி ஜெய்ப்பூர்ல ஒரு ஆக்சிடன்ட்ல அடிபட்டு ரோட்டுல கிடந்தவங்கள அந்த வழியா போன யாருமே கண்டுக்காம ஒரு லேடியும் குழந்தையும் அநியாயமா இறந்துட்டாங்களாம் பாய். மனித நேயம் அழிஞ்சே போச்சிங்கறதுக்கு இந்த சம்பவம் ஒரு கசப்பான உதாரணம்னு பேப்பர்ல போட்ருக்கான்.



கணேஷ்: நானும் படிச்சேன். ஆனா இப்படி கண்டுக்காம போறதுக்கு மனிதாபிமானம் இல்லேங்கறது மட்டும் காரணம் இல்ல ஜோசப்.

ரஹீம்: (எரிச்சலுடன்) என்னய்யா சொல்ல வறீரு?

கணேஷ்: எல்லாம் இந்த போலீஸ்காரங்களோட தொல்லையிலருந்து தப்பிக்கலாம்னும் நினைச்சிருக்கலாம்ல? குத்துயிரும் குலையுயிருமா கிடக்கறவங்கள ஏத்திக்கிட்டு போயி வழியில அவங்க இறந்துட்டாங்கன்னு வச்சிக்குவம். அதுக்காகவே போலீசு கேசுன்னு அலையணுமேங்கற பயந்தான் காரணம்.

ஜோசப்: வாஸ்தவம்தான். ஆனா  அந்த வழியா போனவங்க அட்லீஸ்ட் ஒரு ஆம்புலன்ஸ்சுக்காவது ஃபோன் பண்ணி சொல்லிட்டு போயிருக்கலாம். அதோட அந்த சப்வேயிலருந்து மொபைலும் யூஸ் பண்ண முடியலையாம். பாவம் அந்த லேடியோட புருசன் இந்த விஷயம் புரியாம செல் ஃபோன்லருந்து யாரையாச்சும் கூப்டலாம்னு ட்ரை பண்ணிக்கிட்டேருந்துருக்காரு. கடைசியில மயக்கம் போட்டே உழுந்துட்டாராம்.

கணேஷ்: இதுல கொடுமை என்னன்னா இந்த் ஆக்சிடென்ட்ட டிராஃபிக் கன்ட்ரோல் ரூம்லருந்து சிசிடிவி வழியா பாத்துக்கிட்டிருந்த போலீஸ் கூட இடிச்சிட்டு ஓடிப்போன வண்டிய ட்ரேஸ் பண்றதுலதான் குறியாயிருந்துருக்காங்களே தவிர அங்கருந்தே ஒரு வயர்லெஸ் குடுத்து ஆம்புலன்ஸ வரவைக்கலங்கறத நினைச்சாத்தான் எரிச்சலா வருது.

ரஹீம்: (எரிச்சலுடன்) அப்படியா? அந்த பயலுவள எல்லாம் ஒடனே சஸ்பென்ட் செய்யணும்யா.

கணேஷ்: சரிதான் பாய். ஆனா அதனால செத்தவங்க உயிரு திரும்பிவரவா போகுது? டூவீலருங்களுக்கு தடை பண்ணியிருக்கற பாதையில இந்த மனுசன் ஏன் போகணும்? எல்லாம் தலைவிதி பாய்.

ஜோசப்: என்னதான் சொன்னாலும் ரோட்ல கிடக்கற அந்த லேடிய ஒரசிக்கிட்டு போறமாதிரி பெரிய, பெரிய காருங்க போறத டிவியில பாக்கறப்ப வருத்தமாத்தான் இருந்தது பாய். யாராச்சும் ஒருத்தர் நின்னு ஹெல்ப் பண்ணியிருந்தா அந்த லேடியும் சரி, அந்த குழந்தையும் சரி பொழச்சிருக்க வாய்ப்பிருந்திருக்குமோ என்னவோ...

ரஹீம்: உண்மைதான் ஜோசப்...

(சிறிது நேரம் மவுனமாக மூவரும் அமர்ந்திருக்கின்றனர்)

கணேஷ்: அப்புறம் ஜோசப் இன்னைக்கி டெசோ காரங்க திடீர்னு ஒரு ஸ்டன்ட் அடிச்சிருக்காங்களே படிச்சீங்களா?

