24 செப்டம்பர் 2005

இன்றைய இந்தியா - ஒரு பார்வை

இன்றைய இந்தியா - ஒரு பார்வை
நாள்தோறும் பத்திரிகைகளிலும், செய்தித்தாள்களிலும் தவறாது நாம் காண்பது இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றித்தான். இந்தியாவின் அசுர வளர்ச்சி பலநாடுகளையும், முக்கியமாக சைனா, கனடா போன்ற நாடுகளை கவலைக் கொள்ள வைத்திருக்கின்றன..
இந்தியா பி.பி.ஓ மற்றும் மென்பொருள் சேவைத் துறையில் உலகிலேயே முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதுதான் இன்றைய பிரதான செய்தி.
இதற்கு அடுத்தபடியாகத்தான் சைனா, கனடா, போலந்து, அயர்லாந்து போன்ற நாடுகள்.
இந்தியாவின் இச்சாதனைக்கு வல்லுனர்கள் பட்டியலிட்டிருப்பதென்ன?
1. குறைந்த ஊதியம்,2. சிறந்த மற்றும் திறம்வாய்ந்த (Matured) சேவை,3. திறம்படைத்த ஊழியர்கள்,4. அடிப்படை வசதிகள் (Infrastrcture),5. ஊக்குவிகள் (அரசாங்க உதவி, ஸ்திரத்தன்மை)
அத்துடன் இந்திய வல்லுனர்களின் ங்கிலப் புலமை.
இந்தியாவின் பலநூற்றாண்டு கால அடிமைவாழ்வின் ஒரு பலன் என்றுக்கூட இதைக் கூறலாம். இன்றைய இளையத் தலைமுறையின் ங்கிலப் புலமைக்கு மற்றொரு காரணம் நம் நாட்டின் பல்மொழி கலாச்சாரம்.
இந்திய மக்கள்தொகை பல்வேறு மொழிகளைப் பேசி, எழுதும் மக்களைக் கொண்டுள்ளதால் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மற்ற மாநில மக்களுடன் பேசிப் பழகவே ங்கிலத்தின் துணை தேவைப்படுகிறது.
ங்கிலத்தில் Blessing in Disguise என்று கூறுவதுபோல நம்முடைய நேற்றைய பலவீனமே இன்றைய பலமாக மாறி வருகின்றது..
நம் நாட்டின் உயர்ந்துவரும் கல்வித்தரமும் ஒரு காரணம் என்பதை வல்லரசு நாடுகளே ஒத்துக்கொண்டுள்ளன.
நம்மவர்களின் அயராத உழைப்பு, மற்றவர்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்வதில் முனைப்பாய் நிற்கும் குணம், ஊதியத்தின் அளவைப் பாராமல் முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் நம் பண்பு இவையெல்லாம்தான் நம் நாட்டை இத்தகைய உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றன என்றால் மிகையாகாது..
உழைப்போம், முன்னேறுவோம் என்பதுதான் இன்றைய இந்தியாவின் சூளுரை..
அன்புடன்,டி.பி.ர். ஜோச·ப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக