07 அக்டோபர் 2005

மும்பை புறநகர் ரயில் பயணம் - ஒரு அனுபவம் (1)

மும்பையில் இதுவரை வசிக்காதவர்களுக்கும், மும்பையில் வசித்தும் அதன் புறநகர் மின்ரயிலில் பயணம் செய்யாதவர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்!
என்னுடைய ஏழு ஆண்டுகால மும்பை வாசத்தில் செம்பூரில் வசித்த மூன்று வருடங்கள் எப்போதாவதும், வாஷி மற்றும் முலண்டில் வசித்த மீதமுள்ள நான்காண்டு காலம் தினமும் இரண்டு முறையும் இந்த மின்வண்டியில் பயணம் செய்து கிடைத்த அனுபவங்களை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது.
அதில் இன்பமான, கசப்பான என பல அனுபவங்கள்..
அதை எல்லாம் எழுத ஆரம்பித்தால் எத்தனைப் பதிவுகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
ஆரம்ப காலத்தில் குறிப்பாக, மும்பை மத்திய லைனில் (Mumai Central Railway) உள்ள முக்கியமான புறநகர் பகுதியான வெஸ்ட் முலன்டில் வசித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பெரும்பாலும் கசப்பானவைதான்.
அதுவும் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, மதுரை போன்ற சிறுநகரங்களில் இருபதாண்டு காலம் ப்ணியாற்றிவிட்டு மும்பை மா.........நகரத்தில் அதுவும் அதன் பிரசித்திபெற்ற புறநகர் ரயிலில் காலூன்றி பயணம் செய்வதென்பது It is a terrific experience in itself.
முதல் நாள், முலுன்ட் ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்திலிருந்த என் வீட்டிலிருந்து காலை சுமார் 7.30 மணிக்கு புறப்பட்டு ரயில் நிலையத்தை அடைந்தேன்.
சீசன் டிக்கெட் இன்னும் எடுத்திருக்கவில்லை. மதுரையில் திரைப்பட அரங்குகளில் மட்டுமே காணக்கூடிய அளவுக்கு நீ....ண்ட வரிசைகள் பயணச்சீட்டு வாங்க. நம் ஊரிலிருப்பதுபோல் பெண்களுக்கென்று தனி வரிசைகளில்லை.. ஆனால் நம் ஊரில் நடப்பதுபோல் வரிசைகளுக்குள் அடாவடியாய் நுழைவதோ, மற்றவர்களுக்கு பயணச்சீட்டு வாங்கித் தருவதோ போன்ற நல்ல (கெட்ட?) பழக்கங்களோ அங்கு இல்லை. எல்லோரும் கையில் அன்றைய செய்தித்தாளோ அல்லது வார, மாத சஞ்சிகையையோ வைத்து வாசித்துக்கொண்டிருந்தனர்.
நின்றுக் கொண்டு படிப்பதை நம் ஊர்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் நடந்துக்கொண்டு, பஸ்சிலும், ரயிலிலும் தொங்க்கிக்கொண்டே படிப்பதை மும்பையில்தான் பார்க்க முடியும்!
ஒருவழியாக வரிசையில் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு ரயில்மேடையை (Platform) அடைந்தால் கூட்டமோ கூட்டம். மூன்று, நான்கு ரயில்களில் இடம் கிடைக்க முயற்சி செய்து தோல்வி. பிறகுதான் புரிந்தது சூட்சுமம்! வந்து நிற்கும் வண்டியின் வாயிலருகே சென்று நின்றால் போதும் உள்ளே செல்ல முயலும் பயணிகளின் கூட்டமே நம்மை ஏற்றிவிடுகிற/ இறக்கிவிடுகிற மாஜிக்!
நான் சென்னையிலிருந்து பதவி உயர்வு பெற்று மும்பையில் உள்ள என்னுடைய வங்கிக்கிளைகளை கண்ட்ரோல் செய்யும் Zonal Officeல் Chief Manager ஆக சேர்ந்திருந்தேன். டிப்டாப்பாக உடையணிந்து டை கட்டிக்கொண்டு வரவேண்டும என்பது அலுவலக நியதி.
அப்படித்தான் முதல் நாள் Reymond's Pant + VanHuesan Shirt+Zodiac Tie+Odysee Briefcase என பந்தாவாக (முதல் நாளே என்னுடைய பாஸை இம்ப்ரஸ் பண்ணனுமே ) வீட்டிலிருந்து புறப்பட்டேன். மும்பை வி.டி (இப்போது அது சத்ரபதி சிவாஜி டெர்மினல்) யில் வந்து இறங்கியபோது என்னைப் நீங்கள் பார்த்திருக்கவேண்டும்.
Pantக்குள் Tuck செய்திருந்த Shirt முற்றிலுமாக கசங்கி Pant க்கு வெளியே, Zodiac Tye கஷ்டப்பட்டு கால்மணிநேரம் செலவழித்து இட்ட Knot முற்றிலுமாக அவிழ்ந்து தொங்க, Brylcream இட்டு Arrange பண்ண தலைமுடி கலைந்து (கையில் கட்டியிருந்த வாட்ச்சும், பிடித்திருந்த Briefcase மட்டும்தான் அப்படியே இருந்தன!) அலங்கோலமான கோலத்தில் Kaala Goda வில் இருந்த அலுவலகம் வந்து சேர்ந்தபோது, நல்ல வேளை அலுவலகத்தில் இருந்தவர்களெல்லாரும் என் கீழ் பணிபுரிவபரகளாயிருந்ததாலும் என்னுடைய பாஸ் இன்னும் வராததாலும் First day First Impressionல் இருந்து தப்பித்தேன்.
அன்று என்னுடைய கோலத்தைப் பார்த்து பரிதாபப்பட்ட என்னுடைய அலுவலக ஊழியர்கள் எல்லாரும் சேர்ந்து ரயில் பயணத்தில் செய்யவேண்டிய Do's & Don'ts ஐ ஒரு பெரிய பட்டியலே தயாரித்து கொடுத்துவிட்டனர்.
அவர்களுடைய பட்டியலில் இருந்தவைகளில் முக்கியமானவை
1. இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யலாகாது..
2. முதல் வகுப்பில் பயணம் செய்தாலும் முலன்ட் நிலையத்தில் ஏறவோ, இறங்கவோ கூடாது (ஞாயிற்றுக்கிழமைகளில் தவிர). முலன்டுக்கு அடுத்த நிலையமான தானே நிலையத்திற்கு Down செய்து அங்கிருந்து ஏறவேண்டும். Down என்றால் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி செல்லவேண்டும். மேலும் தானே ஒரு பெரிய சந்திப்பு நிலையமாகும் (Junction). வி.டி. சென்றடையும் பல புறநகர் வண்டிகள் காலையில் அங்கிருந்து புறப்படும் மாலையில் அங்கே நின்றுவிடும் (Terminate). ஆகவே மற்ற ரயில் நிலையங்களோடு ஒப்பிடும்போது நெரிசல் குறைவாயிருக்கும்.
3. தினசரி பயணச்சீட்டுக்கு பதிலாக சீசன் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். கட்டணமும் குறைவு, மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும்.
என் நண்பர்கள் அளித்த பட்டியலில் மிகவும் முக்கியமானவை இந்த மூன்றையும் அன்றிலிருந்து கடைப்பிடிக்க ஆரம்பித்தேன்.
அன்றிலிருந்து என்னுடைய பயணம் ஓரளவுக்கு எளிதாய் அமைந்தது!
வேடிக்கையான அனுபவங்கள்.. அடுத்த பதிவில்!

5 கருத்துகள்:

  1. பெயரில்லா12:57 PM

    சார் நல்லாருக்கு. இத்தோட நிறுத்திராதீங்க.

    அடுத்தப் பதிவில ஏதோ வேடிக்கையா எழுதப்போறீங்கன்னு ஆவலோட பாத்துக்கிட்டிருக்கேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  2. Jacob,

    good start.keep going.

    muthu

    பதிலளிநீக்கு
  3. சாமுவேல்.

    நன்றி.

    இப்பயணம் ஒரு ஐந்து பதிவுகள் வரையாவது தொடரும்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி முத்து.

    என் பெயரை இவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டீர்களே!

    I am planning to continue writing about this for some more days.

    It however depends on how our Thamizhmanam viewers respond.

    பதிலளிநீக்கு
  5. டோம்பிவிலியிலி இருந்து காட்கோபர் வரை ஒன்பது மாதங்கள் தினமும் பயணம் செய்த அனுபவங்கள் எல்லாவற்றையும் நினைவுபடுத்தி விட்டீர்கள். :-)

    பதிலளிநீக்கு