ஜோசப்: படிச்சேன், படிச்சேன்.

ரஹீம்: என்னய்யா அது? கொஞ்சம் டீட்டெய்லாத்தான் சொல்லுங்களேன் கேப்போம்.

கணேஷ்: வேற ஒன்னுமில்ல பாய். மேடம் கொஞ்ச நாளா சொல்லிக்கிட்டே இருக்காங்களே, அதான் அந்த கச்சத்தீவு விஷயம். சுப்ரீம் கோர்ட்ல கூட கேஸ் ஒன்னும் பென்டிங்ல இருக்கே?

ரஹீம்: , அதுவா? அதுல டெசோ புதுசா ஏதாச்சும் சொல்றாங்களா என்ன?

ஜோசப்: (சிரிக்கிறார்) அதெல்லாம் ஒன்னுமில்ல பாய். மேடம் மட்டுந்தான் கச்சத்தீவ இலங்கைக்கு குடுத்தது செல்லாதுன்னு சொல்வாங்களா, நாங்களும்தான் சொல்வோம்னு சொல்றாமாதிரி இருக்கு இவங்களோட லேட்டஸ்ட் ஸ்டன்ட்.

ரஹீம்; சரி ஜோசப். நா தெரியாமத்தான் கேக்கேன். அத இந்தியா சிலோனுக்கு தானமா குடுத்தப்போ இவருதான இங்க சி.எம்மா இருந்தாரு?

ஜோசப்: ஆமா அதுக்கென்ன இப்போ?

ரஹீம்: அப்பல்லாம் சும்மா இருந்துட்டு இப்ப ஏன் கூப்பாடு போடறாரு?

ஜோசப்: எதுக்குலன்னு யார் சொன்னா? டிஎம்கே எம்பியா இருந்தா நாஞ்சில் கே மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம். கல்யாணசுந்தரம் ரெண்டு பேருமே அன்னைக்கி பார்லிமென்ட்ல இந்த விஷயத்துல தமிழ் நாட்ட கலந்துக்காம எப்படி இத செய்ய போகலாம்னு ஆக்ரோசமா பேசியிருக்காங்களாமே?

ரஹீம்: அப்புறம் என்ன?

ஜோசப்: அன்னைக்கி வெளியுறவு மினிஸ்டர் ஸ்வரன் சிங். இப்பருக்கற சிங்க விட ஸ்லோ மோஷன்ல பேசறவரு. அவரு பாட்டுக்கு கூலா இந்திய வெளியுறவு விவகாரத்துல முடிவெடுக்கற உரிமை மத்திய அரசுக்குத்தான், ஸ்டேட் கவர்ன்மென்ட்டோடல்லாம் டிஸ்கஸ் பண்ணிட்டு டிசைட் பண்ண தேவையில்லேன்னு சொல்லிட்டாராம்.

கணேஷ்: அதுல இன்னொரு விஷயமும் இருக்கே ஜோசப். அத கவனிச்சீங்களா?

ஜோசப்: என்ன விசயம்?

கணேஷ்: இந்த மாதிரி இந்தியாவுக்கு பூர்வீகமா சொந்தமா இருக்கற பகுதிகளை மத்த நாடுகளுக்கு விட்டுக்கொடுக்கறதுக்கு முன்னால பார்லிமென்ட்ல டிஸ்கஸ் பண்ணி அவங்க சம்மதத்த வாங்கணும்னு இருக்காமே? ஆனா இந்த விஷயத்துல அப்படி ஏதும் செஞ்சா மாதிரி தெரியலையே?

ஜோசப்: அது தெரியல கணேஷ்: ஆனா 2011 அகஸ்ட்டின் ரொசாரியோங்கறவரு RTI (தகவல் அறியும் உரிமை சட்டம்) ஆக்ட் பிரகாரம் ஒரு பெட்டிஷன் ஃபைல் பண்ணி இந்த டீட்டெய்ல்ஸ தாங்கன்னு கேட்டுருக்காரு. அதுக்கு வெளியுறவு டிப்பார்ட்மென்ட்லருந்து வந்த பதிலோட நகல படிச்சி பாத்தா 1974, 1976 சிறீலங்காவோட போட்ட ரெண்டு அக்ரீமென்டையுமே பார்லிமென்ட்ல வச்சிருக்காங்கன்னுதான் தெரியுது!

