08 ஜூன் 2007

திராவிட மாயை...

இன்றைய தினமலரில் வெளியாகியுள்ள வாசகர் கடிதங்களுள் ஒன்று...





போதும் என்றுதான் தோன்றுகிறது...

13 கருத்துகள்:

  1. //போதும் என்றுதான் தோன்றுகிறது... //

    'ஆரிய' என்பது மறையாமல் திராவிட மாயை மறையாது. நாணயத்தின் இருபக்கங்கள் !

    அதை ஒழிக்க தயாராக இல்லாதவர்கள் இதை ஒழிக்க வேண்டும் என்று சொல்வது கேலி கூத்து.

    :)

    பதிலளிநீக்கு
  2. திராவிடம் = திரவம் + விடம்

    பதிலளிநீக்கு
  3. ஆக மொத்தம் ஆரியமாயையில இருந்து நீங்க விடுபட மாட்டேன்னு புடிவாதமா சொல்றது தெளிவாகுது :(

    பதிலளிநீக்கு
  4. வாங்க கண்ணன்,

    அதை ஒழிக்க தயாராக இல்லாதவர்கள் இதை ஒழிக்க வேண்டும் என்று சொல்வது கேலி கூத்து.//

    இது மொதல்ல அவன நிறுத்தச் சொல்லு நா நிறுத்தறேன்னு கமல் சொன்ன மாதிரி இருக்கு...

    இத்தனை 'முன்னேற்ற' கட்சிகள் இருந்தும் திராவிடர்கள் முன்னேறவில்லை. திராவிடன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றா சொல்கிறோம்? தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றுதானே சொல்கிறோம். பிறகு எதற்கு இந்த திராவிட பெயர்ப்பலகை?

    அதனால்தான் போறும் என்று சொன்னேன்... :-)

    பதிலளிநீக்கு
  5. வாங்க மகேந்திரன்,

    ஆக மொத்தம் ஆரியமாயையில இருந்து நீங்க விடுபட மாட்டேன்னு புடிவாதமா சொல்றது தெளிவாகுது //

    நீங்க தவறாக புரிந்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்..

    நான் திராவிடன் என்பதில் பெருமை கொள்கிறேன்... அதை விட இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    இந்த திராவிட கட்சிகளால் திராவிடர்களுக்கு பெரிதாக எதுவும் முன்னேற்றம் வந்துவிடாது என்று கூறுகிறேன்...

    பதிலளிநீக்கு
  6. வாங்க சதுர்வேதி,

    திராவிடம் = திரவம் + விடம் //

    அதாவது திரவ விஷம் என்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  7. வாங்க ஐயா,

    முன்னேற வில்லை என்று எதை வைத்துச் சொல்கிறோம் ?

    தண்ணீர் பிரச்சனையா ? தூக்கிப் போடுங்கள். ஏனென்றால் சிதம்பரம் கடலூர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து சென்னைக்கு கொடுத்தால் கடலூர் வாசிகளுக்கு கோபம் வரூம். சிறுவாணியில் இருந்து தண்ணீர் எடுத்தால் கோவை காரர்களுக்கு கோவம் வரும். இதையெல்லாம் வச்சு திராவிட கட்சிகள் ஆண்டதால் தமிழகம் முன்னேறவில்லை என்பது எதோ ஒரு மாயையையில் சிக்கி இருப்பதால் தெரியும் மாயத்தோற்றம்.

    திராவிடம் என்று சொல்லாத மற்ற மாநிலங்கள் தமிழகத்தைவிட முன்னேறியிருக்கிறார்கள் என்று காட்ட முடியுமா ? மத்திய அரசு பணிகளில், மத்திய உயர்பதவிகளில் பிற மாநிலத்தவரைவிட தமிழர்களே அதிகம் உள்ளனர்.

    அதிமுக கட்சியின் தலைவி திராவிடரா ? - வெறுப்பு அடைபவர் 'திராவிட கட்சி ஆட்சிகுறித்து இல்லை ஐயா. 'திராவிட' என்ற சொல்லைக் குறித்து தான் இருக்கிறது.

    ஒரு சமூகம் தங்களை ஆரியர் என்று சொல்லும் போது மற்ற சமூகம் தங்களை ஆரியர் அல்லாதவர் என்று அழைத்துக் கொள்ள வேண்டுமா ?

    :)

    திராவிட ஆட்சியை பழிப்பவர்களிடம் கேட்டு சொல்லுங்கள். மதவாதக் கட்சியான பிஜேபி கட்சி அதாவதி திராவிட என்ற பெயர் இல்லாத கட்சி வந்தால் தமிழகம் சுபிக்சம் அடைஞ்சுடுமா ? இந்தியாவில் ஒரு குஜராத் போதும்!

    பதிலளிநீக்கு
  8. //இந்த திராவிட கட்சிகளால் திராவிடர்களுக்கு பெரிதாக எதுவும் முன்னேற்றம் வந்துவிடாது என்று கூறுகிறேன்...//

    60 ஆண்டுகளுக்கு முன்பாக ஆடு மாடு மேய்த்துக் கொண்டும், முடிவெட்டி கொண்டும் ஜிப்பாக்களுக்கு சலாம் போட்டுக் கொண்டிருந்தும், மேல்சட்டை போட கூட வக்கில்லாமல் இருந்த திராவிடர்கள் ஓரளவுக்காவது இன்று முன்னேறியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நீங்க எந்த விதமான முன்னேற்றத்தை விரும்புகிறீர்கள் என்று சொல்லமுடியுமா?

    திராவிடம் என்ற வார்த்தையை சமூகநீதிக் களங்களிலும், தமிழன் என்ற வார்த்தையை அரசியல் களங்களிலும் பயன்படுத்துகிறோம்.

    மேலும் விளக்கங்களுக்கு இங்கே சுட்டுங்கள்!

    பதிலளிநீக்கு
  9. ஜோசப் சார்,
    சரத்குமார் 'திராவிட' என்பதற்கு பதில் 'தேசிய' என்று வைத்து விட்டால் அவர் யோக்கியவான் ஆகிவிடுவாரா என்ன?

    //இந்த திராவிட கட்சிகளால் திராவிடர்களுக்கு பெரிதாக எதுவும் முன்னேற்றம் வந்துவிடாது என்று கூறுகிறேன்//

    சார்,இது ஒரு புளித்துப் போன வாதமாகவே படுகிறது .கிட்டதட்ட பெரியவர்கள் சொல்லுவார்களே "அந்த காலத்துல நாங்க.....ஹும் ..இந்த காலத்துல" .அது போல .திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து இப்போ தமிழ்நாடு என்ன கெட்டு குட்டிச்சுவராய் போய் விட்டது என நினைக்கிறீர்கள் .அண்டை மாநிலங்களை விட நாம் எதில் அப்படி பின் தங்கியிருக்கிறோம்?

    காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்திருந்தால் தமிழ்நாடு எங்கியோ போயிருக்கும் என்று கற்பனையில் சொல்வதெல்லாம் ஒரு மாயை ..காமராஜரை சொல்லுவீர்கள் ..காமராஜர் சொக்கத் தங்கம் தான் .ஆனால் அவரை வைத்து காங்கிரசை எடை போடாதீர்கள் .காமராஜரை காலமெல்லாம் ஆதரித்தவர் பெரியார் .காமராஜரை தூக்கி எறிந்தவர் இந்திரா ..காமராஜர் காலம் தவிர ராஜாஜி,பக்தவச்சலம் காலங்களில் என்ன பெரிய யோக்கியமான ஆட்சி நடந்து விட்டது?

    காமராஜருக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்திருந்தால் டெல்லிக்கு கூஜா தூக்கும் ஆட்சி தான் நடந்திருக்கும் .டெல்லியில போய் உக்காந்துகிட்டு தமிழ்நாட்டு உரிமைக்கு போராடாமல் 'நாங்க இந்தியாவுக்கு பொதுவானவர்கள்' -ன்னு சும்மா சலம்புறத தவிர காங்கிரஸ் காரங்களுக்கு என்ன தெரியும் ?

    'திராவிட'-ன்னு வச்சிருந்தா தமிழ்நாடு முன்னேறாதாம் . 'பாரதிய' ஜனதாவோ .'இந்திய' தேசிய காங்கிரசோ ஆட்சி செய்து இந்தியா மட்டும் முன்னேறிடுச்சாமா? அப்படி பார்த்தா ஒட்டு மொத்த இந்தியா முன்னேறுனதை விட தமிழ்நாடு அதிகமாவே முன்னேறியிருக்கு.

    பதிலளிநீக்கு
  10. வழக்கம் போல ..

    ஜோவை முழுமையாக வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. It is high time Tamil Nadu got rid of these Dravidian parties when the concept of "Dravidiansim" is itself obsolete. Also, to be added to the list is anti-Brahminism ("Paapaara Naaigal")and anti-Hindi ("Indi arakki") as these self-styled messiahs of Dravidian culture would love to bash. The ground reality is that the common Tamilian today is more concerned about his livelihood, his employment, his family, etc., much more than being emotionally attached to these outdated hollow slogans. Just look at Gujarat and Maharashtra how well they have developed industrially, providing employment to thousands of people. Self-styled Dravidians, please, for heaven's sake atleast let the next generation of Tamils move forward. You have nothing to lose except your bloated ego!

    பதிலளிநீக்கு
  12. என்னுடைய கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்த கண்ணன், லக்கிலுக், ஜோ மற்றும் அவரை எப்போதும் போலவே வழிமொழிந்த தருமிக்கும் நன்றி.

    ஐந்து மாநிலங்களில் பணியாற்றியவன் என்கிற முறையில் இப்போதும் சொல்கிறேன் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழக பெற்றுள்ள வளர்ச்சியையும் விட கூடுதல் வளர்ச்சியை தில்லி, பஞ்சாப் மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் பெற்றுள்ளன.

    மேலும் நம் தலைவர்கள் அவர்களுடைய சொந்த வாழ்வில் இருபது வருடங்களுக்கு முன்பு எந்த பொருளாதார நிலையில் இருந்தார்கள். இப்போது எந்த நிலையில் உள்ளார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்கிறேன்.

    காங்கிரசைப் பற்றி கூறினீர்கள். காமராஜ், கக்கன், பூவராகவன்,சி, சுப்பிரமணியம்,ஏன் பக்தவதசலத்தையும் சேர்த்து... இவர்களுடைய சொந்த வாழ்க்கையில் அவர்கள் அரசியலில் இருந்த போது எதை சாதித்தார்கள், எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்கிறேன்...

    திராவிடம் திராவிடம்தான். தேசியம் தேசியம்தான்.

    தேசீய நீரோட்டத்தில் கலந்து இந்தியன் என்ற எண்ணம் வருவதற்கு தேசியம்தான் ஒரே வழி...

    தென்னிந்தியாவிலேயே எடுத்துக்கொண்டாலும் ஆந்திர மாநிலம் நம்மைக் காட்டிலும் முன்னேறியிருப்பதை statistics கூறுகிறது.

    வட மாநிலங்களில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் தமிழர்களே அதிகம் என்கிற வாதம் சரியல்ல என்பது என்னுடைய கருத்து.

    அப்படியே இருந்தாலும் அதில் 90 சதவிகிதம் பேர் பாலக்காடு தமிழர்கள். அதாவது பிரமாணர்கள். தமிழை மட்டுமே தாய்மொழியாக கொண்டிராதவர்கள். அவர்களும் திராவிடர்கள்தான் என்று சொன்னால் உங்கள் வாதம் சரி.

    ஐஏஎஸ் அதிகார மட்டத்தில் பார்க்கப்போனால் நான் தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் பணியாற்றியுள்ளேன். நான் கலந்துக்கொண்ட கூட்டங்களை தலைமையேற்று நடத்திய அனைத்து வட்டாட்சியர்களும் வட மாநிலங்களைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். இன்றும் பல மாவட்ட ஆட்சியர்கள் வட மாநிலத்தவரே. வட மாநிலங்களைச் சார்ந்தவர்கள் தென் மாநிலங்களில் பணியாற்றுவதுபோலவே தென்னிந்தியாவைச் சார்ந்தவர்கள் வட மாநிலங்களிலும் பணியாற்றுகிறார்கள். இல்லையென்று சொல்லவில்லை.

    இது போலவே காவல்துறையிலும் உண்டு.

    ஆகவே ஆரியர்-திராவிடர் மனப்பாண்மை மறைந்தொழிய வேண்டிய காலம் இது என்று நினைக்கிறேன்.

    குறிப்பாக தேசியம் என்பதும் போய் உலகமயம் என்று உலகமே கைக்குள் சுருங்கும் காலக்கட்டத்தில் திராவிடத்தைப் பேசிக்கொண்டிருப்பது எந்த அளவு பொருத்தம் என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.

    'போங்கடா நீங்களும் ஒங்க தேசியமும்.' என்று ஒரு வலைப்பதிவாளர் தன்னுடைய பதிவில் எழுதியுள்ளதைப் படித்தபோது திராவிடம் தரக்குறைவாக பேசுவதையும் எழுதுவதையும்தான் வளர்த்திருக்கிறதோ என்ற கவலை மனதுக்குள் எழுதுகிறது.

    தங்களுடைய கருத்துக்களை பொறுமையுடன், கண்ணியமாக மன்றத்தில் எடுத்துவைக்க இயலாமைக்கு என்ன காரணம்? தாழ்வு மனப்பான்மையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

    மனிதர்களை ஆரியன், திராவிடன், பிராமணன், பிராமணர் அல்லாதவன் என்று தரம் பிரித்து பார்க்க நினைக்கும் இந்த குணம் எப்போது மாறப்போகிறது...

    எங்களுடைய தலைமுறையில் கூட இந்த அளவுக்கு துவேஷம் இருக்கவில்லையென்றே தோன்றுகிறது...

    இதற்கு மேலும் இத்தகைய விஷயங்களைக் குறித்து எழுதுவதில்லை என்ற முடிவுடன்....

    பதிலளிநீக்கு
  13. tbr.joseph சொல்றாரு //"திராவிட மாயை..." போதும் என்றுதான் தோன்றுகிறது...//
    ஏன்யா ஜோசப்பு, உங்களுக்கு திராவிட தமிழ்நாடு புடிக்கைலைன்னா நீங்க வேற எங்கேயாவது வெளி மாநிலத்துக்கு போயிடறதுதானே? ஏனய்யா இப்படி உள்ளே இருந்து வேட்டு வைக்கிறீர்? தென்னிந்தியாவில மத்த மாநில காரவங்க அவங்க நினைச்சத ஏதோதோ செய்றாங்க. அதுக்காக நாமலும் அதே மாதிரிதான் செய்யனும்னு சட்டமா?
    தினமலர் காரவங்கதான் எப்படீன்னு நமக்கு நல்லாவே தெரியும். நீங்க எதுக்கு இந்த //போதும் என்றுதான் தோன்றுகிறது...// வாக்கியத்த நீங்க ஒருகாலும் எழுதி இருக்க கூடாது.

    பதிலளிநீக்கு