31 மார்ச் 2010

திருமணமாகாமல் இணைந்து வாழ்வது....

இதைப்பற்றி திரைப்பட நடிகை குஷ்பு கடந்த வருடம் பத்திரிகை ஒன்றில் தெரிவித்திருந்த கருத்துக்களுக்காக அவர் மீது தொடரப்பட்ட பல வழக்குகள் நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அடைய அவருடைய முறையீட்டின் (petition) மீதான விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நடுவர்களுள் ஒருவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் இப்போது சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. ஆதரவாகவும், எதிர்த்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் ஹிந்து நாளிதழில் வெளியாகியிருந்ததைக் காண நேர்ந்த எனக்கும் இதைப்பற்றி எழுதினால் என்ன தோன்றியது.

திருமணமாகாமலே இணைந்து வாழும் பெரும்பாலான ஜோடிகள் மும்பை, தில்லி, பெங்களூரு போன்ற பெரும் நகரப்பகுதிகளில்தான் வசிக்கின்றனர் என்றாலும் சமீப காலங்களில் conservative cities என்று கருதப்படும் சென்னை, கொல்கொத்தா, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் பரவி வருகிறது என்கிறது வட இந்திய தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக்கணிப்பு. உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் அத்தொலைக்காட்சி இத்தகைய உறவுகளில் பல ஆண்டுகளாக எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இணைந்து வாழும் சில ஜோடிகளையும் பேட்டி கண்டு ஒளிபரப்பியது.

Live in relationship எனப்படும் திருமணமாகாமலே ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது சரியா தவறா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் துளியும் எனக்கு இல்லை. அது சம்பந்தப்பட்ட இருவரின் தனிப் பிரச்சினை. ஆகவே அதில் தலையிட்டு கருத்து கூறுவது எனக்கு மட்டுமல்ல எவருக்கும் உரிமையில்லை என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

இத்தகைய உறவுகள் நாட்டின் எந்த சட்டத்திற்கும் முரணானதல்ல என்பது உச்ச நீதிமன்றத்தின் பார்வை. குஷ்புவின் முறையீட்டின் மீதான வழக்கின் தீர்ப்பு இனியும் வெளிவரவில்லையென்றாலும் நடுவர் ஒருவரின் 'இதில் என்ன தவறு' என்பது போன்ற வெளிப்படையான வினாக்கள் அதன் எண்ண ஓட்டத்தை மிகத் தெளிவாக பிரதிபலித்து காட்டிவிட்டன என்றுதான் கருதுகிறேன்.

ஆனால் அது ஏன் தேவைப்படுகிறது அல்லது அத்தகைய உறவை ஏன் இன்றைய இளைய தலைமுறை தேவை என கருதுகிறது என்பதை நடுநிலைமையுடன் ஆராய்ந்தால் என்ன என்று தோன்றியது. அதுவும், இத்தகைய உறவை சந்தேகக் கண் கொண்டு நோக்கும் போலித்தனமான இந்திய சூழலில் இந்த உறவு தேவைதானா!

உலகின் எந்த நாட்டில் இது தேவையோ இல்லையோ என்னைக் கேட்டால் நம் நாட்டில்தான் இது மிக, மிக தேவையாகிறது என்பேன்.

சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைய விடாமல் தடுக்கும், வரதட்சணை என்ற பெயரால் ஏழை பெண்களின் வாழ்க்கையை சூரையாட நினைக்கும் கொடூர மாமியார்கள், மாமனார்கள் நிறைந்த இந்திய சமுதாயத்தில் இத்தகைய உறவுகள் நிச்சயம் தேவை. முன்பின் தெரியாத ஒருவனை ஒருத்தியுடன் அல்லது ஒருத்தியை ஒருவனுடன் திருமணம் என்கிற பந்தத்தில் அன்பை தவிர்த்து மற்ற பல்வேறு காரணங்களை முன்நிறுத்தி இணைத்து வைக்கும் போலித்தனமான இந்திய சூழலில் இத்தகைய உறவுகள் நிச்சயம் தேவை.