ரஹீம்: அப்படி வச்சிருந்தா அப்போ சிஎம்மா இருந்தவங்களுக்கு தெரியாமயா போயிருக்கும்? சும்மா சொல்றாங்க ஜோசப்.

ஜோசப்: அதெப்படி பாய் ஒரு அரசு அதிகாரியோட ரிப்போர்ட்ல சும்மா சொல்லியிருப்பாங்க? அப்புறம் அவர் மாட்டிக்க மாட்டாரா?

கணேஷ்: நீங்க சொல்றபடி பாத்தா ரெண்டு அக்ரீமென்டுமே பார்லிமென்ட்ல வச்சிருந்தா அது மேல ஒரு பெரிய டிஸ்கஷனே நடந்துருக்கணுமே.. அந்த சமயத்துல இங்க யாரு சிஎம்மா இருந்தது?

ஜோசப்: 1971லருந்து ஜனவரி 76 வரைக்கும் கலைஞர். அந்த மாசந்தான் அவரோட கவர்ன்மென்ட்ட டிஸ்மிஸ் பண்ணாங்க. அதுக்கப்புறம் பிரசிடென்ட் ரூல் ஒரு வருசம். அதுக்கப்புறம்  நடந்த எலக்ஷன்ல ஜெயிச்சி 77 எம்ஜிஆர்  வந்தாரு. அதுலருந்து 85 வரைக்கும் அவர்தான் சிஎம். இன்னும் சொல்லப்போனா சென்ட்ரல் கவர்ன்மென்டோட அவரு ரொம்ப க்ளோசா இருந்த சமயம். அப்பத்தான் LTTEக்கும் தமிழ்நாட்டுல ட்ரெய்னிங்லாம் குடுத்துக்கிட்டு இருந்தாங்கன்னும் கேள்வி. அதுக்கப்புறம் ரெண்டு திராவிட பார்ட்டீசும்தான் இங்க பவர்ல இருந்தாங்க. அன்னைக்கெல்லாம் கூட மீனவர்ங்க பிரச்சினை இருந்துக்கிட்டேதான் இருந்துச்சி.

ரஹீம்: என்னது, நம்ம மீனவர்ங்கள அப்பத்துலருந்தே அடிச்சிக்கிட்டுத்தான் இருந்தாங்களா?

ஜோசப்: ஆமா பாய்... அப்பல்லாம் இது பெரிசா டிஸ்கஷன்ல வராததுக்குக் காரணம் மீடியா இந்த அளவுக்கு பெருசா இல்லையே. அன்னைக்கி தூர்தர்ஷன விட்டா யார் இருந்தா? நா 1984, 85 தூத்துக்குடியில வேல செஞ்சிக்கிட்டிருந்தப்பவே அங்க அடிக்கடி மீனவர் தர்ணா, ஸ்டிரைக்குன்னு நடந்துக்கிட்டேதான் இருக்கும். புடிப்பாங்க, அப்புறம் ரிலீஸ் பண்ணுவாங்க... ஆனா இந்த அளவுக்கு நம்ம ஆளுங்கள புடிச்சி அடிக்கறது, துப்பாக்கிய வச்சி மிரட்டுறது, சுட்டுக் கொல்றது எல்லாம் அப்போ நடக்கலங்கறதும் உண்மைதான். ஆனா ஒன்னு பாய்.. இந்த விஷயத்துல அப்ப யாழ்பாணத்துல பவர்ல இருந்த LTTE காரங்களும் ஒன்னுதான். அவங்களும் நம்ம மீனவர்கள அடிச்சி விரட்டிக்கிட்டுத்தான் இருந்தாங்களாம்.

ரஹீம்: அடப்பாவிங்களா! என்னமோ இது சிங்களவனோட வெறித்தனம்னுதான் நா நெனச்சிக்கிட்டுருக்கேன்.

