08 ஜூன் 2007

திரைப்படங்களில் பிரம்மாண்டம் - நிறைவு

நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த திரைப்பட தயாரிப்பாளர் பிரம்மாண்டங்களுக்கு பெயர்போனவர்.

அவருக்கு ஒரு சகோதரரும் உண்டு. அவரும் பிரபலமான இயக்குனர்தான். அவரும் பிரம்மாண்ட வெறி பிடித்தவர் எனலாம். அதாவது சில சமயங்களில் ridiculous லெவலுக்கு செல்வார். அவருடைய படங்களில் வரும் பாடல் காட்சிகளைப் பார்த்தாலே இது தெரியும். பாடலிலுள்ள ஒவ்வொரு வரிக்கும் (சில சமயங்களில் ஒவ்வொரு வார்த்தைக்கும் கூட) ஒவ்வொரு காட்சி இருக்கும். ஒரு வரியில் வயல்வெளி என்றால் அடுத்த வரி மலைக்கு மீது. ஒரு வரி காஷ்மீர் என்றால் அடுத்த வரி கன்னியாகுமரி என... எளிதாக சென்ற வெளியில் படப்பிடிப்பு நடத்தக்கூடிய காட்சிகளுக்கும் கூட செட்டுகளைப் போட்டு பணத்தை விரயம் செய்யக் கூடியவர்.

ஒவ்வொரு லொக்கேஷனுக்கும் ஒரு பெரிய கும்பலையே கூட்டிக்கொண்டு போய் ஸ்டார்ட் கேமரா என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த வரி முடிந்துவிடும். ஒருவேளை அந்த ஒரு வரிக்கே ஒரு வாரம் செலவழித்தாலும் வியப்பில்லை. அந்த வரி முடிந்தவுடன் மீண்டும் பேக்கப், பயணம், ஸ்டார்ட் கேமரா.... எத்தனை விரயம்?

நம்மில் யாராவது ஒரு படத்தில் இத்தனை பாடல்கள் வேண்டுமென்றோ அல்லது ஒவ்வொரு பாடலிலும் இத்தனை காட்சிகள் வேண்டுமென்றோ கேட்டிருக்கிறோமா? முன்பெல்லாம் ஒரு தோட்டத்தைக் கூட செட்டுக்குள்ளேயே நான்கைந்து தொட்டிகளையும் அதற்கு பின்னால் நிலாவை ஒரு திரையில் வரைந்து வைத்து படம் பிடித்தார்களே அப்போது திரைப்படங்களை மக்கள் பார்க்கவில்லையா?

கேட்டால் படம் ரிச்சாக இருக்க வேண்டும் என்பார்கள். லாஜிக்காக படும் எடுக்கிறேன் என்று தன்னைப் பற்றி கூறிக்கொள்ளும் அந்த இளைய சகோதரருடைய படங்களுடைய தயாரிப்பு செலவு மற்ற படங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு, ஐந்து மடங்கு இருக்குமாம். இயக்குனர் திலகம் என வர்ணிக்கப்படும் ஒரு இயக்குனருக்கு சொந்தமான நிறுவனம் இவரை வைத்து படம் எடுத்து நொந்துப்போய் இவருடைய மூத்த சகோதரரான - நேற்றைய பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த - தயாரிப்பாளரிடம் சென்று ஏகமாய் எகிறியிருந்த தயாரிப்பு செலவைப் பற்றி முறையிட்டாராம்!

தன்னுடைய இளைய சகோதரருடைய படங்களுக்கு ஆகும் செலவுகளை சமாளிக்க முடியாமல் இவர் ஊரெல்லாம் அசுர வட்டிக்கு கடன் வாங்கியதன் விளைவு சகோதரர்களுக்கிடையில் மனத்தாங்கல் ஏற்பட்டு பிரிந்து சென்றனர். இவர் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி என இறுதியில் சமாளிக்க முடியாமல் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இவருடைய நிறுவனத்திற்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்று மிகப்பெரிய அளவில் கடன் வழங்கியிருந்தது. (என்னுடைய கிளையிலிருந்த கடனை அடைக்க அவர் அளித்த காசோலை இந்த வங்கியிலிருந்த கணக்கிலிருந்துதான் வழங்கப்பட்டது.) அதன் கிளை மேலாளர் ஒரு சபலபுத்திக்காரர் என்பதை தெரிந்துக்கொண்ட இந்த தயாரிப்பாளருடைய கும்பல் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அவருடைய மேலிடம் அனுமதித்திருந்த கடன் அளவுக்கு மேல் சுமார் மூன்று மடங்கு தொகையை பெற்றிருந்தார் என்பது பிறகுதான் தெரிய வந்தது. விளைவு? அவருடைய வங்கி அந்த கிளை மேலாளரைக் குறித்து காவல்துறையில் புகார் செய்ய அவர் சிறையிலடைக்கப்பட்டார். அவரும் என் வயதொத்தவர்தான். இன்னும் வெளியில் வந்தாரா என்பது சந்தேகமே.

இவர் கதை இப்படி முடிந்தது.

நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த இரண்டாமவர் கேரளாவைச் சார்ந்தவர்.

அவரும் என்னுடைய கிளையிலிருந்து கடன் பெற்றிருந்தவர்தான். நல்லவேளையாக அவருக்கு கடன் கொடுத்திருந்தது ஒரு படத்திற்காக மட்டும். அந்த படம் வெற்றிபெற்றதால் கடன் முழுவதையும் சிரமமில்லாமல் வசூலிக்க முடிந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை என்னுடைய பரிந்துரையின் பேரில் அவருக்கு கடன் அளிக்க எங்களுடைய வங்கி மறுத்துவிட்டது. அப்போதே பெரிய அளவில் பந்தா செய்வார். வங்கி மேலாளர் அவருடைய வீட்டுக்கு வந்து கடன் பத்திரங்களில் கையொப்பம் வாங்க வேண்டும் என்று சொன்னவர்!

இவரும் அபத்தமான பிரம்மாண்டங்களுக்கு பெயர்போனவர். முதல் மூன்று படங்கள் அளித்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் பல கட்டிடங்களை விலைக்கு வாங்கியவர். ஆனால் இறுதியாக அவர் எடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் தொழிற்சங்கப் பிரச்சினை ஏற்பட்டு படம் பாதியில் நின்றுபோய்... பிறகு மீண்டும் துவங்கி... வெளியாகி ஒரே வாரத்தில் பெட்டிக்குள் திரும்பி...பெருத்த நஷ்டத்திற்கு உள்ளானவர்.

இப்போது அவர் குடியிருப்பது வாடகை வீட்டில் என்றால் நம்ப முடிகிறதா?

இவர்கள் இருவருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லையென்றாலும் உங்களால் ஊகித்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.

இதுதான் பிரம்மாண்டத்தின் விளைவு.

இவர்கள் வரிசையில் வருபவர்தான் இப்போதைய ஷங்கர். மலைக்கு வர்ணம் பூசுவது, ஒரு சாலையையே சாயம் அடிப்பது, லாரிகளுக்கு கண், மூக்கு வைப்பது, அடுக்கு மாடிகளில் சென்று படம் எடுக்காமல் அதற்கென ஒரு பிரம்மாண்டமான செட் போடுவது, இதில்தான் இவருடைய கவனம் செல்கிறதே தவிர லாஜிக்கான கதையை புனைவதில் கவனம் இருக்காது. ரயில்வே காண்டீனில் இருக்கும் ஒரு இரும்புக் கடாயில் இருக்கும் கொதிக்கும் எண்ணெயில் ஒரு மனிதனையே மூழ்கடித்து கொல்லும் அளவுக்கு அபத்த மன்னன்!

வடிவேலுவை நம்பி படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டதுடன் விழித்துக்கொள்வார் என்று நினைத்தேன். ஊஹும்.... மேலும் அவருடைய பயணம் தொடர்கிறது.. காலம்தான் இவருக்கு பதில் சொல்லும். ஆனால் இவருடைய எக்ஸ்ட்ரீமுக்கு ஏவி.எம் போன்ற நிறுவனம் எப்படி சம்மதித்தது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இந்த படத்திற்கு செலவழிக்கும் பணத்தை நஷ்டமில்லாமல் எடுப்பதற்கே குறைந்தபட்சம் நூறு நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடவேண்டும் என்று தோன்றுகிறது. அதற்குப் பிறகு லாபம் எப்படி பார்ப்பது? கடவுளுக்கே வெளிச்சம்.

சினிமா ஒரு சூதாட்டம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. எத்தனை நஷ்டம் ஏற்பட்டாலும் அடுத்த படத்தில் விட்டதை எடுக்கலாம் என்ற நோக்கத்துடன் விட்டுக்கொண்டே இருப்பார்கள்..

சரியானதொரு திட்டமில்லாத வெறும் கனவு காணும் கும்பல் என்றாலும் மிகையாகாது.

ஆகவேதான் திரைப்படத்துறைக்கு கடன் வழங்க இன்னமும் வங்கிகள் முன்வருவதில்லை.

*****

15 கருத்துகள்:

  1. ஜோசப்சார்,
    திரைத்துறை பற்றி திரைமறைவு செய்திகளை சொன்னதற்கு நன்றி..நீங்கள் சொல்லும் நபர்கள் யாரென்று தெளிவாகவே புரிகிறது .

    ஆனால் ஷங்கர் வடிவேலுவை நம்பி கையை சுட்டுக்கொண்டதாக சொல்வது தான் புரியவில்லை .புலிகேசி படம் மிகப்பெரிய வெற்றி என தான் நினைக்கிறேன்.

    அப்புறம் ஷங்கர் அடுத்தவர் தயாரிப்பில் தான் மலைக்கு பெயிண்ட் அடிப்பார் .அவர் தயாரிப்பு காதல் ,வெயில் கதையே வேற.

    பதிலளிநீக்கு
  2. வாங்க ஜோ,

    புலிகேசி படம் மிகப்பெரிய வெற்றி என தான் நினைக்கிறேன்.//

    வெற்றி என்பது நூறு நாட்கள் ஓடுவது என்பது மட்டுமல்ல. போட்ட பணத்தை எடுப்பதுடன் லாபமும் வர வேண்டும். அந்த வகையில் புலிகேசி தோல்விதான். அதற்கு அவர் வாங்கியிருந்த கடனை இன்னும் அடைக்க முடியவில்லை. வெயில் படமும் பெரிதாக லாபத்தை தரவில்லை. காதல் லாபம் ஈட்டியது.

    பெரும்பாலான வெற்றி படங்கள் (அதாவது பிரம்மாண்ட படங்கள்.. முதல்வன் உட்பட) லாபத்தை தருவதில்லை என்பதுதான் உண்மை!

    பதிலளிநீக்கு
  3. In Hollywood there is a credit sharing formula, where the producer, director, hero, cameraman, etc share the profits on a percentage basis (that is if the film makes profits); and there is no black money payments like here. Here the distributors and producers (and financiars) go bankrupt while the hero and director have no losses in a film failure. unless the system is like in the west, the uneven distribution of risks will go on.

    Hopefully the days of superstars,
    directors, etc are over. monopoly is breaking and there will bener be another MGR or Rajini or Vijajakanth. the average career span of a hero is now less than 4 years. and heroines is lless than 1 year. No more ego trips and arrogance and fooling people.
    in another 10 years, things will be so diverse and democratic that
    the media will be hardpressed to
    report on 'stars' ; good trends

    பதிலளிநீக்கு
  4. //...ஒருவேளை என்னுடைய அனுபவமின்மையும் இத்தகைய முடிவுக்கு காரணமாயிருக்கலாம். ஆனால் அது என்னை எத்தனை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியது என்பது சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து தெரிந்தது... //

    (நேற்றைய)இதனுடைய தொடர்சியைத் தேடினேன். கிடைக்கவில்லை
    அன்புடன்

    பதிலளிநீக்கு
  5. வாங்க கபீரன்பன்,

    http://ennulagam.blogspot.com/2007/06/blog-post_07.html

    இதையா சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  6. வாங்க அதியமான்,

    Here the distributors and producers (and financiars) go bankrupt while the hero and director have no losses in a film failure.//

    In India the actors, except in the case of top actors, don't have much role to play in the script or selection of locations or even the production cost.

