29 மார்ச் 2007

எனக்குள் ஒரு பைத்தியம் (weird mega serial!)

இந்த weirdங்கற சமாச்சாரமே weirdதான்..

நம்ம எல்லாருக்குள்ளயுமே இந்த மாதிரி ஒரு ஆசாமி இருக்கறது சகஜம்தான்.

அப்படீன்னா எனக்குள்ளயும் ஒருத்தன் இருக்கணுமில்லே..

மொதல்ல நம்ம ரஷ்யா (தஞ்சை) இராமனாதன்தான் அவரோட weird லிங்க அனுப்பி படிச்சி பாருங்கய்யான்னார்.

அத படிச்சதும் அவர் சொன்னதுல பலதும் எனக்கும் ஒத்துப்போறத பார்த்தேன்.

அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி நம்ம மா.சிவக்குமார்கிட்டருந்து ஒரு SMS. சார் உங்களயும் நம்ம weird பட்டியல்ல சேர்த்துருக்கேன்ன்னு.. அப்ப நா கொச்சியிலருந்தேன். சரின்னு பதில் குடுத்துட்டு ஊருக்கு போயி பாத்துக்கலாம்னு இருந்தேன்..

ரெண்டு நா கழிச்சி சென்னை வந்தா நம்ம துளசி அப்புறம் சீனியர் ராகவன் சார் கிட்டருந்து கூகுள்ல மெயில்.. வாங்க நம்ம கிறுக்கர்கள் (மன்னிச்சிக்குங்க.. weirdக்கு அப்படியும் அர்த்தம் சொல்லலாம்!) க்ளப்புல வந்து மெம்பராவுங்கன்னு..

சரி வேறு வழியில்லை.. ஆனா இன்னைக்கி எழுதலாம் நாளைக்கி எழுதலாம்ணு.. தள்ளிப் போயி இன்னைக்கி எப்படியும் எழுதிறணும்னு...

1. நா புடிச்ச முயலுக்கு மூனு காலு.

இது ரொம்ப நாளா எங்கிட்ட இருந்த கிறுக்குத்தனம். இத ஒருமாதிரியான ஈகோன்னும் சொல்லலாம். ஒருதரம் - ரெண்டு வருசத்துக்கு முன்னாலன்னு நினைக்கேன் - எனக்கு ப்ரஷர் அதிகமாயி ஹாஸ்ப்பிடல்ல சேக்க வேண்டியதாயிருச்சி. ஒரு வாரம் தங்கியிருந்து hypertensiveங்கற முத்திரையோட வீட்டுக்கு வந்திருந்தேன். ஒரு ரெண்டு மூனு வாரம் ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் உத்தரவு. ஆனா அதெல்லாம் தேவையில்லை நா இல்லன்னா ஆஃபீசே அஸ்தமிச்சிப் போயிரும்னு வொய்ஃப் கிட்ட வாதம் பண்ணிக்கிட்டிருக்கேன். திடீர்னு எங்க சேர்மன் - ரெண்டு நாள் அஃபிஷியல் விசிட்ல சென்னைக்கு வந்துருக்கார் போல. சரி இவன் ஒரு வழியா காலியாயிருவான் அதுக்கு முன்னால ஒரு பார்வை பாத்துருவோம்னு நினைச்சாரோ என்னவோ - வீட்டுக்கு வந்துட்டார். என் மனைவி இவர் நா என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கார் சார். நீங்களாவது சொல்லுங்களேன்னு புகார். அவர் சிரிச்சிக்கிட்டே 'அட நீங்க ஒன்னும்மா இவரு நாங்க சொன்னால கேக்கமாட்டார். அவர் சொன்னதுதான் சரின்னு நிப்பார்.' அப்படீன்னார்.

உண்மைதான் நான் அப்படித்தான்.. இதுவரைக்கும்.. இப்ப கொஞ்சம் கொஞ்சமா மாறப் பாக்கறேன்.. முடிஞ்சாத்தானே?

2. ஒரு நேரத்துக்கு ஒரு பேச்சு

இதுவும் ரொம்ப நாளா இருந்துக்கிட்டு வர்ற கிறுக்குத்தனம். இத அடிக்கடி எனக்கு ஞாபகப்படுத்தறது என் இரண்டு மகள்கள். 'நீங்க எந்த நேரத்துல என்ன பேசுவீங்கன்னே புரிஞ்சிக்க முடியலப்பா' என்பார்கள். என் மனைவி ஒரு அப்பாவி. நான் எந்த நேரத்தில் என்ன பேசினாலும் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்னு சொல்லிருவாங்க. ஒருவேளை மேக்கொண்டு கேட்டா முன்னால சொன்னதுக்கு நேர்மாறா சொல்லிருவேன்னு நினைப்பாங்களோ என்னவோ. வீட்டுலயே இப்படீன்னா ஆஃபீஸ்ல கேக்கவே வேணாம். நம்ம ஜூனியர்ங்க கிட்டன்னா பரவால்லை.. இது சரியான லூசுன்னு விட்டுருவாங்க. ஆனா சில சமயத்துல எங்க டைரக்டர்ஸ்ங்களோட கமிட்டி கூட்டத்துலயே முன்னுக்குபுரணா (இந்த வார்த்த சரிதானா?)_ பேசி மாட்டிக்கிட்டு முழிச்சிருக்கேன். Be consistent in your statements tbr..னு பலதடவ எங்க சேர்மன் எரிஞ்சி விழுந்துருக்கார்..

இதையும் மாத்திக்கலாம்னுதான் பாக்கேன்.. முடிய மாட்டேங்குது..

3. வீட்டுப் பைத்தியம்

'கால்ல சக்கரத்த கட்டிக்கிட்டு பொறந்துட்டே போலருக்குடா'ன்னு பலதடவ ஏசியிருக்காங்க எங்கம்மா. 'நல்லா சொல்லுங்க அப்பவும் உரைக்காது'. அப்படீம்பாங்க என் மனைவி, அதாவது நா வீட்ல இல்லாதப்போ..

எங்க பேங்க்ல எல்லாருக்கும் மூனு வருசத்துக்கு ஒருமுறைதான் டிரான்ஸ்ஃபர் வரும். நா ஆஃபீசராயி சுமார் முப்பது வருசம் ஆவுது. அப்படிப்பாக்கப்போனா நா பத்து வீடுதான் மாறியிருக்கணும். அதாவது ஊர விட்டு மாறும்போது மட்டும். மூனு வருசத்துக்கு ஒரு வீடுன்னு..
ஆனா நா ஏறக்குறைய ஒவ்வொரு ஊர்லயும் குறைஞ்சது மூனு வீடாவது மாறியிருப்பேன். சென்னையிலயே பத்து வீடுக்கும் மேல.. ''எல்லா வீட்லயும் ஏதாச்சும் குறை இருக்கத்தாண்டா செய்யும்? அதுக்குன்னு இப்படியா நரிக்குறவன் மாதிரி.. நீ போடற ஆட்டத்துக்கெல்லாம் ஒம் பெஞ்சாதியும் சேர்ந்து ஆடறா பாரு... அதான் இப்படி வீடு வீடா ஓடறீங்க"ம்பாங்க எங்கம்மா இப்பவும். அது ஏன்னுதான் தெரியல.. எந்த வீட்டுக்கு போனாலும் ஒரே வருசம்.. மிஞ்சிப் போனா ரெண்டு வருசம்.. கடைசியா கொச்சியிலருந்து மாறி வந்து 26 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ள ரெண்டு வீடு மாறியாச்சி. இப்பருக்கற வீட்டோட லீஸ் வர்ற ஜூலை மாசம் முடியுது.. 'ஹூம்.. இருப்பமா மாறுவமான்னு இப்பவே சொல்லிருங்க..' அப்படீங்கறாங்க என் மனைவி. 'அப்பா இதான் கடைசி.. இங்கருந்து பத்து நிமிசத்துல நா ஆஃபீசுக்கு போயிடறேன்.. இனியும் வீடு மார்ற வேலையெல்லாம் வேணாம்.. நா வரமாட்டேன்'னு க்ளியரா சொல்லிட்டா என் ரெண்டாவது மகள். 'என்னப்பா இன்னும் மாறலையா'ன்னு நக்கலா கேக்கறா என் முதல் மகள் கோலாலம்பூர்லருந்து..

இத்தோட நிறுத்திக்கணும்னுதான் தோன்றது.. ஆனா என்ன பண்றதுன்னு தெரியலையே..

4. பேனா பைத்தியம்..

இது ஒருகாலலத்துல இருந்தது.. கட்டுபடியாகாம விட்டுட்டேன்.. அதுவும் இங்க் பேனா.. எத்தன இருந்ததுன்னே கணக்கு மறந்துப் போச்சு.. எப்படி ஆரம்பிச்சதுங்கறதும் மறந்து போச்சு.. ஆனா ஒரு காலத்துல அதுவே பைத்தியமா அலைஞ்சேன்.. ப்ளாட்பாரம், ப்ளாட்பாரமா.. அது போறாதுன்னு விதம் விதமா எழுதற நிப்புங்க வேற.. ஞாயித்துக் கிழமையானா எல்லாத்தையும் எடுத்து தொடைச்சி.. இங்க் ஊத்தி.. சாயந்தரம் ஆகறதுக்குள்ள தலையிலருந்து கால் வரைக்கும் ஹோலி பண்டிகையன்னிக்கி இங்க் சாயம் பூசுனா மாதிரி நிப்பேன். ஹூம்.. இப்படியொரு மனுசன கட்டி வச்சிட்டாங்களேன்னு நொந்துப் போயிருவாங்க என் மனைவி. ஆனா வாய தொறந்து ஒருநாளும் திட்டுனதில்லை. சென்னையிலருந்து பம்பாய் மாறி போனப்போ வீடு சரியா அமையாம என்னோட ஜாமானெல்லாம் ஒரு லாரி ஆஃபீஸ்ல ரெண்டு வாரமா கெடக்க வேண்டியாதா போச்சு. அதுவும் நல்ல மழையில. அதுக்கப்புறம் ஒடஞ்சி பாதி ஒடயாம பாதின்னு வீடுவந்து சேர்ந்ததுல முதல் விக்டிம் நம்ம பேனா கலெக்ஷந்தான். அத்தோட விட்டுது அந்த கிறுக்கு..

5. புத்தக பைத்தியம்

இதுவும் இப்ப இல்லை. அப்பத்தான் (முப்பது வருசத்துக்கு முன்னாடி) லெண்டிங் லைப்ரரி சென்னையில அறிமுகமான காலம். பழைய பேப்பர் எடுத்து விக்கற ஒருத்தர் சென்னை புரசைவாக்கத்துல, அதாவது எங்க வீட்டுப் பக்கத்துலயே, ஒரு லெண்டிங் லைப்ரரி துவக்கி ஒங்களமாதிரி (அதாவது பைத்தியக்காரங்க) ஆளுங்கதான் சார் எங்களுக்கு வேணும்னு ரொம்பவும் மரியாதையா கூப்ட்டு மெம்பராக்கினார். அப்போ இருபத்தஞ்சி ரூபா டெப்பாசிட். ஒரு புத்தகத்துக்கு வாரத்துக்கு ஒரு ரூபா. ரெண்டு நாள்ல திருப்பித் தந்துட்டா அம்பது பைசா டிஸ்கவுண்ட். அப்படி ஆரம்பிச்சது இந்த பைத்தியம். ஆஃபீசராயி மும்பைக்கி மாறிப் போயும் இது விடல. நா தங்கியிருந்த செம்பூர்ல ஸ்டேஷன் எறங்குனதுமே ஒரு லைப்ரரி இருந்தது (அது இப்பவும் அதே எடத்துல இருக்குங்கறதுதான் ஆச்சரியம்!) வசதியா போச்சு. வாரம் ரெண்டு மூனுன்னு பரீட்சைக்குக் கூட அப்படி படிச்சிருப்பனோ என்னவோ.. இந்த ஆத்தர் இந்த டைட்டில்னுல்லாம் ஒன்னும் கிடையாது அய்ன் ராண்ட்லருந்து ஹெரால்ட் ராபின்சன் வரைக்கும் தமிழ்ல நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன்லருந்து சுஜாதா வரைக்கும் எது கெடச்சாலும் விடறதில்லை. க்ரைம் பக்கம் மட்டும் போக மாட்டேன். அதுமாதிரியே பெண் எழுத்தாளர் பக்கமும் போமாட்டேன் (தயவு செஞ்சி ஏன்னு கேட்டுறாதீங்க) கண்ணாடி இல்லாம படிக்க முடியாதுன்னு வந்ததும் விட்டுட்டேன்..

6. எமோஷனல் பைத்தியம்

'நீ சரியான எமோஷனல் ஃபூல்றா'ம்பானுங்க என்னோட ஆஃபீஸ் நண்பர்கள். ரொம்ப கஷ்டம்னு வந்து' நீங்க நெனச்சா ஹெல்ப் பண்லாம் சார்'னு சொன்னா போறும். எந்த செக்யூரிட்டியும் இல்லன்னா கூட பரவால்லை.. என் அதிகாரத்துக்குள்ள செக்யூரிட்டி இல்லாம எவ்வளவு லோன் குடுக்க முடியுமோ அத குடுத்துருவேன். சிலர் அத ஒழுங்கா யூஸ் பண்ணி பெரிய ஆளா வந்திருக்காங்க. பலர் என்னெ இளிச்ச வாயனாக்கிட்டு போயிருக்காங்க. மாட்டிக்கிட்டு முழிச்சிருக்கேன். வார்னிங்கும் கிடைச்சிருக்கு. ஆனா இவன் ஒரு எமோஷனல் ஃபூல் மட்டும்தான், ஃப்ராடு இல்லைன்னு எங்க பேங்க்லருக்கறவங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால பெரிசா எதுவும் பனிஷ்மெண்ட் இதுவரைக்கும் கிடைக்கல.. கடவுள் புண்ணியம்னுதான் சொல்லணும்.. பிராஞ்ச் மேனேஜர் பதவியிலருந்து விலகி வந்து பத்து வருசத்துக்கு மேல ஆயிருச்சி.. அதனால தப்பிச்சேன்.

சொந்த வாழ்க்கையிலும் இப்படி பல தடவைகள்ல ஏமாந்துருக்கேன். ஆனாலும் பெரிசா எதுவும் இழப்பு வந்துரலை.

இவ்வளவுதாங்க...

'எனக்குள் ஒரு பைத்தியம்'கற தலைப்புக்கு பதிலா 'எனக்குள் இருக்கும் பைத்தியங்கள்'னு தலைப்பு வச்சிருக்கலாம் போல.. அத்தன பேர் இருக்காங்க..

ஒவ்வொரு நேரத்துல ஒவ்வொன்னு வரும், போவும்...

இன்னும் எத்தன வருமோ எத்தன போவுமோ.. .பொறுத்திருந்துதான் பாக்கணும்..

சரி.. இந்த காலத்து இளைஞர்கள் என்ன சொல்றாங்கன்னு பாப்போம்..

தப்பா நினைச்சிக்காம வந்து வரிசையா சொல்லுங்க..

ஜோ,
ஜிராகவன்,
இலவச கொத்தனார்,
முத்து (தமிழினி) இவர் சனிக்கிழமைகள்ல மட்டுந்தான் வருவார் போலருக்கு.