கணேஷ்: எல்லாம் வயித்துப் பொளப்புக்குத்தான பாய். கச்சத்தீவுக்கு பக்கத்துலதான் நிறைய மீன் பாடு கிடைக்குதாம். அது நம்ம ஆளுங்களுக்கும் வேணும், சிலோன் மீனவனுக்கும் வேணும். இது ஒரிஜினலா எங்க எடம்னு நம்ம ஆளு சொல்றான். இப்ப இது எங்களுக்குத்தான் சொந்தம்னு அவன் சொல்றான். இதான் பிரச்சினை.

ரஹீம்; அப்ப கச்சத் தீவ எங்களுக்கே திருப்பி குடுத்துறுன்னு சொல்றது நியாயந்தான?

ஜோசப்: இருக்கலாம் பாய். ஆனா நாமளா விரும்பி போட்டுக்கிட்ட ஒப்பந்தம் இது. அன்னைக்கி இந்திரா காந்தி என்ன நினைப்புல அத எழுதி குடுத்தாங்களோ யாருக்கு தெரியும்? ஆனா அப்படி போட்ட ஒப்பந்தத்த நாம மட்டும் ஒருதலைப்பட்சமா கேன்சல் பண்ண முடியாது பாய். ஒருவேளை நம்ம சுப்ரீம் கோர்ட் இது சட்டப்படி செல்லாதுன்னாலும் அது எந்த விதத்துல சிலோன பாதிக்க போகுது, சொல்லுங்க.

ரஹீம்: அதுவும் சரிதான். ஒங்க சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மென்ட் எங்கள பாதிக்காதுன்னுதான் சிங்களவன் சொல்லுவான்.

கணேஷ்: அப்படியொரு நிலைமை வந்தா international courtக்கு போகவேண்டியதுதான். என்ன சொல்றீங்க ஜோசப்?

ஜோசப்: எனக்கு தெரிஞ்சி அது ஒன்னுதான் இந்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வா இருக்க முடியும். ஆனா அதுக்கு ரொம்ப வருசம் ஆகலாம். அதுவரைக்கும் நம்ம சென்ட்ரல் கவர்ன்மென்ட் சிலோன் கவர்ன்மென்ட் கிட்ட பேசி ஒரு இடைக்கால சொலுஷன கண்டுபிடிக்கணும். ஆனா இப்ப இருக்கற சூழ்நிலையில அதுவும் சாத்தியமான்னு தெரியல.

ரஹீம்: ஏன் அப்படி சொல்றீங்க ஜோசப்?

ஜோசப்: அதான் ராஜபக்ஷே நம்ம சிங் மேல கடுப்புல இருக்காரே. ஐநா சபையில நாம போட்ட எதிர்ப்பு ஓட்டும் இதுக்கு ஒரு  காரணம்.

கணேஷ்: அது மட்டுமில்ல ஜோசப். அந்தாளுக்கு இப்ப LTTE அடிச்சி ஒடுக்குன திமிர். நம்மள யாரும் ஏதும் செஞ்சிர முடியாதுங்கற ஆணவம். அது அடங்கறதுக்கு கொஞ்ச நாள் ஆகத்தான் செய்யும்.

ஜோசப்: அதுவும் சரிதான். இந்த சமயத்துல அமெரிக்கா வேற அவங்க குடுத்துக்கிட்டிருக்கற aid பத்து சதவிகிதத்த குறைச்சிட்டாங்க... அதுக்கும் இந்தியா குறிப்பா தமிழ்நாடுதான் காரணம்னு நினைப்பாரு. அந்த கோபமெல்லாம் நம்ம மீனவங்க மேலதான் திரும்பும். அவரா என்னைக்கி நாம போற வழி சரியில்லன்னு உணர்ந்து தன்னையே மாத்திக்கிறாரோ அல்லது எலெக்ஷன்ல தோத்து விழுறாரோ அதுவரைக்கும் இந்த பிரச்சினை இருந்துக்கிட்டேதான் இருக்கும். அத்தோட ஒவ்வொரு எலெக்ஷன் வர்றப்பவும் நம்ம ஆளுங்க கூப்பாடு போடறதும் நடந்துக்கிட்டேதான் இருக்கும்.

ரஹீம்: சரி ஜோசப்... இன்னைக்கி ரொம்ப நேரம் பேசிட்டோம் போலருக்கு... எனக்கு கடைக்கி நேரமாச்சி.

**********

போறதுக்குள்ள இதையும் படிச்சிருங்க: