19 ஆகஸ்ட் 2010

ஜெ சொன்ன குட்டிக் கதை!

இந்த கதையில் வரும் கருமிதான் யார் என்று தெரியவில்லை. ஏனெனில் வாரி வழங்குபவர் அம்மையார் என்பது அனைவருக்கும் தெரியுமே! பிறந்த நாள் பரிசாக கிடைத்த அனைத்து நன்கொடைகளையும் ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கியவராயிற்றே!!

17 ஆகஸ்ட் 2010

பின்னூட்ட மோகமும் வாசகர் பரிந்துரையும்

சாதாரணமாக இத்தகைய விஷயங்களைப் பற்றி நான் அதிகம் எழுதுவதில்லை.

ஆனால் சமீபகாலமாக வாசகர் பரிந்துரை பட்டியலில் தினமும் தரிசனம் தரும் சில பதிவர்களின் இடுகைகளை வாசித்துவிட்டு இனியும் வாளாவிருப்பது நல்லதல்ல என கருதியதால் இந்த இடுகை.

கடந்த சில நாட்களாகவே இந்த பட்டியலில் வரும் அனைத்து இடுகைகளையும் தவறாமல் வாசித்ததில் நான் கண்டது இது ஒரு வடிகட்டின அயோக்கியதனம் என்பதுதான்.

அதுவும் ஒரு வங்கியில் பணியாற்றும் பதிவர் ஒருவர் கடந்த வாரம் எழுதிய இடுகைகளில் எதுவுமே இந்த பட்டியலில் வர தகுதியற்றவை என்பது என் கருத்து.

ஒருவேளை அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை தன்னுடைய தினசரி இடுகைக்கு ஓட்டளிக்க வைக்கின்றாரோ என்று கூட கருத தோன்றுகிறது!

இன்னும் சில பதிவர்களைப் பற்றி கூற வேண்டுமென்றால் ஓட்டுக்கு காசு என்கிற அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை.

ஓரிரண்டு பின்னூட்டங்கள் கூட இல்லாத பதிவுகள் எப்படி இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற முடிகிறது? அதிசயம்தான்.

வெட்கக்கேடு.

தமிழ்மணத்தின் செயல்பாடுகளையே ஒருசிலர் கேலிக்கு உள்ளாக்குகின்றனர் என்பதை நிர்வாகம் உணர்ந்து இந்த பட்டியலையே முகப்பிலிருந்து என்று நீக்குமோ அன்றுதான் தமிழ்மணத்திற்கு விடிவுகாலம்.

06 ஆகஸ்ட் 2010

நாமம் போட்டு பேயை விரட்டும் கிராமம்!

என்று அகலும் இந்த மூட நம்பிக்கை!!

சமீப காலமாக நாட்டுப்புறங்களில் இத்தகைய மூடநம்பிக்கைகள் அதிகரித்து வருவதற்கு  தொலைக்காட்சிகள் பூதக்கண்ணாடி, நிஜம் போன்ற பிரத்தியேக நிகழ்ச்சிகள் மூலம் இத்தகைய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்புவதும் ஒரு காரணம்.

இத்தகைய நிகழ்ச்சிகளில் தொலைகாட்சி நிரூபர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கிராமவாசிகளை பேட்டிக் கண்டு அவர்கள் கூறுவதை அப்படியே அதாவது எவ்வித தணிக்கைக்கும் உட்படுத்தாமல் ஒளிபரப்புவதன் மூலம் மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு பதில் அதை வளர்க்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

கடவுளும் பேயும் மனித மனங்களில்தான் என்பதை என்றுதான் மக்கள் உணர்வார்களோ தெரியவில்லை.
***

02 ஆகஸ்ட் 2010

மின் கட்டண உயர்வு!


உண்மைதான்.

என்னிடம் ஏ.சி மட்டும்தான் இல்லை. மற்ற அனைத்து வீட்டு உபயோக மின் சாதனங்களான வாஷின் மிஷின், ஃப்ரிட்ஜ், ஹாட் ப்ளேட், ஹாட் ஜக், ஓவன், என அனைத்தையும் பயன்படுத்துகிறோம். பகலில் இரண்டு மின் விசிறிகளும் இரவில் நான்கு மின்விசிறிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

எனினும் கடந்த ஐந்தாண்டுகளில் என்னுடைய மாத மின் பயன்பாடு 300 யூனிட்டுகளை கடந்ததே இல்லை.

மின் கட்டண உயர்வு நிச்சயமாக என்னைப்போன்ற நடுத்தர மக்களை பாதிக்கவில்லை. இரவெல்லாம் குளுகுளு இன்பத்தை அனுபவிக்க நினைப்பவர்கள் சற்று கூடுதல் சிலவு செய்வதில் தவறேதும் இல்லை.

இந்த வகுப்பில் வருபவர்கள்தானே அரசியல்வாதிகளும்! நிச்சயம் அவர்களுக்கு இது பாதிப்புதான். அதனால்தான்  அலறுகிறார்கள்!!