26 மார்ச் 2008

வீட்டுக்கடன் - பிரச்சினைகள்

அமெரிக்காவையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் சப்-ப்ரைம் தொல்லை இந்தியாவையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

முதலில் இந்த சப்-ப்ரைம் என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

'ப்ரைம் (Prime)' என்றால் முதன்மை என்றும் பொருள்கொள்ளலாம். வங்கிகள் அவர்கள் வழங்கும் கடனை வட்டியுடன் குறித்த காலத்தில் முழுமையாக செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்களை Prime Borrowers என்கிறார்கள். அதாவது கடன் வாங்க முழுத் தகுதியுள்ளவர்கள்! ஆங்கிலத்தில் இந்த தகுதியை creditworthiness என்கிறோம்.

இத்தகைய 'தகுதி' உள்ளவர்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து எளிதில் கடன் பெறமுடியும் என்பது மட்டுமல்லாமல் சலுகை வட்டி விகிதத்தில் கடன் பெறவும் முடியும். மேலும் கடனைத் திருப்பிச் செலுத்த விதிக்கப்படும் நியதிகளும் அத்தனை கடுமையானதாக இருக்காது. இவர்களுக்கென நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம்தான் prime lending rate (PLR) எனப்படுகிறது. இந்தியாவில் வர்த்தகம் செய்யும் எல்லா வங்கிகளும் தங்களுடைய prime lending rateஐ தங்களுடைய வலைத்தளத்தில் பகிரங்கமாக அறிக்கையிடவேண்டும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் நியதிகளுள் ஒன்று.

வங்கிகள் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய அனைத்து வாடிக்கையாளர்களையும் (அதாவது கடன் பெறுபவர்களை) அவர்களுடைய நிதி நிலைமையை ஆய்வு செய்து வகைப்படுத்துவதுண்டு. மிகச் சிறந்த வாடிக்கையாளர்கள் No.1 என்றும் சற்றே தரம் குறைந்தவர்களை No.2, No.3 என வகைப்படுத்துவார்கள். உதாரணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களை SBI 1ல் துவங்கி SBI 10 வரை வகைப்படுத்தியுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கும் PLR +1, PLR +2, 3, 4 என நிர்ணயிக்கப்படும். மிக, மிக சிறந்த வாடிக்கையாளர்களுக்கு PLR விகிதத்திற்கு கீழேயும் வழங்கப்படுவதுண்டு, அதாவது PLR -1, PLR -2. ஒரு வங்கியின் அறிவிக்கப்பட்ட PLR 12 விழுக்காடு என்றால் இவர்களுக்கு 10 அல்லது 11 விழுக்காடு (PLR-2, PLR-1) என நிர்ணயிக்கப்படும். இதை below PLR அல்லது BPLR என்பார்கள். இத்தகைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மிகப் பெரிய நிறுவனங்களாகவே இருக்கும். ஒரு வாடிக்கையாளரின் கடன் பெறும் திறன் (creditworthiness) குறையக் குறைய அவருடைய தரம் (rating) குறைந்துக்கொண்டே போகும். அவருக்கு வழங்கப்படும் கடனின் வட்டி விகிதம் கூடிக்கொண்டே போகும்.

நம்முடைய நாட்டில் PLR +5 என வட்டி விகிதம் விதிக்கப்படும் வாடிக்கையாளர்கள் (உதாரணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியில் SBI 7 என்ற ரேட்டிங்குக்கு மேலுள்ளவர்கள்) கடன் பெறுவது மிகச் சிரமம். அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கு விதிக்கப்படும் வட்டியும் குறைந்தபட்சம் 16 அல்லது 17% இருக்க வாய்ப்புண்டு. இத்தகையோருக்கு நீண்ட கால கடன்களும் கிடைக்க வாய்ப்பில்லை. இத்தகையோரைத்தான் அமெரிக்காவில் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்கள் என்கிறார்கள். உதாரணத்திற்கு BPLR மற்றும் PLR விகிதத்தில் கடன் பெறுபவர் மிகச் சிறந்த அல்லது மிக, மிகச் சிறந்த வாடிக்கையாளர் என்றால் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்களை மோசமான, மிக மோசமான, மிக மிக மோசமான என வகைப்படுத்தலாம். ஒரு வங்கியின் PLR 12 விழுக்காடு என்றால் கடைநிலை வாடிக்கையாளர் எனப்படும் மிக, மிக மோசமான வாடிக்கையாளர் சுமார் 19 - 20 விழுக்காடு வரையிலும் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். மேலும் மிக, மிக சிறந்த வாடிக்கையாளர் ஐந்து வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனை மிக, மிக மோசமான வாடிக்கையாளர் மூன்று வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். மிக மிகச் சிறந்த வாடிக்கையாளர் எவ்வித செக்யூரிட்டி மற்றும் தனிநபர் ஜாமீன் இல்லாமல் கணிசமான தொகையை கடனாக பெற முடியுமென்றால் மிகச் சிறிய கடனுக்கும் சொத்து மற்றும் தனிநபர் ஜாமீன் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பார் சப் ப்ரைம் வாடிக்கையாளர்.

அமெரிக்காவில் இத்தகையோர் வங்கியிலிருந்து கடன் பெற வேண்டுமென்றால் இடைத்தரகர்கள் வழியாகத்தான் செல்லவேண்டியுள்ளது. இந்தியாவிலும் இந்த நிலை பரவி வருகிறது. குறிப்பாக புதிய தலைமுறை வங்கிகள் எனப்படும் ICICI, AXIS, HDFC இதற்கென்றே பிரத்தியேக விற்பனையாளர்களை (Selling Agents) நியமித்துள்ளன.

அமெரிக்கா போன்ற பல மேலைநாடுகளில் வங்கிகளுக்கு நிகராக பல பெரிய நிதிநிறுவனங்களும் Retail Lending அல்லது Personal Lending எனப்படும் தனிநபர் கடன் வழங்குவதில் ஈடுபட்டுள்ளதால் இந்த நிறுவனங்களுக்கிடையில் கடும் போட்டி ஏற்படுவதுண்டு. மேலும் வீட்டுக் கடன் வழங்குவதற்கென பல பிரத்தியேக Mortgage Loan வங்கிகள்/நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவர்களால் நியமிக்கப்படும் இடைத்தரகர்கள் அல்லது விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்கள் கவரும் விதத்தில் பேசுவதற்கெனவே பயிற்சிபெற்றவர்களாக இருப்பார்கள்.

இன்று அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் சப்-ப்ரைம் பிரச்சினைக்கு மிக முக்கியமான காரணம் இந்த இடைத்தரகர்கள்தான் என்றால் மிகையாகாது.

இதன் பின்னணியை அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

தொடரும்..

6 கருத்துகள்:

  1. நிதி சம்பந்தமாக இப்ப இருக்க்ற எல்லாப் பிரச்னைகளுக்கும் இதுதான் காரணம்னு சொல்ராங்க. அதப்பத்தி விபரமா சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  2. when i bought house i didn't get in subprime market. I have two loans 80% and 20% one is 7ARM and andother 30years Fixed. I might have take the 2nd loan in subprime when the lender explained me if i take the 2nd loan in subprime the the interest will change month to month. It is based on Federal Reserve. I didn't take this option. And more over this subprime is like credit card, if you have money u can pay more and when u need u can get money out of it.
    It is upto the person who selects the loan. My friend when he bought house he choose subprime. When ever credit card companies gives intrest free money he will get that money and put it in subprime so that he can save some money on interest.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா10:27 PM

    Amiable dispatch and this enter helped me alot in my college assignement. Say thank you you as your information.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா4:07 AM

    Opulently I to but I about the post should secure more info then it has.

    பதிலளிநீக்கு