    It is the illogical ideas and imagination of the director that shoot up the cost.

    பதிலளிநீக்கு
  7. ஜோசப் சார்

    திரைப்படத்துறை புரபஷனல்களிடம் சென்று நிறுவனமயமானால் அவர்கள் தொழில் அந்தஸ்து பெறுவதும், வங்கிக்கடன் பெறுவதும் எளிதாகும் என எண்ணுகிறேன். தோல்வியுற்றிருந்தாலும் ஏபிசிஎல் போன்றவை இதற்கான முதல்படி என்று சொல்லலாம் அல்லவா?

    பதிலளிநீக்கு
  8. வாங்க செல்வன்,

    திரைப்படத்துறை புரபஷனல்களிடம் சென்று நிறுவனமயமானால் அவர்கள் தொழில் அந்தஸ்து பெறுவதும், வங்கிக்கடன் பெறுவதும் எளிதாகும் என எண்ணுகிறேன். //

    உண்மைதான். தமிழ்நாட்டில் ஜி.வி. ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம்தான் முதன் முதலில் ஒரு லிமிடெட் கம்பெனியாக தன்னை மாற்றிக்கொண்டு செயல்பட ஆரம்பித்தது. தளபதி படத்திற்கு முதன் முறையாக திரையுலக சரித்திரத்தில் ஓப்பன் டெண்டர் முறையில் Distributors களிடமிருந்து quotes பெறப்பட்டு அதில் அதிகம் quote செய்தவருக்கு share holders கூட்டத்தில் வெளியிடும் உரிமையை வழங்கியது. ஆனால் அதை தவிர அதனுடைய செயல்பாடுகளில் எந்த transparencyயும் இருந்ததில்லை. அதனால்தானே அந்த நிறுவனம் திவால் ஆகும் நிலைக்கு வந்து ஜி.வி. தற்கொலை செய்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது!

    தோல்வியுற்றிருந்தாலும் ஏபிசிஎல் போன்றவை இதற்கான முதல்படி என்று சொல்லலாம் அல்லவா? //

    ஏபிசிஎல்லும் அப்படித்தான். அது துவங்கப்பட்ட காலத்தில் அமிதாப்புக்கு வணிகத்தைப் பற்றியோ அல்லது ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதைப் பற்றியோ எந்த அடிப்படை விவரமும் இருக்கவில்லை. அதற்கென படித்த இளைஞர்களை நியமித்தார். அவ்ர்களுடைய அனுபவமின்மைதான் உலக அழகி போட்டியை ஏற்று நடத்தலாம் என்று முடிவு எடுத்து அதன் விளைவாக ஏற்பட்ட பெருத்த நஷ்டம் அவரையும் திவாலாகும் நிலைக்கு கொண்டு சென்றது.

    தற்போது ஏவி.எம் நிறுவனம் இதில் ஒரு ஒழுங்கு முறையை கொண்டு வந்துள்ளது என்பது உண்மைதான். அதாவது அவர்களுடைய சின்னத்திரை தயாரிப்புகள் திட்டமிட்டபடி தயாரிக்கப்படுகின்றன. ஆனால் பெரிய திரையில் இப்போதும் நடிகர் மற்றும் இயக்குனர்களுடைய ஆதிக்கம் பெருமளவில் இருப்பதால் பெரிய, பழைய நிறுவனம் என்று பெயர் எடுத்த அவர்களாலேயே ஒரு ஒழுங்கு முறையை கொண்டு வர முடியவில்லை. சிவாஜி படத்தை ரிலீஸ் செய்வதிலேயே எத்தனை குழப்பம் இருந்தது! ஒரு சரியான திட்டம் இல்லாததைத்தான் இது காட்டுகிறது.

    பெயரளவில் ஒரு கம்பெனியை நிறுவினால் மட்டும் போதாது. Corporate culture என்பார்களே அது வரவேண்டும். அப்போதுதான் வங்கிகள் இத்துறையை சீரியசாக எடுக்க வாய்ப்புள்ளது.

    சமீபகாலமாக சின்னத்திரை தயாரிப்புகளில் ஒரு ஒழுங்குமுறை ஏற்பட்டுள்ளதால் வங்கிகள் அதற்கு கடன் வழங்க முன்வருகின்றன.

    பதிலளிநீக்கு
  9. ஜோசப் சார்

    நீங்கள் சொல்வது மிகவும் சரி.ஏபிசிஎல்லும், ஜீவி பிலிம்சும் துவக்கியவை குழந்தைத்தனமான முயற்சிகள் தான்.

    தமிழ் திரைப்படங்கள் இப்போது சிறுதொழில் என்ர ரீதியில் ஒருங்கிணைப்பின்றி இருக்கின்றன. திரைப்பட கல்லூரி வெறும் நடிப்பை மட்டும் சொல்லித்தருவதாக இருக்கிறதே தவிர விற்பனை செய்தல், விளம்பரம் செய்தல், லாப்ம் ஈட்டுதல் என்ர எதையும் சொல்லித்தருவதில்லை. அதனால் காட்டை விற்றும், வீட்டை விற்றும் கிடைத்த லாபத்தை மஞ்சள் பையில் கொண்டுவந்து உப்புமா கம்பனி டைரக்டர்களிடம் தந்து படம் எடுக்க சொல்லி கோட்டை விடுவது இங்கே நடக்கிறது.

    ஸ்க்ரிப்ட் இல்லாமல், கதை இல்லாமல் படப்பிடிப்புக்கு கிளம்புவது, நடிகர்களிடம் புரஷனலிசம் இல்லாமை, திட்டமிடல் இன்மை, மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லாதது, படத்தை விற்க தெரியாதது, சந்தைப்படுத்தும் திறமை இல்லாமை ஆகிய அனைத்தும் திரைத்துறையின் இப்போதைய நிலைக்கு காரணம்.

    பதிலளிநீக்கு
  10. கரெக்டா சொன்னீங்க செல்வன்..

    நமக்கெல்லாருக்கும் என்ன செய்யணும்னு தெரியுது...

    சம்பந்தப்பட்டவங்களுக்கும் இது தெரிஞ்சா நல்லது...

    நீங்க சொல்றாமாதிரி Cine Production & Marketingனு ஒரு பிரிவு film instituteகளில் வருவது நல்லுதுன்னு நினைக்கேன்.

    பதிலளிநீக்கு
  11. வரவர சங்கரோட அழிச்சாட்டியம் தாங்க முடியலை சார். இத்தனைக்கும் அவரோட ஆரம்பகாலப் படங்களை அவ்வளவு ரசிச்சுப் பார்த்தவன். ஆனா இப்பல்லாம் உண்மையிலேயே எரிச்சல் வருது. வெறும் பிரம்மாண்டத்துக்காக படம் பாக்க முடியாது. ஒரு படம் ரெண்டு படம் சரி. அதுக்கு மேலன்னா டூ மச்சு. கேட்டா கதைக்கேத்த பிரம்மாண்டம்னு வெட்டிக்கதை வேற.

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராகவன்,

    வரவர சங்கரோட அழிச்சாட்டியம் தாங்க முடியலை சார்.//

    திறமை இருக்கத்தான் செய்யிது. ஆனா அத எப்படி பயன்படுத்தறதுன்னுதான் தெரியலை..

    இப்படியே எத்தனை நாளைக்கு இருப்பார்னு பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  13. ம்ம்... ஆச்சரியமான தகவல்கள், சார்!

    Film financing scripts happy tale for bankers
    செய்தியைப் பார்த்தீங்களா சார்!!

    பதிலளிநீக்கு
  14. //இத்தனைக்கும் அவரோட ஆரம்பகாலப் படங்களை அவ்வளவு ரசிச்சுப் பார்த்தவன். //
    ஜோசப்,
    இதுக்காகவே உங்க ஊரு ஆளு ஜிராவை உதைக்கணும்போல இருக்கு!! :)

    புலிகேசி படங்கூட போட்ட காசை கொடுத்திருக்காதுன்னா சொல்றீங்க..ஆச்சரியமா இருக்கு

    பதிலளிநீக்கு
  15. but all the Shankar films are a hit and were never loss making...

    பதிலளிநீக்கு