இருவர் - அவர்கள் ஆணோ, பெண்ணோ, அதுவல்ல முக்கியம் - இணைவதற்கும், நீண்ட காலம் இணைந்து வாழ்வதற்கும் அவர்களுக்கிடையில் எல்லாவற்றிலும் ஒருமித்த கருத்து அவசியம். படிப்பால், சிந்தனைகளால், பழக்க வழக்கங்களால் எல்லாவற்றிற்கும் மேல் சிநேகத்தால், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான, நெஞ்சார்ந்த அன்பால் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்தால் மட்டுமே இது சாத்தியமாகிறது.


திருமணமானவர்களும் பல்லாண்டுகள் இணைந்து வாழ்வதில்லையா என கேட்கலாம்.

உண்மைதான். ஆனால் எத்தனை தம்பதியர் இணைந்து வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமல் அந்த பந்தத்தில் தொடர்ந்து வாழ்கின்றனர் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது? 'வேற வழியில்லாமத்தான் உங்களோட குப்பைய கொட்டிக்கிட்டிருக்கேன்', 'எல்லாத்தையும் விட்டெறிஞ்சிட்டு ஒரேயடியா போயிரணும்னுதான் தோனறது... ஆனா போக்கிடம் இல்லையே?' 'பிள்ளைங்களுக்காகத்தான் பாக்கேன்.. இல்லன்னா மனுசன் இருப்பானா உங்கூட?' இதெல்லாம் நாம் அன்றாடம் கேட்கும் புலம்பல்கள், ஏறத்தாழ அனைத்து குடும்பங்களிலும்.

இதுதான் இன்றைய பெரும்பாலான திருமண உறவுகளின் அவலநிலை. அப்படியில்லை, என்னுடைய குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பவர் பொய்யர்கள். எல்லாரும் இல்லையென்றாலும் பெரும்பாலானவர்கள் திருமண உறவை அறுத்தெறிந்துவிட்டு செல்ல முடியாமல் கடமை என்கிற சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஆயுள் கைதிகளாகிப் போனவர்களே.

இத்தகைய அவல நிலைக்குள்ளாகிப் போன கணவன் - மனைவி என்கிற போலி உறவுகளின் வாரிசுகளான இன்றைய தலைமுறை ஏன் இந்த அவலநிலை என மாற்றி சிந்தித்தன் விளைவே Live-in relationship. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத, ஒத்துப்போகவில்லையா பிரிந்து போய்விடுவோம் என்கிற சுதந்திரமான உறவு! இத்தகைய உறவு தோன்றவே மூல காரணமாயிருந்த நம் நாட்டின் முந்தைய தலைமுறைக்கு இந்த உறவை பழித்துக் கூற எவ்வித உரிமையுமில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

ஒரு ஆணும் பெண்ணும் இணைவதே பிள்ளைக் குட்டிகளை பெறத்தான் என்கிற முந்தைய தலைமுறையின் சிந்தனையிலிருந்து மாறுபடுவதும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். மனித இணத்தை பெருக்க மட்டுமே ஆண் பெண் உடல் பூர்வமான உறவு என நம்முடைய வேதங்கள் கூறுகின்றன என்று ஆண்-பெண் உறவுக்கு வேதங்களை காரணம் காட்டும் முந்தைய தலைமுறைக்கு இன்றைய தலைமுறையினரின் வாதம் இதுதான்: ஆண்-பெண் இருவரின் பசி, தாகம் போன்ற உடல் பூர்வமான தேவைகளுள் ஒன்றுதான் உடலுறவும். இதற்கு மட்டும் எப்படி மதம் தடையாக இருக்க முடியும்? This is nothing but a simple biological need of two people? What has religion got to do with this? என்பது இவர்களுடைய வாதம். நியாயம்தானே!

ஆனால் இத்தகைய உறவுகளுக்கு நாட்டின் சட்டம் அங்கீகாரம் அளிக்கவில்லையென்பதையும் எத்தனை ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தாலும் சட்டம் இருவரையும் தனித்தனி நபர்களாக மட்டுமே காண்கிறது என்பதையும் இணைந்து வாழும் பெரும்பாலான ஜோடிகள் உணர்ந்துதான் இருக்கின்றனர் என்பது அவர்களுடைய பேட்டியிலிருந்தே தெரிகிறது. இத்தகைய உறவுகளின் மூலமாக பிறந்த குழந்தைகளுக்கு சட்டம் எத்தகைய உரிமையும் வழங்கவில்லையென்பதும் அவர்களுக்கு தெரிந்துதானிருக்கிறது. இருந்தும் இத்தகைய உறவுகளை தொடர்வதிலிருந்தே இதை ஒரு பெரிய பிரச்சினையாகவே அவர்கள் கருதவில்லை என்றுதான் தெரிகிறது. சட்டத்தின் உதவியை நான் நாடாத வரையிலும் அதன் அங்கீகாரம் தேவையில்லையே. இருபது ஆண்டுகள் இணைந்து வாழ்ந்துவிட்டு பிரிகின்ற நிலையிலும் கணவனின் ஊதியத்திலிருந்து ஜீவனாம்சம் கேட்க சட்டத்தின் உதவியை நாடும் உங்களுடைய திருமணம் எங்களுக்கு தேவையில்லை என்கிறது இன்றைய தலைமுறை!

தேவையில்லையென்றால் எளிதாக பிரிந்துவிட முடிகிறது என பல ஜோடிகள் தெரிவித்தாலும் அத்தகைய பிரிவுகள் சுமுகமான சூழலில் நடைபெறுவதில்லை என்பதையும் மறுக்கவில்லை இவர்கள். பெரும்பாலான பிரிவுகள் ஒரு நிரந்தர விரிசலையே ஏற்படுத்திவிடுகிறது என்பதும் தெரிகிறது. 'It is mainly due to people coming together in haste based on so many things but love.' என்கிறது ஒரு ஜோடி.

உண்மைதான், இத்தகைய உறவுகளுக்கு அடிப்படை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பாக இருந்தால் மட்டுமே இது நிலைத்து நிற்க முடியும். அந்த அன்பு இல்லாமல்தானே பல திருமணங்கள் இன்று ஒரு போலியான, வெளியுலகுக்கு மட்டுமே உள்ள உறவுகளாய் முடிந்து நிற்கின்றன?

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட திருமணம் என்கிற பந்தமே இன்னும் ஸ்திரப்படவில்லை என்பதை எண்ணிப்பார்க்கும்போது நேற்று தோன்றிய இத்தகைய உறவுகளில் அத்தகைய உறுதியான நிலையை எப்படி எதிர்பார்க்க முடியும்?
......

இதற்கு ஆதரவாக, எதிராக கருத்துக்கள் இங்கே

வட இந்திய தொலைக்காட்சி பேட்டி கண்ட ஜோடியின் கருத்துக்கள் இங்கே

1 கருத்து:

  1. Hi,

    Live-in relationship (LIR) has to be decided by the concerned individuals. Not the society or laws.

    In our society, where we are still driven by caste, religion, sex, reservations based on caste, on poverty line stories - this way of living will not help.

    Problems of LIR :
    1) Consider the case of a child, born out of LIR. Which caste it belongs to?. The child is illegally born, as per our laws. 2) In future, the concerned woman cannot go to court, demanding money.
    3) The child will never have grandparents, relatives.
    4) Infact, the child will not even be admitted to school / colleges so easily.

    I am not trying to justify the above, but that's the society we are living in currently.

    I strongly believe that our marriage system is very much created with basic thoughts.. Whoever created it, it's done with reasons. May be, our ancestors thought about same sex marriage, LIR many 1000 years ago & created this?. I dont know.

    But still, the system is a very good one I believe.

    With reference to the mamiyar kodumai, it's there for ages.. it's not brand new 1 dear friend.
    We also know the stories, that daughter-in-law sends her in-laws to old aged people homes.
    Either way, the problem exists.

    For the sake of some people, you cannot blame the system.
    If so, how about throwing our IPC itself, since some politicians, criminals screwing it up?.

    Even in foreign countries, where everything is common, LIR is accepted, but not legalised. Atleast in Holland (where I have travelled many times & have good friends), gay couples, LIR are very common. But they will never have children, since the govt does not recognise that.

    Now coming back to quesiton - is it required to have children?.

    Our population growth is attributed to marriage at early ages.. around 25-26. Remember, due to this reason, our economy is growing.

    Our system is built with the basic assumption - your children are your biggest assets.

    Well, I have 2 sons, officially & legally married, only once :-)
    I have travelled to many many european countries, I have seen the gay couples, LIR etc.,
    All the above are out of my own experiences...

    பதிலளிநீக்கு